Ninnai Saranadainthen
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5
Related to Ninnai Saranadainthen
Related ebooks
Kalyana Pandhal Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Mudhal Kadhali Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Sariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Ondru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla...! Rating: 4 out of 5 stars4/5Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Neerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsVendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Kalyaana Varam Rating: 5 out of 5 stars5/5Inba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Kaagitha Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Thevai Oru Devathai Rating: 5 out of 5 stars5/5Poo Magal Rating: 5 out of 5 stars5/5Kathavu Thiranthathu Rating: 3 out of 5 stars3/5Thunaivi Rating: 2 out of 5 stars2/5Naan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ninnai Saranadainthen
1 rating0 reviews
Book preview
Ninnai Saranadainthen - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
நின்னைச் சரணடைந்தேன்
Ninnai Saranadainthen
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
1
வாசல் கேட்டுக்கு அருகில் சுவரில் சாய்ந்து கொண்டு தெருப் பையன்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி. ஒவ்வொரு முகத்திலும் தானே ஸ்ரீகாந்த், தானே கபில்தேவ் என்ற பெருமிதம் சொட்டியதை தன்னை மறந்து ரசித்தாள்.
உள் வாசலிலிருந்து இரண்டு மூன்று தரம் அவளை எட்டிப் பார்த்த கஸ்தூரி பொறுமை இழந்தாள்.
ஏண்டி காயத்ரி! எத்தனை தரம் சொல்றது? வந்து சாப்ட்டன்னா எனக்கு வேலையாகும் இல்ல! ஒழிச்சு போட்டுட்டு கொஞ்ச நாழி கட்டைய நீட்டுவேன் இல்ல?
காயத்ரி கிரிக்கெட் ரசனையிலிருந்து விடுபட்டாள். வலுக்கட்டாயமாய் பிரித்து வைத்த தண்ணீர் தடுப்பு நீங்கியதும் குப்பென்று சேர்வது போல மீண்டும் அவள் மனசை துக்கம், சங்கடம், சோர்வு, எரிச்சல் எல்லாம் சூழ்ந்து கொண்டது.
ஏம்மா பசிக்கலன்னா விட்டுடேன்!
அதான் ஏன்னு கேக்கறேன். மணி பதினொண்ணாறது. காலையில் குடிச்ச காப்பிதான? ஏன் இன்னும் பசிக்கலை?
ப்ச்! அறுக்காதம்மா! இதுக்கெல்லாம் என்ன காரணம் சொல்றது?
கஸ்தூரியின் முகம் சட்டென்று வாடியது.
எனக்குத் தெரியுண்டி காயத்ரி! கார்த்தால வீணா... உன்னைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னாளே! அதானே உனக்கு பசியடைச்சுப் போச்சு?
காயத்ரிக்கு குபுக்கென்று துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் பளபளத்த நீர்த்துளிகள் அவசரமாய் கன்னத்தில் உருண்டது. வீணாவின் அகம்பாவம் ஊரறிந்த விஷயம்தான்.
வீணாவுக்கும் காயத்திரிக்கும் இரண்டு வயசுதான் வித்தியாசம். வீணாவைப் பிரசவத்த ஆறாம் மாசம் அவள் அம்மாவுக்கு புத்தி சுவாதீனமில்லாமல் போய்விட்டது. என்ன காரணம் ஏன் இப்படி என்று கண்டுபிடித்து வைத்தியம் செய்வதற்குள் ஒரு நாள் இரவு தொபுக்கடீர் என்று கிணற்றில் குதித்து விட்டாளாம். சப்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்து டார்ச் அடித்து கிணற்றில் இறங்க ஆள் பிடித்து அவன் உள்ளே இறங்கி பெரிசாய் ஒரு மர மூடியை தராசு மாதிரி கட்டி அவளை அதில் கிடத்தி எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே கொண்டு வந்து பார்த்தால் மண்டை உடைந்து செத்துப் போயிருந்தாள் அவள்.
