Mella Varum Thendral
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Kalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsSeetha Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Charumma Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Deepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Poomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Su(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Mella Varum Thendral
Related ebooks
Geetham... Sangeetham Rating: 4 out of 5 stars4/5Poojai Naadum Malar Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsKanthudaippu Rating: 0 out of 5 stars0 ratingsKadaisivarai Yaaro Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsOdi Va, Omana...! Rating: 0 out of 5 stars0 ratingsUlley Vaammaa Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Kannale Pesi Pesi..! Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsPadma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsKadai Thenkai Rating: 3 out of 5 stars3/5Kelvi Pirakatum Rating: 0 out of 5 stars0 ratingsAmma! Rating: 0 out of 5 stars0 ratingsKathalikka Mudiyale Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsThalattuthe Vaanam! Rating: 0 out of 5 stars0 ratingsThoppil Thani Maram Rating: 0 out of 5 stars0 ratingsVaasamilaa Malaridhu Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsKathiruppai Kaadhalane Rating: 0 out of 5 stars0 ratingsSanthaikku Vantha Kili Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsVettri En Pakkam Rating: 1 out of 5 stars1/5Kaaladi Mann Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mella Varum Thendral
0 ratings0 reviews
Book preview
Mella Varum Thendral - Devibala
21
1
ரயிலின் ஓசையிலிருந்து அது ஒரு பாலத்தைக் கடப்பது, ‘தடக் தடக்’கெனத் தெரிந்தது.
நேரம் இரவு பத்தைக் கடந்து விட்டது.
கொச்சின் மெயில். சென்னைக்குச் செல்லும் ரயில்.
அது படுக்கை வசதி கொண்ட பெட்டி. எல்லா பகுதிகளிலும் மூன்றடுக்குகளையும் அடைத்துக் கொண்டு நித்திரையை நேசிக்கத் தொடங்கி விட்டார்கள், பயணிகள்.
நீல விளக்குகள் வேலைக்கு வந்திருந்தன.
28-ம் எண்ணில் இருந்த புவனா மட்டும் உறங்கும் சிந்தனை மறந்து ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தாள். ஜன்னல் திறந்திருக்க - வெளியில் இருந்து வரும் மார்கழிக்காற்று சிலீரென அவள் முகத்தில் மோதி, முன்னுச்சி கேசத்தைச் சீண்டியது.
அது அவளை பாதிக்கவில்லை.
‘பாங்’ என்ற ஓசையுடன் ஒரு ரயில் எதிர்ப்புறம் கடந்து சென்றது.
என்னங்க!
....
என்னங்க... மேடம் உங்களைத்தான்!
அப்போதும் புவனாவின் கவனத்தை அது ஈர்க்காமல் போக, அவன் எழுந்து வந்து அவள் முன்னால் விரல்களை சொடுக்கினான்.
சட்டெனக் கலைந்தாள்.
உட்கார்ந்துட்டே தூங்கத் தொடங்கிட்டீங்களா?
இ... இல்லை. ஸாரி!
படுக்க வேண்டியதுதானே!
தூக்கம் வரலை!
ஆனா எனக்கு தூக்கம் வருதே!
சடாரெனத் திரும்பினாள் புவனா. எரிச்சலோடு அவனைப் பார்த்தாள். உங்களுக்குத் தூக்கம் வந்தா தூங்குங்க சார். அதுக்கு நான் என்ன பண்ணணும்?
நீங்க மனசு வச்சாத்தான் நான் தூங்க முடியும்!
மிஸ்டர்!
ஸாரி... நான் மிடில் பர்த் ஆசாமி. நீங்க இடத்தை விட்டு எழுந்தாத்தானே அந்தப் பலகையை உயர்த்த முடியும்!
தன் தவறு உடனே பிடிபட, சட்டென எழுந்து விட்டாள் புவனா.
ஸாரி, நான் தப்பு பண்ணிட்டேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சிருங்க.
எதுக்கு மேடம் பெரிய வார்த்தையெல்லாம்... போகட்டும்!
அவள் எழுந்து வழிவிட, அவன் பலகையை உயர்த்தி, கொக்கியில் மாட்டி, தன் படுக்கையை அமைத்துக் கொண்டான். தாவி ஏறினான்.
இனி நீங்க படுத்துத்தான் ஆகணும். என்னால உங்க இருப்பு கலைஞ்சு போச்சா? நானும் மன்னிப்பு கேட்டுக்கறேன். குட் நைட்!
படுத்துக் கொண்டான்.
புவனா ஜன்னலை இறக்கினாள். புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு, பெட்டியை தலைக்கு அண்டங் கொடுத்தபடி படுத்துக் கொண்டாள்.
ரயிலின் ஓசை மட்டும் தடக் தடக்கென தாள லயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது.
புவனா!
என்ன?
நீ போகத்தான் வேணுமா? எந்த நம்பிக்கைலம்மா மெட்ராஸ் போறே?
மனுஷ வாழ்க்கையே நம்பிக்கையை அடித்தளமா வச்சு அமைஞ்சதுதானே! எனக்கும் அது உதவட்டுமே!
தடக்... தடக்
அவன் மெல்ல எட்டிப் பார்த்தான்.
புவனா மல்லாந்து படுத்தபடி கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.
என்னங்க தூங்கலியா நீங்க?
ரகசியக் குரலில் கேட்டான்.
சடாரென புவனா பார்வையை உயர்த்த-
ஸாரிங்க!
