Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavukku Oru Veedu
Ammavukku Oru Veedu
Ammavukku Oru Veedu
Ebook349 pages2 hours

Ammavukku Oru Veedu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580105705539
Ammavukku Oru Veedu

Read more from Vidya Subramaniam

Related to Ammavukku Oru Veedu

Related ebooks

Reviews for Ammavukku Oru Veedu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    All the stories were superb as though the author experienced each and every situations
    And finally the story ammavukku oru veedu it was like a crown its a pleasure to read such a lovely and meaningful stories no words in Dictionary to explain the feelings may God bless you with all his mercy

Book preview

Ammavukku Oru Veedu - Vidya Subramaniam

http://www.pustaka.co.in

அம்மாவுக்கு ஒரு வீடு

குறுநாவல்கள்

Ammakku Oru Veedu

Kurunovelgal

Author:

வித்யா சுப்ரமணியம்

Vidya Subramaniam

For more books

http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

1. தேடி வந்த சொர்ககம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

2. தண்டனை

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

3. காயங்கள்

4. என் இனிய சிநேகிதிக்கு...

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

5. மழை தருமோ என் மேகம்?

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

6. புதிய விடியல்கள்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

7. அம்மாவுக்கு ஒரு வீடு

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

1. தேடி வந்த சொர்ககம்

1

அந்த அறைக்குள் ஒவ்வொரு தலையாக எட்டிப் பார்த்தது. கணிப்பொறி முன் அமர்ந்திருந்த அசோக், நிழலாட்டம் கண்டு திரும்பினான். அம்மா, அப்பா, ராஜி அக்கா, மீனா சித்தி, சித்தியின் பெண் ரம்யா...

என்ன விஷயம்?- எழுந்துகொண்டான்.

அசோக் அண்ணா... உனக்கு கல்யாணமாமே? பட்டென்று கேட்டாள் ரம்யா. மற்றவர்கள் பதற்றமாய் அவளை முறைத்தார்கள். அசோக் முகம் சுருங்க அவர்களைப் பார்த்தான்.

என்னது?

நீ வெளியில வாயேன். உட்கார்ந்து பேசுவோம் அப்பா சொல்ல- ஹாலில் வந்து அமர்ந்தான் அசோக். அவனைச் சுற்றி மற்றவர்கள் உட்கார்ந்தார்கள்.

ஜூன் வந்தா உனக்கு இருபத்தேழு வயசாகப் போகுது அசோக்.

அதுக்கென்ன இப்போ?

உன் வயசுல எனக்கு ராஜி பொறந்து ரெண்டு வயசாகி இருந்தது.

சொல்ல வர்ற விஷயத்தை பட்டுனு சொல்லுங்கப்பா.

உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கோம்.

நான் என்ன பொம்மையா... நீங்க பண்ணிடலாம்னு இருக்கோம்னு சொல்ல.

நாங்க வரன் பார்க்கலாம்னு இருக்கோம்டா.

அதுக்கென்னம்மா அவசரம் இப்போ?

காலா காலத்துல நடக்க வேண்டியது நடந்தாத்தானே நல்லது.

கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கு தோணும்போது நானே உங்ககிட்ட சொல்றேன்... சரியா?

நீ யாரையாவது ‘லவ்' பண்ணிட்டிருந்தாக்கூட சொல்லுடா. உன் விருப்பத்துக்கு குறுக்க நிக்க மாட்டோம்.

அப்படி ஏதாவது இருந்தாலும் சொல்றேன். இப்போதைக்கு எதுவும் இல்ல.

உனக்கு கல்யாணம் பண்ணிக்க 'ஐடியா' இருக்குதானே?

நான் என்ன... சன்னியாசியா போகப் போறேன்னா சொன்னேன்?

அப்பாடா... சந்தோஷம். உன்னோட ‘புரொபைலை' ஏதாவது ‘மேட்ரிமோனியல் வெப்சைட்'ல போடலாம்னு இருக்கேன். நிறைய வரன்கள் வரும்னு சொல்றாங்க. உனக்குப் பிடிச்சா முடிப்போம். என்ன சொல்றே? நீயேகூட அதுல பெண்களை உன் விருப்பத்துக்கு ஏற்றாற்போல தேடலாம்.

