Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vettri En Pakkam
Vettri En Pakkam
Vettri En Pakkam
Ebook95 pages1 hour

Vettri En Pakkam

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466459
Vettri En Pakkam

Read more from Devibala

Related to Vettri En Pakkam

Related ebooks

Related categories

Reviews for Vettri En Pakkam

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vettri En Pakkam - Devibala

    12

    1

    தபாலை பிரித்து கடிதத்தைப் படித்ததும் ஜெயந்திக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

    நம்பவே முடியவில்லை.

    மறுபடியும் படித்தாள். அண்ணி ஜானகி வெளியே வந்தாள்.

    ஜெயந்தி! கடைக்குப் போய் ரெண்டு பாக்கெட் பால், காய்கறிகள், கொஞ்சம் வெத்தலைபாக்கு, பூ வாங்கிட்டு வர்றியா?

    ஜெயந்தி பேசவேயில்லை!

    என்னடீ ஆச்சு ஒனக்கு? நின்னுகிட்டே தூங்கறியா?

    அண்ணன் சம்பத் குளித்து விட்டு தலை துவட்டியபடி வெளியே வந்தான்!

    ஜெயந்தி! கைல என்ன லெட்டர்?

    ஜெயந்தி நீட்டினாள்!

    சம்பத் அதைப் படித்ததும் முகம் குபீரென மலர்ந்தது.

    என்னங்க லெட்டர் அது?

    ஜெயந்திக்கு பெரிய கம்பெனில வேலை கிடைச்சிருக்கு ஜானகி! எப்ப நீ அட்டெண்ட் பண்ணினே?

    அது ஆச்சு அண்ணா எட்டுமாசம்! நான் இதைக் கொஞ்சம் கூட எதிர்பாக்கலை!

    அய்யோ! அதை எங்கிட்டக் குடுங்களேன்!

    ஜானகி வாங்கிப் பார்த்தாள். வாயைப் பிளந்து விட்டாள்! மாசம் நாற்பதாயிரம் சம்பளம்!

    ஜெயந்தி பட்டதாரி! கம்ப்யூட்டர் அறிவெல்லாம் உண்டு. சுமாரான அழகு - புத்திசாலி! படித்து பட்டம் வாங்கியும் நல்ல வேலை மட்டும் அமையவேயில்லை. இப்போது கூட வேலையில்தான் இருக்கிறாள். ஆனால் அதிக பட்சம் நாலாயிரம் சம்பளம். அதுவும் நிரந்தரமில்லை.

    வயது இருபத்தி ஆறு!

    அப்பா, அம்மா உயிருடன் இல்லை! ரெண்டு அக்காக்கள்! ஒருத்தி டில்லியில்; அடுத்தவள் பெங்களூரில்! ஒரே அண்ணன் சம்பத்! தனியாரில் சுமார் வேலை. அண்ணி குடும்பத்தலைவி! இரண்டு பெண் குழந்தைகள்.

    வருவது போதாமல் இடித்துப் பிடித்து நடக்கும் குடும்பம்!

    ஜெயந்தியின் வாழ்வு பற்றி யோசிக்கும் நிலையில் அந்தக் குடும்பம் இல்லை.

    ஜெயந்தியும் முயற்சியை விடுவதாக இல்லை.

    இதோ பலித்து விட்டது.

    ஜானகி துள்ளி விட்டாள்.

    நாளைக்கே கம்பெனியில வந்து பார்க்கும்படி உத்தரவு!

    காலையில் ஜெயந்தி குளித்து சாமி கும்பிட்டு, அண்ணா, அண்ணி காலில் விழுந்து புறப்பட்டாள்.

    போகும் வழியில் பிள்ளையாருக்கு ஒரு ‘ஹலோ!’ கம்பெனிக்கு வந்து விட்டாள்.

    பல மாடிக் கட்டிடங்களைக் கொண்ட அலுவலகம் அது!

    பிரமித்துப் போனாள்!

    நேர்முகத்துக்காக எட்டு மாதங்கள் முன்பு இங்கு வந்த ஞாபகம்!

    உள்ளே வந்து மூன்றாவது மாடியில் வெளிப்பட்டு கடிதம் காண்பிக்க, ரிசப்ஷனிஸ்ட் உட்காரச் சொன்னாள்!

    இருபது நிமிடங்களில் அழைப்பு வந்தது.

    பிராந்திய அதிகாரியின் அறைக்குள் நுழைந்து வணங்கினாள்.