திரும்பிப் படுத்துக் கொண்டான். கண்களை மூடிக் கொண்டான்.
புவனாவின் வட்ட முகம் அவன் விழிகளில் பதிந்து போயிருந்தது - தெளிவாக.
‘அழகான, அம்சமான பெண்.
ஏன் உறங்காமல் வருகிறாள்? முகத்தில் சிரிப்பு இல்லை. உணர்ச்சியைத் தொலைத்து விட்டு இறுகிப் போன முகம். தனியாக வருகிறாளா? அப்படித்தான் இருக்க வேண்டும்.’ ஏதேதோ நினைத்தபடி உறங்கப் போனான் அவன். ‘தடக்’கென ரயில் நின்றது போலத் தோன்ற விழித்துக் கொண்டான்.
மொத்த பெட்டியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. வெளியே காபி, தேநீர் வியாபார ஓசை மெலிதாக கேட்டது.
குனிந்தான்.
புவனா விழித்துக் கொண்டுதான் இருந்தாள்.
என்னங்க... என்ன ஸ்டேஷன்?
ஈரோடு!
கீழே இறங்கினான். லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டு நடந்தான். அவன் திரும்பி வரும் போது கையிலே இரண்டு கோப்பை பால் இருந்தது.
இந்தாங்க பால்!
நோ... தேங்க்ஸ்!
உங்களுக்காகத்தான் வாங்கினேன்.
மிஸ்டர்... நான் பால் வேணும்னு கேக்கலை. எனக்கது அவசியமும் இல்லை. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது!
மேல் பெர்த்திலிருந்து ‘எந்த ஊருப்பா?’ என்றார் ஒருவர். பதிலை எதிர்பாராமல் திரும்பியும் படுத்துக் கொண்டார்.
அவன் ஒரு நிமிடம் அப்படியே நின்றான். பாலைக் கீழே வைத்து விட்டு, அவள் பக்கத்து ஜன்னலைத் திறந்தான். இரண்டு பாலையும் ஜன்னல் வழியாக வீசினான். ஜன்னலை மூடி விட்டு, கோப்பையை எடுத்துக் கொண்டு திரும்பி நடந்தான்.
சார் ஒரு நிமிஷம்!
என்ன?
இதுக்கு என்ன அர்த்தம்?
எதுக்கு?
இப்ப, இந்தப் பாலை வெளியே கொட்டினதுக்கு!
திரும்பி அவளைப் பார்த்தான். வெளியே கொட்டப்பட்டது பால் இல்லை. நல்ல ஒரு ரயில் ஸ்நேகம். நான், நீங்க நினைக்கிற மாதிரி விடலைத்தனமான ஆண் இல்லை. உறக்கத்தைத் தொலைச்ச உங்க முகத்திலே உணர்ச்சியே இல்லை. நட்பைப் பகிர்ந்துக்க நினைச்ச தோழன் நான். குட் நைட்!
கோப்பையைத் திருப்பிக் கொடுத்து விட்டு வந்து படுத்துக் கொண்டான். ரயில் நகரத் தொடங்கியது.
அதிகாலை ஐந்து மணி கடந்ததும் அரக்கோணத்துக்குள் ரயில் தன்னை நுழைத்துக் கொண்டது.
அவன் எழுந்து விட்டான்.
புவனா பல் துலக்கி, முகம் கழுவி, தன்னை திருத்தி அமைத்துக் கொண்டு ஜன்னலோரம் இருந்தாள்.
அவனும் பாத்ரூம் போய் வந்தான்.
கால் சட்டைக்குள் புகுந்து கொண்டு, பெட்டியைப் பூட்டி புவனாவின் எதிர்புறம் வந்து உட்கார்ந்து கொண்டான். கையில் ஒரு ஆங்கில நாவலை எடுத்துக் கொண்டான். அவன் பேசவும் இல்லை. அவளை பார்க்கக் கூட முயற்சி செய்யவுமில்லை.
இதை புவனா கவனித்தாள்.
லேசான வருத்தம் ஏற்பட்டது. ‘ச்சே! அத்தனை கடுமையாக ஏன் நடந்து கொண்டேன் நான்? அப்படி என்ன சொல்லி விட்டான் இவன்? மறுபடியும் வலியப் போய் பேசலாமா? வேண்டாம். அது அதிக உரிமையை கேட்கச் சொல்லும்.’
ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் சரியான நேரத்தில் நுழைந்தது. சிவப்புஉடைப் பணியாளர்கள் அதிவேகமாக ஆக்ரமிப்பு செய்ய, அவன் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் இறங்கிப் போய் விட்டான்.
புவனாவுக்கு அது என்னவோ போலிருந்தது.
தன் பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். ஒரு ஓரமாகப் போய் நின்றாள்.
ஹாய் புவனா!
குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
ருக்மணி சிரித்தபடி ஓடி வந்தாள். புவனாவைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
இளைச்சுப் போயிட்டே புவனா. வீட்ல எல்லாரும் சவுக்கியமா?
என்னை மறந்துட்டியே ருக்கு!
ஓ... ஸாரி... புவனா இவர்தான் என் கணவர்!
அறிமுகம் செய்ய -
அவன் கை கூப்பினான்.
சரி வா புவனா... வீட்ல போய் நிதானமாப் பேசிக்கலாம்.
ஆட்டோ பிடித்து மந்தைவெளியில்