Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidiyum Varai Madiyil Iru..!
Vidiyum Varai Madiyil Iru..!
Vidiyum Varai Madiyil Iru..!
Ebook112 pages49 minutes

Vidiyum Varai Madiyil Iru..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100603689
Vidiyum Varai Madiyil Iru..!

Read more from Devibala

Related to Vidiyum Varai Madiyil Iru..!

Related ebooks

Reviews for Vidiyum Varai Madiyil Iru..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidiyum Varai Madiyil Iru..! - Devibala

    http://www.pustaka.co.in

    விடியும் வரை மடியில் இரு..!

    Vidiyum Varai Madiyil Iru..!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    ஓட்டமும் நடையுமாக, கக்கத்தில் இடுக்கிய ஒரு துணிப்பையோடு கிடைத்த பெட்டியில் தொற்றிக் கொண்டாள் அந்தப் பெண்.

    ரயில் வேகம் பிடித்தது.

    'மேட்டுப்பாளையம்' என்ற பெயர் பலகையைக் கடக்க நிறுத்தி மூச்சுவிட்ட அந்தப் பெண், உள்நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

    அதிகபட்சம் இருபதுகூட இருக்காது. இலைப்பச்சையில் பாவாடையும், ஆரஞ்சு நிற தாவணியும் அணித்து, மருண்டு நிற்கும் ஒரு மான்குட்டி போலிருந்தாள். கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு பார்வையை மெங்கல சுழற்றினாள்.

    அது ஒரு ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட்.

    ஆட்கள் அதிகமில்லை (ஒரு வேளை கோவையில் வருவார்களோ, என்னவோ?)

    ஜன்னலோரம் எதிரும் புதிருமாக ஜோடி ஒன்று (ஜோடிதானா) உட்கார்ந்து தாழ்ந்த குரலில், தலை போகும் அவசரத்தில் ஏதோ பேசிக் கொண்டிருக்க,

    சற்றுத் தள்ளி, ஒரு பெரியார் கண்களை மூடி உடகார்ந்திருக்க.. இவளுக்கு எதிரே;

    நடுத்தர வயதுப் பெண்மணியொருத்தி, பட்டுச் சேலையில், கொண்டையும், அதைச் சுற்றி கனகாம்பரமுமாக உட்கார்ந்திருந்தாள்.

    ரயில், துடியலூரை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், டிக்கெட் செக்கர் வந்தார்.

    மற்றவர்கள் டிக்கெட்டுகளை எடுத்து நீட்ட,

    பரிசோதித்து, சரிபார்த்து அவர்களிடமே தத்துவிட்டு, இவளிடம் வந்தார்.

    நா அவசரத்தில், வந்ததால வேற பெட்டியிலே ஏறிட்டேன்!

    நிறுத்தி நிறுத்தி சொன்னாள்.

    அதனால பாதகமில்லை. குடுங்க. செக் பண்ணி, நோட் பண்ணிக்கறேன்.

    அவள் பதில் பேசாமல் விழித்தாள்.

    டிக்கெட்டை குடும்மா!

    டி..டிக்கெட் வாங்கலை!

    பின்ன ஏம்மா பொய் சொல்ற? கோயம்புத்தூர்ல இறங்கறியா? இல்லை அபராதத்தைக் கட்டிட்டு, நீ எங்கே போணுமோ, போறியா? பெண்ணா இருக்கறதால கேக்கறேன்!

    எ..எங்கிட்ட பணம் இ..இல்லை!

    என்னம்மா விளையாடறியா? அப்புறம் ஏன் ரயில்ல ஏறின?

    அழத் தொடங்கியது அந்தப் பெண். முகத்தை கைகளால் மூடியபடி தேம்பித் தேம்பி அழத் தொடங்க,

    அந்தப் பகுதியில் உள்ள அத்தனை பேரும் வேடிக்கை பார்க்க,

    டிக்கெட் செக்கரின் உரத்த குரலில், மற்றவர்களும் வேறு பகுதிகளில் இருந்து எட்டிப் பார்க்க,

    டிக்கெட் செக்கரின் நிலைமை சங்கடமானது.

    சரி அழுகையை நிறுத்திவிட்டு, கோயம்புத்தூர்ல எறங்கு. தர்மத்துக்கா ரயில் விடறாங்க நாட்டுல?

    ஒரு நிமிஷம் சார்!

