Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavukku Kalangamillai
Nilavukku Kalangamillai
Nilavukku Kalangamillai
Ebook152 pages49 minutes

Nilavukku Kalangamillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“கவுரவம்” இந்த வார்த்தையால் பல குடும்பங்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளது.
நம் கதையில் வரும் நாயகனும் அந்த ரகத்தைச் சேர்ந்தவன் தான். தன் வறட்டு கவுரவத்திற்காக வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷமான தன் காதலை தூக்கி எறிகிறான்.
மிகப்பெரிய டாக்டர் படிப்பு படித்தும் சின்ன விஷயங்களில் மனதை செலுத்தியதால் உண்டாகும் விளைவு அது.
அதன் பின் அவன் என்ன ஆனான்? இறுதியில் அவன் காதல் கைகூடியதா என்பதை நாம் ‘நிலவுக்கு களங்கமில்லை’ என்ற நாவல் வாயிலாக காண்போம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106154
Nilavukku Kalangamillai

Read more from R. Sumathi

Related to Nilavukku Kalangamillai

Related ebooks

Reviews for Nilavukku Kalangamillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavukku Kalangamillai - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    நிலவுக்கு களங்கமில்லை

    Nilavukku Kalangamillai

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    சுகந்தி தன் இடக்கையை உயர்த்திப் பார்த்தாள். மணி மாலை நான்கு. கிளம்ப வேண்டும் என நினைத்தபோதே மனம் துள்ளியது.

    அந்த பெரிய அரசாங்க மருத்துவமனையில் அவள் ஒரு டாக்டர். இருபத்தாறு வயதில் நல்ல இளமையோடும் அழகோடும் கம்பீரமாக இருந்தாள். கடமையில் கண்ணும் கருத்துமாக உள்ள ஒரு பொறுப்பான டாக்டர். அவளை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோரையும் அவளுக்கும் பிடிக்கும். எல்லோரையும்விட முக்கியமாக மதனை மிகவும் பிடிக்கும்.

    மதன் இன்று வருகிறான். அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்காக சென்றவன் இரண்டு வருடம் கழித்து வருகிறான். வந்தவுடன் இந்த அரசாங்க மருத்துவமனையில் தலைமை டாக்டர் என்ற பொறுப்பையும் மதிப்பையும் பெறத் தயாராக வருபவன். மூளை சம்பந்தப்பட்ட அத்தனை ஆராய்ச்சிகளையும் கற்றுக்கொள்ள அரசாங்கம் அவனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது. இளம்வயதிலேயே அறிவும் திறமையும் அதிகம் உடைய அவனுக்கு முப்பத்திரண்டு வயதிருக்கும்.

    அவனை வரவேற்க மருத்துவமனையில் இருந்து எல்லா மருத்துவர்களும் செல்கிறார்கள். சுகந்தி அவர்களுடன் சேர்ந்துப் போக முடியாது.

    வீட்டில் அவளுக்காக தினேஷ் காத்திருப்பான். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்து வேலைக்காரியிடம் வம்பு செய்து கொண்டிருப்பான். சரியான வால். மதன் ஒவ்வொரு லட்டரிலும் தினேஷை செல்லமாக வைத்திருக்கச் சொன்னதின் விளைவு இது.

    ஆனால் படிப்பில் படுசுட்டி. வீட்டிற்கு சென்று அவனை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும். வீட்டிலும் அவள் தனியாக கிளீனிக் வைத்திருந்தாள். ஆனால் வீட்டிற்கு சென்றதும் இன்று யாரையும் பார்க்க முடியாது.

    அவசர அவசரமாகக் கிளம்பினாள். ஹேண்ட பேக் ஜிப்பை இழுத்து மூடிவிட்டு எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு அறையைவிட்டு வெளியில் வந்தபோது வராண்டாவைக் கடந்து டாக்டர் சேகர் வந்து கொண்டிருந்தான். புதிதாக அந்த மருத்துவமனைக்கு வந்திருப்பவன். சொந்த ஊர் சிதம்பரம் பக்கம் ஏதோ கிராமம். பழைய கால ஜெமினிகணேசனை நினைவுப்படுத்தும் தோற்றம். சுகந்தியைப் பார்த்ததும் சிரித்தபடியே நின்று கேட்டான்.

