Ithu Thaai Madiye..!
By R. Sumathi
()
About this ebook
அரவிந்த் ரீட்டா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்த பெண் குழந்தைக்கு என்ன ஆனது? அதை அறிந்த தாய் உள்ளத்தின் நிலைமையையும் தாயின் மனநிலையை மாற்ற அரவிந்த் செய்யும் நாடகத்தை வாசிப்போம். பிரச்சனையை தீர்க்கும் திறனை இந்நூல் மூலம் வளர்த்துக்கொள்வோம்.
Read more from R. Sumathi
En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Ethanai Kanavugal... Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsGandharva Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 0 out of 5 stars0 ratingsKai Veesum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsSillunu Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsEnakkoru Kaadhali Irukkindral Rating: 0 out of 5 stars0 ratingsEn Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Ennai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsArputha Aani Muthey! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookkal Uthiruma? Rating: 0 out of 5 stars0 ratingsKovil Purakkal! Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Deivam Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage! Rating: 0 out of 5 stars0 ratingsThaamarai Thottil! Rating: 0 out of 5 stars0 ratingsVannakili Seitha Maayam Rating: 0 out of 5 stars0 ratingsOorengum Poo Vasanai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Parikka Ithanai Naala Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solli Vilayadu... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ithu Thaai Madiye..!
Related ebooks
Uruguthe Manam Rating: 0 out of 5 stars0 ratingsThaai Paravai Rating: 5 out of 5 stars5/5Nesam Marakkavillai Nenjam! Rating: 5 out of 5 stars5/5சீதைக்கு ராமன் சித்தப்பா Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Vanavasam Rating: 0 out of 5 stars0 ratingsKathal Rajjiyam Unathu Rating: 0 out of 5 stars0 ratingsNitham Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsTheertha Karaiyiniley Rating: 0 out of 5 stars0 ratingsKakitha Roja Rating: 5 out of 5 stars5/5En Uyire... Nee Enge! Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsRadha Madhavam Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Maya Maan Rating: 0 out of 5 stars0 ratingsParasuraman Rating: 5 out of 5 stars5/5Kaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsPottu Vacha Vatta Nila Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikum Nilavu Varum! Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Thurogam Rating: 0 out of 5 stars0 ratingsNizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Mangala Isai Rating: 3 out of 5 stars3/5En Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Valaikku Thappiya Meen Rating: 0 out of 5 stars0 ratingsNavarathinam Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsPore Megangal! Rating: 0 out of 5 stars0 ratingsSugamaana Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsNaaloru Poo Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Karaiyum Neram Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ithu Thaai Madiye..!
0 ratings0 reviews
Book preview
Ithu Thaai Madiye..! - R. Sumathi
https://www.pustaka.co.in
இது தாய் மடியே...!
Ithu Thaai Madiye..!
Author:
ஆர். சுமதி
R. Sumathi
For more books
https://www.pustaka.co.in/home/author/r-sumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
காபியோடு வந்த கஸ்துாரி கண்ணாடி எதிரே நின்றபடி தலைசீவிக் கொண்டிருந்த அரவிந்தைப் பார்த்தாள். சினிமா பாடலொன்றை ஹம்மிங் செய்தபடி தலைசீவிக் கொண்டிருந்தான்.
ஆச்சரியமாக இருந்தது!
என் மகனா இவ்வளவு குஷியாக ஹம்மிங் செய்கிறான்.
எவ்வளவு நாட்களுக்குப் பிறகு அவனுக்குள் இந்த மாற்றம்.
இறுகிப்போன மனமும், சோர்வு படர்ந்த முகமும், கவலையும் சோகமும் தெரியும் கண்களும்தானே அவனுக்கு சொந்தம்.
அவனா இன்றைக்கு இத்தனை மலர்ச்சியாக இருக்கிறான் அலுவலகத்தில் இன்க்ரீமென்ட் அதிகமாகக் கொடுத்து விட்டார்களா?