ஒரு வயது கைக்குழந்தையை வளர்க்க வேண்டுமே என்று மறு கல்யாணம் பற்றி உறவு ஜனம் யோசிக்க, வீணாவின் தாய் வழித் தாத்தாவுக்கோ புத்தி வேறு விதமாய்ப் போயிற்று. இரண்டாவது மனைவி வந்து விட்டால் தன் பேத்தி சித்தி கொடுமையால் பரிதவிக்குமோ என்று குழம்பினார். அவருக்கு வீணாவின் அம்மா ஒரே வாரிசு என்பதால் சொத்துக்கள் வீணாவுக்குத்தான் வரவேண்டும். எனவே சொத்துக்களை வீணாவின் பேருக்கே எழுதி வைத்தவர் சிவராஜனை வெறும் கார்டியன் ஸ்தானத்தில் தான் வைத்தார்.
அது மட்டுமல்ல. ஒரு ஏழைப் பெண்ணாய்ப் பார்த்து தானே கல்யாணமும் பண்ணி வைத்து விட்டு அந்த வீட்டிலேயே அவரும் பேத்திக்கு துணையாய் இருந்து விட்டார். அதற்குப் பிறகு எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் கஸ்தூரியால் அவளைக் கண்டிக்க இயலாமல் போக தாத்தாவின் செல்லமும் செல்வமும் அவளது செருக்கை சீரும் சிறப்புமாய் வளர்த்து விட்டன. சிவராஜன் எதையும் கண்டு கொள்வதில்லை.
வீணாவுக்கு இரண்டு வயது முடியும் போது காயத்ரி பிறந்தாள். சாதாரணமாய் மூத்தாள் மகளை சித்தியும் அவள் குழந்தைகளும் பாடாய்ப் படுத்தும் என்பது போய் கஸ்தூரியும் காயத்ரியும் இங்கு பாடாய்ப்பட்டார்கள்.
காயத்ரியை வெடுக்வெடுக்கென்று பேசி நோக வைப்பது என்றால் வீணாவுக்கு பாயசம் குடிப்பது மாதிரி. அன்று காலையில் கொஞ்சம் அதிகமாகவே 'பாயசம்' குடித்து விட்டாள் வீணா. காலையில் எழுந்ததுமே நேராய் சித்தியிடம் வந்தாள் வீணா.
ஏன் சித்தி என் ரூமுக்கு யாராவது வந்தாங்களா?
ஏன்? என்னாச்சு?
'என் ஹாண்ட் பாகிலிருந்து நூறு ரூபா காணல'
நல்லா தேடிப்பாரும்மா. யாரும் அங்க வரலையே தேடிப் பார்த்துட்டுத்தான் சொல்றேன். நேத்து சாயங்காலம் இருந்தது இன்னிக்கு காலேல காணும்னா என்ன அர்த்தம்.
நா பார்த்தேன் வீணா
கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்த காயத்ரி சொல்லவும் வீணா காயத்ரியைப் பார்த்தாள்.
எங்க பர்த்த?
உன்னோட நூறு ரூபா நோட்டுக்கு, திடீர்னு கையும் காலும் மொளச்சு, டொக்கு டொக்குனு நடந்து படியிறங்கி போனதைப் பார்த்தேனே
'திமிரா?'
அப்படிங்கற?
ஆமாண்டி! ஓசி சோறு திங்கும்போதே இந்த கொழுப்பு. உழச்சு நாலு காசு சம்பாதிச்சா தலை நிக்காது உனக்கு
உன்னை மாதிரியே ஆய்டுங்கறயா?
ஷட் அப்! இத பார், சித்தி! இவ அதிகம் பேசறா. இது என் வீடு, இந்த வீட்டுக்கு தேவையான பணத்தை நான் தான் குடுக்கறேன். எங்கப்பா உனக்கு புருஷனார்க்கலாம். ஆனா அவரும் இங்க உக்காந்து தான் சாப்படறார். இப்போ! அவரே என்னை நம்பிதான் இருக்கார்.
காயத்ரிக்கு கோபம் சுருக்கென்று வந்தது.
என்ன நீ ரொம்ப மிரட்டற? சும்மா பணக்காரி பணக் காரின்னு பீத்திக்கற?
கூந்தல் இருக்கு முடிஞ்சுக்கறேன். உனக்கென்னடி?
கூந்தல் எனக்கும் வளரும்
மொதல்ல நாலு காசு சம்பாதிச்சு இருக்கிற கூந்தலுக்கு எண்ணை வாங்கி தடவிக்கப்பாரு. தண்ட சோறு!
