Thendrale Vaa!
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Inikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Iruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thendrale Vaa!
Related ebooks
Poomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsKetten Thanthaai Rating: 5 out of 5 stars5/5Vaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Amma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratingsKonchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kadivalam Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsAmma! Rating: 0 out of 5 stars0 ratingsKanna Unnai Thedugirean Rating: 0 out of 5 stars0 ratingsThakka Vachuko! Rating: 4 out of 5 stars4/5தான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsMela Satham! Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsVaram Rating: 5 out of 5 stars5/5Por Megangal Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsJannalora Nila Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsMaakolam Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thaalangal Rating: 0 out of 5 stars0 ratingsIlakku Rating: 0 out of 5 stars0 ratingsJeevanamsam Rating: 0 out of 5 stars0 ratingsKowsalya! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thendrale Vaa!
0 ratings0 reviews
Book preview
Thendrale Vaa! - Devibala
http://www.pustaka.co.in
தென்றலே வா!
Thendrale Vaa!
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
போட்டோவில் வசிகரமாக இருந்தான் கோகுல் பெரிய கண்கள் - அதில் நிரந்தரமாக உறைந்து நிற்கும் சிரிப்பு - தாடையில் விழும் மெல்லிய குழி - அதிகமான அழகைக் காட்டியது! நிறம் சுமார்தான்!
சைத்ராவுக்கு நிறம் மங்கலாக இருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும்! கறுப்புதான் எனக்குப் பிடித்த கலரு என்ற ரகம்!
கோகுல் எம்பிஏ படித்து விட்டு பெரிய ஒரு நிறுவனத்தில் உத்யோகம்! அப்பா இல்லை! அம்மா மட்டும்! இரண்டு அண்ணன்மார்கள் வெளியூரில்! இங்கே சொந்தமாக ஒரு வீடு எல்லா வசதிகளும் உள்ள குடும்பம்!
அப்பா நாதன் மகளைப் பார்த்தார்!
பெண் பார்க்க வரச் சொல்லலாமா சைத்ரா?
சரிப்பா!
உனக்குப் புடிச்சிருக்கா?
போட்டோல புடிச்சிருக்கு! நேர்ல பார்த்துப் பேசிப் பழகணும்! அப்புறம்தான் முடிவெடுக்க முடியும்!
அம்மா நளினி வெளியே வந்தாள்!
ஏண்டீ? பழகணுமா?
ஆமாம்மா! அதுல என்ன தப்பு? ஒரு நாள் பார்த்து, சில நிமிஷங்கள் பேசி ஒருதரைப் பற்றி எப்படி முடிவெடுக்க முடியும்? காதலிக்கறவங்க பழகிப் பார்த்துத் தானே முடிவெடுக்கறாங்க?
எனக்கு இதெல்லாம் பிடிக்கலை! இதை அவங்ககிட்ட எப்படி சொல்றது? அசிங்கமா இருக்காது?
என்ன அசிங்கம்? நீ சொல்ல வேண்டாம் நான் பேசிக்கிறேன்!
என்னங்க! இது நல்லாருக்கா?
நளினி! இது நம்ம காலம் இல்லைனு நீ புரிஞ்சுக்கணும்!
நீங்க இவளுக்குக் குடுக்கற இடம் ரொம்ப அதிகம்!
அப்பா! அம்மாவோட விருப்பத்துக்கு நான் வளைஞ்சு குடுக்க முடியாது!
என்னிக்குடி நான் சொல்றதை நீ கேட்டிருக்கே? என்ன சொன்னாலும் எதிர்ப்புதானே?
நீ அந்த மாதிரி நடந்துகறே!
சரி விடு! நமக்குள்ளே சண்டை வேண்டாம்! நாங்க உனக்குப் பெரியவங்க! அதைக் கொஞ்சம் மதிச்சு நட!
விடு நளினி! என்னம்மா? நாளைக்கு வரச் சொல்லட்டுமா!
சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வரச் சொல்லுங்கப்பா! காலைல முடியாது!
சரிம்மா! அவங்க வசதி எப்படீனு கேட்டுப் பாக்கறேன்!
aப்பா உடனே டயல் செய்தார் தரகருக்கு! விவரம் சொன்னார்.
நான் கேட்டுட்டு உடனே சொல்றேன்!
இருபது நிமிடங்களில் பதில் வந்தது!
சைத்ரா தன் வேலைகளை கவனிக்க உள்ளே போய் விட்டாள்!
ஜாதகம் பொருந்தியிருக்கு! அமைஞ்சா நல்லா இருக்கும்!
நளினி விரும்பினாள்!
சைத்ரா ஒரு எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்! ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்ந்தவள்! பிடிவாதக்காரி!
அம்மா நளினி – பட்டதாரி! புத்திசாலி!
அப்படியும் வேலைக்குப் போக முடியவில்லை.
கல்யாணமாகி - ஆறு வருடங்கள் கழித்து பிறந்த பெண் சைத்ரா! பார்க்காத டாக்டர் இல்லை காத்திருந்து பிறந்த குழந்தை என்பதால் சலுகை அதிகம்!
குழந்தையை பராமரிக்க ஆள் இல்லாததால் நளினி வேலையை ராஜினமா செய்யும் நிலை! வேறு வழியில்லாமல் நளினி வேலையை விட்டாள்!
நாதன் குடும்பத்தை பராமரிக்க முதலில் கஷ்டப்பட்டார்!
சைத்ராவின் ராசி அவரைத் தாக்கி விட, பண வரவு கூட்டிப் போனது! பதவி உயர்வு கிடைத்தது! வீடு, வாகனம் வாங்கும் யோகம் சேர்ந்தது!
சைத்ராவின் வரவு செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தது!
அதனால் நாதன் மகளை அதட்டிக்கூட பேச மாட்டார்.
இது சைத்ராவின் பிடிவாதம், முன்கோபம், தான் நினைத்ததை நடத்தும் வேகம் என ஒரு பெண்ணுக்கு இருக்கக் கூடாத அம்சங்களை அதிகமாக்கியது!
எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டாள்.
சகிப்புத் தன்மை அறவே இல்லை!
தூக்கி எறிந்து பேசி விடுவாள்!
வளர வளர மேற்படி குணங்கள் நளினிக்கு கவலையை அதிகமாக்கியது!
இது ஒரு பொண்ணுக்கு நல்லதல்ல! எல்லாருக்கும், எப்போதும் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை! தோல்வியும், சரிவும் எப்பேற்பட்டவருக்கும் வரும் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் மன்சுக்கு வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவாள்!"
நீ விடும்மா! அது வரும்போது பாத்துக்கலாம்!
சைத்ரா வாயை அடைத்து விடுவாள்! அதற்கு நாதன் உடந்தை!
இதப்பாரும்மா! தோல்வி வரணும்னு கட்டாயமா என்ன?
இதப்பாருடி! எல்லா மனுஷங்களுக்கும் ஏற்ற இறக்கம் கண்டிப்பா உண்டு! மனுஷ வாழ்க்கை சக்கரம்தான்! அது சுழலும் போது எப்படியும் மேலயே இருக்க முடியாது! கீழேயும் வந்துதானே தீரணும்? அப்படி வந்தாத்தான் அது சக்கரம்!
நான் அதுக்காக கவலைப்படலை!
பலவிதமான விவாதங்கள், அடிக்கடி மோதல்கள்.
நாதனுக்கு சலிப்பாகி விட்டது!
தினமும் உங்க சண்டையை விலக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு!
இந்தப் பொண்ணு, ஒரு வீட்டுக்கு வாழப் போய் நல்லவிதமா இருக்கணுமேனு நான் கவலைப்படறேங்க!
