Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulley Vaammaa
Ulley Vaammaa
Ulley Vaammaa
Ebook97 pages47 minutes

Ulley Vaammaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மெளர்யா என்பவன் டாக்டர். இவன் பெண் இனத்தை வெறுப்பவன் அவ்வாறு தன் தொழில்மூலம் பெண் குழந்தையை கருவிலே அறிந்து அதனை ஆண் குழந்தையாக மாற்றும் சாதனையில் வெற்றியடைந்தான். இதற்கிடையில் மெளர்யா என்பவன் ஏன் அட்சாயவைக் கொல்ல திட்டமிட வேண்டும்? மெளர்யாவுக்கு அட்சயாவுக்கு என உறவு? பெண் இனத்தை அழிக்க நினைத்த மெளர்யாவின் நிலை என்ன? என்பதை வாசித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580100608684
Ulley Vaammaa

Read more from Devibala

Related to Ulley Vaammaa

Related ebooks

Reviews for Ulley Vaammaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulley Vaammaa - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உள்ளே வாம்மா

    Ulley Vaammaa

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ஜம்பு, இப்படி வந்து உட்காரு.

    சொல்லுங்க சின்ன முதலாளி. ஜம்பு எதிரேவந்து பவ்யமாக நின்றான்.

    சின்ன முதலாளி என்று அழைக்கப்பட்ட அந்த இளைஞன் வசீகரமாக இருந்தான். முப்பதுகளின் ஆரம்பத்தில் தென்பட்டான். ரோஜாநிற உதடுகளின்மேல் புஷ்டியான மீசை அமைத்திருந்தான். ஆறடி கடந்த உயரத்தில் சரத்பாபுவை ஞாபகப்படுத்தினான். தன் கைப்பையின் ஜிப் திறந்து புதிதாக ஒரு நூறுரூபாய்க் கட்டு உருவினான்.

    தூக்கி எறிந்தான். பிடி ஜம்பு…

    எதுக்கு முதலாளி? பிடித்துக்கொண்டே ஜம்பு கேட்க,

    உனக்கு அட்வான்ஸ்.

    நான் என்ன செய்யணும்?

    அட்சயாவைக் கொல்லணும்.

    ஜம்பு கரன்ஸிக்கட்டை நழுவவிட்டான். இ... இப்ப என்ன சொன்னீங்க?

    அட்சயாவை நீ கொல்லணும். அதுவும் உடனே செய்யணும். முடிச்சிட்டா, முப்பதாயிரம் இன்னும் தர்றேன்.

    அவங்க… அவங்க...

    ஜம்பு, உனக்கு நான்தானே முதலாளி?

    ஆமாம்.

    சொன்னதைச் செய்.

    ஒரு கர்ப்பிணிப்பெண்ணை…?

    எனக்குத் தெரியும். போ ஜம்பு.

    ஜம்பு வெளியேவந்தான். பின்னால் வந்த அவன், ஜம்பு, இதப்பிடி, என்று ரிவால்வரை நீட்டினான்.

    இதுல நாலு தோட்டாக்கள் இருக்கு. அட்சயாவுக்கு ஒண்ணுபோதும். முடிச்சு, கையோட தோட்டத்துல புதைச்சிட்டு வந்திரு. ம்!

    ரீவால்வரை வாங்கிக்கொண்டு ஜம்பு வெளிப்பட்டபோது மழை ஆரம்பமாகியிருந்தது. இரவு மணி ஏழரை நன்றாக இருட்டிப் போயிருந்தது வெளியே.

    ***

    அது விருகம்பாக்கம்…

    நகரில் ஒருபகுதியை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு, மீதிக்கு அமானுடம் காத்தது.

    ஜம்பு தன் புல்லட்டை உதைத்தான். மழைக்கோட்டு உடலிலும் தலையிலும் நீர்த்துளிகளை எதிர்க்க வேகம் பிடித்தான். பல்லவன் வைப்பர்களோடு எதிரே சீறிக்கொண்டிருந்தது.

