Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Sathurangam
Kalyana Sathurangam
Kalyana Sathurangam
Ebook120 pages1 hour

Kalyana Sathurangam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105704024
Kalyana Sathurangam

Read more from Vidya Subramaniam

Related to Kalyana Sathurangam

Related ebooks

Reviews for Kalyana Sathurangam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Sathurangam - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    கல்யாணச் சதுரங்கம்

    Kalyana Sathurangam

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ரஞ்சினி! உன்னை எம்.டி, கூப்பிடறார். இண்டர்காம் தகவலை ஊழியர் ஒருவர் தெரிவிக்க, ரஞ்சினி கணிப்பொறியிலிருந்து எழுந்தாள். கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு எம்.டி.யின் அறைக்குச் சென்றாள்.

    உட்கார் ரஞ்சினி. உனக்கு ஒதுக்கப்பட்ட பணி எந்த நிலையிலிருக்கிறது?

    முடிந்து விட்டது சார். அவுட்புட் மட்டும்தான் பாக்கி.

    வெரி குட். உன்னை மாதிரி ஒரு திறமைசாலி கிடைப்பது அபூர்வம். ஆனா அது நம் நிர்வாக இயந்திரத்திற்குத் தெரியவில்லை.

    ரஞ்சினி புருவம் சுருங்க அவரைப் பார்த்தாள்.

    சாரி ரஞ்சினி. உங்கிட்ட சொல்லவே கஷ்டமார்க்கு. உனக்குத் தெரியும். பொருளாதார வீழ்ச்சி... ரெஸஷன்... இந்த வார்த்தை இந்த உலகத்தையே இப்போ எப்படி ஆட்டி வெச்சுட்டிருக்குன்னு. நம்ம கம்பெனிக்கும் இது போதாத காலம்தான். இந்தியா முழுக்க மொத்தம் ரெண்டாயிரம் பேரைப் பணி நீக்கம் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்பட்டிருக்கு. நம்ம ஆபீஸ்ல மொத்தம் பதினைந்து பேர்க்குப் பணி நீக்க உத்தரவு ஃபேக்ஸ்ல வந்திருக்கு. அதுல நீயும் ஒருத்தி.

    ரஞ்சினி அதிர்ந்தாள். விழிகள் மட்டும் அதிர்ச்சியை வெளிப்படுத்த, அவள் உடல் கல்லாய்ச் சமைந்திருந்தது.

    ஆறு மாசமோ, ஒரு வருஷமோ! இந்த நிலை சரியாயிடும்னு பொருளாதார நிபுணர்கள் சொல்றாங்க. மனசைத் தளர விட வேண்டாம் ரஞ்சினி. இது தற்காலிகப் பணி நீக்கம்தான். மறுபடியும் உனக்கு ஒரு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். நான் உன் பெயரைத்தான் முதல்ல, சிபாரிசு செய்வேன்.

    ரஞ்சினியால் எதுவும் பேச முடியவில்லை.

    பத்து வருஷ சர்வீஸ் போட்டவங்களைக் கூட ரெஸஷன்கற பேர்ல கண்ணை மூடிட்டு வீட்டுக்கு அனுப்பிட்டிருக்காங்க. உங்க எல்லாருக்கும் ரெண்டு மாச ஊதியத்தைத் தரச் சொல்லியிருக்காங்க. அந்தவரை நீ சந்தோஷப்படணும். நீ போய்ட்டு இம்ரானை வரச் சொல்லு. அவங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். நா சொல்லிக்கிறேன், சரியா?

    ரஞ்சினி எழுந்தாள். வேலை நீக்க உத்தரவை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தாள்.

    அடுத்த அரை மணியில் வேலை இழந்த பதினைந்து பேரையும் மொத்த அலுவலகமும் சூழ்ந்து கொண்டு துக்கம் விசாரித்து ஆறுதலும் தைரியமும் சொல்லிற்று.

    தனக்கு அளிக்கப்பட்ட பணியில் ஒரு சிறு குறை கூட வைக்காமல் முடித்துக் கொடுத்து விட்டு ரஞ்சினி வீட்டுக்குக் கிளம்பும்போது மணி ஏழைக் கடந்திருந்தது.

    மொபைலில் வெங்கட்டிடமிருந்து நாலைந்து தவற விட்ட அழைப்புகள் வந்திருந்தன. வேலை போய் விட்டது என்று போனில் சொல்லி அவனைத் திடீர் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டாம் என்றுதான் அந்த அழைப்புகளை அவள் எடுத்துப் பேசவில்லை.

    கல்யாணமாகி முழுசாய் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்த வேலையும் சம்பளமும் காரணமாகத்தான் கல்யாண மார்க்கெட்டில் அவளுக்கொரு வரனை அம்மா அப்பாவால் தேடிப் பிடிக்க முடிந்தது. - அவளையும் அண்ணன் ரகுவையும் அப்பா பாரபட்சமில்லாமல் படிக்க வைத்தார்.