விரக்தியான மனநிலை அவனிடமிருந்து விலகிவிட்டதா? அவனுக்குள்ளும் மகிழ்ச்சி அரும்பத் தொடங்கி விட்டதா? கடவுளே... அப்படி ஒரு மாற்றத்திற்காகத் தானே உன்னை அனுதினமும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.
அரவிந்த் காபி எடுத்துக்க.
அவள் குரல் கொடுத்தபோது அவள் திரும்பினான் அவளுடைய ஆச்சரியமும் வியப்பும் அதிகமானது.
புத்தம் புதிய பேண்ட், ஷர்ட். கருப்பு நிற பேண்ட், ஆகாய நிறத்தில் மெல்லிய கோடுபோட்ட சட்டை கருப்பு நிற டை.
அழகான கம்பீரமானத் தோற்றம். அவன் ஒருநாளும் அலுவலகத்திற்கு இது போன்று சென்றதில்லை.
இன்றைக்கு என்ன விசேஷமாக?
பாட்டெல்லாம் கூட ஹம்மிங் செய்து கொண்டிருக்கிறான். உண்மையில் அலுவலகத்தில் இன்க்ரீமென்ட் ஏதாவது கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது. மறுபடி அதையே நினைத்தாள்,
ச்சே! என்ன மனுஷி நான்? பணத்திற்காக அலைபாய்பவனா என் மகன். பணத்திற்கான உபயோகம் இருந்தால்தானே அது வரும்போது மகிழ்ச்சி வரும்?
அவன் பணத்தை உபயோகிக்க அவனுக்கென்று யார் இருக்கிறார்கள்?
என்னைத் தவிர?
நானும் போய்விட்டால்? நினைக்கவே நெஞ்சம் கிடுகிடுவென நடுங்கியது.
எனக்குப் பிறகு அவனுக்கென்று யார்?
அம்மா கொடுத்த காபியை பருகிய அரவிந்தை கஸ்தூரி பாசம் பொங்கப் பார்த்தாள்.
அரவிந்த் நல்ல மூடில் இருக்கிறான். கேட்கலாமா?
மனதில் நப்பாசை பொங்கியது. கூடவே பயமும் உற்பத்தியானது. வேண்டாம்! பேச்சை வேறு திசையில் ஆரம்பித்தாள்.
அரவிந்த்! இன்னைக்கு ஆபீஸ்ல ஏதாவது விசேஷமா டையெல்லாம் கட்டிக்கிட்டுப் போறே?
முகத்தில் பொங்கும் சிரிப்புடன் கேட்டாள் கஸ்தூரி.
என்னோட பிரண்ட் சுதாகர் இருக்கான்ல, அவனுக்கு இன்னைக்கு கல்யாணம். வயசு முப்பத்தஞ்சு ஆயிடுச்சு. லேட் மேரேஜ். கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்தான். எப்படியோ கல்யானம் முடிவாயிட்டு
எவ்வளவுதான் வயசானா என்ன? வாழ்க்கைக்கு துணை வேணுமே, துணையில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
குடித்துக்கொண்டிருந்த காபியை அரவிந்த் பாதியிலேயே வைத்துவிட்டு விருட்டென்று அறையைவிட்டு வெளியேறினான். அம்மா அவனுடைய முதுகிற்குப் பின்னால் பெருமூச்சு விட்டாள்.
அம்மா தொடர்ந்து எதைப் பேசுவாள் என்று புரிந்ததைப் போல் இருந்தது அவனுடைய நடவடிக்கை.
அரவிந்த்... ஏன் இப்படி ஓடுகிறாய் நான் எதையாவது ஆரம்பித்து விடுவேனென்றா? என்றைக்கு நீ மனம் மாறப் போகிறாய்? தாய் உள்ளம் தவித்தது.
***
கல்யாணப் பெண்ணைப் போலவே மண்டபமும் சர்வ அலங்காரத்துடன் மிளிர்ந்தது.
அரவிந்த் மண்டபத்தை அடைந்த பொழுது வாசலிலேயே அவனுக்காக மாதவன் காத்திருந்தான்.
வாடா...