அதெல்லாம் இருப்பா நளினி! அவளுக்கே புரியும்! படிச்சு, உத்யோகம் பாக்கலையா? பலதரப்பட்ட மனுஷங்களை வாழ்க்கைல சந்திக்கலையா? அவளுக்கும் உலகம் தெரியும்! நீ எல்லாத்துக்கும் ரகளை பணிட்டு இருக்காதே!
நளினி பேசவில்லை!
மறுநாள் மாலை ஐந்து மணிக்கு நாதன் வீடு திரும்பி விட்டார், நளினி தயாராக இருந்தாள்!
சைத்ரா இன்னும் வரலீங்க!
வருவா! நீ டென்ஷன் ஆகாதே!
நேரம் ஐந்து நாற்பது! சைத்ரா வந்த பாடில்லை!
என்னங்க! போன் பண்ணிக் கேளுங்க! சைத்ரா இன்னும் வரலியே?
வந்துகிட்டே இருப்பா! விடு நளினி!
வாசலில் கார் வந்து நின்றது! பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள்!
நாதன் ஓடிப் போய் வரவேற்றார்!
கோகுல், அவனது அம்மா, கோகுலின் நண்பர்கள் இருவர் என நாலு பேர் வந்திருந்தார்கள்!
எல்லாரையும் கோகுலே அறிமுகப் படுத்தினான்!
நளினி தவித்துப் போனாள்!
காபி கொண்டு வர்றேன்!
முதல்ல பொண்ணை வரச் சொல்லுங்க! பார்த்த பிறகுதான் மற்றதெல்லாம்!
நளினி உள்ளே வந்தாள்!
இப்ப என்னங்க செய்யறது? இவ இன்னும் வரலியே?
நீ ஏன் பதட்டப்படற? சொல்லலாம்!
நாதன் வெளியே வந்தார்!
சைத்ரா - ட்ராபிக்ல மாட்டியிருக்கா! இன்னும் வீடுவந்து சேரலை! ஸாரி!
பரவாயில்லை! அவ வரட்டும்! நாங்க காத்துக்கிட்டிருக்கோம். நீங்க ரெண்டு பேரும் வந்து ஒக்காருங்க! பேசலாம்!
அவர்கள் கலகலப்பாக, பேச ஆரம்பித்தார்கள்!
குறிப்பாக கோகுல் நன்றாகவே பேசினான்!
"எந்த ஒரு பந்தாவும் இல்லை! தன், படிப்பு, உத்யோகம், வளர்ப்பு, தன் ருசிகள் என எல்லாம் சொன்னான்!
நண்பர்கள் இருவரும் நன்றாகப் பேசினார்கள்.
நேரம் ஆறரை!
நாதனே பதட்டமாகத் தொடங்கி விட்டார்.
எழுந்து வந்து டயல் செய்தார் எடுத்தாள் சைத்ரா!
ஸாரிப்பா! ஆபீசை விட்டு, கிளம்ப லேட்டாயிருச்சு! இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்
அவங்க வந்து அரை மணி நேரமாச்சும்மா!
காத்திருக்க அவங்களுக்கு பொறுமை இல்லைனா, இன்னொரு நாளைக்கு வரட்டும்பா!
நாதனுக்கே இதைக் கேட்டு எரிச்சல் வந்தது!
நீ சீக்கிரம் வாம்மா!
சரியாக ஏழு மணிக்கு உள்ளே நுழைந்தாளள் சைத்ரா!
ஸாரி! சொன்னபடி வர முடியலை!
பரவாயில்லை நீ முகம் கழுவிட்டு வா!
இருக்கட்டும்
சைத்ரா அருகில் வந்து உட்கார்ந்தாள்.
இயல்பாக பேசத் தொடங்கினாள்.
அவளது யதார்த்தம் கோகுலுக்குப் பிடித்திருந்தது!
நாம கொஞ்சம் பேசணும் சைத்ரா!
"இங்கே உள்ளே