த பார் ரொம்ப பேசறே...!
அப்படித்தான் பேசுவேன். பெரிசா எதிர்த்து பேசறயே. நேத்து அப்பாவுக்கு கண் டெஸ்ட் பண்ணிட்டு வந்தோம்.
நானுத்தம்பது ரூபா ஆகுமாம் கண்ணாடி. வாங்கிக் குடுக்கறயா? உனக்கும் தானே அவர் அப்பா?
அவ்ளோதானே! எப்படியாவது வாங்கிக் குடுத்துடறேன். நீ போ!
வீணா இளக்காரமாய் சிரித்தாள். ஒத்தை ரூபாக்கே தன் கையை எதிர்பார்க்கும் இவள் அவ்வளவு ரூபாய்க்கு எங்கே போவாள் என்று திமிராய் சிரித்து விட்டு சொன்னாள்.
உங்கிட்ட இப்போதைக்கு வேல்யூவா ஒரே ஒரு சமாச்சாரம்தான் இருக்கு! உக்காந்து உக்காந்து சாப்பிட்டுட்டு நல்லா உருண்டு திரண்டு ஜம்முனு வளர்ந்திருக்க. சதை வியாபாரம் பண்ணினா ஒரே நிமிஷத்துல நானூறு என்ன நாலாயிரம் புரட்டிடலாம். வரட்டா?
காயத்ரி திக் பிரமை பிடித்தவள் போல் நின்று விட்டாள். இந்த அளவுக்கு கேவலமாய் வீணா பேசி விடுவாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கடவுளுக்கும் கண்ணில்லை தான் போலும். இருந்திருந்தால் இத்தனை சொத்துக்களுக்கு அதிபதியான விணாவுக்கு மட்டும் ஜம்மென்று ஒரு வேலை கொடுத்திருப்பானா? பெரிய கம்பெனியில் எக்ஸிகியூடிவ் போஸ்ட். கார் வேறு கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் காயத்ரியும் தலைகீழாய் நின்று பார்க்கிறாள்' ஒரு வேலை கிடைக்கவில்லை. வீடுதான் பெரிய வீடு. ஆனால் அம்மாவும் அவளும் - இங்கு அடிமைகள் என்றால் ஊர் உலகம் நம்பாது. கஸ்தூரியும் வீணாவின் குணமறிந்து காயத்ரியை ஒரு ஏழைப் பெண்ணாகத்தான் வளர்த்திருந்தாள். தன் மகள் எதையும் அனுபவிக்கவில்லையே என்ற ஏக்கம் அவளுக்கும் இருந்தது. ஆனாலும் கடற்கரை தாகம் தானே அது?
காலையில் வீணா அப்படி பேசிவிட்டுச் சென்றது முதல் நிலை கொள்ளாமல் தவிக்கிறாள் காயத்ரி. வீணாவை நினைத்து நினைத்து ஆத்திரம் வந்தது. தன் நிலையை நினைத்தால் அதற்கு மேல் எரிச்சல் வந்தது.
போஸ்ட்!
என்ற குரல் கேட்டது.
கஸ்தூரி போய் கடிதம் வாங்கி வந்து காயத்ரியிடம் கொடுத்தாள். கவரைப் பிரித்து பார்த்த காயத்ரியின் முகம் குப்பென்று மலர்ந்தது.
அது ஒரு கம்பெனியிலிருந்து அனுப்பியிருந்த இன்டர்வியூ கார்டுதான்.
அம்மா அவ கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். வேலை கிடைச்சப்பறம் சொன்னா போறும். சப்போஸ் சொல்லிவிட்டு வேலைகிடைக்கலன்னு வெச்சுக்கோ இந்த சனியன் அதுக்கு வேற எடக்கா பேசும்
நீ சொல்லுன்னாலும் நா சொல்றதா இல்ல. இந்த வேலை உனக்கு கிடைச்சுடணும் காயத்ரி. நா வேண்டிருக்கேன்
ஆமாம்மா! கிடைக்கணும். இவ்ளோ பெரிய வீட்ல அடிமையா இருக்கிறதை விட நாம தனியா போய் சின்ன வீட்டுல ராணி மாதிரி இருக்கணும். அதான் என் ஆசை. வேலை கிடைச்சதும் பாரேன். மொதல்ல ஒரு வீடு பிடிக்கப் போறேன்
அதுக்கு உங்கப்பா சம்மதிப்பாரா காயத்ரி
சம்மதிக்கலன்னா அவர் பொண்ணோட அவர் இருந்துக் கட்டும். எங்கம்மாவை நா கூட்டிட்டு போறேன்
உங்கம்மா அவருக்கு பொண்டாட்டிங்கறதை மறந் தட்டு பேசற நீ!