    வளசரவாக்கத்தை நோக்கி வண்டியைச் செலுத்தத் தொடங்கினான் ஜம்பு.

    அவன் மனம் குழம்பிக்கிடந்தது.

    மூகாம்பிகா கல்யாண மண்டபத்துக்குச் செல்லும்பாதையை அம்புக்குறி போட்டு வழி சொல்ல, இடப்பக்கமாக ஒடித்துச் சடாரென உள்ளே நுழைந்தான். மனித சஞ்சாரத்தை மறந்திருந்தது அந்தப்பகுதி.

    சற்றுப் பணக்காரத்தனமாக பங்களாக்களைப் பூசிக்கொண்டிருந்த ஜானகி நகரில் புல்லட்டை நுழைத்தான் ஜம்பு.

    இடதும் வலதுமாக ஒடித்து ஒரு வீட்டின் முன்போய் நின்றான். புல்லட்டை நிறுத்திவிட்டுப், படியேறி வாசலில் நின்றான்.

    மின்சாரமணியை விரலால் தூண்ட, உள்ளே சன்னமான சங்கீதம் ஐந்து நொடிகளுக்கு. காலடி ஓசையைத் தொடர்ந்து கதவுபிளக்க, வந்துட்டீங்களா? என்று ஆர்வமான குரலில் பேசிய அட்சயா நிமிர்ந்து சட்டென அதிர்ந்தாள்.

    ஸாரி! அவர்னு நினைச்சேன். நீங்க யாரு?

    நான் உள்ளே வரலாமா அம்மணி?

    சற்றுத்தயங்கிய அட்சயா, வாங்க!

    ஜம்பு உள்ளே நுழைந்தான். சோபாவில் அமைதியாக வந்து உட்கார்ந்தான். பார்வையை உயர்த்தினான்.

    மேடான அவள் வயிறு ஏழாவது மாதத்தை எடுத்துச்சொன்னது.

    நீங்க யாரு?

    எழுந்தான் ஜம்பு. உன்னைக் கொல்ல அனுப்பப்பட்டவன்!

    அவள் கலகலவெனச் சிரித்தாள்.

    ஜம்பு அதிர்ந்து. ஏம்மா சிரிக்கிறே?

    இல்லை... கொல்லவந்த மூஞ்சிமாதிரித் தெரியலையே உங்களைப் பார்த்தா!

    சடாரென்று ரிவால்வரை உருவி விட்டான் ஜம்பு. இன்னொரு கையில் பணக்கட்டு.

    உன்னைச்சுட நான் வாங்கின அட்வான்ஸ்தொகை இது!

    அட்சயா இப்போது நிஜமாகவே மிரண்டாள்.

    எ... என்னை... எ… எதுக்காக நீங்க கொல்லணும்? நான் உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சேன்?

    எனக்கு நீ எந்தத் துரோகமும் செய்யலைமா நான் அம்புதான்.

    சரி. அனுப்பினது யாரு?

    அதை நான் சொன்னா, உன்னால் தாங்கமுடியாது அம்மணி!

    பரவாயில்லை, சொல்லுங்க.

    கண்களை இறுக மூடிக்கொண்டான் ஜம்பு. உணர்ச்சிகளைத் தொலைத்துவிட்டு, உதடுகளைப் பிரித்தான்.

    எழுத்து எழுத்தாக அந்தப்பெயரை உச்சரித்தான்.

    அலறிவிட்டாள் அட்சயா.

    நோ... இருக்காது. ஒருநாளும் அப்படி நடக்காது. நான் இதை நம்பமாட்டேன். வெளியே போ. இப்பவே நான் போலீசுக்கு ஃபோன் பண்றேன்.

    "உனக்கு நான் இதை

    Enjoying the preview?
    Page 1 of 1