    குரலில், டிக்கெட் செக்கர் திரும்ப,

    அந்த எதிர் சீட் கொண்டைக்காரி, தன் கைப்பையை எடுத்தாள்.

    அந்தப் பெண்ணுக்கான தொகையை நான் கட்டிர்றேன். அவளை விட்டுடுங்க!

    ஏம்மா நீ எங்கே போகணும்?

    மெட்ராஸ்! சின்னக்குரலில் சொன்னாள்.

    டிக்கெட் செக்கரிடம் அதற்கான தொகையை செலுத்தி, அனுமதிச் சீட்டை பெற்றுக் கொண்டதும், அவர் நகர,

    ரெயில் கோவை நிலையத்தில் ஆரவாரமான ஓசைகளுக்கிடையே நுழைந்தது.

    ரொம்ப நன்றி! தலையை நிமிர்த்தாமலே சொன்னாள்.

    கோயம்புத்தூரில் சம்மந்தப்பட்டவர்களை அள்ளிக்கொண்டு ரயில் புறப்பட்டுவிட்டது. சோடிய மிச்சங்களை தவிர்த்துவிட்டு, இருட்டுக்குள் நுழைந்த சமயம்,

    அவரவர், தன் இரவு உணவுகளில் இறங்கியிருக்க, அந்தக் கொண்டைக்காரியும், ஏர் பேக்கில் இருந்து டப்பாவை எடுத்துத் திறந்தாள்.

    உள்ளே சப்பாத்தியும் ஜாமும்.

    மூடியில் வைத்து அவளிடம் நீட்டினாள்.

    பரவால்ல.. வேண்டாம்

    டிக்கெட்டை வாங்கிக்கும்போது, சப்பாத்தியையும் வாங்கிக்கலாம்!உன் பேரென்னம்மா?

    அந்தக் கனிவான குரல் வசீகரிக்க, அதை சற்றுக் கூச்சத்தோடு பெற்றுக்கொண்டு, சாதனா என்றாள்.

    சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் எதுவுமே பேசவில்லை.

    'திருப்பூர்' வந்துவிட்டது.

    மெட்ராஸ்லே நீ எங்கே?

    யோசித்தால், இவள் சந்தேகப்படுவாள் என்று தோன்ற, சட்டென திருவொற்றியூர் என்றாள். யாரோ 'வடிவுடையம்மன்' கோவில் பற்றி முன்பு சொன்ன ஞாபகம்.

    அடடா, நம்ம ஊருதான். திருவொற்றியூர்ல எங்கே?

    மாட்டிக் கொணடு விட்டாள் வசமாக-

    அ..அதெல்லாம் எனக்குத் தெரியாது.சென்டரல்ல..என்னைக் கூட்டிட்டுப்போக சொந்தக்காரங்க வருவாங்க!

    அந்தப் பெண் இவளைக் கூர்ந்து கவனித்தாள்.

    இந்தப் பெண் பொய் சொல்கிறது?

    அதற்கு மேல் அவளும் ஒன்றும் கேட்கவில்லை.

    தன் பொத்தில் படுத்துக்கொள்ள, அவரவர் நித்திரையைத் தேடத் தொடங்க,

    துணிப்பைனயத் தலைக்கடியில் வைத்து சுருண்டு படுத்தாள் சாதனா.

    சாதனாவும் கண்களை மூடிப் படுத்திருந்தாளே யொழிய தூக்கம் வரவில்லை.

    மனது பரபரவென அலைந்தது.

    நினைத்துப் பார்க்கப் பார்க்க நெஞ்சு முழுக்க பீதி பரவியது.

    கண்ணோரம் வழிந்தது.

    சாதனாக் கண்ணு.. சாதனாக் கண்ணு!

    அதிர்ந்தாள். 'சித்தியா இத்தனை செல்லமாக அழைக்கிறாள்? 'ணங்' கென்று முகவாயில் இடிப்பதைத் தவிர, வேறெதையும் அறியாத சித்தியா?"

    'என்ன சின்னம்மா'

    'ஒண்ணுமில்லைடா..வாசல்ல பிச்சிப்பூ வந்துச்சு ஓனக்குப் பிடிக்கும்னு வாங்கிவச்சேன்!'

    மறுபடியும் அதிர்ச்சி

    Enjoying the preview?
    Page 1 of 1