Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nalaayini - 94
Nalaayini - 94
Nalaayini - 94
Ebook98 pages40 minutes

Nalaayini - 94

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பம் நல்ல முறையில் நடக்க கணவன், மனைவி இருவருக்கும் நம்பிக்கை மிகவும் அவசியம். அப்படி நம்பிக்கையான அன்யோன்னியமான தம்பதிகளாக வாழும் பாபு, சுஷ்மிதா. இவர்கள் வாழ்க்கையில் மனோவின் மூலமாக விதி எவ்வாறு விளையாடியது? விடியலைத் தடுத்து தன் தாலியைத் தக்க வைத்துக்கொண்ட நளாயினிப்போல், தன் கணவனுக்காக போராடி தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டாளா சுஷ்மிதா? நளாயினியாக...

Languageதமிழ்
Release dateSep 20, 2022
ISBN6580100607877
Nalaayini - 94

Read more from Devibala

Related to Nalaayini - 94

Related ebooks

Reviews for Nalaayini - 94

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nalaayini - 94 - Devibala

    http://www.pustaka.co.in

    நளாயினி – 94

    Nalaayini – 94

    Author :

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    நீங்களும் எப்பவும் என் நினைவாவே இருக்கணும் இருப்பீங்களா?

    சொல்ல முடியாது!

    என்னது?

    தினமும் உன்னை நான் மறப்பேன்!

    என்ன சொன்னீங்க?

    நினைச்சாத் தானேடா மறக்க முடியும் தினமும். இதெப்படி இருக்கு?

    சிரி பாக்கலாம்.

    அவள் கன்னத்தை செல்லமாகத் தட்டினான் கோவிந்தா.

    அவள் பேசவில்லை. மௌனமாக இருந்தாள்.

    உனக்கு இன்னமும் கோபம் தீரலையாக்கும்.

    நமக்குக் கல்யாணம் ஆகி முழுசா ஒரு வருஷம்கூட ஆகலை.

    எனக்குத் தெரியாதா?

    பத்து வருஷம், இருபது வருஷம் ஆனாக்கூட புருஷனை விட்டுப் பிரிய சில மனைவிகள் சம்மதிக்கறதில்லை.

    எனக்கும் தெரியும்டா. நான் என்ன வருஷக்கணக்காவா அங்கே இருக்கப் போறேன்? என் திறமையை பாராட்டி கம்பெனி தன் செலவில் என்னை அயல்நாட்டுக்கு அனுப்புது. எத்தனை காலம்? சரியா பதினெட்டு மாசங்கள். பல்லைக் கடிச்சிட்டு பொறுத்துக்கோ. பறந்து போயிராதா நாட்கள்?

    சரிப்பா, உங்ககூட நானும் வரக்கூடாதா?

    புரியாம பேசாதே மனோ, கம்பெனி என் செலவுக்கு மட்டும்தான் பணம் தரும். உன் செலவை பதினெட்டு மாசம் நடத்த முடியுமா? அயல்நாட்ல தாங்குமா? அப்புறம் அங்கே போய் நாலுகாசு சம்பாதிக்கறதல அர்த்தம் இல்லாம போயிடும். மேலும் இங்கே வேலை பாக்கறே, அதை ராஜினாமா செய்யணும்.

    அவசியமில்லை. சம்பளமில்லா லீவு போட்டுக்கறது.

    எதுக்கு மாசம் ரெண்டாயிரம் ரூபா சம்பளம் கிடைக்குமா.

    ஏன் பணம், பணம்னு பறக்கறீங்க? உங்களுக்கு என்னைவிடப் பணம்தான் முக்கியம்.

    கோவிந்தாவுக்கு முகம் சிவந்தது.

    கொஞ்சம் அடக்கமாக பேசு.

    ஏன்? நான் என்ன கூடாததைப் பேசிட்டேன். ஒரு குழந்தையும் பிறக்கலை நமக்கு.

    கல்யாணமாகி பத்து மாசந்தான் ஆச்சு.

    தெரியும். இந்த வீட்ல நான் தனியா இருக்க முடியுமா? பதினெட்டு மாசம்?

    உன் வீட்டில் இருந்து யாரையாவது வரவழை.

    ஏன் உங்கம்மா வரக்கூடாதா?

