Avalukku Yaar Vendum?
By R. Sumathi
()
About this ebook
Read more from R. Sumathi
Idhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsGandharva Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKai Veesum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsSillunu Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Nenjukkul Ethanai Kanavugal... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookkal Uthiruma? Rating: 0 out of 5 stars0 ratingsArputha Aani Muthey! Rating: 0 out of 5 stars0 ratingsOorengum Poo Vasanai Rating: 0 out of 5 stars0 ratingsEnakkoru Kaadhali Irukkindral Rating: 0 out of 5 stars0 ratingsThaazhampoove Kannurangu! Rating: 0 out of 5 stars0 ratingsEn Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsKovil Purakkal! Rating: 0 out of 5 stars0 ratingsPoomagal Oorvalam Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnaiyalum Ejamaney...! Rating: 0 out of 5 stars0 ratingsKannethirey Oru Kanavulagam! Rating: 0 out of 5 stars0 ratingsKanda Varasollunga Rating: 0 out of 5 stars0 ratingsSila Nyabagam Thaalattum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Varuvaan Nayagan! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Avalukku Yaar Vendum?
Related ebooks
Nizhalattam Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsVandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsSollil Varuvathu Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malar Rating: 5 out of 5 stars5/5மனம் விரும்புதே உன்னை... Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPaisa Nagarathu Gopurangal Rating: 5 out of 5 stars5/5Anbaana Anuvirkku Rating: 0 out of 5 stars0 ratingsUnarvugalin Holi Rating: 0 out of 5 stars0 ratingsVaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Lakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Vaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsEndhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Kaathalaal Thavikkiren Rating: 5 out of 5 stars5/5காதலால் தவிக்கிறேன்! Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Manmatha Veshangal Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Naane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kandu Uyirthean Rating: 4 out of 5 stars4/5Irappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Avalukku Yaar Vendum?
0 ratings0 reviews
Book preview
Avalukku Yaar Vendum? - R. Sumathi
http://www.pustaka.co.in
அவளுக்கு யார் வேண்டும்?
Avalukku Yaar Vendum?
Author:
ஆர்.சுமதி
R. Sumathi
For more books
http://www.pustaka.co.in/home/author/r-sumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
வெகு நேரமாக அழைப்பு மணி ஒலித்துக் கொண்டேயிருந்தது. பின்புறம் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்த மதுராணி ‘என்ன... அதுக்குள்ள கணேஷ் வந்துட்டாரா?’என நினைத்தவாறே பின்பக்க கதவை பார்த்துவிட்டு உள்ளே வந்தாள்.
‘இன்னைக்கு ஆபீஸ்ல ஏதோ மீட்டிங் இருக்கு வர லேட்டாகும்னு போன் பண்ணி சொன்னாரே. வேற யாராக இருக்கும்?’- யோசித்தவாறே வந்து கதவைத்திறந்தாள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒரு சேர தாக்க திகைத்து விழிவிரித்து வார்த்தைகள் எதுவும் வாயிலிருந்து வராமல் நின்றாள். சுசீலா முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பைக் காட்டாமல் அவளை ஏற இறங்க ஒருதடவை அலட்சியம் சுமந்த பார்வையில் தடவி,
என்ன... உள்ளே வான்னு கூப்பிட மாட்டியா?
என்றாள் சற்றே அதிகாரமாக.
அந்த கணீரென்ற அதிகாரமான குரலில் திடுக்கிட்டு சுயநினைவிற்கு வந்த மதுராணிதடுமாற்றமான நாக்குடன் வா... வாங்க அத்தை. உள்ளே வாங்க... ப்ளீஸ்...
என நகர்ந்து வழிவிட்டு மகாராணியை வரவேற்கும் பாவனையில் உடலை வளைத்து கைகாட்டினாள்.
ம்...ம்...
என்றபடி மிகவும் அமர்த்தலாக உள்ளே வந்தவள் கண்களை மட்டும் சுழற்றி வீட்டைப் பார்த்தாள்.
ஹாலில் நடுநாயகமாக பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்தது அவளுடைய புகைப்படம். இளம் வயது புகைப்படம். கையில் ஆறுமாதக்குழந்தையான கணேஷை உயர்த்திப் பிடித்து சிரித்தபடி.
