Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Cameravin Kaadhal Konam!
Oru Cameravin Kaadhal Konam!
Oru Cameravin Kaadhal Konam!
Ebook88 pages32 minutes

Oru Cameravin Kaadhal Konam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டிஜிட்டல் காமாரா வைத்திருக்கும் புகைப்பட நிபுணர்களே, டிஜிட்டல் ஃபோட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பவர்களே, இதோ, சில வருடங்களுக்கு முந்தைய கால ஃபோட்டோ சரித்திரம்தான் இந்த நாவல்
Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580130605073
Oru Cameravin Kaadhal Konam!

Read more from Prabhu Shankar

Related to Oru Cameravin Kaadhal Konam!

Related ebooks

Reviews for Oru Cameravin Kaadhal Konam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Cameravin Kaadhal Konam! - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    ஒரு காமிராவின் காதல் கோணம்!

    Oru Cameravin Kaadhal Konam!

    Author:

    பிரபு சங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    முன்னுரை

    டிஜிட்டல் காமாரா வைத்திருக்கும் புகைப்பட நிபுணர்களே, டிஜிட்டல் ஃபோட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பவர்களே, இதோ, சில வருடங்களுக்கு முந்தைய கால ஃபோட்டோ சரித்திரம்தான் இந்த நாவல்

    1

    பகீர் என்றது வடிவேலுவுக்கு.

    காத்திருந்து காத்திருந்து வந்த ஒரு வாடிக்கை அது.

    அதனிடமிருந்து சம்பாதிக்க முடியாதபடி விதி.

    தன்னுடைய ஃபோட்டோ ஸ்டூடியோவை ஒரு நோட்டம் விட்டான். அழுகை வரும் போலிருந்தது. கல்லா மேஜைக்கு மேலே சுவரில் படமாகத் தொங்கியபடி. அவனையே பார்த்துக் கொண்டிருந்த அம்மா திட்டினாள்: மடையா, சாமர்த்தியமே இல்லா சனியனே! உனக்குன்னு ஒரு பிழைப்பைத் தேடிக் கொடுத்து, பிழைச்சுக்குவேன்னு நம்பின நான் போய்ச் சேர்ந்தப்புறமும் இப்படி ஒண்ணுத்துக்கும் உதவாத அல்ப்பமா நிக்கிறியே..!

    வடிவேலு பேந்த பேந்த முழித்தான். அவன் என்னவோ சாமர்த்தியமாக நடந்து கொள்ளத்தான் செய்கிறான்; ஆனால் மற்றவர்கள் அவனைவிட அதிக சாமர்த்தியமாக இருந்துத் தொலைத்துவிடுகிறார்கள்.

    அவனுக்குப் புகைப்படக் கலையில் ஓரளவு ஆர்வம் இருந்ததை முதலில் தெரிந்துகொண்டவள் அவனுடைய அம்மாதான். எங்க அப்பாவும் ஒரு ஃபோட்டோகிராபர்தான். வீட்டிலேயே ஃபிலிமை வாஷ் பண்ணி, பிரின்ட் போடுவாரு. சின்னதா சிவப்பு நிற ஸீரோ வாட் பல்பு ஒண்ணு டார்க் ரூமுக்குள்ள எரிஞ்சுகிட்டிருக்கும். அப்பா, ட்ரேயிலே கெமிக்கல் ஊற்றி, அதிலே பிரின்ட் போட்ட பேப்பரைப் போட்டு, கையால நைஸா அலசுவாரு. அப்படியே போட்டோவிலே உருவமெல்லாம் எழும்பி வரும் பாரு....அந்த அழகே தனிதான். நீ இப்ப இருக்கற வசதியை வெச்சு ஒரு ஃபோட்டோ ஸ்டூடியோ வை. நல்லா டெவலப் ஆயிடுவே, என்று ஆசிர்வாதம் பண்ணினவளும் அவள்தான். தன் கை, கழுத்து, மூக்கு, காதில் இருந்த நகைகளையும் ('அவரே போயிட்டாரு; எனக்கு என்ன மினுக்கு வேண்டியிருக்கு?') ஊரிலே இருந்த கொஞ்சூண்டு நிலத்தையும் பணமாக்கி, அவளே ஆளைப் பிடித்து, இடம் பிடித்து, ஸ்டூடியோவும் வைத்துக் கொடுத்தாள்.

