Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa Vennila...
Vaa Vennila...
Vaa Vennila...
Ebook118 pages43 minutes

Vaa Vennila...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603123
Vaa Vennila...

Read more from Devibala

Related to Vaa Vennila...

Related ebooks

Reviews for Vaa Vennila...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa Vennila... - Devibala

    http://www.pustaka.co.in

    வா வெண்ணிலா…

    Vaa Vennila

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆகவே விவாகரத்து அளித்து தீர்ப்பு கூறுகிறேன்.

    நீதிபதி சொன்னதும் ராஜ்மோகனின் முகம் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் இறுகிக் கிடந்தது.

    மல்லிகாவும் அதேபோல்தான் இருந்தாள்.

    அவள் அருகில் இருந்த அம்மா, அப்பாடீ! என் பொண்ணு பிழைச்சா. விடுதலை அந்த நரகத்திலேருந்து. இன்னிக்கு வீட்ல போய் இதை விழாவாக் கொண்டாடணும்!

    மல்லிகா அது காதில் விழுந்தும் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தாள். தொடர்ந்து நீதிபதியை அவர்கள் பார்க்க,

    இவர்களது ஐந்து வயதுக் குழந்தை அஞ்சனா வாரத்தில் மூன்று நாட்கள் அப்பாவிடமும், வாரத்தில் மூன்று நாட்கள் அம்மாவிடமும் இருக்க வேண்டும். மீதி ஒரு நாளைக் குழந்தை தன் விருப்பம் போலத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!

    இது நல்ல கதையா இருக்கே? குழந்தையை ஏன் பங்கு போடணும்? மல்லிகாவின் அம்மா குமுற, அப்பா வாய் திறந்தார்.

    போடாம? மல்லிகா மட்டும் தனியா இருந்து அதைப் பெத்துக்க முடிஞ்சிருக்காது இல்லையா? புருஷன்னு ஒருத்தன் இருந்ததாலதானே...

    சரி சரி பேசாம இருங்க!

    இருக்கேன்! பாவம் மோகன். இது மாதிரி அடங்கிப் போக முடியலை உன் பொண்ணு கிட்ட! விடுதலை நிஜமாவே அவனுக்குத்தான்!

    அம்மா எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள் அவரை.

    முதலில் அம்மா வீட்டில் இருந்து ஆரம்பிக்கட்டும் என்று குழந்தை மல்லிகாவிடம் தரப்பட்டது.

    கோர்ட் வாசலில் கார் வர, காரில் மல்லிகா, அவளைப் பெற்றவர்கள், குழந்தை என ஏறிக்கொண்டார்கள்.

    மல்லிகா!

    என்னம்மா?

    ஏன் உம்மணா மூஞ்சியா இருக்கே? இனி சந்தோஷமா இருக்கலாம் நீ. யாரும் உன்னைக் கட்டுப்படுத்த முடியாது!

    தெரியும்மா!

    மறுபடியும் அப்பீல் போட்டு, குழந்தை நிரந்தரமா நம்மகிட்ட இருக்கும்படியா செய்யலாம்!

    ம்!

    பாதி பாதியா வளர்ந்தா வாழ்க்கை பாழாயிடும்!

    மல்லிகா பேசவில்லை.

    வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

    எனக்கு டயர்டா இருக்கும்மா. நான் போய் படுக்கறேன்!

    தனியறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தாள் மல்லிகா. கதவு சாத்திக் கொண்டது. ஏ.ஸி. மெல்லியதாக உறுமத் தொடங்கியது.

    ராஜ்மோகனின் முகம் கண்களில் விசுவரூபம் எடுத்தது.

    இனிமேல் இவனுடன் நான் வாழப் போவதில்லை!

    'சட்ட ரீதியாக நிரந்தரமாகப் பிரிந்தாகி விட்டது. குழந்தையைக்கூடக் கூறு போட்டாகி விட்டது!’

