Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sila Nyabagam Thaalattum
Sila Nyabagam Thaalattum
Sila Nyabagam Thaalattum
Ebook110 pages27 minutes

Sila Nyabagam Thaalattum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேவந்தியின் அத்தை மகன் வித்யாதரனுக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டுவிட்டது. திருமணத்திற்காக இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் தயாராகும் போது, எதிர்பாராமல் தேவந்திக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிடுகிறது. அந்த பிரச்சனை அவளை அவளது வாழ்க்கையில் என்ன முடிவை எடுக்க வைக்கிறது என்பதை அறிய இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106165
Sila Nyabagam Thaalattum

Read more from R. Sumathi

Related authors

Related to Sila Nyabagam Thaalattum

Related ebooks

Reviews for Sila Nyabagam Thaalattum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sila Nyabagam Thaalattum - R. Sumathi

    http://www.pustaka.co.in

    சில ஞாபகம் தாலாட்டும்

    Sila Nyabagam Thaalattum

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    தேவந்தியின் மடி நிறைய அவளுடைய கல்யாண பத்திரிக்கைகளின் கட்டு இருந்தது. அவளுடைய வெண்டை பிஞ்சு விரல்கள் கட்டை அவிழ்த்து மேலிருந்த பத்திரிக்கையை எடுத்தன.

    வழவழப்பான அந்த பத்திரிக்கையின் மேனியை அவளுடைய விரல்கள் ஆசையுடன் தடவின. உறையின் மேல் தங்க வர்ணத்தில் குத்துவிளக்கு நின்றிருந்தது. அதற்கு அருகே மணமகன் : வித்யாதரன் எம்.எஸ்.ஸி. மணமகள் : தேவந்தி எம்.ஏ.என்று இருந்தது.

    அந்த பெயர்களை பார்வை தொட்டதுமே உடல் முழுவதும் மின்சாரம் பரவியது, மெல்லிய சிலிர்ப்பு இதமான தென்றலைப்போல் மேனியை தழுவியது. சுகமான துடிப்பு ஒன்று இதயத்தின் மையத்தில் உண்டானது.

    விழிகளை மூடி ஒருகணம் அந்த சுகத்தை அனுபவித்தாள்.

    அவளுடைய கைகள் மடிமீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பத்திரிகை அடுக்கை ஆசையுடன் கட்டிக்கொண்டன. அப்படிக் கட்டிக் கொண்ட போது உண்டான சுகம் வித்யாதரனையே கட்டித் தழுவியதைப் போலிருந்தது. பத்திரிகை வாசனை மயக்கத்தைக் கொடுத்தது.

    வித்யாதரன் என்ற பெயரில் இதழ்களைக் குவித்து முத்தமிட்டாள் தேவந்தி.

    வித்யாதரன்!

    நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுடைய இணையாக அறிமுகப்படுத்தப்பட்டவன்.

    மீராவிடம் கண்ணன் சிலையைக் காட்டி'இவன்தான் உன் கணவன்'என்று தாய் சொன்னதைப் போல்...

    வித்யாதரனை கண்ணனாக இவளிடம் காட்டினர். கணவனாக சுட்டினர்.

    உருவம் வளர வளர உள்ளமும் வித்யாதரனை சுமந்துக் கொண்டே வளர்ந்தது. பருவம் வந்ததும் பாசம் வந்தது. நேரம் வந்த போது நேசமாக மாறியது. காதலாகி கசிந்துருகியது.

    ஒளிந்து மறைந்து காதல் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. காரணம் வித்யாதரன் அவளுடைய அத்தை மகன். சொந்த பந்தமெல்லாம் அவர்களை தம்பதிகளாகப் பார்த்தது. அக்கம் பக்கமெல்லாம் அவர்களை அன்றில் பறவைகளாகப் பார்த்தது. கல்லூரி தோழர்களெல்லாம் காதலர்களாகப் பார்த்தனர்.

    அவர்களுடைய காதல் கண்ணதாசனின் கவரிகளைப் போல் ஆழமுடையதாக இருந்தது.

    பாரதிதாசனின் பாடல் வரிகளைப் போல் துடிப்பு நிறைந்ததாக இருந்தது.

