Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Kandean Drohi
Kanavu Kandean Drohi
Kanavu Kandean Drohi
Ebook102 pages40 minutes

Kanavu Kandean Drohi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580115705726
Kanavu Kandean Drohi

Read more from Lakshmi Rajarathnam

Related to Kanavu Kandean Drohi

Related ebooks

Reviews for Kanavu Kandean Drohi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Kandean Drohi - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    கனவு கண்டேன் துரோகி

    Kanavu Kandean Drohi

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajaratnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    *****

    அத்தியாயம் 1

    மாலை மஞ்சள் வெய்யிலில் விஜயா தேய்த்து வைத்த பாத்திரங்கள் முலாம் பூசியது போல் பளபளக்கின்றன. தூக்கிச் செருகிய சேலையில் கால்கள் கரணை கரணையாகத் தெரிகின்றன. பார்த்துப் பார்த்து வளைத்த மாதிரி இடுப்பின் வளைவுகள், நீள நீளமான கைகளில் கொஞ்சி விளையாடும் கருப்பு, சிவப்புக் கண்ணாடி வளையல்கள், உதடுகள் சிவப்பில் தேன் தடவியது போல பளபளக்கின்றன.

    நீண்ட பின்னல் இடையை விட்டு இறங்கித் தரையைத் தொட்டு ஈரத்தில் புரள்கிறது. மென்மையான கரம் விளக்குமாற்றைப் பிடித்து வரட்டு வரட்டு என்று கிணற்றடியைப் பெருக்க.. டீக்கடையிலிருந்து மிதந்து வந்த பாட்டு சற்று நிற்க வைக்கிறது.

    'வாராய், நீ வாராய்... போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்.'

    அவளுடைய இள நெஞ்சை வருடித் துடிக்க வைக்கும் வரிகள்.

    இப்படி எந்தக் கதாநாயகன் அவளை வந்து அழைக்கப் போகிறான்?

    நடுப்பகலில் பார்த்த வாலிபன் முன்னறிவிப்பின்றி அவள் அனுமதி இல்லாமல் நெஞ்சக் கோட்டையில் ஏன் கொட்டு கொட்டென்று வந்து உட்கார்ந்திருக்க வேண்டும்? அவன் யாரோ எவனோ? அவன் பாடுவதாக ஒரு கற்பனை எழுகிறது. வரிகளுக்கு நெஞ்சில் வலியைக் கொடுக்கும் சக்தி இருக்கிறதா என்ன?

    வேலியோரத்தில் புதராக மண்டிக் கிடந்த மல்லிகைச் செடிகளில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். வேலியைத் தொட்டுக் கொண்டு ஓடும் பாதையின் அந்தப்புறம் பெரிய ஆல மரம். நீள நீளமான விழுதுகள். விஜயா கூட ஊஞ்சல் கட்டி ஆடுவாள். அங்குதான் அந்த இளைஞன் உட்கார்ந்து புத்தகம் படித்து கொண்டிருந்தான்.

    புத்தகத்தைத் தாழப் பிடித்துக் கொண்டிருந்த காரணத்தால் முகம் நன்றாகவே தெரிகிறது. படியப் படிய வாரிய தலை என்றாலும் டோபா வைத்தது போன்ற அடர்த்தியைக் கொடுத்தது. கூரான மூக்கு! இப்படி மூக்கு இருந்தால் கோபம் வரும் என்று யாரோ மூக்கு ஜோஸ்யம் சொன்ன ஞாபகம்.

    'ஏ, மன்மதனே. உனக்குக் கோபம் வருமா?' அவளுக்குச் சிரிப்புத் தான் வருகிறது. யாரையோ எவனையோ பார்த்து இதென்ன வர்ணணை?

    'யாரோ இவர் யாரோ?' என்று பாட அவள் தான் சீதையா? இல்லை அவன் தான் ராமனா?

    மொத்தத்தில் இவனுடன் ரெண்டு வார்த்தைகள் பேச மாட்டோமா என்ற தாபம் ஏன் வருகிறது?