ஆக மொத்தம் என்னை சம்சார சாகரத்துல பிடிச்சு தள்ளிட்டுதான் மறுவேலைன்னு எல்லாரும் ஒரு முடிவோடுதான் இருக்கீங்க

பொண்ணுக்கு பண்ணிட்டோம். பையனுக்கும் காலாகாலத்துல பண்ணிடணும்னு நினைக்கிறது தப்பாடா?

அப்புறம் என்ன... உங்க இஷ்டம். 'மேட்ரிமோனியல் சைட்'ல நானே என் விவரங்களை பதிவு பண்ணிடுறேன். சரியா...?

அவன் சொல்ல... அவர்கள் முகம் மலர்ந்தது. கல்யாணமே முடிந்துவிட்டது போல சந்தோஷப்பட்டார்கள்.

அவர்கள் சந்தோஷம் தன்னையும் தொற்றியதை உணர்ந்தான் அசோக். இதுவரை கல்யாணத்தைப் பற்றி அவன் பெரிதாய் ஏதும் சிந்தித்ததில்லை. ஓட்டப் பந்தயமாய் மாறிவிட்ட வாழ்க்கையில், தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில்தான் அவனும் ஈடுபட்டிருந்தான்.

நல்ல மதிப்பெண்களோடு பள்ளி இறுதி வகுப்பும், அதைத் தொடர்ந்து பொறியியல் படிப்பும், பிறகு எம்.பி.ஏ. படிப்பும் முடித்து ஆண்டுக்கு இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் ஊதியத்தோடு மிகப் பெரிய அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலையிலும் அமர்ந்தாயிற்று. இது போதாதா திருமணத்துக்கு தகுதியாக? எல்லாரும் கேட்டதும் அவனுக்கும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

இரவு சாப்பாட்டின்போது மொத்த குடும்பமும் மாற்றி மாற்றி அவனைக் கேள்விகளால் குடைந்தது.

என்ன மாதிரி பொண்ணு வேணும்டா உனக்கு?

ஏம்மா... என்ன மாதிரி அண்ணி வேணும்னு என்னைக் கேளும்மா. நான் சொல்றேன். சிநேகா மாதிரி சிரிப்பு, அனுஷ்கா மாதிரி உயரம், ஹன்சிகா மாதிரி நிறம், திரிஷா மாதிரி ஸ்லிம், லதா மங்கேஷ்கர் மாதிரி குரல், கேரளா பொண்ணுங்க மாதிரி கூந்தல்...

அடடா... ஏன்டி எனக்கு பொண்ணு பாக்கிறியா... இல்ல தமிழ் சினிமாவுக்கு நடிகை தேடுறியா?

இப்பெல்லாம் அப்படித்தாண்ணா. பசங்கல்லாம் பொண்ணு சூப்பரா இருக்கணும்னுதான் முதல் நிபந்தனையே போடுறரங்க. ஏன்... அழகான பொண்ணுன்னா வேணாம்ன்னு சொல்லிடுவியா நீ?"

அழகைவிட குணம் முக்கியம். நமக்கு எதிர்பார்ப்புகள் இருக்கற மாதிரி பெண்களுக்கும் இருக்கும் இல்லையா?

கண்டிப்பா இருக்கும். ஆனா, உன்னை மாதிரி அழகான ஸ்மார்ட்டான, லட்ச லட்சமா சம்பாதிக்கிற பையன் கிடைக்க பொண்ணுங்க குடுத்து வெச்சிருக்கணுமே?

சித்தி சொன்னபோது காதுக்கு குளிர்ச்சியாகத்தான் இருந்தது.

அன்று இரவு அவனே பிரபலமான திருமண இணைய தளம் ஒன்றில் தன்னைப் பற்றிய விவரங்களை பதிவு செய்தான். சமீபத்தில் எடுத்த நான்கைந்து புகைப்படங்களையும் பதிவேற்றினான். உடனடியாக அவனது மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண் வந்தது. தொலைபேசி எண் உறுதி செய்யப்பட்டது.

அந்த நிமிடமே இணைய தளத்தில் பெண் தேடத் தொடங்கினான்.

தனக்கு தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு தேட ஆரம்பித்ததும், பெண்களின் புகைப்படங்களுடன் விவரங்கள் திரையில் தெரிந்தன. ஒவ்வொன்றாக பார்த்தான்.

'அடேயப்பா... இத்தனை பெண்களா?'