    அர்த்தமில்லாம பேசாதே மனோ. அப்பா நோயாளி. எப்படி விட்டுட்டு வர முடியும் அம்மாவால?

    நிஜம்தான். எந்த தம்பதிகளும் வயசானாக்கூட பிரியறதில்லை. உங்களுக்கு  மட்டும் யார் அதைப் புரிய வைக்கறது?

    கோவிந்தா பேசவில்லை.

    இவளிடம் பேசி உபயோகமில்லை.

    திருமணமான இந்தப் பத்து மாதங்களில் அவளை நன்றாகக் கணித்து விட்டான் கோவிந்தா.

    எதற்கெடுத்தாலும் விவாதம். ஏறுமாறான தர்க்கங்கள். புரிந்துகொள்ள மறுக்கும் வரட்டு பிடிவாதம்.

    முதலில் எல்லை மீறி கோபம் வந்தாலும் அதை அடக்கப் பழகிக் கொண்டு விட்டான்.

    சம்பளத்தை அவள கையில்தான் பைசா குறையாமல் தருவான்.

    கணக்குகூட கேட்க மாட்டான்.

    ஆனால் மனோவும் கட்டுப்பாட்டுடன் குடித்தனம் நடத்தும் பெண்தான்.

    சரி. இந்த அயல்நாட்டுப் பயணம் ஒரு புயலைக் கிளப்பும் என்பதை அவன் அறிந்துதான் இருந்தான்.

    இன்னும் மூன்று வாரங்களில் புறப்பட வேண்டும்.

    அதற்குள் மனோவை சரிக்கட்டிக் கொள்ளலாம்.

    அருகில் நெருங்கினான்.

    மனோ….

    ம்…

    அது அப்புறம் உள்ள சங்கதி. திங்கட்கிழமையை நினைச்சு ஞாயிறைத் தொலைக்கற. நர்ஸரிப் பிள்ளை மாதிரி இருக்கு உன் போக்கு.

    …...

    அழறியாடா?

    இ...இல்லை.

    சரி. நான் போகலை. கை நிறைய சம்பாதிச்சிட்டு வந்தா சொந்தமா ஒருவீடு, கொஞ்சம் பொருட்கள், உன் மேல கொஞ்சம் டெபாசிட்டுகள் எல்லாம் அமைஞ்சிருக்கும். வேண்டாம்னா, இருக்கற சம்பளத்தை வச்சிட்டு இடிச்சிப் புடிச்சிக்கிட்டு தள்ள வேண்டியதுதான்.

    அவள் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டான்.

    எனக்கு மட்டும் உன்னைத் தனியா விட்டுட்டுப் போக ஆசையாடா?

    தெரியும் எனக்கு!

    சரி! நீ என்ன பண்ணப் போறே? யார் உன் துணைக்கு?

    இந்த வீட்டைக் காலி பண்ணிட்டு சுஸ்மிதா வீட்ல மாடிப் போர்ஷனில் இருக்கறதா முடிவெடுத்தாச்சு!

    குட்! சுஸ்மிதாவைவிட நல்ல பாதுகாப்பு உனக்கு இருக்கவே முடியாது!

    முடியாது!

    பதினெட்டு மாசம்தானே?

    நிச்சயமா. அதுக்கு மேல் ஒருநாள்கூட இருக்க மாட்டேன்!

    இரவுச் சாப்பாடு ஆனதும், வேலைகளை முடித்துவிட்டு பால் டம்ளருடன் படுக்கைக்கு வந்தாள்.

    ம்! பிடிங்க.

    பாலோடு அவள் கைகளைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் இருத்திக் கொண்டான்.

    குடிங்க!

    ஏன் அவசரப்படறே.

    தூக்கம் வருது எனக்கு!

    மூச்! இன்னிக்கு சிவராத்திரி நமக்கு. விடவே மாட்டேன் உன்னை!

    வேண்டாம்பா! தன் மேல் படர்ந்த அவன் கைகளை மெல்ல விலக்கிளான்.

    ஏன் மனோ கோவமா எங்கிட்ட?

    எதுக்கு?

    சாதாரணமா நான் அழைச்சா மறுப்பு சொல்ல மாட்டியே! இப்ப மட்டும் ஏன்?

    அவனை உற்றுப்

    Enjoying the preview?
    Page 1 of 1