Acham Vidu Pachai Kiliye
By R.Sumathi
()
About this ebook
Read more from R.Sumathi
Sinnakkili Rating: 4 out of 5 stars4/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Mayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsVerinai Verukkum Vizhuthukal Rating: 4 out of 5 stars4/5Kan Varaintha Oviyame Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsThoduvanai Thottuvidu Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Iru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsKaiyarukil Poomaalai Rating: 4 out of 5 stars4/5
Related to Acham Vidu Pachai Kiliye
Related ebooks
அச்சம் விடு பச்சைக் கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsSoozhnilaik Kaithigal Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Elle Ilankiliye Rating: 0 out of 5 stars0 ratingsஎல்லே... இளங்கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsIru Kannilum Un Gnabagam… Rating: 4 out of 5 stars4/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Theerkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsMullaippoo Pallakku Rating: 4 out of 5 stars4/5முல்லைப்பூ பல்லக்கு Rating: 0 out of 5 stars0 ratingsSwarangal Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Neeyum Naanum Veralla...! Rating: 4 out of 5 stars4/5Saiva Kokkugal Rating: 5 out of 5 stars5/5Samharam Rating: 0 out of 5 stars0 ratingsSigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Mura Penn Rating: 0 out of 5 stars0 ratingsVizhiyele Malarnthathu Rating: 5 out of 5 stars5/5விழியிலே மலர்ந்தது Rating: 0 out of 5 stars0 ratingsValaiyosai Rating: 0 out of 5 stars0 ratingsவளையோசை... Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5Nee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Madhil Mel Manasu Rating: 5 out of 5 stars5/5வேண்டும் உந்தன் உறவு! Rating: 0 out of 5 stars0 ratingsVendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsEngirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Ninnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5
Reviews for Acham Vidu Pachai Kiliye
0 ratings0 reviews
Book preview
Acham Vidu Pachai Kiliye - R.Sumathi
14
1
கையில் கனகாம்பரப் பூச்சரத்துடன் மலர்விழியின் அறைக்குள் நுழைந்த
வேணி, மலர்விழி செல்போனில் யாருக்கோ முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
மலர்விழி யாருக்கு போன் பண்றே?
என்றாள்.
ராதிகாவுக்குத்தான்.
வேணியின் முகம் மாறியது.
இப்ப எதுக்கு அவளுக்கு போன் பண்றே?
வீட்டுக்கு வரச் சொல்லத்தான்.
வேணியின் முகம் இன்னும் மாறியது.
அவளை எதுக்கு இப்ப வரச் சொல்றே? உன்னைப் பெண் பார்க்க இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க. இந்த நேரத்துல அவ எதுக்கு?
அதனாலதான் வரச் சொல்றேன். அவ வந்தா எனக்கு கொஞ்சம் தைரியமாயிருக்கும். படபடப்பு இருக்காது.
நல்லாயிருக்குடி உன் கதை? வேலியில போற ஓனானை எடுத்து எவளோ காதுக்குள்ள விட்டாளாம். அந்தக் கதையாயிருக்கு.
மலர்விழி சிரித்தாள்.
ராதிகாவை ஓணான்னு சொல்ல உனக்கு எப்படிம்மா மனசு வருது. எங்க காலேஜ்ல அவதான் நம்பர் ஒன் அழகி. அழகிப் போட்டியில கலந்துக்க முயற்சி எடுத்துக்கிட்டிருக்கிற அவ காதுல மட்டும் இந்த வார்த்தை விழுந்தது பாவம்... அப்படியே மனசு உடைஞ்சு போய்டுவாம்மா.
அதனாலதான்டி சொல்றேன். அவ உன்னைவிட அழகு. பளிச்சுன்னு இருப்பா. உன்னைப் பெண் பார்க்க வர்றவங்க அவளைப் பார்த்துட்டு உன்னை வேண்டாம்னு சொன்னா என்ன பண்றது?
நல்லதாப் போச்சு. வர்றவனை வேண்டாம்னு சொல்லிடுவேன். அப்படிப்பட்டவனைக் கட்டிக்கிட்டாலும் பிரச்னைதாம்மா. அவன் கூட சேர்ந்து போனா ரோட்ல எதிர்ல ஒரு அழகான பொண்ணு வந்தா என்னைத் தெருவிலேயே அம்போன்னு விட்டுட்டு அவ பின்னாடி போயிடுவான்மா.
மலர் சும்மா எதையாவது விளையாட்டாப் பேசாதே. இந்த மாப்பிள்ளையை எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடியிருக்கோம்னு உனக்கே தெரியும். உனக்கு செவ்வாய் தோஷம். எத்தனை வரன் வந்து தட்டிக்கிட்டுப் போயிருக்கு. இந்த பையனுக்கும் செவ்வாய் தோஷம்கிறதால ஒத்து வந்திருக்கு நல்லபடியா முடியணும். நீ பாட்டுக்கு எதையாவது பண்ணி வைக்காதே!
"அதனாலதாம்மா நானும் தைரியமா கூப்பிடறேன் நீ ஒண்ணும் கவலைப்படாதே. செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணு கிடைக்காம மாப்பிள்ளை வீட்டிலே இருபதுக்கும் மேலே பொண்ணு பார்த்து ஒத்து வராமத்தான் கடைசியா நம்ம வீட்டுக்கு வர்றாங்க. தவிர மாப்பிள்ளை ஃபோட்டோவைப் பார்த்துட்டு பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னதால்தானே நேர்ல பார்க்க வர்றாங்க.