    என்ன கிளம்பியாச்சா?

    ம்… வீட்ல தினேஷ் காத்திருப்பான். அவனை அழைச்சுகிட்டுத்தான் ஏர்போர்ட்டுக்குப் போகணும்.

    நானும் மதனை சந்திப்பதில் ரொம்ப சந்தோஷப்படறேன். வந்ததும் அடுத்த மாசமே கல்யாண சாப்பாடு போடுவீங்கள்ல…

    சேகர் அப்படிக் கேட்டதும் சுகந்திக்கு முகத்தில் சட்டென நாணம் பரவியது. நாணத்தையே பதிலாய் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். வெளியில் வந்து தன் மாருதிக் காரை வெளியே எடுத்தாள். தானே ஓட்டிக்கொண்டு வீடு நோக்கிப் பயணித்தாள்.

    சுகந்தி பெங்களூரில் பிறந்து வளர்ந்தவள். அப்பா தமிழ்காரர். அம்மா கன்னடக்காரி. அம்மாவைப்போல் அழகும், அப்பாவைப்போல் தைரியமும் துணிச்சலும் கொண்டவள். படிப்பு முழுவதும் பெங்களூரிலேயே. மெடிக்கல் காலேஜில் அவளுக்கு சீனியர் மதன். அப்பாவும் ஒரு டாக்டர். அதனால் அவன் அப்பாவைத் தேடி அடிக்கடி வீட்டிற்கு வருவான். மெடிக்கல் காலேஜில் பாடம் எடுக்கவும் சுகந்தியின் தந்தை செல்வார். அதனால் மாணவனாக ஒட்டிக்கொண்ட மதன், நாளடைவில் சுகந்தியின் மனதில் மணவாளனாகவும் ஒட்டிக் கொண்டான்.

    மதனின் சொந்த ஊர் சென்னை. பெங்களூரில் தன் தாய்மாமன் வீட்டில் தங்கிப் படித்தான். படிப்பு முடிந்து இருவரும் பெங்ளூரிலேயே கொஞ்ச நாள் இருந்தனர். மதன் தனியாக கிளீனிக் ஆரம்பித்தான். அந்த சமயத்தில்தான் அவளின் தந்தை இறந்துப் போனார். தன் படிப்பு முடிந்ததும் தந்தையின் கிளீனிக்கில் தன் கடமையை ஆரம்பித்தாள், சுகந்தி. அப்பொழுதுதான் மதனுக்கு சென்னையில் அரசு மருத்துவமனையில் வேலைக் கிடைத்தது. சுகந்தி பெங்களூரிலேயே இருந்தாள். அவர்களின் காதல் மட்டும் வளர்ந்தது.

    மதனை நினைத்தாலே சுகந்திக்கு நெஞ்சு சிலிர்த்தது. கடமை கடமை என சுழன்ற தன் வாழ்க்கையில் இந்த இரண்டு வருடமாய் மதன் கற்பனையிலும் கடிதத்திலும் மட்டும் காதல் பேசினான். இனிமேல் வெகு அருகில் வரப்போகிறான். காதல் பேச போகிறான்.

    ஊரும் உலகமும் போற்ற மிஸஸ் மதனாகப் போகிறாள். தலைமை டாக்டராக அதற்குள் பதவி உயர்வுப் பெறப்போகும் மனிதனின் மனைவி என்ற பெருமை நெஞ்சைப் பூரிக்க வைக்கும்.

    எப்பொழுதுமே மதன் மற்ற எல்லா டாக்டர்களுக்கும் தலைமை போல்தான் பார்க்கப்படுவான். அவன் அட்டென் பண்ணிய எந்த கேசும் தோற்றதில்லை. எத்தனையோ கேஸ்களில் சிக்கலான நேரங்களில் அவனைத்தான் கூப்பிடுவார்கள். அவன் அந்த மாதிரி நேரங்களில் மிகவும் அக்கறையுடன் வெற்றியை எட்டிப் பிடித்து விடுவதால் எல்லோரும் அவனை மிகவும் மதித்தனர். வயதில் முதிர்ந்த மருத்துவர்கள்கூட எந்தவித ஈகோவும் இல்லாமல் அவனிடம் சமமாக மருத்துவ விஷயங்களைக் கலந்துரையாடுவார்கள்.

