Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penn Ondru Kandean!
Penn Ondru Kandean!
Penn Ondru Kandean!
Ebook121 pages41 minutes

Penn Ondru Kandean!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703484
Penn Ondru Kandean!

Read more from Vidya Subramaniam

Related to Penn Ondru Kandean!

Related ebooks

Reviews for Penn Ondru Kandean!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penn Ondru Kandean! - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    பெண் ஒன்று கண்டேன்!

    Penn Ondru Kandean!

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ஆபீஸ்ல ரொம்ப வேலையா? முகம் இவ்ளோ டல்லார்க்கு! சூடா காபி கொண்டு வரேன் இருங்கோ.

    ஒரு எழவும் வேண்டாம்.

    என்ன இவ்ளோ எரிச்சல்? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சினையா? பாஸ் திட்டினாரா?

    மனுஷனை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடறயா? வேலை ஏதாவது இருந்தா போய்ப் பார்த்துத் தொலை! பேசிப் பேசி கழுத்தறுத்துண்டு!

    அது சரி எங்கயோ எவனோ ஏதோ சொன்னா, இங்க வந்து எங்கிட்ட எகிர்றதே வழக்கமா போச்சு. பேசாம போனா, அலட்சியம் திமிருங்கறது. பரிவா பேசினா கழுத்தறுப்புங்கறது. போதும்டா சாமி பெண் ஜென்மம்...!

    பரிமளாவின் சலிப்பில் மெல்லிய அழுகையும் உடைந்து கலந்திருந்தது. எக்கேடும் கெட்டுத் தொலை. நீ காபி குடிச்சா என்ன குடிக்காட்டா என்ன என்பது போல் இரவுச் சமையலை கவனிக்கப் போனாள்.

    சற்று நேரம் கழித்து அடுக்களை வாசலில் வந்து நின்றான் கணேசன்.

    உடனே கோச்சுண்டாச்சாக்கும்! வந்த உடனே கேள்வி மேல கேள்வி கேட்டா...? சரி காபி குடு!

    அப்டி என்னதான் கோவமாம்.

    என்ஜினீயர் இன்னிக்கு ஆபீசுக்கு வந்திருந்தார்.

    மறுபடியும் பணம் கேட்டாரா அந்த மனுஷன்?

    சிமெண்ட் விலை திடீர்னு ஏறிடுத்தாம். உடனடியா முப்பதாயிரம் தந்தாதான் வேலை நடக்குமாம்.

    அக்ரமமா இருக்கே! இப்டி நினைச்சப்பல்லாம் பணம் கேட்டு பிடுங்கினா எப்டி? போன மாசம்தான் நாப்பதாயிரத்துக்கு சாமான் வாங்கிப் போட்ருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துக்கு பணம் கேக்கவே மாட்டேன்னார். எண்ணி இருபத்தஞ்சு நாளாகல அதுக்குள்ள முப்பதாயிரம் கேக்கறார்! மனசாட்சியே இல்லையா அந்த மனுஷனுக்கு! முப்பதாயிரத்துக்கு என்ன கணக்குன்னு கேக்க வேண்டியதுதானே நீங்க? அவர் பணம் கேட்டதும் சரிசரின்னு தலையை ஆட்டிண்டு வந்தேளாக்கும்!

    கேட்டேண்டி! சும்மா கத்தாதே.

    என்ன சொன்னார்?

    அவர் உனக்கு மேல கத்தறார் என்று அன்று அலுவலகத்தில் நடந்தவற்றை கூறினான்

    உங்க காசை வாங்கி நா எனக்கா சார் வீடு கட்டிக்கறேன்? உங்க வீட்லதான் உங்க பணத்தை கொட்டறேன் ஏண்டா இந்த சிங்கிள் ஒர்க்கை ஏத்துண்டோம்னு இருக்கு உங்க வேலையால எனக்கு எக்ஸ்ட்ராவா ஆன பெட்ரோல் செலவுக் கணக்கை காட்டட்டுமா? போனாப் போகட்டும் இதுக்கெல்லாம் கூட பணம் வாங்க வேண்டாம்னு நா பெருந்தன்மையா கைக்காசை செலவழிச்சுண்டு வந்து போயிண்ருக்கேன். பணத்தைக் கொடுத்துட்டு நீங்க பாட்டுக்கு ஹாய்யா இருந்துட்றீங்க. இங்க ஒவ்வொரு ஆளோடயும் நா மாரடிச்சுக்கிட்டு வேலை வாங்கறது எனக்கில்ல தெரியும்? ச்சே போ என்னடா பிழைப்பிதுன்னு ஆயிடுது சில நேரம். இப்பக் கூட கெட்டுடல. நீங்க வேற ஆள வெச்சு மிச்ச வேலையை முடிச்சுக்குங்க சார். என் கணக்கை செட்டில் பண்ணுங்க. நா போயிடறேன். இந்த தலைவலி வேலை எனக்கு வேணாம்.