ராதிகாவைப் பார்த்து எப்படி மனசு மாற முடியும் அந்த மாப்பிள்ளையோட தலையெழுத்து என் கழுத்துல தாலி கட்டியே தீரணும். வேற வழி இல்லை. என்னை வேண்டாம்னு சொன்னா அவர் வேற செவ்வாய் தோஷம் பெண்ணைத் தேடி அலையணும்."
ஏன் இப்படியெல்லாம் பேசறே? அம்மா சொன்னா கேட்க மாட்டியா?
அம்மா நீ தானே அடிக்கடி சொல்லுவே. இன்னார்க்கு இன்னாருன்னு ஆண்டவனே முடிச்சுப் போட்டுடுவான் வரப்போறவரைத்தான் ஆண்டவன் எனக்குன்னு முடிச்சு போட்டிருக்கான்னா ராதிகாவோட அழகு அதை மாத்திடுமா என்ன?
உன்கிட்ட பேச முடியுமா? கடைசியில என்னையே கவிழ்த்துடுவே. என்னமோ பண்ணு. இந்தா பூ தலையைப் பின்னி அழகா வச்சுக்க. என்ன புடவை கட்டிக்கப் போறே?
ராதிகா வரட்டும்மா. அவ வந்து செலக்ட் பண்ணித் தர்ற புடவையைக் கட்டிக்கறேன். ராதிகாவோட ரசனையே தனிம்மா.
ராதிகா புராணத்தை விடவே மாட்டியா?
வேணி எரிச்சலாக வெளியே வந்துவிட்டாள்.
ராதிகாவிற்கு மலர்விழி தொலைபேசி செய்தாள்.
சொல்லுடி!
என ராதிகாவின் குரல் கேட்டதும் கோபப்பட்டாள் மலர்விழி.
என்னடி பண்ணிக்கிட்டிருக்கே? நேத்தே சொன்னேனா இல்லையா? வர்றேன்னு சொன்னே ஆளைக் காணோம்.
இதோ கிளம்பிட்டேன். வாசலுக்கு வந்து செருப்பு போட்டுக்கிட்டிருக்கேன். ஆட்டோ புடிச்சு அரை மணி நேரத்துல வந்துடுவேன்.
சீக்கிரம் வந்து தொலை. நீ வந்துதான் நான் புடவையே கட்டிக்கணும்.
அடிப்பாவி... வெறும் பாவாடை ஜாக்கெட்டோடவா நிக்கறே? நான் வழியில டிராபிக் பிரச்சனைன்னு வர லேட்டானா வர்றவங்க முன்னாடி அப்படியே போய் நின்னுடாதே.
உதைபடப் போறே!
- சிரித்தபடி செல்லை அணைத்தாள்.
சொன்னபடியே அடுத்த அரை மணி நேரத்தில் வந்துவிட்டாள் ராதிகா. ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்த ராதிகாவையும் அவளுடைய பளிச்சென்ற தோற்றத்தையும் பார்த்த வேணிக்கு பகீரென்றிருந்தது. மகள் மீது கோபம் கோபமாக வந்தாலும் அதை ராதிகாவின் மேல் காட்ட முடியுமா? எரிச்சலை மறைத்துக் கொண்டு சிரித்து வரவேற்றாள்.
ராதிகா நேராக மலர்விழியின் அறைக்குள் நுழைந்தாள்.
சாவகாசமாக அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த மலர்விழியைப் பார்த்து,
ஏய்... என்ன தலைகூட சீவாம உட்கார்ந்திருக்கே?
நீ வந்து பின்னி விடுவேன்னுதான்.
சரியாப் போச்சு. குளிச்சியா இல்லை நான் வந்து குளிப்பாட்டி விடுவேன்னு இருக்கியா?
சீசீ... அசிங்கமா பேசாதே.
முதல்ல என்ன புடவை கட்றதுன்னு செலக்ட் பண்ணு
என எழுந்து பீரோவைத் திறந்து வைத்தாள் எல்லாச் சேலைகளையும் எடுத்து மெத்தை மீது போட்டாள்.
கோழி குப்பையைக் கிளறுவதைப் போல அனைத்தையும் கிளறினாள் ராதிகா.
இது... அது... இல்லை இதப் பார்! வேண்டாம். இதைக் கட்டிக்கோ
என கடைசி கடைசியாக ஊதா நிறத்தில் அரக்கு நிற பார்டர் போட்ட சேலை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.
அழகாக தலையை சீவி பின்னி பூவை வைத்துவிட்டாள்.
உதட்டு நிறத்திற்கேற்ற லிப்ஸ்டிக் போட்டு பளிச்சென பொட்டு வைத்து கண் மை விடட்டுமா?
என்றாள்.
வேண்டாம். வர்ற மாப்பிள்ளைக்கு இதுவே அதிகம்.
என்று மலர்விழி சிரித்தபோது எதற்கோ உள்ளே வந்த வேணி மகளை பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள்.
"என்னடி... என்ன பேசறே? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? செவ்வாய் தோஷம் உள்ள உனக்கு மாப்பிள்ளை தேடி அலைஞ்ச எங்களுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும். இதப்பாருடி ராதிகா, வர்ற மாப்பிள்ளையைப் பார்த்துட்டு இவ சும்மா இது