வாயை பிளந்து சிரிக்கும் கணேஷ். நிறைந்து சிரிக்கும் தாய்மை பொங்கும் அழகுடன் சுசீலா. இளமையும் அழகும் தாய்மை உணர்வை அதிகப்படுத்தி காட்டும் புகைப்படம். அவள் விரும்பும் புகைப்படம். ஒரு நிமிடம் உள்ளே வந்து நுழைந்தபோது தானே மனதில் பூசிக் கொண்டே அதிகாரம், தெனாவெட்டு, அலட்சியம் எல்லாம் நிமிடத்தில் அந்த புகைப்படத்தால் கரைந்து போனவளாக ஆடிப்போனாள்.
எங்கே விழுந்து வைத்து மருமகளின் எதிரே கேவலத்திற்கு ஆளாகி விடுவோமோ என பயந்தவளாக அங்கிருந்த சோபாவில் சட்டென்று உட்கார்ந்து கொண்டாள்.
தன் எதிரே வந்து இன்னும் நம்பமுடியாமல் பார்த்து கொண்டிருக்கும் மருமகளை ஏறிட்டாள். ‘இவளெதிரே என் உணர்வுகளைக் காட்டிக் கொள்ளக்கூடாது. நான் உணர்ச்சி வசப்பட்டால் அது என்பலவீனத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். கடைசியில் இவள் நம்காலில் தானே வந்து விழுந்தாள் என இளக்காரமாக எண்ணிவிடுவாள். என்ன ஆனாலும் மாமியார் என்ற தோரணையை விட்டுக்கொடுக்கக்கூடாது!’
என்ன... பார்த்துக்கிட்டே நிக்கறே?
அதே அதிகாரம் வெளிப்பட வேண்டுமே என்ற பதற்றத்துடனே கேட்டாள். அவளுடைய அந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் சட்டென்று அவளுடைய காலில் விழுந்தாள் மதுராணி.
என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை
இன்னும் நெகிழ்ந்து உடைந்து சிதறிவிட்டாள் சுசீலா. முதலில் புகைப்படம். இப்பொழுது நமஸ்காரம்.
ஐய்யோ... அவளுடைய மாமியார் தோரணை தாக்குப்பிடிக்காது போலிருக்கிறதே.
ம்... ம்... நல்லாயிரு. எழுந்திரு!
குரலில் கொஞ்சமும் இளகும் தன்மையை காட்டிக் கொள்ளாமல் ஆசிர்வதித்தாள்.
மதுராணி சிறு குழந்தையைப் போல் மாமியாரின் காலடியில் அமர்ந்து கொண்டாள். மாமியாரின்கைகளைவாஞ்சையுடன்பற்றிக் கொண்டாள்.
அத்தை... அத்தை... நான் சத்தியமா எதிர்ப்பார்க்கலை நீங்க வருவீங்கன்னு. நீங்க மனசு மாறி வந்தது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? எனக்கு எப்படி... என்ன சொல்றதுன்னே தெரியலை. அவருக்கு... அவருக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவார். தினமும் உங்களைப்பத்தித்தான் பேசிக்கிட்டிருப்பார். அவர் மனசுல நீங்க பக்கத்துல இல்லைன்னு எவ்வளவு வருத்தம்? நீங்க வந்துட்டீங்க. அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். நான் உடனே போன் பண்ணி சொல்றேன்
என எழுந்தவளை குரலால் நிறுத்தினாள்.
என்ன அவசரம்? அப்பறம் சொல்லிக்கலாம். முதலில் வந்தவளை கவனிக்கணும்னு உனக்கு இல்லை. போ... போய் சூடா காபி போட்டு எடுத்துட்டு வா...
ஸாரி அத்தை... நீங்க வந்த சந்தோஷத்துல எனக்கு கையும் ஓடலை. காலும் ஓடலை. இதோ ஒரு நிமிஷத்துல வர்றேன்.
அவள் சிறுகுழந்தையைப் போல் துள்ளிக் கொண்டு அடுக்களையை நோக்கி ஓட தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் சுசீலா.
ஓடாது! ஓடாது! கையும் ஓடாது! காலும் ஓடாது! அதான் வந்துட்டேன்ல இனிமே எல்லாம் ஓடும்.
அடுத்த சில நிமிடங்களில் காபியோடு வந்தாள் மதுராணி.
