Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Mazhaye... En Mayilirage!...
En Mazhaye... En Mayilirage!...
En Mazhaye... En Mayilirage!...
Ebook136 pages46 minutes

En Mazhaye... En Mayilirage!...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செந்தில் ஒரு கம்பெனியில் நல்ல வேளையில் இருக்கிறான். அவனுடைய நண்பன் சிவா மும்பை பிராஞ்ச்லேர்ந்து மாற்றலாகி இங்கே வருகிறான். செந்தில், சிவாவை தன் வீட்டில் மேல் மாடியில் தங்க வைக்கிறான். செந்திலின் மனைவி உதயா. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. செந்திலின் வாழ்க்கையில் நடந்தது என்ன? உதயா எங்கே சென்றாள்?
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106168
En Mazhaye... En Mayilirage!...

Read more from R. Sumathi

Related to En Mazhaye... En Mayilirage!...

Related ebooks

Reviews for En Mazhaye... En Mayilirage!...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Mazhaye... En Mayilirage!... - R. Sumathi

    http://www.pustaka.co.in

    என் மழையே... என் மயிலிறகே!...

    En Mazhaye... En Mayilirage!...

    Author:

    ஆர்.சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    செல்போன் சிணுங்கியது.

    கம்ப்யூட்டர் திரையில் கவனத்தைப் பதித்திருந்த செந்தில் இருக்கையில் சாய்ந்தபடி செல்போனை காதிற்கு கொடுத்தான்.

    ஹலோ... டார்லிங் தொடர்பு கொண்டது உதயா என்பதை அறிந்து உற்சாகமாகக் குரல் கொடுத்தான்.

    என்னங்க... சரியா ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வர்றேன்னிங்க... இன்னும் ஆளைக் காணும்?

    ஐந்து மணிக்கெல்லாம் வர்றேன்னு சொன்னேனா? எதுக்கு?

    எதுக்கா? கடவுளே! ஹாஸ்பிடலுக்கு போகணும்னு சொல்லியிருந்தேன் இல்லே!

    ஹாஸ்பிடலுக்கா? ராஜாத்தி... நல்லாதானேயிருந்தே. உன் உடம்புக்கு என்ன? ஜுரமா, தலைவலியா? ஜலதோஷமா?

    பேசாம அமிர்தாஞ்சன் விற்கப்போங்க...

    ஏன் என் சம்பாத்யம் உன் ஒருத்திக்கு போதலையா?

    அடி வாங்கப் போறீங்க

    அடிக்கிற கைதான் அணைக்கும், பரவாயில்லை.

    அறுக்காதீங்க. ரெண்டு பேரும் டாக்டர்கிட்டே போய் செக்கப்பண்ணனும்னு சொன்னேன்ல.

    சரி... சரி... உடனே கிளம்பி வர்றேன்.

    செல்போனை அணைத்து விட்டு சுகமாக இமைகளை மூடி இதுவரை காதலில் ஒலித்த மனைவியின் குரல் இனிமையை தேக்கி வைத்து அனுபவிப்பதைப் போல் ரசித்து அனுபவித்தான்.

    என்னப்பா... பகல் கனவா?

    குரல் கேட்டு திடுக்கிட்டு கண் திறந்தான்.

    மேஜை மேல் கைகளை ஊன்றியபடி கண்ணன் சிரித்தான்.

    சும்மா என வெட்கமாக சிரித்தான் செந்தில்.

    கண்ணன் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

    உன்னைப் பார்த்தா ஆச்சரியமாயிருக்கு. கல்யாணம் ஆகி ஐந்து வருஷம் ஆகப்போகுது. என்னமோ நேத்து தான் காதல் கொண்டவன் மாதிரி பீல் பண்றே?

    கண்ணன் கிண்டல் பண்ண செந்தில் டேபிள் வெயிட்டை உருட்டியவாறே சிரித்தான்.

    எத்தனை வருஷம் ஆனா என்ன? மனசுல காதல் இருந்தா, கடைசி வரை சந்தோஷமாயிருக்கலாம். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் காமாந்தகனுக்கு சொல்லப்பட்டது. உண்மையான காதலர்களுக்கு இல்லை. ஆத்மார்த்தமான தம்பதிகளுக்கு இல்லை.

    உனக்கு இன்னும் குழந்தை பிறக்கலை இல்லை. அதான் இப்படி பேசறே!

    கண்ணன் இப்படி சொன்னதுமே செந்திலின் இதயத்தில் திடீரென மேக மூட்டம் கவிழ்வதைப் போலிருந்தது. குத்திக் காட்டுகிறானோ? என வலித்தது.

    செந்தில், நான் வந்ததே ஒரு முக்கியமான குட் நியூஸ் சொல்லத்தான். அதை விட்டுட்டு எதை எதையோ பேசிக்கிட்டிருக்கேன்.

    குட் நியூஸா? சீக்கிரம் சொல்லு.

    மும்பை பிராஞ்ச்லேர்ந்து மாற்றலாகி நம்ம ஆபீசுக்கு ஒருத்தர் வர்றார்

    அப்படியா?

    வர்றது யாருன்னு தெரிஞ்சா நீ சந்தோஷத்தோட உச்சிக்கே போய்டுவே! யாருன்னு சொல்லட்டா, உள் பிரண்ட் சிவா.

    குபீரென சந்தோஷ அருவியில் மாட்டிக் கொண்டான் செந்தில்.

