Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theertha Karaiyiniley
Theertha Karaiyiniley
Theertha Karaiyiniley
Ebook95 pages34 minutes

Theertha Karaiyiniley

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்டதும் மனதில் பதிந்த எண்ணமாய் அரவிந்தன்-வேதிகாவின் காதல் விருப்பம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நிச்சயம் வரை செல்கிறது. எதிர்பாராத பல்வேறு காரணங்களினால் வேறொருத்தியை மணக்கிறான் அரவிந்தன். அரவிந்தனின் மண வாழ்க்கை என்னவானது? வேதிகாவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? காதல் என்பது எவ்வயதினருக்கும், எச்சூழலிலும் ஏற்படுமா?... வாருங்கள் வாசித்து அறியலாம்.

Languageதமிழ்
Release dateMar 5, 2022
ISBN6580105707318
Theertha Karaiyiniley

Read more from Vidya Subramaniam

Related to Theertha Karaiyiniley

Related ebooks

Reviews for Theertha Karaiyiniley

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theertha Karaiyiniley - Vidya Subramaniam

    https://www.pustaka.co.in

    தீர்த்தக் கரையினிலே

    Theertha Karaiyiniley

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    மைலாப்பூர் குளத்தங்கரையில் பஸ் நிற்க, கடைசி ஆளாய் இறங்கினாள் வேதிகா. தெற்கு மாடவீதியில் நடந்துபோனால் வெள்ளீஸ்வரன் கோயிலுக்கு எதிர் தெரு என்று சொல்லியிருந்தபடி நடந்தாள். கொஞ்ச தூரம் நடந்ததுமே சூர்யா அபார்ட்மென்ட் பளிச்சென்று கண்ணில்பட்டது.

    இரண்டாவது மாடியில் வீட்டுக்குச் சொந்தக்காரர் அவளுக்காகக் காத்திருந்தார். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

    அவர் வீட்டைச் சுற்றிக்காட்டினார். புத்தம் புது பிளாட். மினுமினுவென்று சகல வசதிகளுடனும் மிக நவீனமாக இருந்தது.

    வாடகையும் அட்வான்ஸும் எவ்ளோன்னு சொன்னா செக் குடுத்துடுவேன்.

    பதினஞ்சாயிரம் வாடகை. ஆறுமாச வாடகை அட்வான்ஸா தந்தா போதும் ஒரு வருஷ அக்ரிமென்ட்.

    ஓ.கே. சார். நாளைக்கு அக்ரிமென்ட் ஸைன் பண்ணிடறேன். செக் இப்பவேகூட தந்துடறேன்.

    அதுவும் நாளைக்கே தந்தாப் போதும். உங்க வீட்ல மொத்தம் எத்தனை பேர். வீட்டை நல்லா வெச்சுப்பீங்க இல்ல. என் பையன் ஃபாரின்ல ராப்பகலா ஓடி ஓடிச் சம்பாதிச்சு அனுப்பின பணத்துல கட்டின வீடு.

    டோண்ட் ஒர்ரி சார். இங்க இருக்கப் போறது நான் மட்டும்தான்.

    தனியாவா? ஊர்விட்டு ஊர் வந்திருக்கீங்களா? குடும்பம் எங்க இருக்கு?

    அப்பா இறந்து பத்து வருஷமாகுது. அம்மா இறந்து மூணு வருஷமாகுது. அண்ணன் ஒருத்தன் லண்டன்ல லவ் மேரேஜ் பண்ணிட்டு செட்டில் ஆய்ட்டான். எப்பவாவது போன்பண்ணி சௌக்யமான்னு கேப்பான். உறவுக்காரங்க இருக்காங்க. ஆனா உறவுதான் இல்ல.

    கல்யாணம் பண்ணிக்கலையா? அவர் பரிதாபப் பார்வையோடு கேட்டார்.

