Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ottrai Natchathiram
Ottrai Natchathiram
Ottrai Natchathiram
Ebook95 pages32 minutes

Ottrai Natchathiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பெண் பத்திரிகை நிருபர் கொடூரமாய் கொல்லப்பட சந்தேக வளையம் அவர் கட்டுரைஎழுதிய ஐவர் மீது விழுகிறது. கொன்றது யார்?

அசோக் & டீம் அசத்தியிருக்கும் ஒற்றை நட்சத்திரம் க்ரைம் வாசகர்களுக்கு விருந்து.

Languageதமிழ்
Release dateJul 18, 2022
ISBN6580145507386
Ottrai Natchathiram

Read more from Gavudham Karunanidhi

Related to Ottrai Natchathiram

Related ebooks

Related categories

Reviews for Ottrai Natchathiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ottrai Natchathiram - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    ஒற்றை நட்சத்திரம்

    Ottrai Natchathiram

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    தென்றல்.பத்திரிகை அலுவலகம். பத்திரிகையின் பேர்தான் தென்றல். ஆனால் புயலாய் பலரின் வாழ்வை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக சமூகவிரோதிகள் பெரும்புள்ளிகள் நிழல் பிஸினஸ் செய்யும் எல்லோரும் தென்றல் என்றாலே அலறினார்கள். உண்மையை உண்மையாய் சொல்வதில் தென்றல் எவருடனும் சமரசம் செய்யாமல் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டினைத் தொடர்ந்தது.

    தென்றலின் முதன்மை எடிட்டர் கனகராஜ். அவர்தான் இதை ஆரம்பித்தது. வார இதழாக ஆரம்பித்தவர். சமூகத்தில் கொடுமைகள் மிகவும் அதிகமாக நடப்பதால் வாரம் இருமுறை இதழாக மாற்றிவிட்டார். கனகராஜ்க்கு மிரட்டல் கால்கள் பலமுறை வரும். எவற்றையும் அவர் பொருட்படுத்துவதில்லை.

    நான் செத்துப் போனாலும் இந்த பத்திரிக்கை தொடர்ந்து நடக்கும். என்னோட டீம்ல கடைசி ஒருத்தர் இருக்கிற வரைக்கும் இந்த பத்திரிகை நிற்காது.

    அவர் கம்பீரமாய் பேசும்போது தென்றலின் கடைநிலை ஊழியருக்கும் வீரம் வரும்.

    பணத்தைப் பெரிதாக எண்ணாத தனக்கென்று லட்சியம் கொண்டவர்களையே தென்றலுக்கு அவர் பணியமர்த்தி இருந்தார். அதனால் தென்றலில் பணியாற்றுவது ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு கௌரவமாக அமைந்தது.

    பலமுறை அவரது அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஒவ்வொரு முறை தாக்கப்படும் போதும் அனைத்து ஊழியர்களும் புன்னகையுடன் அதை எதிர்க்கொண்டனர். இப்பொழுது அவர்களாகவே தங்கள் சம்பளத்தில் ஒரு தொகையை எதிர்காலத்தில் தாக்குதலுக்கு உட்படும் பொழுது தங்கள் அலுவலகத்தை புனரமைக்க வேண்டிவரும் என்று சேமிக்கத் தொடங்கி விட்டார்கள்.

    கனகராஜ் ஒருமுறை போலீஸிடம் அடிபட்டார். சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அரை மயக்கநிலையில் இருந்தபோதும் பத்திரிக்கை என்னாச்சு? என்று அவர் தன் சக ஊழியர்களிடம் கேட்டதைக் கண்ட போலீஸ் அதிர்ந்து நின்ற வரலாறும் உண்டு.

    தென்றலில் பணியாற்றுபவர்களில் பலர் முக்கியமானவர்கள். அதில் மிக முக்கியம் நிம்மி. நிர்மலா ஜோசப் எனும் பெயரை அனைவரும் நிம்மி என்றழைத்து நிம்மி என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.

    தென்றல், புயலாக மாறியதற்கு மிக முக்கியமானவர்களில் நிம்மிக்கும் ஒரு இடமுண்டு. எவரையாவது சந்தித்து எங்கேயாவது நுழைந்து எவரும் கவர் செய்ய இயலாத சமூக விரோதச் செயல்களை மிகத் துணிச்சலாக நிம்மி கவர் செய்துவந்து தருவது கனகராஜ்க்கு மிகவும் ஆச்சரியமான விஷயம்.

    எப்படியம்மா உன்னால் முடியுது?

    பலமுறை வியந்து கேட்கும்போது நிம்மி ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தருவாள்.

    அன்றும் அனைவரும் கிளம்பிப் போய்விட நிம்மி தன் கம்ப்யூட்டரில் எதையோ பதிவிட்டுக் கொண்டிருந்தாள். அவளைத் தன் அறைக்கு வரவழைத்த கனகராஜ் புன்னகைத்தார்.

    கிளம்பு நிம்மி வீட்ல நிறைய வேலை இருக்கும்தானே. நாளைக்கு கிறிஸ்துமஸ் வேற.

    நிம்மி சிரித்தாள்.

    ஆமா சார் அப்பா நிறைய முறை போன் பண்ணிட்டாரு.

    அப்போ கிளம்பும்மா. நாளன்னிக்கு வந்து பார்த்துக்கலாம்.

    ஓகே சார் இன்னும் பத்து நிமிஷம்தான். சொல்லிவிட்டு நிம்மி தன் சேம்பருக்குப் போக கனகராஜ் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்.

    நிம்மி கம்ப்யூட்டரில் டைப் செய்ய அவள் அலைபேசி அடித்தது.

    அப்பா.

    எடுத்தாள்.

    நிம்மி எங்க இருக்க? நாங்க ரெடியா இருக்கோம்.

    வந்துட்டேம்பா.

    இன்னும் ஆஃபீஸ்லதான் இருக்கியா?

    ஆமாப்பா

    சீக்கிரம் வா

    வந்திடறேன்பா.

    அலைபேசியை வைத்துவிட்டு தன் பணியைத் தொடர்ந்தாள்.

    மீண்டும் அலைபேசி அடித்தது.

    கண்ணன்.

    நிம்மியின் முகம் மலர்ந்தது.

    எங்க இருக்கே நிம்மி?

    ஆபீஸ்லதான் இருக்கேன்.

    அங்கயே இரு நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்.

    கண்ணன் சொல்ல நிம்மி சரிப்பா என்று புன்னகையுடன் வைத்தாள்.

    மனதிற்குள் கண்ணனைப் பற்றிய பெருமித உணர்வு மேலோங்கி நின்றது. புரிந்து நடந்து கொள்ளும் காதலன். நிம்மி சிறுவயதிலிருந்தே சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக உரக்க குரல் எழுப்புவது அவள் பழக்கம். கல்லூரியில் படிக்கும்போது பலர் கிண்டலாக சொல்லி இருக்கின்றனர்.

    "உன்னோட குணத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1