கிட்டத்தட்ட எழுபது, எண்பது பெண்களின் விவரங்களைப் பார்த்தான். பல பெண்களை இவனுக்குப் பிடிக்கவில்லை. சில பெண்களின் எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருந்தது. நூறு, நூற்றி இருபது வரன்களை அலசியதில் நான்கைந்து தேறியது. அவர்களுக்கு மட்டும் தனது விருப்பத்தை தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, கணிப்பொறியை அணைத்தவன் படுத்தான்.

படுத்த உடனே தூக்கம் வரவில்லை. தான் தேர்ந்தெடுத்து 'விருப்பம்' அனுப்பிய பெண்கள் தன்னைப் பற்றிய விவரங்களைப் படிப்பார்களா? அத்தனை பேரும் பதில் விருப்பம் அனுப்பினால் என்ன செய்வது? எல்லோரும் படித்திருப்பார்களா? மகிழ்ந்திருப்பார்களோ? தன்னை மணக்க ஐவரும் போட்டி போடுவார்களா? மனசு குறுகுறுவென்றது.

பாதி ராத்திரி வரை தூக்கம் வராமல் மறுபடியும் தனது மடிக்கணினியை திறந்து கல்யாண இணையதளத்தில் நுழைந்து தன் பதிவுப் பக்கத்துக்கு போனான். ஆர்வமானவனின் முகம் சற்றே வாடியது. அவன் விருப்பம் தெரிவித்த எந்த வரனிடம் இருந்தும் பதில் வரவில்லை. ஏமாற்றமாய் இருந்தது. மறுகணம், ‘விருப்பம் தெரிவித்த அடுத்த நிமிடமே பதில் விருப்பம் வந்துவிடும் என நினைப்பது முட்டாள்தனம்' எனத் தோன்ற, கணினியை மூடிவிட்டு படுத்தான்.

மறுநாள் காப்பி குடிக்கும்போதே... ராஜியும், சித்தியும், அம்மாவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

என்னடா... பதிவு பண்ணிட்டியா?

ம் என்று சொன்னவன், தான் நான்கைந்து பேருக்கு விருப்பம் தெரிவித்ததை சொல்லவில்லை.

பதிவு எண் என்னடா?

சொல்றேன்.

பாஸ்வேர்டு'ம், ஐ.டி. நம்பரும் குடுத்துடுடா. அப்பத்தான் நாங்க பார்க்க சவுகரியமா இருக்கும்.

அதெல்லாம் வேணாம் சித்தி. நானே பார்க்கறேன். எனக்குப் பிடிச்ச பொண்ணுங்க விவரமும், போன் நம்பரும் தர்றேன். மத்ததை நீங்க பார்த்துக்கோங்க... சரியா?

"பாருடா. ‘பாஸ்வேர்ட்’ பரம ரகசியம்ங்கறான்.

‘பாஸ்வேர்டே' தேவைப்படாத இன்னொரு ‘மேட்ரிமோனியல் சைட்' இருக்கு. பணம் கட்டி பதிவு பண்ணிட்டா போன் நம்பர், போட்டோ, ஜாதகம் எல்லாத்தையும் வெளிப்படையா யார் வேணா பார்க்கற மாதிரி போட்டுருவாங்க. நாங்க உன் ஜாதகமும், படமும் கொடுத்து அதுலேயும் பதிவு பண்ணிடலாம்னு இருக்கோம்."

என்னமோ செய்யுங்க.

இந்த வருஷமே உன் கல்யாணத்தை நிச்சயம் பண்ணிடணும்டா அசோக்- ராஜி சொன்னாள்.

அதென்ன அவ்ளோ அவசரம்?

என் பட்டுச் சேலையெல்லாம் எப்போ என்னை எடுத்து கட்டுவாள்ன்னு காத்துட்டிருக்கு. தவிர, உன் கல்யாணத்தை சாக்கு வெச்சு இன்னும் ரெண்டு சேலை வாங்கிக்கலாம். புது வளையலும், நெக்லசும்கூட வாங்கலாம்னு இருக்கேன். நிறைய 'பிளான்' இருக்கு.

அது சரி... நீ ‘பேஷன் பரேடு' நடத்த என் கல்யாணம்தான் கிடைச்சுதா?

சும்மாவா பின்ன... ரொம்ப அலுத்துக்காதடா தம்பி. நான் யாருன்னு தெரியுமில்ல? உனக்கு அக்கா மட்டுமில்ல... நாத்தனார் ஸ்தானமாக்கும் வரப்போற பொண்ணுக்கு. உனக்கு ஒரு முடிச்சுதான். நான் மிச்சத்தை போட்டாகணும்.

