Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Model Mayakkam
Model Mayakkam
Model Mayakkam
Ebook89 pages32 minutes

Model Mayakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொருட்கள் விற்பனைக்கு மாடலாக நடிக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள். அவளுடைய காதலன் கொல்லப்படுகிறான்.
அவளுடைய அபிமானி கொலைகாரனை கண் கண்டு பிடிக்கிறான்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130605101
Model Mayakkam

Read more from Prabhu Shankar

Related to Model Mayakkam

Related ebooks

Reviews for Model Mayakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Model Mayakkam - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    மாடல் மயக்கம்

    Model Mayakkam

    Author:

    பிரபு சங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    இ.இ.

    அது சாதா வாளியா?

    இல்லை, குற்றவாளி

    எப்படி?

    அதுதான் கிணற்றுக் கயிற்றிலே தொங்குகிறதே!

    அது பிரம்மசாரிகளின் புறாக்கூண்டு போல இல்லாமல் அதே சமயம் பெரிய குடும்பத்திற்குத் தேவையான விசாலமும் இல்லாமல், கல்யாணம் பண்ணிக்கொண்டால் தேவைப்படும் என்பதுபோன்ற கொஞ்சம் பெரிய ஃப்ளாட், இரண்டு பெட்ரூம் ஃப்ளாட். (அப்படின்னா இரண்டு கல்யாணம் பண்ணிக்கலாமா?)

    வெளிக் கதவு லாட்ச் பொருத்தப்பட்டதுதான் என்றாலும் அதன் நாக்கு உள்வாங்கி, பிறகு நிலைப்புத் துவாரத்துக்குள் செலுத்தப்படவில்லை; வெளியிலேயே தடுக்கப்பட்டு, தயங்கி நின்றுவிட்டது. அதனாலேயே உள்ளே மின்விசிறிகளின் காற்று, வெளியே இயற்கையின் காற்று இவைகளால் அலைக்கழிக்கப்பட்ட கதவு லேசாக ஆடிக்கொண்டிருந்தது.

    காலிங் குயில் கூவியும் உள்ளிருந்து யாரும் வரவில்லை. இரண்டு மூன்று முறை கூவிய குயில் உள்ளிருப்பவரைத் துயில் எழுப்பாததால் கதவில் கை வைத்து மெல்ல உள் தள்ளினான் விக்ரம். அறை அகன்று, 'வா' என்றது. உள்ளே நுழைந்தான்.

    அங்கிருந்து பார்த்தாலேயே தெரியக்கூடிய படுக்கை அறையின் திரைச்சீலை அநாகரிகமாக ஒதுக்கப்பட்டிருந்தது. என்னவோ அதன் பூரா வண்ணத்துக்கும் பொருத்தமில்லாதபடி ஆங்காங்கே திட்டுத் திட்டாய் சிவப்பு... அந்தத் திட்டுகளும் காயாததுபோல, ஈரமாக...உலராததுபோல...யாரோ துடைத்துக் கொண்டாற்போல...அல்லது துடைத்து விட்டாற்போல... சிவப்புத் திட்டு என்றால்...வெற்றிலை பாக்குக் கறையா? மருதாணி இட்டு விட்டிருக்கிறார்களா...சிவப்பு பெயின்ட் அடித்தது போக மிச்சத்தை வீணாக்காமல் பண்ணப்பட்ட அலங்காரமா...அல்லது நெகடிவ் ஆக யோசித்தால்...ரத்தமா? புனல் டிசைனில் குருதிப் படங்கள்...? ரத்தத்துக்கு வாசனை உண்டோ? கிட்டே போயும் தெரியாததால் சீலைக்கும் வாசலுக்கும் இடையே இருந்த இடுக்கில், இரண்டிலும் படாமல் உள்ளே நுழைந்து பார்த்தால்....

    இயற்கையைத் தப்பாகப் பின்பற்றியதால் அவன் இறந்து கிடந்தான். அதாவது மார்பு வழியாகக் கத்தியை சாப்பிட முயன்றிருந்தான். இந்த முரண்பாட்டால் பீதியுடன் பிதுங்கியிருந்தன அவனுடைய விழிகள். அதுவரை 'நரேந்திரன்' என்று அழைக்கப்பட்ட அந்த நரன் அப்போது முதல் 'அது'வாகிவிட்டிருந்தான்.

    விக்ரம் விக்கித்துப் போனான். இப்படி ஒரு நிலையில் நண்பனைப் பார்ப்போம் என்று அவன் நினைக்கவேயில்லை. முந்தின இரவு தொலைக்காட்சியில் நரேந்திரனின் விளம்பர சாதனையைப் பார்த்த விக்ரம், அவனைப் பாராட்டுவதற்காக மலர்மாலை கொண்டு வந்தால், இப்போது மலர்வளையம் சாத்த வேண்டிய நிலையில் இருக்கிறானே!

    அடுத்தது என்ன? போலீஸ்... வழக்கு...விசாரணை... தானும் உட்பட வேண்டியிருக்குமோ? தன்னையும் போலீஸ் புரட்டி எடுக்குமோ? நண்பன் வேறே! நட்பு முறிய, பகை வலுக்க, எத்தனையோ காரணங்கள், போலீஸின் கற்பனையில் அணிவகுத்து நிற்கும். அதுவும் குறிப்பாக நரேந்திரன் அழகிய பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ளும் போலீஸ், அதே காரணத்துக்காக, பெண் தகராறு காரணமாக அவனை நானே கொலை செய்து விட்டதாகவும் ஊகிக்கலாம்.

    தனக்கு முன் யாரும் நரேந்திரனை இந்தக் கோலத்தில் பார்த்திருக்க முடியாது என்றே தோன்றியது. கொலைக்குப் பிறகான முதல் கண்சாட்சியிடம்தான் விசாரணை துவங்கும்.

    அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? ஓடிவிடலாமா? முகத்தில் வியர்வை பெருகியது. பேண்ட் வலது பையிலிருந்து கைக்குட்டையை உருவி முகத்தைத் துடைத்துக்கொண்டான்.

    அப்போது கர்சீபுடன் வெளியே வந்து, தான் முகம் துடைக்க உதவமாட்டோம் என்று தெரிந்துகொண்டு, அவன் காலடியில் விழுந்தது, மடித்துவைக்கப்பட்ட ஒரு காகிதம். அவனுக்கு அதை கவனிக்கத் தோன்றவில்லை. அதனாலேயே பூட்ஸ் காலும் அந்தச் சீட்டை மிதித்து அவமானப்படுத்தியது.

    'சரி,' அக்கம் பக்கத்தில் ஓடிய பார்வை சொன்னது : 'புறப்படு. இந்த ஒன்பது மணி காலை நேரத்தில் அக்கம் பக்கத்து ஃப்ளாட்காரனெல்லாம் வேலைக்கோ, வியாபாரத்துக்கோ போயிருப்பான்கள். கல்லூரி, பள்ளிக்கூடப் பிள்ளைகளும் போயிருக்கும்.' அந்த காலத்தில் வீட்டிலேயே இருந்துகொண்டு பொழுது போகாத வீட்டு மனைவிகள் புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அக்கம் பக்கத்து சந்தடியெல்லாம் விசாரிக்கும். இப்போது கேபிள் டி.வி. தன் கட்டடமே இடிந்து

    Enjoying the preview?
    Page 1 of 1