Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanthai Sol Mikkathor
Thanthai Sol Mikkathor
Thanthai Sol Mikkathor
Ebook163 pages1 hour

Thanthai Sol Mikkathor

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105704056
Thanthai Sol Mikkathor

Read more from Vidya Subramaniam

Related to Thanthai Sol Mikkathor

Related ebooks

Related categories

Reviews for Thanthai Sol Mikkathor

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanthai Sol Mikkathor - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    தந்தை சொல் மிக்கதோர்

    Thanthai Sol Mikkathor

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அரண்மனை முழுக்க தீபம் ஏற்றியிருந்தது. சேடிப் பெண்கள் கூட நல்ல ஆடைகள் அணிந்து உற்சாகமாய் வளைய வந்தார்கள். அந்தப்புரத்தில் யாழிசையும் நடனமும் அமர்க்களப் பட்டது. ஏழெட்டு சேடிப்பெண்கள் சத்தியவதியை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

    சத்தியவதிக்கு எதிரில் ஆளுயர அலங்கார நிலைக் கண்ணாடி இருந்தது. சத்தியவதியின் அழகை நிலைக் கண்ணாடி தெளிவாகக் காட்டியது. சத்தியவதிக்கு அருகில் ஒரு பெரிய தங்கத் தாம்பாளத்தின் மீது வெல்வெட் துணி விரித்து வைர வைடூரிய நகைகள் கோடி சூரிய பிரகாசத்தோடு ஜொலித்தன.

    தலை ஆபரணங்கள், காதுக்கு குண்டலங்கள், கழுத்துக்கு நீண்ட மாலைகள். இடுப்பைச் சுற்றி மேகலை, தந்தம் போன்ற கரங்களுக்கு வைர வளையல்கள், வெண்புறாப்போன்ற பாதங்களுக்கு வைரக்கற்கள் பதித்த அழகிய தண்டைகள், அவள் உடலிலிருந்து எழும்பிய நறுமணத் திரவியங்களின் வாசனை ஒருபுறம் கிறங்கடிக்க, சேடிப்பெண் ஒருத்தி மயக்கம் வருவது போல் நடித்தாள்.

    அட! என்ன ஆயிற்று இவளுக்கு...? சத்தியவதியின் குரலில் குயிலும் யாழும் கொஞ்சியது.

    எனக்குப் புரிந்து விட்டது. மற்றொரு சேடிப்பெண் சொல்ல சத்தியவதி அவளை ஏறிட்டுப் பார்த்தாள்.

    என்ன?

    பெண்ணான இவளுக்கே உன் அழகைக் கண்டு இப்படி என்றால் உன்னைக் காணும் ஆண்கள் என்னாவார்கள்...?

    சத்தியவதி கலகலவென்று சிரித்தாள். அவ்வளவு அழகியா நான்…?

    இதில் சந்தேகம் வேறா? நிலைக்கண்ணாடிதான் எதிரில் உள்ளதே! பார்த்துக் கொள்ளலாமே.

    என் அழகை நானே ரசிப்பதா...?

    என்ன தவறு அதில்...? வெண்ணிலவும் வெட்கப்படும் முகம், தடாகம் போன்ற நீள்விழிகளில் துள்ளும் கருவிழிகள், முத்துச் சரம் கோர்த்தாற் போன்ற பற்கள், மாதுளம்பழ அதரங்கள், வெண்சங்கை ஒத்த கழுத்து, கொடி போன்ற இடை, மொத்தத்தில் சந்தனத்தில் கடைந்தெடுத்த சிலை போன்ற உன் தோற்றத்திற்கு மயங்காத கண்களும் மயங்குமே.

    பார்த்து விடலாமா...?

    எதை...

    எத்தனை கண்கள் மயங்குகின்றன என்பதை?

    நீ பிறந்து இன்றோடு பதினாறு ஆண்டுகள் முடிகின்றது சத்தியவதி. அந்தி சாயும் நேரத்தில் கோயிலுக்கு சென்று வணங்க வேண்டும் என்பது உன் அன்னையார் கட்டளை.

    ரதத்தில் செல்ல வேண்டாம் இன்று நடந்து செல்வோம்.

    அம்மாடியோ...! உன் மெல்லிய பாதங்கள் புண்ணாகிவிடும் சத்தியவதி. அதுவுமில்லாமல் அரசருக்குத் தெரிந்தால் எங்களைத் தான் கோபிப்பார்கள்.

    தெரிந்தால் தானே...?

    தெரியாமல் எப்படி.?

    அரண்மனை வாயில் வரை, ரதத்தில் செல்வோம்.

    பின்னர்...?

    பின்னர் ஒய்யாரமாக நடந்து செல்வோம்.

