Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaamam
Yaamam
Yaamam
Ebook84 pages57 minutes

Yaamam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

நள்ளிரவில் ஒரு கொலை நடக்க அதைப் பார்த்து விடுகிறாள் நாயகி. கொன்றவனும் நாயகியை பார்த்துவிட கதவு தட்டப்படுகிறது. கொல்லப்பட்டவள் நின்று கொண்டிருக்கிறாள் தன்னை கொன்றவனைப் பழிவாங்க. கொல்லப்பட்டவள் கொன்றவன் இருவரிடமும் சிக்கிய நாயகி என்னவாகிறாள்?

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145507219
Yaamam

Read more from Gavudham Karunanidhi

Related to Yaamam

Related ebooks

Related categories

Reviews for Yaamam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaamam - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    யாமம்

    Yaamam

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அர்ச்சனா கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்தாள். மணி பார்த்தாள். இரவு ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. மிகவும் களைப்பாக உணர்ந்தாள். நேரம் மட்டும் போய்க்கொண்டிருக்கிறது ஆனால் இன்னும் வேலை முடிந்த பாடில்லை. அர்ச்சனா கடந்த ஜூலை மாதத்தோடு இருபத்தேழு வயது நிறைவு செய்திருந்தாள். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் முடிந்திருந்தன. கணவன் சிவா தற்சமயம் கனடாவில் பிஹெச்டி படித்துக் கொண்டிருக்க அர்ச்சனா தனியார் வங்கி ஒன்றில் நிதிப் பிரிவில் பணிபுரிகிறாள். தற்சமயம் மதுரையில் வளர் நகரில் தன் வீட்டில் தாயுடன் தங்கி இருக்கிறாள். அம்மா உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு போய்விட இப்போது தனியாக இருக்கிறாள்.

    தனியா இருக்க பயமில்லையே? இல்லன்னா நான் மேரேஜ்க்கு போகாம வீட்டிலேயே இருக்கட்டுமா?

    அம்மா பல முறை கேட்கும்போது அவளுக்கு கோபம் தான் வந்தது.

    நான் என்ன சின்னப் பிள்ளையா? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நான் ரொம்ப பெரியவ. அதெல்லாம் நான் இருந்துக்குவேன். நீ தைரியமா போயிட்டு வா

    அம்மாவை தைரியமாய் அனுப்பி வைத்த அர்ச்சனாவிற்கு அப்போதிருந்த தைரியம் இப்போது இல்லை.

    வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. சாரல் ஜன்னல் வழியாக உள்ளே அடித்ததில் குளுமையான காற்று வீசியது.

    மனம் தூக்கத்திற்கு ஏங்க கண்கள் தூக்கத்தில் சுழன்றாலும் இன்னும் படுக்கைக்கு போகாமல் கம்ப்யூட்டரில் மறுநாளுக்கான பணிகளை செய்து கொண்டிருந்தவள் ஒரு மணி ஆகிவிட இன்னும் தூங்காமல் இருந்தால் மறுநாள் பணிக்குச் செல்ல முடியாது எனும் உணர்வில் பிடிவாதமாய் போய் படுக்கையில் சரிந்தாள்.

    வெளியே கேட்ட சிறிய ஒரு சத்தமும் அவளுக்குள் பெரிதாகக் கேட்க அடிக்கடி ஜன்னலை திறந்து டார்ச் அடித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    எதிர் வீட்டு மாடியில் இன்னும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க ஆஷா இன்னும் தூங்கவில்லை போலிருக்கிறது. நினைத்துக்கொண்டாள். அர்ச்சனாவிற்கு தூக்கம் வராமல் இருக்க ஆஷாவின் மாடியை பார்த்துக்கொண்டிருந்தாள். எதார்த்தமாக ஆஷாவின் மாடிக்குக் கீழே பார்த்த அர்ச்சனாவின் மனம் அதிர்ந்தது.

    ரெயின் கோட் அணிந்தபடி ஒரு உருவம் பைப் வழியாக மேலே ஏற,

    ‘யார் இவன்? இந்நேரத்தில் மாடியில் ஏறுகிறான். திருடனாகத்தான் இருப்பான். எதற்கும் எச்சரிக்கை செய்வோம்.’

    அர்ச்சனா அவசரமாய் தன் மொபைலை எடுத்து ஆஷாவிற்கு அழைத்தாள். ரிங் போய்க் கொண்டிருக்க யாரும் எடுக்கவில்லை. அர்ச்சனா திகைத்தாள்.

    ‘இப்போது என்ன செய்வது? ஆஷா தூங்கி விட்டாள் போலிருக்கிறது. அழைத்து சொல்வதற்கு வேறு யாரும் அருகில் இல்லாததால் அர்ச்சனா தவித்தாள். தன் அலைபேசியில் இருந்த கேமராவில் அவள் அவனை படம் பிடித்தாள்.’

    மிக விரைவாக மாடிக்கு வந்தவன் ஆஷாவின் அறைக்குள் சென்றான். கொஞ்ச நேரத்தில் ஆஷாவின் அலறல் சத்தம் கேட்க,

    அர்ச்சனாவுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. ஆஷாவின் அலறல் கேட்டு யாராவது வருகிறார்களா என்று சாலையில் பார்த்தாள். யாரும் வரவில்லை.

    மழை வலுத்தது. அவன் ஆஷாவின் அறையில் இருந்து வெளியே வந்தான். அர்ச்சனா தன்னிடமிருந்த அலைபேசியின் கேமராவில் அவனை மட்டும் ஃபோகஸ் செய்தாள்.

    இப்போது மிகத் தெளிவாக அவன் உருவம் கேமராவில் பதிவானது. ரெயின் கோட்டில் வழிந்த மழை நீரை உதறியபடி படிக்கட்டுகளில் இறங்கினான் யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கோ ஓடிச் சென்று மறைந்தான். சற்று நேரத்தில் ஒரு புல்லட் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது.

    அர்ச்சனாவிற்கு தவிப்பு கூடியது.

    Enjoying the preview?
    Page 1 of 1