அப்படின்னு நீ நெனவு படுத்தினாதான் ஞாபகமே வரது
பாவம்டி! அவர் என்ன பண்ணுவார். பண்ணினது காய்கறி வியாபாரம். அது படுத்துடுச்சு மனுஷனுக்கு இப்போ உடம்புக்கு வேற முடியல. பொண்ணு கைய எதிர்பார்க்க வேண்டிய நிலமை. ஆனாலும் பாத்தியா காயத்ரி. எவ்ளோ வெறுப்பிருந்தாலும் நம்மளை வெளியே போய்டுங்கன்னு அவச் சொன்னதேயில்லை.
அய்யோ அசட்டு அம்மாவே! அதனால அவளை நல்லவள்னு நெனைச்சுட்டியா? அது ஒரு வகையான சாடிஸம்! அவ பிச்சு பிச்சு விளையாட ரெண்டு தும்பி வேணும் அவளுக்கு. அது நாமதான். நம்மளைச் சீண்டறதுலதான் அவளுக்கு சுவாரசியமான வாழ்க்கையே இருக்குன்னு நம்பறவ ஏன் நம்பளை வெளியே அனுப்பப் போறா? நாம்ளாதான் பறந்து போணும்
எனக்கு ஒண்ணும் புரியலடி காயத்ரி. உங்கப்பா என்ன சொல்றாரோ பார்ப்போம். அந்தப் பொண்ணும் தனியா என்ன பண்ணும்? அதை நிராதரவா விட்டுட்டுப் போறது தப்பில்லையா?
இந்த இரக்கமும் சிந்தனையும் அவளுக்கில்லையே! ஒண்ணு செய்யப்போறேன். உங்க இரண்டு பேரையும் விட்டுட்டு நான் பாட்டுக்கு ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல போய் தங்கிக்க போறேன் அதான் சரி!
மொதல்ல இண்டர்வியூ என்னிக்குன்னு சொல்லு! மத்ததை அப்புறம் பார்ப்போம்!
வெள்ளிக்கிழமை!
என்றாள் காயத்ரி!
வெள்ளிக்கிழமை எழுந்ததிலிருந்தே அவள் உடம்பு ஒரு நிலையில் இல்லை. காரணமின்றி பதட்டப்பட்டது. மனசுக்குள் ஏற்பட்ட உணர்வுகளை இனம் பிரிக்க முடியவில்லை அவளால்.
'கடவுளே இந்த வேலை கிடைக்குமா எனக்கு?' என்று மனது அலைபாய்ந்தது.
அட்ரஸ் பார்த்து அந்த கம்பெனிக்குச் சென்றவளுக்கு திக்கென்றது. தன்னையே ஒரு முறை ஏற இறங்க பார்த்துக் கொண்டவளுக்கு உள்ளே செல்லவே கால்கள் கூசியது.
2
கடைசி முறையாக ஒரு தரம் தன்னை நிலைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான் ஷியாம் பிரசாத். மெருன் நிற சூட்டிங்ஸ் பாந்தமாயிருந்தது. ஷாம்புவின் உதவியால் கேசம் பம்மென்று முகத்திற்கு அழகு சேர்த்திருந்தது.
மேல் நாட்டு பவுடரும் சென்ட்டும் அவனைச் சுற்றி ஒரு மைலுக்கு மணம் பரப்பும் போல் கும்மென்று வாசனை. கண்ணாடி போல் கால்களில் ஷூக்கள். உயர்தர ரிஸ்ட் வாட்ச். கண்களுக்கு இளநீல நிற கூலிங்கிளாஸ்! 'ம்ம்ம்! எந்தப் பெண்ணும் இந்த ஷணம் ஐ லவ் யூ என்பாள்' என்று அவனுக்கே தோன்ற சிரித்துக் கொண்டான்.