    எனக்கென்னமோ இது சரியாகப்படவில்லை. மாட்டிக் கொண்டால் தண்டனை உனக்கல்ல எங்களுக்குத்தான்.

    ஒன்றும் ஆகாது.

    ஆகாமல் இருந்தால் சரி.

    அந்தி சாய்ந்து விட்டதா?

    புறப்படுவதற்கு முன் உன் அன்னையாரிடம் ஆசிவாங்க வேண்டும்.

    சத்தியவதி, பூரண சந்திரனை ஒத்த அழகோடு அன்னமென நடந்து அன்னையாரின் மாளிகைக்கு வந்தாள்.

    வணங்குகிறேன் தாயே...

    ஆஹா... என்ன அழகு என் மகள். தாயார் சத்தியவதியை விழுங்கி விடுவது போல் பெருமை பொங்கப்பார்த்தாள். உச்சி முகர்ந்தாள்.

    உன் தந்தையார் வந்துவிடுவார் பெண்ணே, அவரிடமும் ஆசி பெற்றுக்கொள்.

    மன்னர் வருகிறார். சேடிப்பெண் ஒருத்தி சொல்ல அவள் பின்னால் காதி மன்னன் வந்தார்.

    நம் மகளின் அழகைப் பாருங்கள் ஜொலிக்கிறாள். மகாராணி சொல்ல மன்னர் மகளை ஏற இறங்கப் பார்த்தார்.

    இவள் சாதாரணமானவளா...? ஊர்வசியின் பரம்பரையில் வந்தவள் அல்லவா? பின் அழகுக்கு பஞ்சமிருக்குமா என்ன?

    ஊர்வசி யார் அப்பா…?

    தேவலோக நடன மங்கை சத்தியவதி! அவள் புரூவரசு என்ற அரசனை மணந்தாள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் பரம்பரையில் வந்தவன்தான் நான்.

    ஊர்வசி மிகவும் அழகோ?

    ஆம். வர்ணிக்க முடியாத அழகி. புதனின் மகனான புருவரசு அவளிடம் கொண்ட காதலுக்கு அளவேயில்லை. ஒரு கட்டத்தில் ஊர்வசி அவனைப் பிரிந்து செல்ல நேரிட்ட போது புருவரசு பட்டபாடு சிறிதல்ல. மறுபடியும் அவளை அடைய மிகவும் பிரயத்தனப்பட்டான். கிருதயுகத்தில் ஒவ்வொன்றாக இருந்து வந்து வேதமும் அக்னியும் புரூவரசுவின் பிரயத்தனத்தால் வேதம் மூன்றாகவும் அக்கினி மூன்றாகவும் ஆயிற்றாம், இறுதியில் பரந்தாமனின் அனுக்கிரகத்தால் புரூவரசு கந்தர்வ லோகத்தில் ஊர்வசியோடு நிலைத்த வாழ்வு பெற்றுச் சென்று விட்டான்.

    காதலுக்கு அத்தனை வலிமையா...? சத்தியவதி விழிகள் விரியக் கேட்டாள்.

    நல்லது சத்தியவதி. நீ கோயிலுக்குச் சென்று வா, பிறகொரு நாள் இதைப்பற்றி பேசுவோம் காதி மன்னர் அவளை அனுப்பி வைத்தார். மாளிகை வாயிலில் ரதம் தயாராக இருந்தது. நான்கைந்து சேடிப் பெண்களோடு ரதத்தில் ஏறிக் கொண்டாள் சத்தியவதி. அரண்மனை வாயிலை ரதம் கடக்கும் வரை காத்திருந்தார்.

    நிறுத்து நிறுத்து...

    தேரோட்டி சட்டென்று குதிரைகளை இழுத்து நிறுத்தினான்.

    நீ இங்கேயே காத்திரு. நாங்கள் நடைப்பயணம் மேற் கொண்டு கோயிலுக்கு செல்வதாகப் பிரார்த்தனை.

    இளவரசி... மன்னருக்குத் தெரிந்தால்...

    பிரார்த்தனை என்று சொல்கிறேன். புரியவில்லையா? நீ இங்கேயே காத்திரு, நாங்கள் சென்று திரும்பி வரும் வரை.

    சத்தியவதி தன் பாதங்களை மண்ணில் வைத்து இறங்கினாள். பாதம் சிவக்க நடந்தவளை மக்கள் கூட்டம் வாய் பிளந்து பார்த்தது. தலை வணங்கி மரியாத செய்து விலகி நின்றது.