    கவிழ்ந்து படுத்தாள். மார்பில் தாலி குத்தியது. எழுந்து உட்கார்ந்தாள். அதை கழுத்துக்கு வெளியே விட்டாள்.

    'இனி இதற்கு என்ன பொருள்?'

    'நான் திருமதியா? குமாரியா?'

    'கறந்த பால் மடிக்குப் போக முடியாது. ஒருவனுடன் மஞ்சத்தைப் பகிர்ந்து கொண்டு, குழந்தையும் பெற்றபின் எப்படி குமாரியாக முடியும்?'

    'இல்லை!'

    'அவனை சட்ட ரீதியாகப் பிரிந்த பின், யாருக்கு நான் திருமதி?’

    'குமாரியும் அல்ல; திருமதியும் அல்ல என்றால் நான் யார்?'

    'இந்த சமூகம் என்னை எப்படி அழைக்கும்?'

    'விதவைக்குக் கூட இந்தக் குழப்பம் இல்லை இங்கு. விவாகரத்து ஆன பெண், விதவையை விட மோசம்!'

    'புருஷனை ரத்து பண்ணினவ இவதான்!'

    'பஜாரி! ஊர் மேஞ்சிருப்பா. அறுத்துக் கட்டிட்டான் அவன்!'

    'என்னா ஒரு தில்லு இருந்தா, கோர்ட் படி ஏறி, கல்யாண பந்தத்தை இல்லாம செய்வா?'

    'இது மாதிரிப் பொம்பளைங்க ஊர்ல கூடிப் போயிட்டதாலதான் நாட்ல பஞ்சம் தலை விரிச்சாடுது!'

    மல்லிகா குபீரென எழுந்தாள். வியர்வையில் உடம்பு முழுக்க நனைந்திருந்தது. அந்த ஏ.ஸி.யிலும் இத்தனை வியர்த்திருப்பது ஆச்சர்யம் தந்தது.

    உலகம் தன்னை எப்படி ஏற்றுக் கொள்ளும் என்ற அந்த விமர்சனம் அவளைப் பந்தாடிக் கொண்டிருந்தது. எழுந்து வெளியே வந்தாள். அம்மா யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தாள்.

    ஆமாம்! இன்னிக்குத்தான் டைவோர்ஸ் ஆச்சு. ஆமாம்... ஒரு வழியா எம் பொண்ணுக்கு விடுதலை. பார்ட்டி தரப்போறேன். கல்யாணத்துக்கு முன்னால எத்தனை சுதந்திரமா இருந்தா. அவ சிறகுகளை ஒடிச்சிட்டான் அந்தப் பாவி! மறுபடியும் அது முளைச்சாச்சு. இனி எம் பொண்ணு பறக்கலாம். நடுவுல ஆறுவருஷ காலம் இருண்ட காலம்!

    ரிசீவரை வைத்தாள். குழந்தை ஓடி வந்தது. திரும்பினாள்.

    என்ன மல்லிகா?

    அம்மா... இந்த விவாகரத்து சரிதானா?

    ஏன் உனக்கு இப்படி வேர்த்திருக்கு? என்னம்மா குழப்பம்? அருகில் வந்து தன் சேலைத் தலைப்பால் மகளின் வியர்வையைத் துடைத்துவிட்டாள்.

    இனிமே நான் யாரும்மா?

    மல்லிகா!

    என்ன மல்லிகா?

    வெறும் மல்லிகா! உனக்கு இனிஷியல் வேண்டாம். ஒரு பெண்ணோட சந்தோஷத்துக்கு முதலெழுத்து தடையா இருக்கும்னா, அதை வேண்டாம்னு உதற வேண்டியதுதான்.

    மம்மி! குழந்தை அஞ்சனா ஓடிவந்தது.

    அதைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

    நாளைக்கு நான் ஸ்கூல் போகணுமா?

    ம்!

    "யார் கொண்டு வந்து விடுவா? அப்பா இங்கே வந்து என்னைக்

    Enjoying the preview?
    Page 1 of 1