தோற்றம் திருப்தியைத் தர கண்ணாடியை விட்டு நகர்ந்து டெலிபோனுக்கருகில் வந்தான். எண்களை சுழற்றி பேசினான்.
கிரி! நா ஷியாம் பேசறேன். என்ன ரெடியா? என்னடா மறந்துட்டயா. நா சொல்லியிருந்தேனே இன்னிக்கு எனக்கு பர்த்டே. வீட்ல இல்ல, ஹோட்டல்ல பிரண்ட்சுக்கு மட்டும் லைட்டா பார்ட்டின்னு!
சரி சரி பத்து நிமிஷத்துல அங்க காரோட வரேன் கிளம்பி ரெடியாரு
- போனை டொக்கென்று வைத்து விட்டு கார் சாவியை சுழற்றிக் கொண்டே கீழே வந்தான்.
என்ன மணி கார்ல பெட்ரோல் ஃபுல்லா இருக்குல்ல?
'விட்டுட்டேன் தம்பி புல்லா இருக்கு'
குட்! நா வர ராத்திரி லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்க
பரவால்லங்க. நீங்க வந்தப்பறமே படுத்துக்கறேன்
அப்புறம் உன் இஷ்டம்!
என்று சொல்லியபடி காரில் உட்கார்ந்து அதைக் கிளப்பினான்.
சென்னை நகரத் தெருக்கள் பலவற்றைக் கடந்து ஒரு சுமாரான தெருவில் நுழைந்து ஒரு வீட்டின் முன் போய் நின்றது வண்டி. அந்த வீட்டு வாசலில் கிரிதரன் கிளம்பித் தயாராய் நின்றிருந்தான்.
உள்ளே வந்துட்டுப் போயேன் தம்பி!
என்றாள் கிரிதரனின் அம்மா.
"பரவால்லம்மா. அப்புறம் வரேனே...! வாடா, ஏற்கனவே பத்து நிமிஷம் லேட்! அவனை இழுத்துத் தள்ளாத குறையாய் வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.
மாட்டேன்னு சொன்னா விடமாட்டேங்கறயே ஷியாம்"
என்னடா ஆச்சு உனக்கு?
ஏண்டா இந்த பார்ட்டி தேவைதானா? பணம் இருக்குன்னா இப்படித்தான் தாம் தூம்னு செலவு பண்ணணுமா? இதெல்லாம் எனக்கு பிடிக்கவேல்ல ஷியாம்.
அப்புறம் நா என்ன பண்ணணுங்கற?
என்று அலட்சியமாய்க் கேட்டான் ஷியாம்.
கிரிதரன் எப்பொழுதுமே இப்படித்தான் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததாலோ என்னமோ பணம் செலவழிப்பதென்றால் அஞ்சுகிறான். இத்தனைக்கும் பள்ளி நாட்களிலிருந்தே ஷியாமுக்கு அவன் தான் நண்பன் ஷியாமின் குணங்களை நன்றாய் அறிந்தவன்.
ஒவ்வொரு பிறந்த நாளையும் ஷியாம் தடபுடலாகத்தான் கொண்டாடுகிறான். இருந்தும் எதற்கு வீண்செலவு என்று புலம்புகிறான். சில நேரம் கிரிதரனின் போக்கு எரிச்சலைத் தந்தாலும் ஏனோ அவன் நட்பை ஷியாமினால் விட முடியவில்லை. கிரிதரனுக்கு ஊதாரித்தனம் பிடிக்காது என்பதை தவிர மற்றபடி மிகவும் நல்லவன்.
ஷியாமுக்கு சொந்த விஷயத்திலும் சரி, அலுவலக விஷயத்திலும் சரி மிகவும் உதவியாக இருக்கிறான். கம்பெனியின் ஜெனரல் மானேஜர்தான் ஷியாமே தவிர உண்மையில் அதன் நிர்வாகம் முழுக்க ஷியாமின் பி. ஏ. என்ற அந்தஸ்து கொண்ட கிரிதரிடம் தான் உள்ளது.