    கோயிலை ஒட்டியிருந்த வணிகர் வீதியில் முத்துக்களும் பவழங்களும் மூட்டை மூட்டையாக வைத்து வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் நடந்து வந்து கொண்டிருந்த அரசகுமாரியைக் கண்ட வணிகர்களும், வாங்கிக் கொண்டிருந்த செல்வந்தர்களும் ஸ்தம்பித்துப் போனார்கள். மின்னலொன்று நடந்து வருவதைப் போலிருந்த அரசகுமாரியின் தோற்றம் கண்டு, யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ என்ற பெருமூச்சு ஒவ்வொருவர் நாசியிலிருந்தும் வெளிப்பட்டது.

    இளவரசி தன் கயல்விழிகள் சுழற்றி அனைத்தையும் ரசித்துப் பார்த்தபடி நடந்தாள். அரசகுமாரியை அருகில் தரிசிக்கும் ஆவலில் கோயிலில் பெண்களும், வாலிப வயதினரும் அதிக அளவில் திரண்டிருந்தனர். காவலாட்கள் சிலரால் அவர்கள் ஒரு ஓரமாக ஒதுக்கி நிறுத்தப்பட்டனர்.

    சத்யவதி தன் தோழிகளோடு அம்பிகையின் சந்நிதிக்கு வந்தாள். இரு கரம் கூப்பி கண் மூடித் தொழுதாள்.

    பூஜை செய்தவர் ஆரத்தித் தட்டோடு அரசகுமாரியிடம் வந்த சமயம் கோயில் வாசலில் லேசான சல சலப்பு. ஆரத்தியை கண்களில் ஒற்றிக் கொண்ட சத்தியவதி ஓரப்பார்வையால் வாயிற்புறம் பார்த்தாள்.

    அந்தணர் ஒருவர் தேஜஸ் பெருந்திய முகத்தோடு வந்து கொண்டிருந்தார். அவர் நடையில் நிதானமும் கம்பீரமும் ஒன்று சேர்ந்திருந்தது. அவர் யாரையும் பார்க்கவில்லை. மந்திர உச்சாடனம் செய்து கொண்டே கை கூப்பித் தொழுதபடி வந்து கொண்டிருந்தார். காவலர்கள் அவரைத் தடுக்கவில்லை. மக்கள் அவரைப் பணிவோடும், மரியாதையோடும் பார்த்து வணங்கினார்கள். இளவரசி வியப்போடு அவரைப் பார்த்தாள்.

    யாரடி இவர்? என்று கிசுகிசுப்பான குரலில் தோழி ஒருத்தியிடம் கேட்டாள். அர்ச்சகரின் செவிகளில் அந்தக் கேள்வி விழுந்து விட்டது.

    இளவரசி உத்தரவிட்டால் அவரைப் பற்றி நானே சொல்கிறேன் என்றார் பவ்யமாக.

    சொல்லுங்கள்.

    இவர் பிருகு முனிவரின் புத்ரன், ரிஸீகர் என்று பெயர். தவத்தில் சிறந்தவர். வேதங்களைக் கற்றறிந்தவர், எவருக்கும் தீங்கிழைக்காத அந்தணர், சிறந்த பக்திமான். கடுந்தவம் செய்து பல வல்லமைகளைப் பெற்றவர். வயது சிறிதென்றாலும் பெரும் கீர்த்தி பெற்றவர். மகாஞானி என்றும் கூறலாம். பல பெண்கள் இவரை மணந்து கொள்ளத் துடிக்கிறார்கள், இருப்பினும் இதுவரை எந்தப் பெண்ணையும் இவர் ஏறிட்டுப் பார்த்ததில்லை. பெண்கள் இவர் அருகில் நெருங்கினால் நாணிச் சிவந்து விடுவார். கண்மூடி தபஸில் அமர்ந்து விடுவார்.

    விந்தைதான்! சத்தியவதி பிரம்மிப்போடு அந்த அந்தணனைப் பார்த்தாள். அவன் சந்நிதியில் நுழைந்து எவரையும் கவனியாமல் தெய்வத்தின் முன் நின்று கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தான். தன்னை மறந்து தெய்வத்தின் மீது பாட்டுப் பாடினான். அரை நாழிகைக்குப் பிறகு கண் திறந்தவனுக்கு கற்பூர ஆரத்தி காட்டினார் அர்ச்சகர்.

    தங்கள் பாடல் தேவகானம் போல் இருந்தது அந்தணரே மிக நன்றாகப் பாடினீர்கள் சத்தியவதி தன் கொவ்வை இதழ் பிரித்து சலங்கை கொட்டியது போல் வார்த்தை உதிர்க்க அந்தணன் சரேலென்று திரும்பினான். சத்தியவதியை வைத்த விழி எடுக்காமல் பார்த்தான். தான் காணாமல் போவதை உணர்ந்து வியந்தான்.

    2

    இரண்டாம் ஜாமம் கூட முடிந்து விட்டது. அரசகுமாரி மஞ்சத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1