Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

October Pournami
October Pournami
October Pournami
Ebook134 pages1 hour

October Pournami

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580100601364
October Pournami

Read more from Devibala

Related to October Pournami

Related ebooks

Reviews for October Pournami

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    October Pournami - Devibala

    http://www.pustaka.co.in

    அக்டோபர் பௌர்ணமி

    October Pournami

    Author :

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அக்டோபர் பௌர்ணமி

    1

    கருமாரி அம்மன் படத்துக்கு முன்னால் அந்த இன்டர்வ்யூ லெட்டரை வைத்து விட்டுத் திரும்புகிறாள் துர்கா.

    நிலைப்படியில் நின்று கண்கொட்டாமல் அதையே பார்க்கும் அம்மா, அம்பிகே, இனிமே இந்தக் குழந்தையை அலைய விடாதே. இந்த வேலை அவளுக்குக் கிடைக்கணும். இந்த முறை வீடு திரும்பும் போது முகமெல்லாம் மலர்ந்து போயிருக்கணும்.

    கண்கள் தளும்ப நிற்கும் அம்மாவைப் பார்த்து மெல்லச் சிரிக்கிறாள் துர்கா.

    ஏம்மா அழற? ஓவ்வொரு இன்டர்வ்யூவுக்கும் போறதுக்கு முன்னால நீ அழற. வந்த பின்னால நா அழறேன். ரெண்டு பேர் அழுகையுமே எப்பத்தான் நிக்கப் போறதோ தெரியலை.

    கல்யாணம் பண்ணிண்டு வாழ வேண்டிய பொண்ணு. வயத்துல சுமக்க வேண்டிய வயசுல, நெஞ்சுல சுமக்க வேண்டியிருக்கேனு வருத்தமாயிருக்குடீ.

    அதுக்கென்ன செய்ய? வர்றவன் என்னைப் பாக்குறதுக்கு முன்னால எனக்கு வருமானம் இருக்கான்னு கேக்கறானே! சம்பளம் வாங்கறவதான் சம்சாரமா இருக்க முடியும்னு ஆண்கள் சட்டமே போட்ட பின்னால நான் என்னம்மா செய்ய முடியும்? விடு, கல்யாண ஆசைல நான் வேலை தேடி அலையலை. சொந்தக் கால்ல நிக்கிற ஆசையில ஆலாப் பறக்கறேன். சீதா எழுந்தாச்சா?

    மணி எட்டாச்சு. இன்னமும் தூக்கம் தெளியலை, உன் செல்லத் தம்பிக்கு... போய் எழுப்பு!

    அடுத்த அறைக்குள் நுழைகிறாள் துர்கா. அடுத்த அறை என்றால் அது பெரிய வீடோ என்று நினைக்க வேண்டாம். பெரிதாக ஒரே ஒரு அறை. அதே அறையை நாலாகத் தடுத்து (துணித் தடுப்பு!) அதில் ஒன்று பெட்ரூம்.

    எட்டிப் பார்க்கிறாள்.

    போர்வை ஒரு பக்கம், தலையணை மற்றொரு பக்கம். இடுப்புக்குக் கீழே நழுவிய லுங்கி, ஏறத்தாழ முக்கால் நிர்வாணமாகக் குப்புறப்படுத்து சுவாரசியமாகத் தூங்கும் சீதா என்னும் சீதாராமன்.

    சீதா! எழுந்திரு, மணி எட்டாச்சு!

    லேசான ஒரு அசைவு மட்டும் வருகிறது. அதுதான் அப்போதைக்குப் பதில்.

    தடியா, சரியாப்படுத்துக்கோ, உடம்புல ஒண்ணுமே இல்லை.

    வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, இன்னும் கலைந்து, அவசரமாகக் கண்களை மூடிக் கொண்டு---

    நீ ஏண்டா கண்ணை மூடிக்கற? எங்க மூடணுமோ தெரியலை. சரி,சரி, போய் பல்லைத் தேய்ச்சுட்டு வா, அம்மா காபி வச்சிருக்கா.

    பாத்ரூமிலிருந்து அலறல்.

    பேஸ்ட் தீர்ந்து போச்சு.

    உமியும் கரியும் இருக்கு, எடுத்துத் தேய், எடுத்துத் தரட்டுமா?

    குழந்தையாடீ அவன்? தானே செஞ்சுக்கட்டுமே. நீ செல்லம் குடுத்தே குட்டிச் சுவராக்கி வச்சிருக்கே! நாளைக்கு பொண்டாட்டி வந்து சீரழியட்டும்.

    சீதாராமன் இன்னும் தூக்கம் தெளியாமல் காலைமடித்துக் கொண்டு ஒரு மூலையில் சாய்ந்து உட்கார---

    காபியை ஆற்றிப் பதமான சூட்டில் அவனிடம் தருகிறாள் துர்கா.

    இன்னிக்கு ஒனக்கு இன்டர்வ்யூ இல்லை?

    ஆமாம் சீதா?

    எத்தனை வாட்டி சொன்னாலும் கேக்கமாட்ட நீ. சீதா சீதான்னு நீ கூப்பிடறச்சே, நான் பொம்பனாட்டி மாதிரி பீல் பண்றன். டெலிகேட்டா இருக்கு.