    இருவரும் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் படித்தனர். பாடம் வேறாக இருந்தாலும் பயிலும் இடம் ஒன்றாக இருந்தது.

    கல்விக்காலம் முடிந்து கல்யாணக் காலம் வந்தது. காளைக்கு வேலை முக்கியமல்லவா? காத்திருந்தான். கம்பெனி ஒன்றில் மேலாளர் உத்யோகம் தேடிவந்தது. நாடி வந்தது வேலை மட்டுமல்ல. கல்யாண வேளையும்தான்.

    இதோ-

    முறையாய் முகூர்த்தம் எழுதி விவாகப்பத்திரிகைகள் வீடு தேடி வந்துவிட்டன.

    திருமணத்திற்கு இருப்பது இன்னும் இருபதே நாட்கள் தான். இரு மனங்களும் ஏற்கனவே இணைந்து விட்டாலும் தேனமுது இன்பம் துய்க்க திருமணநாளுக்காக தவித்துக் கொண்டிருந்தன.

    சிறு குறை என்று எவருக்கும் இல்லை. எல்லோருக்கும் மகிழ்ச்சி. இருவீட்டாருக்கும் உற்சாகம். இரு குடும்பத்திற்கும் இதுதான் முதல் விசேஷம். அதனால் குதூகலம் குத்தகை எடுத்திருந்தது அவர்களை.

    ஆசைக் காதலனை எண்ணிக் கொண்டு அவள் பொன்னூஞ்சல் ஆடிக் கொண்டிருந்த போது செவியில் விழுந்த எண்ணங்களை சிதைத்தது கவிதாவின் குரல்.

    அக்கா...

    திடுக்கிட்டு திரும்பினாள் தேவந்தி.

    கவிதா மோசமாக நின்றிருந்தாள். அவளுடைய முகத்தைப் பார்த்த தேவந்திக்கு நெஞ்சை பிசைந்தது.

    கவிதாவின் முகத்தில் வேதனை படர்ந்திருந்தது. இளம் பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். எப்பொழுதும் மடிப்பு கலையாமல் அவள் அணிந்திருக்கும் உடை இன்றைக்கு கசங்கியிருந்தது. மையிட்டெழுதும் விழிகள் வெறுமையாக இருந்தது.

    தேவந்தியின் ஒரே தங்கை கவிதா. கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு பயிலுபவள். மிகவும் குறும்புக்காரி. எப்பொழுது என்ன வம்பு கிடைக்கும் என அலைபவள். வம்பு கிடைத்தால் போதும் எதிராளியை கஞ்சி காய்த்து விடுவாள்.

    ஆனால் இப்பொழுது அவள் முகத்தில் எப்பொழுதும் இருக்கும் பொலிவு இல்லை. குதூகலம் இல்லை. குறும்பு இல்லை. அரும்பு பற்களைக் காட்டி சிரிக்கும் சிரிப்பு இல்லை.

    ஏன்? என்ன ஆயிற்று இவ்ளுக்கு? ஏன் இப்படி பழுதடைந்த ஓவியம் போலிருக்கிறாள். களை இழந்த கண்களோடு இருக்கிறாள். சிலை இழந்த கோவிலைப் போல் இலையிழந்த மரத்தினைப் போல் நிற்கிறாள்?

    மடியில் இருந்த பத்திரிகைகளை கீழே எடுத்து வைத்துவிட்டு எழுந்து தங்கையின் அருகே வந்தாள். அவளுடைய தோளை மெல்லத் தொட்டாள். கலக்கமாகக் கேட்டாள்.

    கவிதா... ஏன் ஒரு மாதிரியா இருக்கே? உடம்பு சரியில்லையா?

    இல்லை நல்லாத்தான் இருக்கேன்! அவளுடைய குரலில் ஒரு வித அமைதி இருந்தது.

    பின்னே ஏன் ஒரு மாதிரியா இருக்கே? அம்மா ஏதாவது திட்டினாங்களா?

    ம்... என்னை எதுக்காக திட்டப் போறாங்க?

    "பின்னே ஏன் இப்படி இருக்கே? பரீட்சை ரிசல்ட் நல்லபடியா

    Enjoying the preview?
    Page 1 of 1