மிக உயர்ந்த மரங்களை தருவித்து, மரச்சாமான்கள் செய்து பெரிய பெரிய ஸ்தாபனங்களுக்கும், வீடுகளுக்கும் சப்ளை செய்யும் கம்பெனி அது. பல கிளைகளை பல ஊரில் கொண்டது. பாக்டரியில் மட்டும் மிக நுணுக்கமாய் வேலை செய்யும் கலைஞர்களே நிறைய பேர் வேலை செய்கிறார்கள். ஷியாமின் பாட்டனார் காலத்தில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி இன்று ஆலமரமாய் தழைத்து வளர்ந்திருக்கிறது.
அப்பாவுக்கு திடீரென்று பராலிஸிஸ் வந்து படுக்கையில் விழுந்து விட்ட பிறகுதான் ஷியாம் கம்பெனி பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அவன் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னமிருந்தே கிரிதருக்கு அப்பாவிடம் சொல்லி அங்கு வேலை வாங்கிக் கொடுத்திருந்தான். ஐந்து வருடகாலத்தில் கிரிதர் கடுமையாய் உழைத்து முன்னேறியிருந்தான் என்பது இன்று விரல் நுனியில் அனைத்து விஷயங்களையும் அவன் வைத்திருந்ததன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அவனுடைய அந்த அனுபவம் இப்போது ஷியாமுக்கு விளக்காய் உதவுகிறது. அந்த விளக்கு ஷியாமுக்கு தேவைப்பட்டது. கிரிதர் இருப்பதால் சில நேரம் கம்பெனியை சுத்தமாக மறந்துவிட்டு ஹாய்யாக இருக்கலாம். எனவே தான் சில நேரம் அவனுடைய கட்டுப் பெட்டித்தனங்களைக் கூட சகித்துக் கொள்கிறான்.
ஹோட்டல் வளாகத்தில் வண்டியை நிறுத்தினான். இருவரும் உள்ளே சென்று ஷியாம் ரிசர்வ் செய்து வைத்திருந்த பகுதியை அடைந்தபோது சீராக கைத்தட்டல் ஒலி கேட்கத் தொடங்கியது.
ஹால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடுவில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு மேஜை மீது மிகப்பெரிய கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது.
ஷியாம் மிக மகிழ்ச்சியோடு அனைவருக்கும் கைதூக்கி பொதுவாக 'ஹாய்!' என்று சொல்லி விட்டு எல்லோரும் வந்தாச்சா என்றான்.
எத்தனை பேரை கூப்ட்டிருந்த?
என்றான் கிரிதர்.
அநேகமா எல்லாரும் வந்துட்டா மாதிரி தான் இருக்கு!
என்ற ஷியாம், ப்பூ என்று ஊதி மெழுகுவர்த்தியை அணைத்தான்.
அதென்ன ஷியாம் ஒரே ஒரு மெழுகு வர்த்திதானா ஒரு வயசு தானா உனக்கு?
என்றாள் ஒரு பெண். ஷியாமோடு கல்லூரியில் படித்தவள்.
என் வயசு சீக்ரெட்டா இருக்கணும்னுதான் இந்த ஏற்பாடு
என்று கேக்கை வெட்ட ஆரம்பித்தபோது வந்திருந்தவர்கள் கோரசாக பர்த்டே சாங் பாட ஆரம்பித்தார்கள்.
பார்ட்டி கேக்கோடு நிற்கவில்லை. அவரவர் தேவைக் கேற்ப அயல்நாட்டு, உள் நாட்டு மது பானங்களும், முந்திரி வறுவல்களும் அமர்க்களப்பட்டன.
இரவு எல்லாம் முடிந்து ஷியாமை உட்கார வைத்து தானே வண்டி ஓட்டிக்கொண்டு அவனது பங்களாவில் இறக்கி வேலைக்காரன் கையில் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து விட்டுக்கு வந்து சேர்ந்த கிரிதருக்கு எரிச்சலான எரிச்சல். இதென்ன பிழைப்பு விட்டு விடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் கை நிறைய அவன் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் அந்த எண்ணத்தை சட்டென்று மாற்ற, கண்ணை அழுத்திய தூக்கத்தின் வசப்பட்டான்.
மறு நாள் ஷியாம் எழுந்திருக்கும் போதே மணி ஒன்பதை