    ஏய்... என்ன நிஜமாவா சொல்றே?

    ஆமாம்ப்பா, நிஜமாத்தான் சொல்றேன்.

    அய்யோ... எவ்வளவு சந்தோஷமாயிருக்கு தெரியுமா?

    செந்திலின் கண்களில் சந்தோஷ நட்சத்திரங்கள் மின்னின.

    ம்... இனிமே நீ எங்களை கண்டுக்க மாட்டே! சிவா கூடவே இருப்பே! சரி, உனக்கு இப்படி ஒரு குட் நியூஸ் சொல்லியிருக்கேனே, எனக்கு என்ன தரப்போறே?

    கட்டிப்புடிச்சு ஒரு முத்தம் தரட்டா. எனக்கு இருக்கற சந்தோஷத்துக்கு இதான் தரணும் போலிருக்கு.

    அதையெல்லாம் வீட்டுக்கு போய் உன் ஆருயிர் மனைவிக்கு கொடு. இப்போ என் கூட கேண்டீனுக்கு வந்து வயிறு நிறைய வாங்கிக் கொடு.

    கமான் என எழுந்தான் செந்தில். அவன் மனம் சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருந்தது. கண்ணனின் தோளில் ஆசையாக கையைப் போட்டு கொண்டான்.

    இருவரும் அலுவலகத்தை ஒட்டியிருந்த கேண்டீனுக்குள் நுழைந்தனர்.

    என்ன வேணுமோ நீயே ஆர்டர் பண்ணு சொல்லிவிட்டு தியானம் செய்பவனைப் போல் இரு கண்களையும் மூடிக் கொண்டு அமர்ந்திருந்தான் செந்தில்.

    கண்ணன் மெனு கார்டை எடுத்து விழிகளை அதில் மேய விட்டான். செந்திலின் மூடிய கண்ணுக்குள் சிவா சிரித்தான்.

    பழைய நினைவுகள் ஆட்டோகிராபாக மனதில் எழுந்தன.

    அந்த நினைவுகளிலேயே மூழ்கி திளைக்கத் தொடங்கியவனை கண்ணன் விடவில்லை.

    பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருந்தான்.

    சிவாவைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தான்.

    சிவா என்னோட காலேஜ்ல என்கூட ஒண்ணா படிச்சவன். ரெண்டு பேரும் ஒரே ரூம், ஒரே வகுப்பு. எப்பவும் பிரியாமலேயே இருப்போம். என்னோட பெஸ்ட் பிரண்ட். என் மேல அவனுக்கு அவ்வளவு அன்பு. ஒரே ரூம்ல தங்கி ஒரே காலஜ்ல, ஒரே வகுப்புல படிச்சது மட்டுமல்ல, படிப்பு முடிஞ்சதும் ரெண்டு பேரும் ஒண்ணாவே இந்த கம்பெனிக்கு அப்ளை பண்ணினோம். ரெண்டு பேருமே இன்டர்வ்யூவ்ல செலக்ட் ஆனோம். ஆனா... எனக்கு சென்னை பிராஞ்சுலேயும், அவனுக்கு மும்பை பிராஞ்சுலேயும் வேலைக்கு ஆர்டர் வந்திட்டு... ப்ச்... பிரிஞ்சுட்டோம். அவனும் இந்த பிராஞ்சுக்கு வர ரொம்ப நாளா ட்ரைப் பண்ணினான். இப்பத்தான் கிடைச்சிருக்கு.

    சிவாவைப் பற்றி பேசிக்கொண்டேயிருந்ததில் மனைவி விரைவில் வரச்சொன்னதையே மறந்து போனான் செந்தில்.

    ஆர்டர் செய்த அயிட்டங்கள் வந்தன.

    கண்ணன் ஒரு வெட்டு வெட்டினான்.

    சிவாவைப் பற்றியே பேசிக் கொண்டு சாப்பிட்ட செந்திலுக்கு திடீரென உதயா போன் செய்ததும், வரச்சொன்னதும் ஞாபகம் வரவே கையை உதறிக் கொண்டு எழுந்தான்.

    அய்யய்யோ...

    என்னப்பா ஆச்சு? பணம் இல்லையா? பாவி உன்னை நம்பி சாப்பிட வந்தேன் பாரு. என்னை மாவாட்ட வச்சிடுவே போலிருக்கு...

    கண்ணன் அவஸ்தையாக தவிக்க,

    அட... நீ ஒண்ணப்பா, என் ஒய்ப் ஐந்து மணிக்கெல்லாம் வரச் சொல்லி போன் பண்ணினா. அப்படியே மறந்து போய்ட்டேன். என்னை ஒரு வழியாக்கிடுவா, நான் கிளம்பறேன்.

    இப்படி அரை குறையா விட்டுட்டு போறே!

    நிதானமா நீ சாப்பிட்டுட்டு கிளம்பு, நான் போறேன்.

    பில்லை செட்டில் பண்ணிட்டு போ

    செல்லமாக அவனுடைய தலையில் தட்டி விட்டு நடந்தான். பில்லுக்கான பணத்தை கட்டி விட்டு அவசரமாக தன் யமஹாவில் பறந்தான்.

    மனம் மட்டும் ஸாரி டியர், ஸாரி டியர் என புலம்பிக் கொண்டிருந்தது.

    2

    உதயா தோட்டத்தில் இங்கும் அங்கும் நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

    நிமிடத்திற்கு ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1