Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aahaya Panthal
Aahaya Panthal
Aahaya Panthal
Ebook93 pages46 minutes

Aahaya Panthal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703105
Aahaya Panthal

Read more from Vidya Subramaniam

Related to Aahaya Panthal

Related ebooks

Reviews for Aahaya Panthal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aahaya Panthal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    ஆகாயப் பந்தல்

    Aahaya Panthal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அப்பா வந்தாச்சும்மாதான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தாள்.

    ஏம்பா லேட்? டிரெயின் லேட்டா?

    லேட் ஒண்ணுமில்லையே.

    பதினேழு நிமிஷம், பதினொரு வினாடி லேட். எத்தனை சிகரெட் பிடிச்ச அதுக்குள்ள?

    வாயத் திறந்து ஊது! உன் சத்தியத்தைக் கொஞ்சம் வாசனை பிடிச்சுட்டுச் சொல்றேன்.

    விடு அனு...அப்பா அவளைத் தாண்டிக் கொண்டு உள்ளே போக முயல அனு அவர் பின்னாலேயே நடந்தபடி, பேசினாள்.

    அதென்னப்பா டாக்டர், அவ்ளோ தூரம் சொல்லியிருக்கார் சிகரெட்டை விட்டுடணும்னு. ஊதற உனக்குக் கொஞ்சம்கூட பயமில்ல. நாங்கதான் நெஞ்சப் பிடிச்சுக் கிட்டு நிக்கறோம்.

    டாக்டர்களுக்கு வேற வேலை என்ன?

    சரிப்பா, இன்னும் அஞ்சு பாக்கெட் வாங்கித் தினமும் ஊது. எதைப்பத்தியும் நீ கவலைப்பட வேண்டாம். என் படிப்பைப் பத்தி கவலைப்பட வேண்டாம். அம்மா வோட ஆஸ்மா பத்தி கவலைப்பட வேண்டாம். பாட்டியோட பிரஷர், ஷுகர் பத்தி கவலைப்பட வேண்டாம். மென்டலி ரிடாடர்டு ஹோம்ல இருக்கற உம் பிள்ளை ரவியைப் பத்தி கவலைப்பட வேண்டாம். நாங்க எல்லாரும் உன்னையே நம்பியிருக்கோம்ங்கறதைப் பத்தியும் கவலைப் பட வேண்டாம். சிகரெட்தான் உனக்குச் சந்தோஷம்னா எங்களுக்காக உன் சந்தோஷத்தை நீ ஏன் கெடுத்துக்கணும்? நிறைய பிடிச்சுட்டு சீக்கிரம் போய்ச்சேரு!

    அப்பா, போதுமே என்பது போல் அவளைப் பார்த்தார்.

    வந்ததும் வராததுமா அவரை ஏண்டி படுத்தற?அம்மா காப்பியோடு வந்தாள். காப்பியைக் கொடுத்து விட்டு அவர் அருகில் அமர்ந்தாள்.

    அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும்.

    போக வேண்டியது தானே?

    பணம் வேணாமா? ரெண்டு நாள் முந்தியே வாங்கி வெச்சுக்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்க புறப்பட்டு வாசலுக்குப் போய்ட்டீங்க. கிளம்பினவங்களைக் கூப்ட்டு கேக்க வேணாம்னு விட்டுட்டேன்... அப்புறம் இப்பத்தானே வரீங்க!

    அவர் பர்ஸ் திறந்து நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டினார்.

    அப்புறம்ப்பா, புதுக்கோட்டை போனீங்களே. ஆபீஸ் வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? அங்கேர்ந்து எனக்கென்ன வாங்கிட்டு வந்தீங்க?

    அங்க என்ன அப்டி ஸ்பெஷல்? ஒண்ணும் வாங்கிட்டு வரல.

    இன்ஸ்பெக்ஷன்லாம் நல்லா நடந்துதா? எத்தனை தில்லுமுல்லு கண்டுபிடிச்ச?

    அப்பா பதில் சொல்லாமல் ஒரு மாதிரி சிரித்தார். பிறகு எழுந்து குளிக்கப் போய்விட்டார்.

    அப்பாவுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் இன்ஸ்பெக்ஷன் பிரிவில் வேலை. மாதத்தில் பாதி நாள் டூரில் தான் இருப்பார். கைநிறைய சம்பளம் வாங்கினாலும் ஏனோ செலவுக்குப் போறவில்லை.

    மாசக்கடைசியில் இழுபறிதான். அப்பா அதற்கு நிறைய காரணம் சொல்லுவார். அவருக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு நாளைக்கே நாலைந்து பாக்கெட் சிகரெட் பிடித்தால் ஒரு நடுத்தர குடும்பத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் எப்படி காணும்?

    அப்பாவுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை முதல் தேதியானால் அம்மாவிடம் மூவாயிரம் ரூபாயை எடுத்து நீட்டுவார். அதற்குள் தான் அவள் மாதம் முழுவதும் சமாளித்தாக வேண்டும். நடுவில் அவரிடம் பணம் வாங்குவது ரொம்ப ரொம்ப கஷ்டம். மிக மிக அத்தியாவசியம் என்றாலொழிய ஒற்றைப் பைசா தந்துவிட மாட்டார்.

    அம்மா எவ்வளவுதான் சிக்கனமாகச் செலவழித்தாலும் அவர் கொடுக்கும் பணம் இருபத்திரெண்டு நாளுக்குத்தான் வரும். மிச்ச எட்டு நாள் இழுபறிதான். அதுவும் அப்பா ஊரில் இல்லாவிட்டால் அம்மா படும்பாடு சொல்லி முடியாது. பாதி நாள் தெருக்கோடி முருங்கை மரத்திலிருந்து கீரை பறித்து, வதக்கி வைப்பாள். சில நாள் வெறும் வெங்காயத்தை வதக்கி உப்பு போட்டு சாதத்தில் பிடித்து சாப்பிடுவார்கள்.

    ஏம்மா அப்பாக்கு நல்ல வேலைதானே. இன்னி தேதிக்கு பிடிப்பு போக அப்பா நிச்சயம் ஏழாயிரமாவது கைல வாங்குவார்னு தோணுது. ஆனா வீட்டுக்கு மூவாயி ரம்தான் கொடுக்கறார். மிச்ச பணத்தை எல்லாம் அவர் என்ன பண்றார். ஏது பண்றார்னு கேக்க வேண்டாமா?

    கேட்டேனே ஒரு முறை அடிக்க வந்தார். இன்னொரு முறை நாங் குடுக்கற பணத்துல குடும்பம் நடத்த முடியல்லன்னா நீ என்ன பொம்பளைன்னு கேட்டார். அவங்க ஆபீஸ் பியூன் ரெண்டாயிரம் சம்பளத்துல குடும்பம் நடத்தறானாம். அதைவிட உனக்கு ஆயிரம் அதிகம் தரேனேங்ககறார். அதுக்கு மேல அவர்கிட்ட என்னத்த கேக்கறது!

    அனுசுயாவின் கண்களுக்கு அப்பா மிக மர்மமாய்த் தெரிந்தார். சிகரெட் தவிர அவரிடம் வேறு ஏதோ கெட்ட பழக்கமும் இருக்குமோ என்று பயமாயிருந்தது.

    அவளைப் பொறுத்தவரை அவர் அன்பாகத்தான் இருக்கிறார். அவள் படிப்புக்கு என்ன வேண்டுமானாலும், வாங்கித் தருகிறார். அவளை நல்ல கல்லூரியில் அவள் விருப்பப்பட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1