    கல்யாணம் நிச்சயமாச்சு. ஆனா அம்மா செத்தப்பறம் அவங்க நல்லது கெட்டதுக்கு யாருமில்லாத பெண்ணைக் கட்டிக்கிட்டா கடசீ வரை நாங்கதான் எல்லாம் செய்யணும்னு சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. எனக்குத் துணை என் படிப்பும் வேலையும்தான். வெளிநாட்டு நிறுவனம் ஒண்ணுல நிதி ஆலோசகரா இருக்கேன். மாசம் ஒரு லட்சம் சம்பளம். ஓய்வு நேரத்துல வீடுதான் சுகம். வீட்டு வேலை, மியூசிக், நல்ல புக்ஸ், டி.வி.ல நல்ல சினிமா. இதான் என் வாழ்க்கை. இதுநாள் வரை பெங்களூர்ல இருந்தேன். சென்னைக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகுது. இப்ப ஒரு ஹோட்டல்ல இருக்கேன். இதான் என் முன்கதைச் சுருக்கம் சார்.

    அவள் சொல்லி முடித்துவிட்டுப் புன்னகையோடு பார்க்க, அவர் பார்வையில் மரியாதை கூடியிருந்தது.

    நாளைக்கு அக்ரிமென்ட் போட்ரலாம்மா. இந்த வீட்டுல நீ நிம்மதியா பயமில்லாம இருக்கலாம். உனக்கு யாருமில்லைன்னு நினைக்க வேண்டாம். என்னை உன் அப்பா மாதிரி நினைச்சுக்க. வாடகை வாங்கற அப்பா அவர் சிரித்தார்.

    ரொம்ப நன்றிப்பா.

    அவள் உடனே சொல்ல, அவர் நெகிழ்ந்து போனார்.

    அடுத்த நாள் நல்ல நேரம் பார்த்து அக்ரிமென்ட்டில் கையெழுத்திட்டு அட்வான்ஸ் செக்கை அவரிடம் கொடுத்தாள். அதற்கடுத்த வாரம் பெங்களூரில் புக் செய்திருந்த டெம்போ சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டுப் போனது.

    நாலே நாளில் சாமான்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, ஏ.ஸி. மெஷின் பொருத்தப்பட்டது. பூஜை ரூமில் சாமி படங்களை மாட்டி விளக்கேற்றியதும் பாலைக் காய்ச்சி வேலை செய்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு வீட்டுக்காரருக்கும் கொடுத்தாள்.

    முதமுதல்ல இந்த வீட்டுல சமைக்கறேன். நீங்க இருந்து சாப்ட்டுட்டுப் போகணும்.

    பரவால்லம்மா. நான் இன்னோரு நாள் சாப்பிடறேன்.

    உங்களைப்பத்தி எதுவுமே சொல்லலையே.

    சொல்ல என்ன இருக்கு? தனிக்கட்டை இப்போ. பிள்ளை அமெரிக்கால. பெங்காலி பொண்ணை அங்கயே லவ்பண்ணி அவளோட கல்யாணமாகி எனக்கு ஒரு பேத்தி பொறந்தாச்சு. பொண்ணு கனடால டாக்டரா இருக்கா. மாப்ளயும் டாக்டர்தான். அவளுக்கு ஒரு பிள்ளை பத்தாவது படிக்கறான். பொண்டாட்டி செத்துப் பதினஞ்சு வருஷமாச்சு.

    தனியா எதுக்கு இங்க கஷ்டப்படறீங்க. பிள்ளையோடயே போய் இருக்க வேண்டியதுதானே?

    "போனேன். அந்த வாழ்க்கை எனக்குச் சரிப்படல. கார்த்தால ஆறு மணிக்குக் காபி கப்போட கார்ல ஏறிப்போனா ராத்திரி ஒன்பது மணிக்குக் கண்ணுல தூக்கத்தோட திரும்பி வருவாங்க. நடூல நமக்கு ஒரு தலைவலி வந்தாக்கூட இங்க மாதிரி கடைக்குப் போய் ஒரு மாத்திரைய வாங்கிப் போட்டுக்கிட்டு படுக்க முடியாது. எமர்ஜன்ஸிக்குக்கூட டாக்டர்கிட்டப் போக முடியாது. அப்பாய்ண்ட்மெண்ட் இல்லாட்டா அவ்ளோதான். எங்கயும் தனியாப் போகவும் முடியாது. நாள் முழுக்க வெட்டு வெட்டுன்னு உக்காந்துட்ருக்கணும். என்னால முடியல. என்ன இருந்தாலும் இந்த மண்ணோட சுகம் சுகம்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1