    'ஆனா, இந்தப் பிள்ளைக்குதான் புத்திசாலித்தனம் போதலே. வெளியே போய் ஏதேனும் நிகழ்ச்சி, கல்யாணம்னு அழகாத்தான் படம் பிடிச்சுகிட்டு வர்றான். ஆனா, அதை வேற இடத்திலே கொடுத்து பிரின்ட் போட்டு ஆல்பம் டெலிவரி பண்ற வித்தையிலே நெளிவு சுளிவு தெரியலே. கறாரா பேசத் தெரியலே. 'ஹி...ஹி...அதனால பரவாயில்லேங்க. எவ்வளவு கொடுக்க முடியுமோ கொடுங்க'னனு அசட்டுத்தனமா உளறி, வருமானத்தையெல்லாம் வீணாக்கிக்கிட்டிருக்கான். கேட்டா, 'பாவம்மா...' என்று பச்சாதாபம் காட்டறான்' - அமரராகிப் போன அம்மாவுக்கு, ஃபோட்டோவிலிருந்தபடியே இன்னும்கூட இதே ஆதங்கம்!

    அட, ஃபோட்டோ வியாபாரத்தைதான் அப்படி, இப்படியுமாகப் பண்ணத் தெரியவில்லை; ஸ்டூடியோவை நிர்வாகம் பண்ணுவதிலேயாவது சமர்த்து வேண்டாமா? உதவிக்கு ஒரு பொடியன். அவனும் வடிவேலுவுக்கு ஏற்ற சிஷ்யன்தான்.

    அடேய்.... பையனைக் கூப்பிட்டான் வடிவேலு.

    ஸ்டூடியோவில் வேலை இல்லை. அதனால் குறைவான சம்பளமும் முறையாக வருவதில்லை என்ற வருத்தத்தைவிட, பையனுக்கு விசுவாசம் அதிகமாகவே இருந்தது.

    கூப்டியா தலைவா? என்று கேட்டபடி அருகே வந்தான் பையன். சின்ன வாயால் பெரிதாகக் கொட்டாவி விட்டான்.

    டேய்....டேய்....கெடுத்திட்டியேடா... நேரம் ஆக ஆக கூடுதல் பதற்றத்தோடு பரிதவித்தான் வடிவேலு.

    'நான் புதுசா வேறே கெடுக்கணுமாக்கும்,' முணுமுணுத்தான் பையன். கழன்று விழந்துவிடாதபடி முன்னால் முடிச்சுப் போட்டிருந்தும் அவ்வப்போது நழுவி விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்த அரை டிராயரைப் பற்றியபடி வந்தான்.

    ஏண்டா, கேமிராவிலே ஃபிலிம் ரோல் போட்டியா? அழுதபடி வடிவேலு கேட்டபோதுதான் பையனுக்கும் அடிவயிற்றில் 'சுரீர்' என்றது. உடனே பாத்ரூம் போகவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.

    தலைவா, நீ போட்டிருப்பேன்னு நினைச்சிட்டேனே! அடடா....நானும் கவனிக்காம விட்டுட்டேனே! என்று சொல்லி உண்மையாகவே தவித்தான் பையன்.

    கடையைத் திறந்து வைப்பது தினசரி வாடிக்கை என்றாலும், வாடிக்கையாளர் வருவது என்பதுதான் நின்றுபோன வாடிக்கையாகிவிட்டது. சும்மாவேனும் எவ்வளவு நேரம்தான் ஸ்டுடியோவை தூசி

    Enjoying the preview?
    Page 1 of 1