Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Subhathinam
Subhathinam
Subhathinam
Ebook134 pages1 hour

Subhathinam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603629
Subhathinam

Read more from Devibala

Related to Subhathinam

Related ebooks

Reviews for Subhathinam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Subhathinam - Devibala

    http://www.pustaka.co.in

    சுபதினம்

    Subhathinam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் பார்ட்டி!

    வேணு மாலை ஆறு மணிக்கு ஆபீசிலிருந்து நேராக புறப்பட்டு விட்டார்!

    உடன் வேலை பார்க்கும் அதிகாரியின் மகளுக்கு பிறந்த நாள் பார்ட்டி! பொதுவாக வேணுவுக்கு இந்த மாதிரி பார்ட்டிகள் என்றாலே அலர்ஜி! காரணம் போதையில் கரைந்து போகும் இந்த மாதிரி விருந்துகளில் மிஞ்சுவது சந்தோஷத்தை விட மனக்கசப்புகள்தான் அதிகம்!

    இதை தவிர்க்க முடியவில்லை!

    உயர் அதிகாரி! தவிர வராகன் மிகவும் நெருங்கிய நண்பரும் கூட! விட முடியாது!

    வேணு தன் பைக்கை எடுத்துக் கொண்டு அந்த ஓட்டலை அடைய ஏழு மணியாகி விட்டது!

    வழியில் கடையில் இறங்கி, ஏதோ ஒரு பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு ஓட்டலை அடைய ஏழாகி விட்டது!

    மற்ற ஆபீஸ் நண்பர்கள், வெளி நட்பு, சுற்றம், உறவுகள் என ஒரு கணிசமான கூட்டம் அந்த கூடத்தை நிரப்பியிருந்தது!

    சரியாக ஏழரை மணிக்கு அந்த பெண் முழு அலங்காரத்துடன் வந்தாள்! ஓட்டலே பிரம்மாண்ட கேக்கை தயார் செய்திருக்க, மற்ற விளக்குகள் அணைய, ஸ்பாட்லைட் மட்டும் எரிய, பலூன் உடைய, கேக் வெட்டி, ஜிகினா தாள்கள் பறக்க, ஹேப்பி பர்த்டே கோஷங்கள் முழங்க! அத்தனை பேரும் கூச்சலிட மெல்லிய இசை கசிய, பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவளைச் சுற்றி நிரம்ப, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட, வேணுவும் வாழ்த்தி தன் பரிசைத்தர, முதலில் மது விருந்து ஆரம்பித்து விட்டது! வேணுவுக்கு குடிப்பழக்கம் இல்லை! ஒரு ஓரமாக வந்து உட்கார்ந்தார்!

    வந்தவர்களில் பெரும் பகுதி போட்டி போட்டுக் கொண்டு குடிக்கு முந்தினார்கள்.

    காக்டெயில் பார்ட்டியாக இருந்ததால் உற்சாகம் கரை புரண்டு ஓடியது!

    வேணு அந்தபக்கமே போகவில்லை!

    அவருக்கு கேக் தரப்பட்டது! வேணு தெரிந்த நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்!

    உணவுக் கூடம் திறக்கப்பட, பஃபே சிஸ்டம்!

    வேணு மெதுவாக எழுந்து வந்து ஒரு பிளேட்டை கையில் எடுத்துக் கொண்டார்!

    இரண்டு சப்பாத்தி துண்டுகளை அதில் வைத்து குருமாவையும் சேர்த்துக் கொண்டு ஓரமாகப் போய் உட்கார்ந்தார்!

    சக நண்பர் ஒருவர் ஓரளவு குடித்து முடித்து உணவுடன் அருகில் வந்தார்!

    நீங்க குடிக்க மாட்டீங்க இல்லையா?

    ஆமாம்!

    ஏன் இப்படி இருக்கீங்க! வாழ்க்கையை அனுபவிக்கணும் வேணு சார்! இந்தக் காலத்துல யாரு குடிக்கலை! அங்கே போய்ப் பாருங்க! பொம்பளைங்க கூடக் குடிக்கறாங்க! முன்னெல்லாம் கூச்சப்படுவாங்க! இப்ப கவலையே படறதில்லை! ஆம்பளைக்கு சமமா தண்ணியடிக்கறாங்க!

    சரி!

    சம்சாரத்துக்கு பயப்படறீங்களா? வீட்டுக்கு பயந்து நம்ம சந்தோ ஷத்தை இழக்கலாமா?

    வேணுவுக்கு எரிச்சலாக வந்தது!

    குடிக்கறவன் எல்லாம் கெட்டவன் இல்லை சார்! குடிக்காதவங்க நல்லவங்களா?

    வேணு மெல்ல எழுந்தார்!

    ஏன் போறீங்க?

    இல்லை! சட்னி எடுத்துக்க போறேன்!

    அந்த நபர் கூடவே வர, வேணுவுக்கு தப்பித்தால் போதும் என்றிருந்தது!

    அதற்குள் குடிக்கும் அந்தப் பகுதியில் ஒரு சலசலப்பு அதிகமாகி ஏதோ ஒரு பிரச்சனை உருவாகி விட்டது!

    வேணுவுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை!