    ஒக்காருங்க ஜெயந்தி! எட்டு மாசம் முன்னால வந்தது! உங்களுக்கு மறந்து கூடப் போயிருக்கும்! வெல்! முதல்ல வாழ்த்துக்கள்! இத்தனை பெரிய நிறுவனம் இது! உலகம் முழுக்கக் கிளைகள்! இங்கே வேலை கிடைக்கறது சுலபமில்லை! இன்னிக்கே நீங்க வேலைக்கு சேரலாம்!

    நன்றி சார்!

    சேர்மன் உங்களை அரை மணி நேரத்துல சந்திப்பார்!

    சரி சார்!

    காத்திருந்தாள்!

    சொன்னபடி சேர்மனிடமிருந்து அழைப்பு வந்தது!

    அவருடன் உய அதிகாரிகள் இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள்!

    ரொம்ப நல்லது செஞ்சிருக்கீங்க. ஆயிரம் பேர்களுக்கு மேல கூப்பிட்டு பல கட்டங்கள் நடந்த தேர்வுல ரெண்டு பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கீங்க நீங்க ஒண்ணு! அடுத்தது மிஸ்டர் மகாலிங்கம்! சரி! உங்களுக்கு நாப்பதாயிரம் சம்பளம். கம்பெனி கார் உண்டு, டிரைவரோட. நீங்க என்ன மாதிரி உடைகள் உடுத்தணும், எப்படி பழகணும் இதுக்கெல்லாம் பயிற்சி உண்டு! கடுமையா உழைக்கணும் வெளிநாட்டுக்கு போகக் கூடிய வாய்ப்பும் உண்டு! பல உச்சங்களை நீங்க தொடலாம். சரியா?

    கேட்க கேட்க ஜெயந்தி ஒரு மாதிரி ஆடிப் போனாள்!

    படிப்படியா சொல்லுவோம் எல்லாத்தையும்! வாழ்த்துக்கள்! உங்க செக்ஷன் ஆபீசரை போய்ப் பாருங்க!

    சந்தித்தாள்!

    அடுத்த சில நொடிகளில் அவளுக்கான தனி ஏசி அறை காட்டப்பட்டது!

    சகல வசதிகளும்!

    அவளுக்கான உதவியாளர்கள், ஆபீஸ் பாய், அவளது டிரைவர் அத்தனை பேரும் வந்து வணங்கினார்கள்!

    ஜெயந்திக்கு நம்பவே முடியவில்லை.

    ‘இதெல்லாம் நிஜமா?’

    கிள்ளிப் பார்த்தாள். வலித்தது.

    ‘நல்லநேரம் தொடங்கி விட்டதா?’

    ‘இத்தனை நாள் ஏங்கிய ஏக்கத்துக்கு பலன் கிடைத்து விட்டதா?’

    ஒரு மாதிரி மயக்கமே வந்தது!

    உள்ளுக்குள்ளே ஒரு கர்வம் புறப்பட்டது!

    ‘எனக்கு சிபாரிசு இல்லை. நான் லஞ்சம் தரவில்லை! எந்த ஒரு செல்வாக்கும் இல்லை!’

    ‘முழுக்க முழுக்க என் திறமைக்குக் கிடைத்த பதவியும், சம்பளமும்!’

    ‘இதை நான் உணர வேண்டும்!’

    ‘என்னைப் பற்றிய தாழ்வு உணர்ச்சியை விலக்கி, நான் தலை நிமிர வண்டும்!’

    ‘குனிதலும், கூழைக் கும்பிடும், பணிவும், பயமும் இனி கூடாது! பதவிக்கேற்ற கம்பீரம் வர வேண்டும்! அந்த மிடுக்கு உடையில் மட்டுமில்லை... பேச்சில், செயலில் வர வேண்டும்!’

    உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று புகுந்து, நரம்புகளை, ரத்த ஓட்டங்களை விறுவிறுப்பாக்கியது!

    மாலைக்குள் பல சங்கதிகள் பிடிபட்டன!

    ‘இங்கு ஜெயிக்க வேண்டும்!’

    ‘வெளிநாட்டு வாய்ப்பெல்லாம் உண்டு! நான் பழைய ஜெயந்தி அல்ல!’

    மாலை ஆறுமணிக்கு டிரைவர் வந்து வணங்கினான்.

    செக்ஷன் ஆபீசர் வந்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1