Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pei
Pei
Pei
Ebook69 pages24 minutes

Pei

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விஷால் தந்தையுடன் குன்னூர் பங்களாவிற்குச் செல்ல அங்கு நடக்கும் வீபரீதங்கள் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்த அதன் பின்னணியில் எட்டாவது வளைவில் நீண்ட காலம் பழிவாங்கக் காத்திருக்கும் பேய் இருப்பது புரிகிறது. எதற்காக பேய் பழிவாங்க முனைகிறது? அதன் பழிவாங்கும் படலம் நிறைவேறியதா? விடை சொல்கிறது "பேய்"

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580145507212
Pei

Read more from Gavudham Karunanidhi

Related to Pei

Related ebooks

Related categories

Reviews for Pei

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pei - Gavudham Karunanidhi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பேய்

    Pei

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    "யெஸ் நான் சந்திரசேகர் தான் பேசறேன். ஃபார்மர் சிட்டி ஹெல்த் ஆஃபீஸர் சந்திரசேகர் தான்.

    வாட்?

    க்ரேட் ந்யூஸ்.

    எப்போ வர்றாங்களாம்?

    ஓ நெக்ஸ்ட் வீக்கா.

    ஓகே ஜான் தேங்க்யூ சோ மச்"

    அலைபேசியில் பேசிவிட்டு மகிழ்வாய் வந்த அப்பா சந்திரசேகரை நிமிர்ந்து பார்த்தான் விஷால்.

    என்னப்பா போன்ல ஏதாவது நல்ல விஷயமா?

    ஆமா விஷால் ரொம்ப நாளா இழுத்துட்டு இருந்த நம்ம குன்னூர் பங்களாவைக் கேட்டு ஒரு பார்ட்டி வந்திருக்காம். எப்படியும் முடிஞ்சுடும்னு ஜான் சொல்றார்.

    சந்திரசேகர் உற்சாகமாய் சொல்ல அவரின் உற்சாகம் விஷாலையும் தொற்றிக்கொண்டது.

    சூப்பர்பா எப்ப வராங்களாம்?

    அடுத்த வாரம்.

    அப்ப நம்ம ஒண்ணு பண்ணனும் பா

    சொல்லு விஷால்

    நாம ரெண்டு மூணு நாள் முன்னாடி போய் அந்த பங்களாவை சுத்தப்படுத்தி அவங்க வரும்போது கொஞ்சம் நீட்டா வெச்சிருந்தா அவங்களுக்கு பார்க்க நல்லா இருக்கும்.

    விஷால் சந்திரசேகர் புன்னகைத்தார்.

    நான் நெனச்சேன் நீ சொல்லிட்டே.

    அப்போ எப்பப்பா கிளம்பலாம்?

    நீ எப்ப சொல்றியோ அப்ப.

    நாளை காலையில் கிளம்பலாம் பா. நானும் அதுக்குள்ள லீவ் ஃபார்மாலிடீஸ் எல்லாம் சரியாக்கிடறேன்.

    சரிப்பா

    அப்பா

    சொல்லு விஷால்

    மத்தியானத்துக்கு உங்களுக்கு ராகிப் புட்டு செஞ்சிருக்கேன் சாப்பிட்டுக்குங்க

    என்னப்பா டெய்லி மத்தியானம் ராகி சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. இன்னைக்கு ஒரு நாளாச்சும் கொஞ்சம் வாய்க்கு ருசியா ஏதாவது செய்யேன்.

    சந்திரசேகர் சொல்ல விஷால் சிரித்தான்.

    டாக்டர் என் கிட்ட அட்வைஸ் பண்ணியிருக்கார். உங்க சுகர் லெவல் நார்மலாகற வரைக்கும் அரிசியை கண்ணில் கூட காட்டக்கூடாதுன்னு.

    சொன்ன விஷாலைப் பார்த்து சோக ரியாக்சன் காட்டியபடி சோபாவில் அமர்ந்தார் சந்திரசேகர்.

    சரிப்பா நான் கிளம்புறேன்.

    சிரித்தபடி சொல்லிவிட்டு விஷால் வெளியில் இறங்கினான்.

    விஷால் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் செலக்ட் ஆகி போஸ்டிங் ஆர்டர்க்காக காத்துக் கொண்டிருக்கிறான். சிறுவயதில் இருந்தே தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து நேர்மை, நீதி என்று பேசுவது மட்டுமில்லாமல் அதை தன் செயலிலும் கடைபிடிப்பான். அவனுக்கு ஒரே இலட்சியம் காவல் துறையில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அது மட்டுமே.

    அம்மா சிறு வயதிலேயே தவறிவிட்டார். அதன்பிறகு சந்திரசேகர் வேறு கல்யாணம் செய்து கொள்ளாமல் மகனை வளர்த்துவதில் காலத்தைச் செலவிட்டார். அப்பாவும் மகனும் மட்டுமே வீட்டில்.

    சந்திரசேகர் பலமுறை சொல்லிவிட்டார்.

    ‘வீட்டில் ஒரு பெண் இருந்தால் தான் அழகு. ஒன்று கல்யாணத்திற்கு சம்மதம் சொல் இல்லையென்றால் யாரையாவது காதலித்துக் கொண்டு வா. யாரை

    Enjoying the preview?
    Page 1 of 1