Nadamaattam
()
About this ebook
ஜென்மங்களாய் பழிவாங்கத் தொடரும் ஓர் ஆவி
அதன் இலக்கிற்கு ஆளான நாயகி அதைத் தேடிச் செல்ல அவளுடன் நாயகனும் இணைந்துகொள்ள இருவரும் என்னவாகினர்?
ஜென்மங்களாய் தொடரும் அந்த ஆவி யார்? சோழர் ஆட்சியில் கழுவேற்றப்பட்டது யார்?
ஆரம்பம் முதல் இறுதி வரை இதயத்துடிப்பை எகிற வைக்கும் ஹாரர் நாவல் நடமாட்டம்.
Read more from Gavudham Karunanidhi
Konjam Kaadhal Konjam Kaamam Rating: 5 out of 5 stars5/5Uyirindri Uyireduppen Rating: 5 out of 5 stars5/5Ayokyan Rating: 4 out of 5 stars4/5Psyco 2 Rating: 5 out of 5 stars5/5Daniel Rating: 4 out of 5 stars4/5Nimmi 2 Rating: 5 out of 5 stars5/53 Rating: 4 out of 5 stars4/5Pournami Rating: 0 out of 5 stars0 ratingsAdai Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsYaamam Rating: 4 out of 5 stars4/5Bathran Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Konja Vaa Rating: 5 out of 5 stars5/5Kutram Puthu Vitham Rating: 5 out of 5 stars5/5Manadhil Meendum Mazhaikalam Rating: 0 out of 5 stars0 ratingsJenmam Rating: 0 out of 5 stars0 ratingsThendral Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Mattum Rating: 0 out of 5 stars0 ratingsNimmi Rating: 5 out of 5 stars5/5En Kanmanikku Rating: 0 out of 5 stars0 ratingsThottuvidavaa Rating: 0 out of 5 stars0 ratingsAzhaikaamal Deivamum Varum Rating: 0 out of 5 stars0 ratingsThaniye Vida Matten Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 0 out of 5 stars0 ratingsKalam Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Rating: 0 out of 5 stars0 ratingsRatha Pournami Rating: 0 out of 5 stars0 ratingsSample Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nadamaattam
Related ebooks
Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Thaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsThedu Kidaikathu..! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Kaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Un Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsNeeyedhaan En Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Kaakithap Poo Theen Rating: 5 out of 5 stars5/5Moodupani Veedu Rating: 5 out of 5 stars5/5Varamaga Nee Varavendum Rating: 5 out of 5 stars5/5Palkolaikazhagam Rating: 0 out of 5 stars0 ratingsThik… Thik… Thilaka Rating: 5 out of 5 stars5/5Vivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5Arugey Vaa Anamika Rating: 0 out of 5 stars0 ratingsAabathu Ingey Aarambam Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Ullaththaik Killaathey! Rating: 0 out of 5 stars0 ratingsThittamitta Thiruppam Rating: 5 out of 5 stars5/5Azhagiya Theeye! Rating: 5 out of 5 stars5/5Vivek Viyugam Rating: 5 out of 5 stars5/5Oru Athikaalai Kolai Rating: 0 out of 5 stars0 ratingsEthaiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsVinoth Oru Vinaakkuri Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Anjathe Anju Rating: 5 out of 5 stars5/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5
Related categories
Reviews for Nadamaattam
0 ratings0 reviews
Book preview
Nadamaattam - Gavudham Karunanidhi
https://www.pustaka.co.in
நடமாட்டம்
Nadamaattam
Author:
கவுதம் கருணாநிதி
Gavudham Karunanidhi
For more books
https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
என்னுரை
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும்.
வணக்கத்துடன் கவுதம் கருணாநிதி.
நடமாட்டம் எனும் இந்த நாவல் ஒரு முழு நீள ஹாரர் த்ரில்லர். ஜென்மம் நாவலில் இருந்து ஒரு பகுதி தொடர்வது போல் எழுதியுள்ளேன். ஜென்மம் படித்தவர்கள் எளிதில் கதாபாத்திரங்களை தொடர்புகொள்ள இயலும். ஜென்மம் படிக்காதவர்களும் எளிதில் புரியும்படியே இந்த நாவல் பயணிக்கிறது.
ஹாரர் விரும்புவர்கள் மட்டும் அல்லாமல் எல்லோரும் படித்து ரசிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடமாட்டம் உங்களை முழுதிருப்திப்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
நன்றிகளுடன்
கவுதம் கருணாநிதி
1
காஞ்சிபுரம்.
ஹோட்டல் சரவணபவனில் ஆஷாவும் அவளின் இரண்டு தோழிகளும் மைசூர் பாக்கை ஸ்பூனால் சுவைக்க…
ஏண்டி ஆஷா… எப்போ ஜாயின் பண்ணனும் நீ?