அத்தை. ஷுகர் கொஞ்சமாத்தான் போட்டிருக்கேன். உங்களுக்கு ஷுகர் இருக்குமோன்னு சந்தேகமாயிருந்தது. அதனால கொஞ்சம்தான் போட்டேன்
"நல்லாயிருக்கே உன் கதை. என்னை என்ன வியாதிக்காரின்னு நினைச்சியா? எனக்கு ஷுகர், பி.பி. எதுவும் கிடையாது.
போ... போய் ரெண்டு ஸ்பூன் கூட போட்டு கலக்கி எடுத்துட்டு வா..."- அதிகாரம் கொஞ்சமும் குறையாமல் சொன்னாள்.
சரி அத்தை
மறுபடி உள்ளே ஓடி சர்க்கரையை அதிகப்படுத்தி கொண்டு வந்து கொடுத்தள்.
ரசித்துக் குடிக்கும் மாமியாரை ஆசையாகப் பார்த்தபடி சொன்னாள்.
அத்தை... நான் அவருக்கு போன் பண்ணிட்டு வர்றேன்
என்னநீ? நான் என்னவிருந்தாளியா. போன்பண்ணி சொல்ல இப்படி பறக்கறே, வரட்டுமே நிதானமா, நான் எங்க போயிடப்போறேன்.
அத்தை இப்படி சொன்னதும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள் மதுராணி. இந்த சந்தோஷமான செய்தியை உடனே கணவரிடம் சொல்லாவிட்டால் அவளுடைய தலை வெடித்துவிடும் போலானது.
மாமியார் மகனுக்கு சொல்ல வேண்டாம் என்கிறாள், மகனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று நினைக்கிறாள் போலிருக்கிறது. இருக்கட்டும். இன்ப அதிர்ச்சியாகயிருக்கட்டும். இப்பொழுது இவளுக்கும் உள்ளுக்குள் பதற்றம் நீங்கியது. அவனுக்கு ஆச்சரியம் தரவேண்டும். சொல்லக்கூடாது இரவு வந்து அம்மாவைப் பார்த்து இன்ப அதிர்ச்சியடையட்டும் என அமைதியானாள்.
மாமியாரிடம் இரவுக்கு என்ன சமைக்கட்டும் என்று கேட்டாள்.
எனக்கு இதை சாப்பிடனும் அதை சாப்பிடனும் அப்படி இப்படின்னு எதுவும் இல்லை. எதைப் போட்டாலும் என் வயிறு செரிக்கும் என்னவேணா சமை
மாமியாரின் பதில் மதுராணிக்கு சிரிப்பை வரவழைத்தது. மாமியார் தன்னை இளமையாகக் காட்டிக் கொள்ள முனைவதாகத் தோன்றியது!
கிழவி என்று நினைத்து என்னை அலட்சியப்படுத்தாதே. நான் ரொம்ப இளமையானவள் என உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வார்த்தையும் இருப்பதாகத் தோன்றியது. அதிகாரம் மாறாத அவளுடைய குரல் ஏனோ அந்த வீட்டிற்கு திடீரென ஒரு கம்பீரத்தைக் கொடுத்து விட்டதைப் போலிருந்தது.
இரவுக்கு புலாவ் செய்து வெங்காய பச்சடி செய்தாள். சொன்னதைப் போலவே மாமியார் நன்றாகவே சாப்பிட்டாள். சாப்பிட்ட கையோடு படுக்கைக்கு சென்று விட்டாள்.
கணேஷ் வந்த போது இரவு பத்தரை இருக்கும். மிகவும் களைத்துப் போயிருந்தான். கதவைத்திறந்தவள் மிகவும் பிரகாசத்தை முகத்தில் காட்டவே அவனுடைய களைப்பு பறந்து போனது.
ஹேய்...என்ன ரொம்ப சந்தோஷமாயிருக்கே? என்ன விஷயம்?
அவன் அவளுடைய முகத்தைப் படித்தவனாக கேட்க அவனுடைய தோளில் கைப்போட்டுக் கொண்டாள்?
இருக்கே. ரொம்ப... ரொம்ப சந்தோஷமான விஷயம்
என்னமோ ஸ்பெஷலா சமைச்சிருக்கே? சரியா? வாசனை மூக்கைத்துளைக்குதே.
வாங்க... காட்டறேன்
ரொம்ப பசியா வந்திருக்கேன். சீக்கிரம் போடு...
"முதல்ல பெட்ரூமுக்கு