Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pongalo Pongal…!
Pongalo Pongal…!
Pongalo Pongal…!
Ebook57 pages21 minutes

Pongalo Pongal…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொங்கல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகளின் பண்டிகை. தை மாதத்தில் நிலங்களில் விளைந்த நலன்களுக்காக சூரிய பகவானை வணங்கி நன்றி சொல்லும் திருவிழா.
Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580130605051
Pongalo Pongal…!

Read more from Prabhu Shankar

Related to Pongalo Pongal…!

Related ebooks

Reviews for Pongalo Pongal…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pongalo Pongal…! - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    பொங்கலோ பொங்கல்...!

    Pongalo Pongal…!

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஞாயிறு போற்றுவோம்

    2. சூரியனுக்குக் கோயில்கள்

    3. சூரிய புராணங்கள்

    4. நான்கு நாள் கொண்டாட்டம்

    5. பொங்கல் பூஜையை செய்வது எப்படி?

    7. மாடு - மனிதனின் தோழன்

    8. ஜல்லிக்கட்டில் சிலவிதம்

    9. மாட்டுப் பொங்கல் வழிபாடுகள்

    10. கன்னிப் பொங்கல்

    1. ஞாயிறு போற்றுவோம்

    தை மாதம் பிறந்தாலே தமிழ்நாட்டில் உள்ள அனைவரது மனதிலும் 'பொங்கலோ....பொங்கல்...' என்ற கோஷம் ஒலிப்பதைத் தவிர்க்க முடியாது. தை மாதத்துக்கென்று தனிச் சிறப்புகள் பல உண்டு.

    தை பிறந்துவிட்டது. வழியும் தெரிந்துவிட்டது. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்று பெருமழையும் கடும் பனியுமாக ஆதவன் மறைத்திருந்த இயற்கை, தை மாதத்தில் அவன் சுடரொளி பூமியில் பட்டு புத்துணர்வு பூக்க உதவுகிறது. பகலவனைக் கண்ட பயிர்கள் எல்லாம் ஆரோக்கியம் மேம்பட்டு, செழித்து வளர்ந்து அறுவடை செய்யப்படத் தயாராக இருக்கின்றன. தட்சிணாயணம் என்ற தன்னுடைய தென்திசைப் பயணத்தை முடித்துக்கொள்ளும் சூரியன், அங்கிருந்து வடக்கு திசை நோக்கி, உத்திராயணமாகப் பயணம் தொடங்கும் நாள்தான் தை மாதம் முதல் தேதி.

    அதாவது ஆடி மாதத்திலிருந்து தெற்கு திசை நோக்கிப் பயணம் செய்த ஆதவன், தை மாதத்திலிருந்து வடக்கு திசை நோக்கித் தன் பயணத்தை மேற்கொள்கிறான். உதிப்பது கிழக்கில், மறைவது மேற்கில்தான் என்றாலும் பகலவன் ஒரு நாளைக்கு ஒரு டிகிரி வீதம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி நகர்கிறான். அதாவது ஆறு மாதம் தெற்கு நோக்கிப் பயணம்; ஆறு மாதம் வடக்கு நோக்கிப் பயணம். இப்படி தை மாதத்திலிருந்து வடக்கு நோக்கிப் பயணிப்பதை உத்தராயணம் என்பார்கள். அதாவது வடக்குதிசை வழி. ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பதாகவும் அதனால் அப்படி பிரவேசிக்கும் காலத் துவக்கம், 'மகர ரவி' என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு சூரியப் பயணம் திசை மாறுவதை 'சங்கராந்தி' என்றும் சொல்கிறார்கள். இதே நாளில் சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் பார்ப்பதும் புண்ணியம் சேர்க்கும்.

    இப்படி உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாத உணவுப் பொருட்களை - குறிப்பாக அரிசியை - ஆதவன் தன் பொற்கிரணங்களால் செறிவூட்டி மக்களுக்கு வழங்கும் இந்த அருட் கொடைக்கு நன்றி செலுத்த வேண்டாமா? அதுதான் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. நன்றி தெரிவிப்பதைக்கூட விழாவாக, கொண்டாட்டமாக,

    Enjoying the preview?
    Page 1 of 1