ஆரம்பிச்சுட்டாடி. ஆளை விடு இப்போ- அசோக் சிரித்தபடி எழுந்தான்.

தினசரி பத்திரியை படித்து, குளித்து, போனில் அழைத்த நண்பர்களுடன் உரையாடி, அம்மா கொடுத்த சிற்றுண்டியை உண்டுவிட்டு அவசர அவசரமாய் அலுவலகம் கிளம்பினான்.

'பைக்'கில் ஏறி அமர்ந்து உதைத்து புறப்பட்டவனை எதிரில் வந்த அப்பா நிறுத்தினார்.

ஏன்டா... ஒரு கார் வாங்கிக்கோன்னா கேக்கிறயா? 'பைக்'ல நீ வேகமா போறதைப் பார்த்தா பக்கு பக்குன்னு இருக்கு. கைநிறைய சம்பளம் வருது. அப்புறம் என்னடா?

உங்களுக்கு வேணா வாங்கித் தர்றேம்ப்பா. எனக்கு 'பைக்' ல போறதுதான் சுவாரசியம். தேவையில்லாம கவலைப்படுறீங்க. நான் ஜாக்கிரதையாத்தான் ஒட்டுறேன். மணியாச்சுப்பா... கிளம்பறேன். அவன் சர்ரென்று வண்டியைக் கிளப்பிச் சென்றான். இரண்டு மணி வரை மூச்சு முட்டும் அளவுக்கு வேலை. பசி வயிற்றைக் கிள்ள- உணவகத்துக்கு போய் சாப்பிட்டுவிட்டு வந்ததும், அந்தவரன்கள் பற்றிய நினைவு வர... கணிப்பொறியில் திருமணத் தளத்தில் ‘லாகின்' செய்தான்.

ம்... ஹூம். ஒருவரிடம் இருந்தும் பதில் வரவில்லை. அதிக ஏமாற்றமாக இருந்தது. எல்லோரும் இவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்திருக்கிறார்கள் என்ற விவரம் திருமண தகவல் மையத்தால் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், யாரும் இவனது விருப்பத்தை ஏற்கவில்லை... மறுக்கவும் இல்லை. இவனது விருப்பம் கிணற்றில் போட்ட கல்லாக வெறுமனே கிடந்தது.

உயர் படிப்புகள், நம்ப முடியாத அளவுக்கு ஊதியம், எவ்வித குறையும் சொல்ல முடியாத தோற்றம். இதைவிட என்ன எதிர்பார்க்கிறார்கள் அந்தப் பெண்கள்! அவனுக்குப் புரியவில்லை.

அன்று இரவு மீண்டும் கணிப்பொறி முன் அமர்ந்தான். ராஜியும், சித்தியும் அருகில் வந்து உட்கார்ந்தார்கள்.

நாங்களும் பார்க்கிறோம்டா.

அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. அதோடு இணைய தளத்தில் நுழைந்தான்.

ஆஹா... ஏழெட்டு வரன்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருப்பதைக் கண்டதும் ராஜி குதூகலித்தான்.

பாருடா... பொண்ணுங்க ஏகமாய் வரிசையில் வந்து நிக்கிறாங்க. அவங்க நம்பரை 'கிளிக்' பண்ணு சீக்கிரம். பார்த்துடுவோம்.

அவன் ஒவ்வொரு எண்ணாக 'கிளிக்' பண்ணை அப்பெண்ணின் ‘புரொபைல்' திரையில் தோன்றியது.

போச்சு... போச்சு... என்னடா இது? அங்கமுத்துக்கு அக்கா மாதிரி இருக்கா. அடுத்ததுக்கு போ.

…….

ஈர்க்குச்சிக்கு சேலை கட்டினது போல இருக்கா. வேற பாரு

…………….

இவ பொண்ணா... இல்ல, பொண்ணுக்கு அம்மாவா? மூஞ்சி இவ்ளோ முத்திப் போயிருக்கு... ‘நெக்ஸ்ட்

……………..

சோமாலியாவிலே இருந்து வந்த மாதிரி கன்னம் ஒட்டிமுழி பிதுங்கி... என்னடா இது அலங்போலம். ஒண்ணுகூட உருப்படியாகத் தேறலையே?

