Ennuyire...
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5
Related to Ennuyire...
Related ebooks
Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsGangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Kanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5En Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsVizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsKalyaana Varam Rating: 5 out of 5 stars5/5Kathavu Thiranthathu Rating: 3 out of 5 stars3/5Manoratham Rating: 4 out of 5 stars4/5Uthaya Nila Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Rating: 5 out of 5 stars5/5Maanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsPonmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsInba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsVeettukku Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Oru Vaanam Iru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ennuyire...
2 ratings0 reviews
Book preview
Ennuyire... - Vidya Subramaniam
https://www.pustaka.co.in
என்னுயிரே...
Ennuyire...
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 1
பறவைகள் மட்டும் எப்படி நேரமறிகிறதோ தெரியவில்லை. விடியல் நேரம் அத்தனை பறவைகளும் ஒரே நேரத்தில் மாமரத்திலிருந்து துயிலெழுந்து, கீச்சுகீச்சென்று விதவிதமாய் சங்கீதம் பாட ஆரம்பித்தால் மணி ஐந்து என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். இந்திரா போர்வையை விலக்கி ஜன்னல் வழியே மாமரத்தைப் பார்த்தாள், காற்றில் கிளைகள் அசைய, குருவிகள் விர்ரென்று பறப்பதும், திரும்ப வந்து அமர்வதுமாய் இருந்தது.
மனிதனைத் தவிர மற்றவை எல்லாமே இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்கிறது. அப்பா அடிக்கடி சொல்லுவார் ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டையும், அரைக்கரண்டி சாதத்தையும் இந்த மதில் சுவர்ல வெச்சுப் பார் தாயி. இந்த பறவை ஆனந்தமா அந்த அரைக்கரண்டி சோற்றை தின்னுட்டுப் போகுமே தவிர நோட்டுக்கட்டை சீண்டாது. பணம்னா என்னன்னு தெரியாததாலதான் மற்ற எல்லா ஜீவராசியும் சந்தோஷமா இருக்கு. ‘மானிடராய் பிறப்பது அரிது அரிது’ன்னு எழுதி வெச்சான். மிக உயர்ந்த கடற்கரைக்குப் போய் நடந்துவிட்டு வீடு திரும்புவார்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அமைதியாகவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்பியவர் அப்பர். மனிதன் எதை விரும்புகிறானோ அது அவனுக்கு கிடைப்பதில்லை. இது யார் கொடுத்த சாபமோ? அரைக்கரண்டி சாதம் போதும் என்று அப்பா நினைக்க, ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டுதான் தனக்கு சந்தோஷம் தரும் என்றாள் அம்மா.
உங்க சம்பளம் எவ்வளவு?
முதலிரவில் புருஷனிடம் அவள் பேசின முதல் பேச்சே இந்த கேள்விதான்.
ஏன் உனக்கு தெரியாதா? என் ஜாதகம் கொடுக்கும் போதே சம்பளத்தையும் எழுதிதானே கொடுத்திருந்துது.
ம் ஆறாயிரம்னு போட்ருந்துது. அது நிஜமான சம்பளம் தானா?
ஏன் என்ன சந்தேகம்? ஆறாயிரம் அதிகம்னு தோண்றதா கம்மின்னு தோண்றதா?
இந்த காலத்துல ஆறாயிரம் எந்த மூலைக்கு? உப்பு, புளிக்கு காணாது. பம்பாய்ல எல்லாம் முப்பதாயிரம் நாப்பதாயிரம்னு சம்பளம் வாங்கறா, பம்பாயும் இந்தியால தான இருக்கு? அதெப்படி அங்க மட்டும் இவ்ளோ சம்பளம் வாங்க முடியறது?
அங்க விலைவாசியும் அதிகம். இங்க நாலாயிரத்துல எடம், அழகா குடித்தனம் நடத்தவாம், சந்தோஷம் ரூபா நோட்டுல இல்ல. நம்ம மனசுல இருக்கு.
அப்பொ ஆறாயிரம் மட்டும் எதுக்கு? பேசாம வேலையை விட்டுடுங்களேன். நாம் சந்தோஷமா குடித்தனம் பண்ணலாமே. வீட்டுக்காரன் வந்தா, ‘சந்தோஷம் மனசுல இருக்கு, ரூபா நோட்டுல இல்ல போய்ட்டுவா’ன்னு சொல்லி அனுப்பிடுவோம். மளிகைக் கடைல போய் இதே வசனத்தை சொல்லி சாமான் கேப்போம். இன்னும் காய்கறிக்காரன், பால்காரன் எல்லார்கிட்டயும் இதையே சொல்லுவோம்… முடிஞ்சா ரிஸர்வ் பாங்க் கவர்னர்கிட்டயும் சொல்லிட்டு வருவோம். எதுக்கு செலவு பண்ணி ரூபா நோட்டு அடிக்கணும் அரசாங்கம்…?
கிண்டல் பண்றயா பிருந்தா?
சந்திரசேகரன் அவள் பேச்சிலிருந்த கேலியும், நக்கலும் கண்டு பிரம்மித்தார்.
ஏன் நா சொன்னதுல ஏதாவது தப்பா தெரியறதா? பணம் வேணாம்னா பின்ன என்னன்னு சொல்றது?
நா என்ன பண்ண பிருந்தா? அரசாங்கம் எங்களுக்கு கொடுக்கற சம்பளம் இவ்ளோதானே என்ன செய்ய? ஸ்டேட் கவர்ன்மெண்ட்ல ஒரு கண்காணிப்பாளனுக்கு பிடிப்பு போக இதை விட எங்க கிடைக்கும்…? ஏதோ என் ஆத்ம திருப்திக்கு அப்பப்பொ பத்திரிகைகள்ள கதை, கட்டுரை, கவிதைன்னு எழுதுவேன். அதுல கிடைக்கிற பணம்தான் என் பாக்கெட் செலவுக்காகும்.
