Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sugamaana Thorogam
Sugamaana Thorogam
Sugamaana Thorogam
Ebook85 pages33 minutes

Sugamaana Thorogam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466923
Sugamaana Thorogam

Read more from Devibala

Related to Sugamaana Thorogam

Related ebooks

Reviews for Sugamaana Thorogam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sugamaana Thorogam - Devibala

    1

    "விஜய்... இந்த ரெண்டு போட்டோல எது உனக்குப் பிடிச்சிருக்கு?"

    அம்மா தந்த புகைப்படங்களை கையில் வாங்கினான் விஜய். இரண்டு அழகான இளம் பெண்கள்.

    யாரும்மா இந்தப் பெண்கள்?

    ஒருத்தி கோடீஸ்வரர் காளிப்பனோட ஒரே மகள் லாவண்யா. பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சொந்தக்காரி. படிப்பு எம்.பி.ஏ. நல்ல அழகு அடுத்தது மில் ஓனர் ரகுபதியோட மகள் மத்யமா. இந்தப் பெண்ணுக்கும் எல்லா தகுதிகளும் உண்டு. எதை நீ தேர்ந்தெடுக்கப் போறே?

    நான் மட்டும் தேர்ந்தெடுத்தா போதுமா?

    அப்படீன்னா...? ஓ... அந்தப் பெண்களுக்கு உன்னைப் பிடிக்குமானு சந்தேகமா? நீ கிடைக்க ஊசிமேல உட்காரவும் ரெண்டு பேரும் தயார்.. சொல்லு, யார் என் மருமகள்?

    ரெண்டு பேருமே வேண்டாம்மா!

    விஜய் என்ன சொல்ற?

    எனக்குப் பிடிக்கலைனு சொல்றேன்.

    விஜய் நீ தட்டிக் கழிக்கற எட்டாவது வரன் இது!

    எட்டாத உயரத்துல உள்ள எட்டு பேரை எட்டிப் பிடிக்க என்னம்மா ஆசை உனக்கு?

    எதுப்பா எட்டாத உயரம்? நம்ம சொத்துக்களோட இன்னிய மதிப்பு என்ன தெரியுமா?

    பல கோடிகள்!

    உன் படிப்பு என்ன?

    அயல்நாட்டுல வாங்கின டிகிரிகள் ஒரு மைல் நீளத்துக்கு!

    வயசு?

    இருபத்தியெட்டு!

    கண்களைக் கட்டி நிறுத்தற அழகு. நீதான் விஜய் எட்டாத உயரம். உன்னை எட்டிப்பிடிக்க ஒரு கோடீஸ்வர கும்பலே காத்திருக்கு!

    அம்மா நான் எட்டாத உயரம்னு சொன்னது பணத்தையில்லைமா மனசை.

    விஜய்!

    மனசு எட்டவும் இல்லை. ஒட்டவும் இல்லைமா எனக்கு. பணம், பணத்தோட சேர்ந்து மனசு மங்கிப் போயிரும்மா.

    அதனால?

    விஜய் எனக்கு இருபது வயசுல கல்யாணம் ஆச்சு. சொன்னா நம்பமாட்டே. பதினைஞ்சு வருஷம் கழிச்சு என்னோட 35வது வயசுல நீ பிறந்தே.

    அம்மா!

    இந்த வம்சம் உங்கப்பாவோட முடிஞ்சிரும்னு நாங்க தவிச்ச தவிப்பு அந்தத் தெய்வத்துக்குத்தான் தெரியும். ஆனா கடவுள் எங்களைக் கைவிடலை. உன்னைத் தந்துட்டார். உங்கப்பா இறந்து எட்டு வருஷம் ஆச்சு. உனக்கொரு கல்யாணம் முடிச்சு, என் பேரனை-இந்த வம்ச வாரிசை - நான் பார்த்துட்டா, நிம்மதியா சாவேன் விஜய். என் ஆசை, நிராசையா போயிருமா?.

    பின்ன என்ன விஜய்?

    தற்சமயம் கல்யாணம் வேண்டாம்னுதான் நான் சொன்னேன்!

    சரி, எப்ப பண்ணிப்பே? உன் மனசுல யாராவது இருக்காங்களா?

    இதுவரைக்கும் இல்லைமா. ஆனா பணக்கார பெண் எனக்கு மனைவியாக வேண்டாம்மா. நல்ல குணவதியா, எளிமையா, ஏழையா உள்ள ஒரு நல்லவ எனக்கு மனைவியா அமைஞ்சா, எனக்கு சம்மதம்

    விஜய் எழுந்து விட்டான்.

    நான் புறப்படறேன்மா. போர்ட் மீட்டிங் இருக்கு இன்னிக்கு திரும்பி வர ராத்திரி ஆகும். நீ எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்டுட்டு, படுத்துரு!

    விஜ்ய் போய் விட்டான்.

    அம்மா!

    குரல் கேட்டு அம்மா திரும்ப –

    வேலையாள் நாகையா பவ்யமாக எதிரே வந்து நின்றார்.

    அவர் முப்பது வருடங்களுக்கும் மேலாக அந்த வீட்டில் பணி புரிபவர்.

    சாப்பிட வரலையாம்மா?

    மனசு சரியில்லை நாகையா!"

    தம்பி கல்யாணத்துக்கு சம்மதிக்கலைனாம்மா?

    நாகையா நீ?

    நான் ஒரு யோசனை சொன்னா ஏத்துப்பீங்களாம்மா?

    சொல்லு நாகையா!

    மனசு ஒருமிச்சு வாழ்ந்தாத்தாம்மா அது தாம்பத்யம். தாம்பத்ய சந்தோஷத்தை பணத்தால வாங்கித் தந்துர முடியாதம்மா.

    நாகையா?

    தங்க ஸ்பூனோட பிறந்த தம்பி, ஒரு குணவதி மனைவியா வரணும்னு ஆசைப்படறது ரொம்ப உசத்திம்மா!

    அதனால?

    ஏழைப் பெண்ணா இருந்தா என்னம்மா தப்பு? நம்ம வீட்டு மருமகளா மாறின மறுநிமிஷமே அவங்க ஒரு கோடீஸ்வரிதானே? பணத்தோட பணம் சேராதுதான். ஆனா குணம் சேருதும்மா. அது பெரிசில்லையா? நான் அதிகம் பேசியிருந்தா, என்னை மன்னிச்சிருங்க. சாப்பிட வாங்க!

    நாகையாவின் பேச்சு அம்மாவை சிந்திக்க வைத்தது.

    ‘வாழப்போவது விஜய். அவன் ஆசைகளை நான் ஏன் அலட்சியப்படுத்த வேண்டும்? கூடாது! அது தவறு தான்!’

    யோசித்தபடி அம்மா எழுந்திருக்க –

    நாகையா

    Enjoying the preview?
    Page 1 of 1