    ஏங்க... படிப்பு படிப்புன்னு படிப்புக்கே பணத்தை வாரி இறைச்சா, நாளைக்கு அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நாலு காசு சேர்த்து வைக்க வேண்டாமா? அம்மா அடிக்கடி கவலைப்படுவாள்,

    கல்வி தான்டி செல்வம்... என்னால முடிஞ்சவரை அதை வாரி வாரி என் பசங்களுக்குக் கொடுப்பேன். அது அவங்களைக் காப்பாத்தும். எப்போதும் விழிப்போட வெச்சிருக்கும்.

    எல்லாம் சரிதான். ஆனா என்னதான் படிச்சிருந்தாலும் ஒரு பெண்ணை யாரும் சும்மா கட்டிக்கிறேன்னு சொல்ல மாட்டாங்களே. ஒரு பத்துப் பவுன் நகையாவது போட்டாத் தானே மதிப்பாங்க.

    என் பொண்ணே சொக்கத் தங்கம்டி. அவ எடை என்ன? அம்பத்தாறு கிலோ தங்கம்! கட்டிக்கப் போறவனுக்குக் கொடுத்து வெச்சிருக்கணுமே! அப்படி எவனுக்குக் கொடுத்து வெச்சிருக்கோ.. அவன் ஒரு நாள் வாசல்ல வந்து நிப்பான். உங்க பொண்ணை மட்டும் கொடுங்கள். பொன், பொருள் எதுவும் எனக்கு முக்கியமே இல்லைன்னு சொல்லுவான். நல்லாத்தான் கனவு காண்றீங்க... பலிச்சா சந்தோஷம் தான்.

    பலிக்குதா இல்லையான்னு பாரு.

    மென் பொருள் துறையில் அவள் பொறியியல் பட்டப்படிப்பு மூன்றாமாண்டு முடிப்பதற்குள் வங்கியில் கல்விக் கடன் கணிசமாய் ஏறியிருந்தது. ரகுவுக்கு மும்பையில் நல்ல வேலை கிடைத்த கையோடு கல்யாணமும் ஆயிற்று. காதல் கல்யாணம். ரேவதி நல்ல பெண். அப்பா சீர் சினத்தியை விட அவள் நற்குணம் பெரிதென்று சந்தோஷமாய்ச் சம்மதித்து அதிக ஆடம்பரமின்றி எளிய முறையில் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். ரஞ்சினியின் படிப்பு முடியும் சமயம் ரகுவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த சந்தோஷத்தோடு கூடுதல் சந்தோஷமாய் ரஞ்சினிக்கு இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியத்தோடு வேலையும் கிடைத்தது. மொத்தக் குடும்பமும் சந்தோஷத்தில் திளைத்தது. யார் கண் பட்டதோ! விதி தன் முதல் இடியை அவர்கள் தலையில் இறக்கியது.

    வேலை முடிந்து வீடு திரும்ப ரயில் நிலையத்தில் காத்திருந்த சமயம், இரும்பு அமர்வானில் சாதுவாக அமர்ந்திருந்த ஒரு மனிதன் திடீரென்று எழுந்து தனது இயந்திரத் துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பிக்க, அப்பாவிப் பயணிகள் புழு பூச்சிகளைப் போல் சுருண்டு விழுந்தார்கள். தீவிரவாதி ஒருவனால் சுடப்பட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்த ரகுவைத் தொலைக்காட்சி ஒன்று தனது செய்தியில் திரும்பத் திரும்பக் காட்டியபோது கூட அது ரகு என்று வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. அதன் பிறகுதான் போனில் தகவல் வர வீடு அலறியது. அம்மா மயங்கி விழ, அப்பா இடிந்து போய் உட்கார்ந்தார்.

    மும்பைக்குப் போய் ரகுவின் முகத்தைக் கடைசியாய்ப் பார்த்ததும் அடி வயிறு அலறியது. கருணை அடிப்படையில் அவன் வேலை பார்த்த கம்பெனி, அண்ணிக்கு வேலை தர முன் வந்தாலும், ஆங்கிலமும் ஹிந்தியும் தெரியாத அண்ணி பயந்தாள். மும்பையிலேயே தான் இருக்க விரும்பவில்லை என்றாள். அவளையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அனைவரும் சென்னைக்கு வந்தார்கள். வெறும் பி.ஏ. டிகிரிக்கு நல்ல வேலை ஏதும் கிடைக்கவில்லை. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனைப் பெண் வேலை கிடைத்தது. கொடுக்கிற ஊதியத்திற்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1