கதை எழுதுவேளா?
பிருந்தா கண்கள் மின்ன வியப்போடு கேட்டாள்.எதுல எழுதியிருக்கேள்…?
எல்லா பத்திரிகைலயும் வரும். விகடன், குங்குமம், கல்கி, கலைமகள், அமுதசுரபின்னு எல்லாத்துலயும் வரும்.
என்ன பேர்ல எழுதுவேள்?
ரிஷிங்கற பேர்ல எழுதறேன்.
இதுவரை எவ்ளோ கதை எழுதியிருப்பேள்?
சரியா நினைவில்லை. சுமாரா ஒரு அம்பது, அறுபது எழுதியிருப்பேன்.
ஒரு கதைக்கு எவ்ளோ ரூபா தருவா?
பத்திரிகையைப் பொறுத்தது, பக்கங்களைப் பொறுத்தது. இருநூறுலேர்ந்து நானூறு வரை கிடைக்கும்.
ஒரு நாளைக்கு ஒரு சிறுகதை எழுதுவேளா…?
ஒரு நாளைக்கு ஒரு கதையா…?
சரிதான் சந்திரசேகர் சிரிப்பார்.ஒரு கதை எழுத சில நேரம் பத்து நாள் கூட ஆகும். நேரம் கிடைக்க வேண்டாமா? ஆபீஸ் வேலையே பாதி நேரத்தை தின்னுடுமே. அது சரி பிருந்தா இதென்ன முதலிரவா இல்ல சட்டசபை கேள்வி நேரமா?
உங்களைப்பத்தி தெரிஞ்சுக்கறது தப்பா?
தப்பில்லதான். இன்னும் என்ன தெரிஞ்சுக்கணும் என்னைப்பத்தி?
இப்போதைக்கு இவ்ளோ போதும். நா ஒண்ணு சொன்னா கேக்கணும், கேப்பேளா?
என்ன சொல்லு.
நீங்க சம்பாதிக்கற பணம் நமக்கு நிச்சயம் போதாது. நம்ம குடும்பம் நாளைக்கு பெரிசாகும். இந்த காலத்துல எல்லாமே காஸ்ட்லிதான், கடுகுலேர்ந்து கம்ப்யூட்டர் வரை எல்லாம் காஸ்ட்லி, ரேஷன் அரிசி வாங்கி சாப்ட்டு, வருஷத்துக்கொரு புடவை வாங்கி உடுத்திண்டு, பொறக்கற குழந்தைகளை சாதாரண ஸ்கூல்ல சேர்த்து இங்கிலிஷ் பேசத் தெரியாம வளர்த்து, மாசக் கடைசில இழுபறி வாழ்க்கை நடத்த நா தயாரல்ல. எனக்குன்னு நிறைய கனவு இருக்கு, அழகா ஒரு பொண்ணு, ஒரு பையன். அவங்க ஹைகிளாஸ் ஸ்கூல்ல படிக்கணும். நுனி நாக்கு இங்கிலீஷ் பேசணும். பொண்ணு டாக்டர், பையன் என்ஜீனியராகணும். நாம் அல்ட்ரா மாடர்னா ஒரு பெரிய பங்களால் வாழணும், ஆளுக்கொரு கார் இருக்கணும் நம்ம வீட்டுல.
அரைக்கண் மூடியபடி அவள் சொல்ல, சந்திரசேகர் சிரித்தார்.
கடவுள் மனுஷனுக்கு கொடுத்திருக்கற மிக உயர்ந்த பரிசு எது தெரியுமா?
என்னவாம்…?
கனவும், கற்பனையும் தான். இது ரெண்டும் இல்லாட்டா மனுஷன் விரக்தியிலேயே தவிச்சு பைத்தியமாயிருப்பான். தன்கிட்ட இல்லாததை எல்லாமே இருக்கறாப் போலவும், அடைய முடியாததை எல்லாம் அடைஞ்சுட்டா போலவும் கற்பனை பண்ணிண்டு சந்தோஷப்படற சக்தி மட்டும் அவனுக்கு இல்லாட்டா என்னவாயிருக்கும்?
பிருந்தா அவனை முறைத்தாள்.
ஏன்… ஏன்… நம்மளால இதெல்லாம் முடியாதா?
நா வாங்கற சம்பளத்துல இதெல்லாம் முடியாது.
உங்களை மாதிரி அரசாங்க வேலைல இருந்துக்கிட்டே மற்ற திறமைகளை வளர்த்துண்டு, ஒரு கட்டத்துல வேலையை உதறித் தள்ளிட்டு, தன் திறமையால் கோடீஸ்வரனான எத்தனையோ பேரை என்னால் உதாரணம் சொல்ல முடியும்.
இப்ப எதுக்கு அதெல்லாம்?
இனிமே நீங்க நிறைய கதை எழுதணும். எல்லா பத்திரிகைலயும், தொடர்கதை எழுதணும். உங்க கதை ஒண்ணு சினிமாவா ஆகணும். அதுக்கப்பறம் நீங்க முழுக்க முழுக்க சினிமா படங்களுக்கெல்லாம் கதைவசனம் எழுதுனும். அப்பறம் பாருங்க, நாமளும் பங்களாவும், காரும் வாங்கறோமா இல்லையான்னு?
கதை எழுதறது என் ஆத்மதிருப்திக்காக பிருந்தா…
"இன்னிக்கு பெரிய எழுத்தாளரா இருக்கற யாரும் உங்களை மாதிரி வெட்டி வசனம் பேசிண்டு அலையல,