ராஜி சொன்னது போல் ஒன்றுகூடத் தேறவில்லை. சொத்தையும், சொள்ளையுமாக இருந்தது. சித்தியும், ராஜிஷ்யும் போனதும் மீண்டும் பெண் தேடுதலில் இறங்கினான்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றி படுசுவாரசியமாய் எழுதி இருந்தார்கள். அன்றைக்கும் ஏழெட்டு பெண்களை சலித்தெடுத்து விருப்பம் அனுப்பினான்.

'பார்ப்போம்... இவர்களில் யாராவது ஒருவர் சம்மதம் தெரிவித்தால், அடுத்த ஏற்பாட்டை கவனிக்கலாம்.'

எல்லாமே நல்ல வரன்கள் தான். அவனுக்கு பொருத்தமானவர்கள்தான்.

அவன் கணிப்பொறியை அணைத்துவிட்டுப் படுத்தான்.

மறுநாள் காலையில் முதல் வேலையாக பதில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்த்தான்.

எட்டு பேர் ‘விருப்பம் இல்லை' என்று மறுத்திருந்தார்கள். மிச்ச பேரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

அசோக் திகைத்தான்.

'இத்தனைப் பெண்கள் மறுக்கும் அளவுக்கு என்னிடம் என்ன குறை?' என்ற மன உளைச்சல் தாக்கியது.

அலுவலகம் போய்ச் சேர்ந்த அரை மணி நேரத்தில் கைபேசி ஒலித்தது.

எஸ்... அசோக் ஹியர்.

சார்... நீங்க பதிவு பண்ணி இருக்கிற ‘மேட்ரிமோனியல்' ஆபீஸ்ல இருந்து பேசுறோம். உங்ககிட்ட அஞ்சு நிமிஷம் பேசலாமா சார்?- இனிய குரலில் பேசியது ஒரு பெண்.

சொல்லுங்க

எங்க இணைய தளத்துல பதிவு பண்ணி வரன் தேடிட்டு இருக்கீங்க. உங்களுக்கு நல்ல வரன் கிடைக்க எங்களுடைய வாழ்த்துகளை முதல்ல தெரிவிச்சுக்கிறேன் சார். இப்ப பார்த்தீங்கன்னா... நீங்க இலவசமா பதிவு பண்ணி இருக்கீங்க. இதனால உங்களுக்கு வரன்களோட போன் நம்பர், ஈமெயில் எதுவும் பார்க்க முடியாது. அதேது நீங்க பணம் கட்டி 'மெம்பர்' ஆகிட்டீங்கன்னா உங்களுக்கு இன்னும் நிறைய வசதிகள் கிடைக்கும். சீக்கிரமே வரன் அமைஞ்சிடும். எங்ககிட்ட நாலுவிதமான 'பேக்கேஜ்' இருக்கு.

எக்ஸ்கியூஸ்மி... நான் இப்போ முக்கியமான வேலையில் இருக்கேன். இதைப் பத்தி அப்புறம் பேசலாமே?

எப்போ மறுபடியும் பேசலாம் சார்?

தேவைப்படும்போது நானே போன் பண்ணுறேன்.

'மொபைலை" வைத்தான்.

வரன் வருகிறதோ இல்லையோ... தினமும் ஒரு பெண் அந்த திருமணத் தகவல் மையத்தில் இருந்து பேசினாள், பணம் கட்டச் சொல்லி. அசோக்குக்கு எரிச்சல்தான் வந்தது.

2

என்னடா மாப்ள... போன் மேல போன் வந்துட்டே இருக்கு! என்ன... எதாவது பட்சியா? - நண்பன் பிரேம் கேட்டான். அவன் சமீபத்தில்தான் கல்யாணம் செய்துகொண்டான்.

அதை ஏன் கேக்கற? வீட்ல விடாம பிடுங்கினாங்கன்னு ஒரு ‘மேட்ரிமோனியல் வெப்சைட்'ல என் ‘புரொபைலை' போட்டு வெச்சேன். ‘பணம்கட்டி உறுப்பினராயிடுங்க'ன்னு தினம் நாலு போன். ஆளுங்க மாத்தி மாத்தி பேசறாங்க. எரிச்சலா இருக்கு.