    அழகான இளைஞன் என்றா? பத்து நிமிடங்கள் போல வைத்த கண்களை எடுக்காமல் பார்க்கிறான். 'இளைஞனே! நீ யாரென்று தெரியவில்லையோ' அவன் கைப் புத்தகம் சரிய அவன் சட்டென்று குனிந்து எடுக்க இவள் மல்லிகைப் புதரில் ஒளிந்து கொள்கிறாள்.

    'வாராய், நீ வாராய்' பாடல் இப்பொழுது ஏனோ அவனை நினைக்க வைக்கிறது.

    'இளைஞனே! நீ யார்? வரமாட்டாயா?'

    முன்பின் தெரியாத இளைஞனை நினைப்பது நியாயமில்லை என்பது அந்த இள நெஞ்சுக்குத் தெரியவில்லையே? கனவுகள் கண்டு கற்பனையை வளர்த்துக் கொள்ளும் பருவம். கனவு காண வைக்கும் வகையில் இவன் இத்தனை அழகாகவா இருந்து தொலைக்க வேண்டும்? இந்த குக்கிராமத்தில் இவன் யார் வீட்டுக்கு வந்திருப்பான்?

    என்னடி, தரைக்குப் பாலிஷ் போடறியா? கவனிச்சிட்டுதான் இருக்கேன், கவனம் இங்கே இல்லை போல இருக்குதே?

    கிணற்றங்கரையைத் தொட்ட கொல்லைப்புற மேடை, அதில் தான் சித்தி மதுரா உட்கார்ந்திருந்தாள். இழைய இழைய வாரி சவுரியை இணைத்து முடியை முறுக்கிக் கொண்டை போடுகிறாள். மல்லிகைச் சரம் பிறை போல உட்கார்ந்து கொள்கிறது. கை நோகத் தொடுத்த விஜயாவுக்கு என்று இரண்டு கிள்ளு கூட வைக்காத சுபாவம்.

    சித்தி மதுராவைப் பொறுத்த வரையில் விஜயா சம்பளம் இல்லாத வேலைக்காரி. உடனே சித்திக்குப் பதில் சொல்லாவிட்டால் சரியான கோபம் வேறு வரும்.

    பாத்திரத்தில் கரி பிடிச்சிருந்தது. அதான் தேய்க்க நேரமாயிடுச்சு சித்தி.

    விஜயாவின் சிற்பம் போன்ற எழிலைக் காணக் காண மதுராவிற்கு பற்றிக் கொண்டு வருகிறது. பல்லைக் கடித்துக் கொண்டு எரித்து விடுபவள் போல உறுத்துப் பார்க்கிறாள்.

    இப்படி வேலை செய்தா எப்படி ஒருத்தன் வீட்ல போய் குப்பை கொட்டுவியாம். சித்திதானே! அம்மாவா இருந்தா எல்லாத்தையும் கத்து வச்சிருப்பா என்று எந்தலையை உருட்டுவாங்க என்று கடுகடுத்தாள்.

    இத்தனை நேரம் கண்ட இன்பக் கனவெல்லாம் அழிய விஜயாவின் கண்களில் நீர் குடி கொள்கிறது. தனக்கென்று ஒருவன் வருவானா? ஒரு வாழ்வு கிடைக்குமா? யாரிடம் போய் கேட்பது? ஜோஸ்யரிடம் போய் ஜோஸ்யம் கேட்கலாமா? வீட்டு வாசற்படியை விட்டு அவள் இறங்கவும் கூடாது. இறங்கவும் முடியாது.

    கண்ணீரை மறைக்க கிணற்றில் வாளியை விடுகிறாள். கண்ணீரைப் பார்த்தால் அதற்கென்று தனியாக வசவும், அடியும் கிடைக்கும்.

    வீட்டு வேலையை முடிச்சிட்டு செடிகளுக்குத் தண்ணீர் இறைச்சு ஊத்து.

    வெய்யிலின் கடுமையால் கிணற்றுத் தண்ணீர் ஆழமா ப் போய் விட்டிருந்தது. குடி தண்ணீர் வாசற் குழாயில் வரும். விடியற் காலையிலேயே விஜயா அதைக் கொண்டு வந்து நிரப்பி விடுவாள். பாத்திரம் தேய்க்க,

    Enjoying the preview?
    Page 1 of 1