என கையைப் பற்றிக் கொண்டான்.
என்ன வாசல்லேயே நிக்கறே?
உனக்காகத்தான்.
இருவரும் இணைத்து உள்ளே சென்றனர். வரவேற்பில் அலுவலக பெண்கள் நின்று வரவேற்றனர். அவர்களில் -
மத்தியில் நின்றிருந்த பூமிகா, பளிச்சென மற்றவர்களை விட கண்களில் பதித்தாள்.
கிளிப்பச்சை நிற பட்டுப்புடவை. அரக்கு நிற பார்டர். இறுக்கமாக பின்னி அடர்த்தியாக வைத்த மல்லிகைச் சரம். காதில் முத்து ஜிமிக்கி கழுத்தில் முத்து நெக்லஸ். பட்டாம்பூச்சி கண்கள், அனைவரையும் தட்டாமாலை சுழல வைக்கும். அரும்பிய மொட்டாய் முக்கு, விரும்ப வைக்கும் அனைவரையும் ஆரஞ்சு பழச்சுளையாய் இதழ்கள், இதயத்தை ஜூஸாக பிழிய வைக்கும்.
பூமிகாவைப் பாரேன். எத்தனை அழகாயிருக்கா கல்யாணப் பொண்ணா இவளை உட்கார வைக்கலாம்.
மாதவன் கிசுகிசுத்தான்.
உட்கார வையேன்
அரவிந்த் பூமிகாவைப் பார்த்துவிட்டு சொன்னான்.
ஆபீஸ்லயே இவ்வளவு அழகழகா பொண்ணுங்க இருக்கும்போது சுதாகர் இப்படி இத்தனை வருஷம் அலைந்து எங்கிருந்தோ பொண்ணைப் பிடிச்சிருக்கான் பாரு.
மாதவன் நொந்துக் கொண்டான்.
ஏன்... நீதான் ஆபீஸ்லேயே பிடியேன்.
எங்கிருந்து பிடிக்கிறது. எனக்குத்தான் கல்யாணம் ஆயிட்டே."
அதனால என்ன சின்ன வீடா செட்டப் பண்ணிக்க.
ஏன் கைகால் ஒழுங்கா இருக்கறது பிடிக்கலையா நல்ல காலத்திலேயே என் பொண்டாட்டி ராட்சசி. எனக்கு - அட்வைஸ் பண்றியா? நீ இப்படி ஒத்தையா எத்தனைக் காலத்துக்கு சுத்துவே. நீ ட்ரைப் பண்ணினா அதுல ஒரு நியாயம் இருக்கு.
சட்டென்று அரவிந்தின் முகம் மாறியது.
மாதவன் தன் கலகலப்பான பேச்சை தொடர இடம் கொடுக்காமல் அரவிந்த் நகர்த்தான்.
ஹலோ அரவிந்த் சார்... வெல்கம்
பூமிகா அரவிந்த்தை நோக்கி சந்தனத்தை நீட்டினாள்.
மெல்லிய புன்சிரிப்பிற்கு மாறி சந்தனத்தை தொட்டுக் கொண்டான்.
அரவிந்த் சார்... என்ன ஒரே அசத்தலாயிருக்கிங்க. டையெல்லாம் கட்டிக்கிட்டு மாப்பிள்ளைன்னு உங்கனை நினைச்சுடப் போறாங்க.
பூமிகா தனக்கே உரிய கலகலப்பான சிரிப்பை சிந்தினாள்.
"மாதவன் உங்கனை கல்யாணப் பெண்போல இருக்கிங்கன்னு சொல்றான். நீங்க என்னடான்னா நான் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறதா சொல்றீங்க.
அரவிந்த் தன்னையும் மறந்து இறுக்கம் துறந்து சிரித்தான்.
பூமிகா வெட்கமாக சிரித்துக் கொண்டாள்.
அந்த வெட்கச் சிரிப்பில் அவள் இன்னும் அழகாயிருந்தாள்.
இருவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.
மேடையில் சுதாகர் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தான்,