கேட்டாள் கண்மணி.
இன்னும் இரண்டு மாசம் இருக்குடா… இப்போ ஆஃபர் கன்பார்ம்ட். அவ்வளவு தான்
புன்னகைத்த ஆஷா இருபதின் ஆரம்பத்தில் இருந்தாள். நல்ல நிறம். களையான முகம். அவள் எங்கு இருந்தாலும் அவளை ஒருமுறை பார்த்தவர்கள் மீண்டும் ஒருமுறை கண்டிப்பாகப் பார்த்துப்போவார்கள்.
என்னடா யோசனை?
யோசித்துக்கொண்டிருந்த வனிதாவிடம் ஆஷா கேட்க.
இவ்வளவு நாளும் ஒண்ணா இருந்துட்டோம். ஸ்கூல், காலேஜ் எல்லாம் ஒண்ணா இருந்தோம். இப்போ பிரியற நேரம்… அதான்…
வனிதா… என்ன இது? சின்னக் குழந்தையாட்டம்… இங்க இருக்கிற பெங்களூர்… நைட் கிளம்பினா காலையில் வந்துடப்போறேன்… அவ்வளவு தானே…
ஆஷா சொல்ல வனிதா புன்னகைத்தாள்.
மூவரும் வெளியே வந்தனர்.
கோவிலுக்குப் போலாமா?
கண்மணி கேட்க,
இப்பவா…
என்றபடி ஆஷா மணி பார்க்க அது நான்கை நெருங்கியது.
சரி வாங்க… வரதராஜ பெருமாள் கோவிலுக்குப் போவோம்…
சொன்ன ஆஷா ஓர் ஆட்டோவை அழைத்து ஏறிக்கொண்டாள். மற்ற இருவரும் ஏறிக்கொள்ள ஆட்டோ விரைந்தது.
பத்து நிமிடம்.
ஆட்டோ கோவிலை அடைந்தது.
இன்னும் நடை திறந்திருக்க மாட்டாங்க… வெய்ட் பண்ணுவோம்…
கண்மணி சொல்ல மற்றவர்கள் தலையாட்டினர்.
கோவில் வளாகத்தை நெருங்கிய வேளையில் அந்த நபர் அருகில் வந்தார்.
சிகப்பு வேட்டி அணிந்து ருத்ராட்சம் போட்டிருந்தார். ஆஷாவையே பார்த்தார்.
கண்கள் மூடி எதையோ முணுமுணுத்தார். கண்கள் திறந்தார்.
அவர் கண்கள் பயத்தை வெளிப்படுத்தின.
இல்ல… வேண்டாம்… பாவம்…
ஆஷாவையே பார்த்தவர் எங்கேயாவது போயிடும்மா… அது உன்னை விடாது…
சொன்னார்.
ஆஷா திகைத்தாள்.
‘என்ன சொல்கிறார் இவர்?’ தனக்குள் குழம்ப,
அவர் கிட்டத்தட்ட ஓடினார்.
ஓடியபடியே சொன்னார்.
அதுக்கான நேரம்மா இப்போ… ஓடிடு…
***
அம்மா…
வர்ஷாவின் குரல் கேட்டு.
என்னடா… என்ன பிரச்சனை?
கார்த்திகா சிரித்தபடியே வந்தாள்.
எழுப்பி விட்டுட்டே இருக்கான்… தூங்கவிட மாட்டேன்கிறான்…
வர்ஷா சிணுங்கியபடி சொல்ல கார்த்திகா,
எங்கடா இருக்கே?
மகனைத் தேடினாள்.
பூம்…
சத்தத்துடன் முன்னாடி வந்து நின்ற விஜய் புன்னகைத்தான். அவன் வசீகரமான புன்னகையில் கார்த்திகா சிரித்தாள்.
என்னடா… இன்னும் சின்னக்குழந்தை மாதிரி அவகிட்டே பிரச்சனை பண்ணிட்டுருக்கே…
அவ மட்டும் என்ன குழந்தையா… காலேஜில் ஃபஸ்ட் இயர் பண்றா…
விஜய் சொல்ல…
திருத்த முடியாது இவர்களை எனும் நினைப்பில் சமையலறைக்குச் சென்றாள் கார்த்திகா.
கார்த்திகாவின் சொந்த ஊர் நாமக்கல். கணவர் சேகர் ஆர்ட்டிஸ்ட். அவரின் மறைவிற்குப் பிறகு அவள் தம்பி சென்னையில் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்க அவளும் இரண்டு குழந்தைகளுடன் வந்து வருடங்கள் ஆயிற்று. மகன் விஜய்க்கு கிண்டியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை. மகள் வர்ஷா இளங்கலை வணிகவியல் முதலாண்டு படிக்கிறாள்.