    மருத்துவமனையிலும் வெளி உலகிலும் அவனுக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது. எப்பொழுதும் சிரிப்பும் பொறுமையும் நர்த்தனமாடும் அவன் முகத்தை நாளெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். எந்த நேரத்திலும் களைப்படையாத நிலையை அவன் நிறைய வைத்திருந்தான். எந்த நேரமாயிருந்தாலும் அவன் தன் கடமைக்கு தயார் நிலையில் இருந்தான்.

    இப்பொழுது பல மருத்துவ நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வருகிறான். இந்த சமூகம் அவனை பூவை மொய்க்கும் ஈக்களாய் மொய்த்துக்கொள்ளப் போகிறது.

    அவனோடு இணைந்து அவனுக்கு எல்லா விஷயங்களிலும் தோள் கொடுக்கத் தயாராக இதோ சுகந்தி காத்திருக்கிறாள்.

    அவளுக்காக வீட்டில் தினேஷ் காத்திருக்கிறான். தினேஷை நினைக்கும்போது அவளுக்கு இன்னும் நெஞ்சம் திளைத்தது. மறுபடி மதன் மனதில் மிக உயரத்திற்கு சென்றான்.

    மதன் தந்த மாபெரும் பரிசு. தினேஷின் குண்டு விழிகளும் சிவந்த கன்னங்களும் கண்ணெதிரே தோன்றியது.

    2

    வாசலில் கார் வந்து நின்றதுமே சோபாவில் குப்புறப்படுத்துக்கொண்டு தன் டிராயிங் நோட்டில் கலர் பென்சிலால் கிறுக்கிக் கொண்டிருந்த தினேஷ் நிமிர்ந்தான். கவனமாக நோட்டை மூடி பென்சில்களை பாக்ஸில் வைத்துவிட்டு ஓடி வந்தான்.

    எதையும் அப்படியே போட்டுவிட்டு ஓடி வருவது அம்மாவிற்குப் பிடிக்காது என அவனுக்குத் தெரியும். ஓடி வரும்போதே தன் இடக்கையால் கேசத்தை சரிசெய்து கொண்டான்.

    அம்மா மிகவும் கண்டிப்பு. தலை கலைந்து கிடந்தால் திட்டுவாள். அவன் வாசலுக்கு வந்தபோது சுகந்தி போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு வந்தாள்.

    தன் பிஞ்சுக் கைகளை விரித்து பட்டாம்பூச்சிபோல் ஓடிவந்து,

    அம்மா எனக் கட்டிக்கொண்ட தினேஷை அப்படியே தூக்கி பட்டுக் கன்னங்களில் முத்தமிட்டாள் சுகந்தி.

    அம்மா… இன்னைக்கு டாடியைக் காட்டறேன்னு சொன்னியே.

    ம்… அதுக்காகத்தான் போறோம் என்றவாறு உள்ளே வந்தாள்.

    டாடி… என்னை மாதிரி இருப்பாராம்மா? தினேஷ் அம்மாவின் காது வளையத்தில் விரலைவிட்டு ஆட்டியபடியே கேட்டான்.

    ம்… உன்னை மாதிரித்தான் இருப்பாரு. உனக்காக என்னன்னவெல்லாம் வாங்கிட்டு வந்திருப்பாருன்னு நீயே பாரு. அப்பா பெரிய படிப்பெல்லாம் முடிச்சுட்டு வர்றாரு. நீ எப்படிப் படிக்கிறேன்னு கேட்பாரு நீ இனிமே நல்லாப் படிக்கணும். ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் என்ன? சுகந்தி மூக்கால் தினேஷின் மூக்கை

    Enjoying the preview?
    Page 1 of 1