    குறும்பாகச் சிரிக்கும் துர்கா, உனக்கு விஷயம் தெரியுமோ? நீ குழந்தையாக இருக்கும் போது நவராத்திரி கொலுவுக்கு என் பாவாடையைக் கட்டிண்டு டான்ஸ் ஆடுவே. உன் கண்ணு பொம்பனாட்டிக்கு இருக்க வேண்டிய நீளக்கண்ணு.

    கிடைக்கும்னு ஹோப் இருக்கா?

    என்னது வேலையா? சான்ஸஸ் ஆர்பெட்டர்! இது வரைக்கும் யாரும் என்னை ஃபைனல் இன்டர்வ்யூக்குக் கூப்பிட்டதில்லை. ஆட்கள் குறைவா இருந்தா வாய்ப்பு அதிகம். வேகன்ஸி ஒண்ணுதான்.

    நல்ல வேலைக்கா... சம்பளம் ஒண்ணரை. மத்த வசதிகள்.

    பிரச்சினைகள் எல்லாம் தீரும். வேற நல்ல வீடா வசதியாப் பார்க்கலாம். ஒரு பாக்கெட் பால்கூட வாங்கலாம். மூணு வேளையும் சாப்பிடலாம் அம்மா கண்கள் அகலப் பேசிக்கொண்டே போக----

    இரும்மா. நிறுத்து.... நிறுத்து! முதல்ல அக்காவுக்கு கல்யாணம்.

    ஏண்டா என்னை விரட்டப் பாக்கற?

    எத்தனை நாளைக்கு பாரமா இருப்பே எங்களுக்கு?

    சட்டென்று பொங்கும் பாலில் தண்ணீர் பட்டது போல அடங்கிப் போகிறாள் துர்கா. விழிகள் தாழ்ந்து நிலம் பார்க்க, புடவைத் தலைப்பை விரல்கள் நடுக்கத்துடன் திருக----

    என்னக்கா ஆச்சு?

    அதான் எனக்குப் புரியலைடா தம்பி.

    எது?

    எத்தனை நாளைக்கு பாரமா இருப்பேன்னு? யோசிச்சா வழியும் தெரியலை. வகையும் இல்லை.

    அதிர்ந்து போகிறான் சீதா. விளையாட்டாகச் சொன்ன வார்த்தைகளில் இத்தனை வீரியமா? தப்புதானா இது? இருக்கலாம். அந்த வயதில், பிடிமானம் இல்லாத பருவத்தில் தாக்கி விட்டேனோ அவளை? இது கட்டாயம் காயம்தான். அந்த வலிதான் அவனைக் குப்புறத் தள்ளியிருக்கிறது.

    அடடா,சீரியஸா எடுத்துட்டியாக்கா? நான் போய் உன்னை சொல்லுவேனாக்கா? அம்மாக்கும்மேல உன்னை நினைக்கிற நானா? ஏன்கா இப்படித் தோணித்து ஒனக்கு? சீதாவைப் புரிஞ்சுக்க சக்தியில்லையா?

    சட்டென்று மலர்ந்து போகிறாள் துர்கா. அவன் தலையில் கை வைத்து வாஞ்சையுடன் கோதி விடுகிறாள். இந்த வேலை மட்டும் கிடைக்கட்டும்டா சீதா. முதல் சம்பளத்துக்கு ஒனக்கு ஸபாரி ஸூட். நல்ல ஷூ. பிரமாதமா ஒரு பிரிப்கேஸ். நீதான் பெரிய ஆளாச்சே. உன் உத்தியோகத்துக்கு இதெல்லாம் அவசியம் வேணும்.

    சரி கனவுகள் போறும். ஒனக்கு எத்தனை மணிக்கு இன்டர்வ்யூ?

    ஏம்மா அவசரப்படற? மூணு மணிக்குத்தான்.

    நீ என்னடா?

    நான் அநேகமா இன்னிக்கு மதுரைக்குப் போக வேண்டியிருக்கும். முக்கியமான ஒரு வேலை. நான் போனாத்தான் அதைச் சரியா கவர் பண்ண முடியும்னு பெரியவர் சொல்லியிருக்கார்.

    மடில இருக்கிற தலைகாணியைக் கீழ வை. சீதா உங்கிட்ட இருந்தா ஒரு பொருள் உருப்படியா இருக்காது. சரியான எலி. பிரம்மச்சாரி சேஷ்டை.

    சிரித்தான். ஆனால் கீழே வைக்கவில்லை.

    ஃஃஃ

    அவன்அதைக் கீழே வைத்து விட்டால் இந்தக் கதையே இல்லை.

    ஃஃஃ

    இன்டர்வ்யூ எந்த எடத்துல?

    பெசன்ட் நகர்ல?

    சரியான லொகேஷன் சொல்லு.

    சொன்னாள்.

    அஷ்டலட்சுமி கோவிலுக்கு ஓரு ஸ்டாப் முன்னால எறங்கி, நேர் ரோட்டுல வா. முனைல ஒரு பலசரக்குக் கடை இருக்கும். அதுக்கு இடது பக்கமாக ஒரு தார் ரோடு போகும். அதுல ஒடிச்சு சொல்லிக் கொண்டே போக ஆரம்பித்தான்.

    அவனையே அவள் பார்க்க----

    "யேய்... தான் சொல்றதை சரியா கேக்கறியா? என்னையே பாத்தா? மூஞ்சிலேயா ரூட் எழுதி

    Enjoying the preview?
    Page 1 of 1