"எரிச்சல்படாத! அவங்க இடத்துல இருந்து வேலை பார்த்தா நாமளும்தான் யாருக்காவது போன் பண்ணி பேசிட்டிருப்போம். அதுக்குத்தானே அவங்களை வேலைக்கு வெச்சிருக்காங்க. சும்மா யாராவது நமக்கு சேவை பண்ணுவாங்களா? நானும் அந்த ‘வெப்சைட்'லதான் பதிவு பண்ணினேன். இதே மாதிரிதான் தினம் நாலு போன். சரின்னு பணம் கட்டினேன். ஒரு பொண்ணைத் தட்டிக் கழிச்சிருப்பேன். என்னை நூறு பொண்ணுங்க வேணாம்னு சொல்லிட்டாங்க.

வரிசையா பொண்ணுங்க 'வேணாம்'னு சொல்லும்போது... 'ச்சே போ'ன்னு மனசு விரக்தியாயிடும். 'எனக்கு கல்யாணமே வேணாம். விட்டுடுங்க'ன்னுகூட வீட்ல புலம்பி இருக்கேன். அவங்க விட்ருவாங்களா? கடைசியில என் ஒண்ணுவிட்ட மாமி மூலமா வந்த வரன்தான் சுவேதா. எங்க வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளிதான் இருந்தாங்க. ‘பக்கத்து தெருவுலயே வகைகள் பொண்ணை வெச்சிக்கிட்டு, ஊரெல்லாம் தேடி அலைஞ்சோம் பாரு...'ன்னு சொன்னாங்க அம்மாவும், அப்பாவும்.

அதனால இந்த விஷயத்துலல்லாம் மனசைத் தளர விடக்கூடாது. வாழ்நாள் பூரா நம்மோட இருக்கப்போறவளை எடுத்தோம்... கவுத்தோம்னு தேர்ந்தெடுத்தோம்னா பின்னால நமக்குத்தான் கஷ்டம். உனக்குப் பிடிச்ச பொண்ணு கிடைக்கிற வரை தேடு. பார்த்தா எல்லாமே பளபளன்னு நல்லா இருக்கிற மாதிரிதான் தோணும். அதனால எல்லா விஷயங்களும் ஒத்துப் போகுதான்னு பார்த்து விருப்பம் அனுப்பு.

பிரேம் நீண்ட உபதேசம் செய்தான்.

திருமணம் என்பது சுலபமான விஷயமல்ல என்பது புரிந்தது. அதனாலேயே அதில் ஆர்வம் கூடியது.

அப்படின்னா பணம் கட்டலாம்ங்கிறியா?

நீ கட்டுற பணம் எவ்ளோ மாசத்துக்குன்டை அதுக்குள்ள எந்த வரனும் முடியாட்டி மறுபடியும் கட்டணும் உன் சம்பாத்தியத்துக்கு இதெல்லாம் ஒரு செலவே இலவசத்துல இருந்தா 'கம்யூனிகேசன்' பண்ணுறது கஷ்டம். போன் நம்பர், இ-மெயில் எதுவும் பார்க்க தொடர்பு கொள்ளவோ முடியாது. அதனால் உனக்கு பேசதியா ஒரு ‘பேக்கேஜ்' பார்த்து பணம் கட்டு. உன் அதிர்ஷ்டம். முடியறதுக்குள்ளயே பொண்ணு கிடைச்சிடலாம்.

அவன் சொன்னபடி மூன்று மாத 'பேக்கேஜில்' அவர்கள் சொன்ன தொகையைச் செலுத்தினான். அம்மா தன் பங்கும் மற்றொரு திருமணத் தகவல் மையத்தில் புகைப்படம், மாகம் ‘போன் நம்பர்' கொடுத்து பணம் கட்டி இருந்தாள். மூன்றுமாத 'பேக்கேஜு'க்கு பணம் செலுத்திய அடுத்த நிமிடத்தில் இருந்து அந்த அலுவலகத்தில் இருந்து அதுவரை போன் செய்து பணம் கட்டச் சொல்லி தொந்தரவு செய்து ஒருவரும் பேசவில்லை. அவர்கள் காரியம் முடிந்தது போல் கம்மென்று ஆகிவிட்டார்கள்.

'இனி உன் கல்யாணம் நடந்தால் என்ன... நடக்காவிட்டால் என்ன?' என்பது போல் 'நீயாயிற்று... பெண்ணைப் பெற்றவர்கள் ஆகிற்று' என ஒதுங்கிக் கொண்டார்கள். இவனாக ‘லாகின் பண்ணிப் பார்க்க வேண்டும். தினமும் இரவு இரண்டு மணி

Enjoying the preview?
Page 1 of 1