    புறப்படலாம் என முடிவு செய்து திரும்ப, ஓசை பலமாகக் கேட்டது!

    வந்த முதல் குடிக்க ஆரம்பிச்சிட்டான்! போதை தலைக் கேறியாச்சு! வண்டி ஓட்ட முடியாது! அவனை யாராவது கொண்டு போய் வீட்ல விடுங்கப்பா!

    சரிங்க!

    ஒரு இளைஞன் இரண்டு பேராகத் தாங்கிப் பிடித்து அழைத்து வர, வேணு தற்செயலாகத் திரும்பினார்!

    தூக்கிவாரிப் போட்டது!

    அந்த இளைஞன் - நரேஷ்!

    வேணு கண்களை விரித்துப் பார்த்தார்!

    நிச்சயமாக அது நரேஷ்தான்! இரண்டு பேர் தாங்கிப் பிடித்திருக்க, ஏதோ உளறிக் கொண்டே முழு போதையில் நரேஷ் அவர்களின் தோளில் தொங்கிக் கொண்டே செல்ல.

    "வந்த முதல தண்ணியடிக்க ஆரம்பிச்சிட்டான்!

    படிச்ச பையன்! பெரிய உத்யோகத்துல இருக்கான்! பொது இடத்துல எப்படி நடக்கணும்னு தெரிய வேண்டாம்? குடிச்சிட்டு ரகளை பண்றான்!"

    லிஃப்ட் வரை செல்வதற்குள் நரேஷ் குபுக்கென வாந்தியெடுத்து, தாங்கிப் பிடித்தவர்கள் வாய்க்கு வந்தபடி பேசி, ஓட்டல் பணியாளர்கள் ஓடிவந்து சுத்தம் செய்து, பார்ட்டிக்கு வந்தவர்கள் அத்தனை பேர் கவனமும் அந்தப் பக்கம் திரும்ப, விமர்சனங்கள் பறக்க, அந்த இடமே ஒரு மாதிரி ரசா பாசமாகி விட, நரேஷ் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டான்!

    வேணு மெதுவாக வெளியே வந்தார்!

    நேரம் இரவு எட்டரை! ஓட்டல் வாசலுக்கு வந்து விட்டார் வேணு! அதிர்ச்சி பலமாக இருந்தது!

    அவரால் நிற்கக் கூட முடியவில்லை!

    மெதுவாக வந்து தன் பைக்கை வெளியே எடுத்தார்!

    அந்த நரேஷ் வேறு யாருமில்லை!

    இன்னும் ஒரு மாதத்தில் வேணுவின் மகள் சஞ்சனாவை மணக்கப் போகும் மாப்பிள்ளை!

    பெரிய படிப்பு! நல்ல உத்யோகம்! கண்யமான, வசதியான குடும்பம்! சொந்த வீடு, கார் என சகல வசதிகளும் கொண்ட மனிதர்கள்! இந்த நரேஷ் ஒரே பிள்ளை! வெளி நாட்டுக்கெல்லாம் போய் வந்தவன்!

    நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது!

    இந்த மூன்று மாதங்களில் சஞ்சனாவை மாலை நேரங்களில் வெளியே அழைத்துப் போய் பரிசுப் பொருட்கள் எல்லாம் வாங்கித் தருகிறான்!

    வீட்டுக்கே வந்து சாப்பிடுகிறான்!

    பழகுவதற்கு இனிமையாவன்!

    இது மாதிரி ஒரு மாப்பிள்ளை யாருக்கும் அமையாது என வேணு கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறார்! உறவுக்காரர்களுக்கு கூடப் பொறாமை!

    வேணுவுக்கு இரண்டு பெண்கள்!

    மூத்தவள் சஞ்சனா! அவளுக்குத் தான் கல்யாணம்!

    சஞ்சனாவும் பி.டெக் கலை படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் உத்யோகம்! அடுத்தவள் மேகா, கடைசி வருஷ பொறியியல் படிப்பு!

    வேணுவின் மனைவி அஞ்சலி அரசாங்க உத்யோகம்!

    குடும்பத்தில் ஒரு பிறகு குறையும் இல்லை!

    பெரிய மண்டபம் பிடித்து, கல்யாண கான்ட்ராக்ட் பேசி, சகல ஏற்பாடுகளும் முடிந்து விட்டது!

    அழைப்பிதழ்களின் வினியோகம் கூட தொடங்கி விட்டது!

    குடும்பமே குதூகலமாக இருக்கும் போது... வேணுவுக்கு சரியான அதிர்ச்சி!

    மூக்கு முட்டக் குடித்து,. வாந்தியெடுத்து, மற்றவர்களின் ஏச்சு பேச்சுக்கு ஆளாகி...

    நல்ல காலம் அங்கிருந்தவர்களுக்கு நரேஷ் என் வருங்கால மாப்பிள்ளை என்று தெரியவில்லை!

    ஒரு வேளை யாருக்காவது தெரிந்திருக்குமோ?

    மாப்பிள்ளையை இந்த நிலையில் நான் பார்த்த பிறகும் கண்டு கொள்ளாமல் வந்தது தப்பா?

    "என்ன தப்பு?

    Enjoying the preview?
    Page 1 of 1