விஜய்…
அம்மா…
சாப்பிட வா…
விஜய் வந்து அமர்ந்தான்.
தட்டில் சேமியாவும், சட்னியும் கொண்டு வந்து வைக்க… விஜய் சாப்பிட ஆரம்பித்தான்.
‘இன்னும் குறும்பாய் இருக்கிறான்… யார் வந்து இவன்கிட்டே மாட்டப்போகிறாள்னு தெரியல…’ கார்த்திகா நினைக்க…
விஜய் சிரித்தான்.
அதெல்லாம் நல்லப் பொண்ணு தான் வரும்மா…
எப்படிடா?
கார்த்திகா சிரிக்க…
அப்படித்தான்…
என்றவன் என்ன எடுத்துட்டு வர்றது?
கேட்டான்.
வர்ஷாவுக்கு இறால் பிடிக்கும்… அதே வாங்கிடு…
ஓ மை காட்…
அவன் சொல்ல, கார்த்திகா சிரித்தாள்…
உனக்கு ரசம் வெச்சு… உருளைக்கிழங்கு பொடிமாஸ் பண்ணிடறேன்…
நடத்து…
சொல்லியவன் பையை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
அவன் வெளியேறவும் கார்த்திகாவிற்கு மூச்சுத்திணறல் வரவும் சரியாய் இருக்க,
விஜய்…
மிகவும் கஷ்டப்பட்டு வெளியே வந்த குரல். விஜயின் காதுகளை எட்டவில்லை. அவன் தெருவில் நடக்க ஆரம்பித்திருந்தான்.
வர்ஷா…
கார்த்திகா கீழே விழுந்தாள். சிரமத்துடன் மகளை கூப்பிட முயன்றாள்.
முடியாமல் கீழே சரிந்தாள்.
***
ஆஷாவிற்கு மனம் முழுக்க அந்த சாமியார் சொன்னதே நினைவிற்கு வந்தது. வரதராஜப் பெருமாள் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தபிறகு தோழிகள் விடைபெற்றுப் போக வீட்டிற்கு வந்தவளின் முகம் ஒரு மாதிரி இருப்பதை பார்த்துவிட்டு,
என்னப்பா… ஏதும் பிரச்சனையா?
அப்பா ஏகாம்பரம் கேட்க.
இல்லப்பா… தலைவலி…
என்று அறைக்குள் முடங்கியவள் அப்படியே தூங்கிவிட்டாள்.
மணி பார்த்தாள். இரவு மணி பத்து.
‘இவ்வளவு நேரமா தூங்கியிருக்கேன்…?’ தனக்குள் எண்ணியவள் எழுந்து வெளியே வர அப்பா டி.வி பார்த்துக்கொண்டிருக்க புன்னகைத்தாள்.
சாப்பிட்டீங்களாப்பா?
ஆச்சும்மா…
உனக்கு ஹாட்பாக்ஸில் தோசை வெச்சிருக்கேன்… சாப்பிடும்மா…
சரிப்பா…
ஆஷா பிறந்தது, வளர்ந்தது எல்லாமே காஞ்சிபுரம் தான். ரங்கசாமி குளம்தான் அவர்களின் வீடு. மாடியில் அவள் அறை. அப்பா கீழே தனியறையில். அவளின் அம்மா ஆஷாவிற்கு நான்கு வயதாகும்போது இறந்துவிட்டார். அன்று முதல் ஆஷாவிற்கு அப்பாதான் எல்லாம். அப்பா, அம்மா, குரு எல்லாமே அப்பாதான். முதன்முதலில் அப்பாவை பிரிய வேண்டும் என்று யோசித்தவளுக்கு.
ஆஷாம்மா… எப்பவும் யாரும் யாருக்கும் துணையா இருக்க முடியாதும்மா… இன்னிக்கு நான் உன்கூட இருக்கேன்… நாளைக்கு உன் ஸ்நேகிதிங்க கூட இருப்பாங்க… அப்புறம் கல்யாணம் ஆகும்… புருஷன் வீட்டு சொந்தம் கூட வரும்… யார் இருந்தாலும் இல்லன்னாலும் நம்ம தனித்துவத்தை என்னிக்கும் நாம இழக்கக் கூடாதும்மா…
கிடைத்த வேலையை ஒத்துக்கொண்டாள்.
சாப்பிட்டு விட்டு வந்தவள் அப்பா அவரின் அறையில் உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தவள் தன் அறைக்குள் நுழைந்தாள்.
மாலையில் நன்றாக உறங்கியதால் இப்போது உறக்கம் வரவில்லை. ‘ஷேடோ’ ஆங்கில நாவல் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.
நாவலில் மூழ்கினாள். நேரம்