    இருங்க சார். நீங்களும் இப்டி கோச்சுண்டா எப்டி...? பாதில விட்டுட்டு போறேன்னு பயமுறுத்தினா வேற யார் வந்து செய்வாங்க. நானும் கஷ்டப்பட்டு தானே கடனை உடனே வாங்கி வீடு கட்டறேன். திடீர்னு பணம் புரட்டறதுன்னா சும்மாவா. காசைக் குடுத்துட்டு எதுவுமே கேக்கப்படாதுன்னா எப்டி...? வீட்ல என்னை ஆயிரம் கேள்வி கேக்கறாளே... அவாளுக்கு நா பதில் சொல்ல வேண்டாம்? ஆறு மாசத்துல வேலையை முடிச்சுத்தரேன்னு சொல்லி தானே எங்கிட்ட அட்வான்ஸ் வாங்கினீங்க. இப்ப மாசம் பத்தாகப் போறது இன்னும் பாதி வேலை கூட முடியல. ஆறு லட்சம் எஸ்டிமேஷன் போட்டுக் கொடுத்தீங்க, இப்ப மேலயே ஒன்றரை லட்சம் செலவாயாச்சு. இன்னும் வீடு முடிஞ்ச பாடில்ல. மேல மேல பணமும் கேட்டுண்ருந்தா எங்கிட்ட என்ன கொட்டியா கிடக்கு...? இவ்ளோ பணத்தை உங்ககிட்ட கொட்டிக் குடுத்துட்டு, வேற ஆளைத் தேடிண்டு போன்னு கூசாம சொல்றீங்களே. பேசுவீங்க சார். ஏன்னா இப்ப என் குடுமி உங்ககிட்ட இருக்கு இல்ல? அதனால இஷ்டப்படி ஆட்டிதான் வெப்பீங்க. முத முதல்ல வந்தப்பொ சர்க்கரையா பேசி அட்வான்ஸ் வாங்கினீங்க, வேலை கிடைச்சதும் இப்போ குடுமியப் பிடிச்சுட்டீங்க, உங்களுக்கு இது நல்லதில்ல சார். நியாயமா நடந்துக்கோங்க...

    ஷட் அப் மிஸ்டர் கணேசன். என்ன பேசிட்டே போறீங்க...? பெரிய பெரிய அபாட்மெண்ட்ஸ் கட்டறவன் சார் நான்! யாருக்கு வேணும் உங்க பிசாத்து காசு? என்னமோ உங்க பணத்தையெல்லாம் சுருட்டி நா ஏப்பம் விட்டுட்டா மாதிரி பேசறீங்க? கொஞ்சம் டீஸன்ட்டா பேசக் கத்துக்குங்க சொல்லிட்டேன். இதுவரைக்கும் நீங்க குடுத்த பணத்துக்கு டேட் வாரியா, கணக்கு வச்சிருக்கேன். வாங்கின சாமான்களுக்கு ரசீதும் வெச்சிருக்கேன். கணக்கை டேலி பண்ணி உங்க மூஞ்சிலயே விட்டெறிஞ்சுடறேன் நாளைக்கே! எக்ஸ்ட்ரா செலவு ஆனதுக்கு கூட எனக்கு எதுவும் வேணாம். என் உழைப்பை உங்களுக்கு பிச்சை போட்டதா நினைச்சுக்கறேன்.

    நீங்க ஒண்ணும் எனக்கு பிச்சை போட வேண்டாம். பாதில விட்டுட்டு போறேன்னு பயமுறுத்தவும் வேணாம், என் நேரம் சரியில்ல மொத்தத்துல. இன்னும் ஒரு வாரத்துல பணத்தைக் கொண்டு வந்து தரேன். வேலைய முடிச்சுட்டு போற வழியப் பாருங்க.

    மறுபடியும் சலிச்சுக்கறீங்க! சிமெண்ட் விலை ஏறினதுக்கு நா என்ன சார் செய்வேன்? ஏத்தினவனைப் போய் கேளுங்க. வரிசையா எல்லா சாமானும் ஒவ்வொண்ணா விலை ஏறினா, நான் என்ன பேசிட்டமேன்னு என் சொந்த பணத்தைப் போட்டா உங்களுக்கு வீடு கட்டித்தர முடியும்? நீங்க என்ன எனக்கு மாமனா மச்சானா? வீடுன்னா அப்படித்தான் சார். ஆயிரம் தடங்கல் வரும்! சமாளிக்கதான் வேணும்.

    சொன்னபடி ஆறு மாசத்துல வீட்டை முடிச்சிருந்தா சிமெண்ட் விலை ஏர்றதுக்கு முந்தியே வீடு முடிஞ்சிருக்கும் இல்ல? இப்டி முப்பதாயிரம் திடீர் செலவு வராதில்ல? இந்த செலவு நீங்க பண்ணின டிலேவாலதான்னா உங்களுக்கு ஏன் சார் கோவம் வருது? உண்மையைத்தானே சொல்றேன்.

    "எது சார் உண்மை! ஆறு மாசத்துல முடிஞ்சுடும்னுதான் சொன்னேன். ஆனா வீடுங்கறது நா மட்டும் சம்பந்தப்பட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1