Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Pookkal Uthiruma?
Kaadhal Pookkal Uthiruma?
Kaadhal Pookkal Uthiruma?
Ebook117 pages59 minutes

Kaadhal Pookkal Uthiruma?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூமழை என்பவளின் மனதில் பழி உணர்ச்சியும், கோபம், குரோதம் போன்ற கெட்ட எண்ணங்களைக் கொண்டவள். இந்த எண்ணங்களைக் கொண்டு பரிதி, அருவியின் காதல் வாழ்க்கையை நாசம் செய்ய இவள் தீட்டும் சதி திட்டங்கள் என்ன? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மாறன், செந்தமிழ் இவர்கள் யார்? இறுதியில் பூமழையின் எண்ணம் நிறைவேறியதா? வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580137109352
Kaadhal Pookkal Uthiruma?

Read more from R. Sumathi

Related to Kaadhal Pookkal Uthiruma?

Related ebooks

Reviews for Kaadhal Pookkal Uthiruma?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Pookkal Uthiruma? - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் பூக்கள் உதிருமா?

    Kaadhal Pookkal Uthiruma?

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    கணிணியின் எதிரே அமர்ந்திருந்தான் பரிதி.

    கடமையை செய்யவிடாமல் தடை செய்தது அவளுடைய நினைவுகள். படைக் கொண்டு தாக்கின. மடை திறந்த வெள்ளமாய் கவனச் சிதறலை உண்டுப்பண்ணின.

    மணிக்கணக்காய் கணிணியின் முன் உட்கார்ந்திருந்தாலும் மனம் என்னவோ தனக்கான கணக்கை மட்டுமே போட்டுக் கொண்டிருந்தது. கணக்கு. காதல் கணக்கு. காதலை கணக்கென்று சொல்வதா? இலக்கியம் என்றுதானே இத்தனை நாட்களும் கவிஞர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். கணக்குப் பண்ணி வந்த இலக்கியம் என்று வைத்துக் கொள்ளலாமா?

    ஆனால்…அந்தக் கணக்கு கொஞ்ச நாட்களாக பிணக்காகிக் கொண்டிருக்கிறது. பிணக்கை இணக்கமாக்க மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது.

    அருவி!

    ஆறு, குளம், கடல் போல் நீர் நிலை என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.

    அருவி. அவளுடைய பெயர். பரிதியின் காதலியினுடைய பெயர். குற்றாலத்துக்கு பிக்னிக் போகும் போது நீ பிறந்துட்டியா? அதான் உங்கப்பா உனக்கு அருவின்னு பெயர் வச்சுட்டாரா? என்று கலாய்ப்பான் பரிதி.

    ஆளைப்பாரு… எங்கப்பா தமிழ் பண்டிட். இலக்கியத்திலேயே எந்நேரமும் ஊறிக்கிடப்பவர். அவருக்கு இலக்கியத்திலேயே பிடிச்சது குற்றாலக் குறவஞ்சிதான். அதனாலதான் எனக்கு அருவின்னு பேர் வச்சுட்டார்.

    நல்ல வேளை கலிங்கத்துப் பரணியில ஈடுபாடு இல்லாமப் போச்சு. இல்லாட்டி பேய்ன்னு வச்சிருப்பார்

    என்ன உளர்றே? கலங்கத்துப் பரணிக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்?

    போர் களத்துல நடக்கறதை லைவ்வா பார்க்கற மாதிரி பாடப்பட்டதுதான் கலிங்கத்துப் பரணி. அங்க வெட்டுப்பட்டுக் கிடக்கற பிணங்களை பேய்ங்க திங்கறதா இதுல இருக்கற பாட்டெல்லாம் படிக்கவே ரொம்ப பயமாயிருக்கும். அதுல பேய்ங்களைப் பத்தின பாட்டுத்தான் அதிகம். அதான்... பேய்ன்னு வைக்காமப் போனாரேன்னு சொன்னேன்.

    அருவியைப் போலவே பளீரென சிரிப்பாள் அருவி. குற்றால அருவியில் குளித்தது போலிருக்கும் அவளுடைய அருகாமை. பொறாமைப் பட வைக்கும் மற்ற பெண்களை அவளுடைய அழகு. பளீரென்ற தோற்றம், சிலீரென்ற பேச்சு, கலீரென்ற சிரிப்பு… அருவி இருக்குமிடமே புத்துணர்வு பொங்கிப் பாயுமென்றால் அந்த அருவியை காதல் என்ற குத்தகைக்குள் கொண்டு வந்து நாளை கல்யாணம் என்ற பட்டாவிற்குள் சொந்தமாக்கிக் கொள்ள துடிக்கும் பரிதிக்கு அவளை சந்திக்க முடியாத இந்த ஒருவாரமும் எப்படியிருக்கும்?

    ச்சே… என்று சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். எரிச்சலாக இருந்தது. ‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்? ஃபோன் செய்தாலும் எடுக்க மாட்டேன்கிறாள். பெரும்பாலான நேரங்களில் பிசி… பிசி…என்றே பினாத்துகிறது அவளுடைய அலைபேசி. எப்படியாவது பிடித்தாலும் ‘ஸாரிப்பா ரொம்ப பிசி. பேசக் கூட நேரம் இல்லை.’ என்கிறாள்.

    சரித்திர அறிவு அவனை சற்றே தைரியப்படுத்தியது. கஜினி முகமதை வணங்கி மறுபடியும் கால் செய்தான். வழக்கமான பிசி என்ற பினாத்தல்தான். சரித்திர அறிவுக்கு சற்றே குறையாமல் புராண அறிவும் கைக் கொடுத்தது. தன் முயற்ச்சியில் சற்றும் சளைக்காத விக்ரமாதித்தனாக மாறி தொடர்ந்து முயல அதே பினாத்தல்தான்.

    கோபமாக அலைபேசியை மேசை மீது வீசிய போது…

    என்ன மச்சான்…ரொம்ப கோபமாயிருக்க போலிருக்கு என்றபடி வந்தான் ரவி

    ச்சை…இந்த பொண்ணுங்களே இப்படித்தான். எப்பவும் நம்மை சுத்தல்ல விடடுடுவாளுங்க அலுத்துக் கொண்ட நண்பனின் தோளைத் தொட்டு அசைத்தான் ரவி.

    என்ன... மச்சான் அருவிக் கூட ஏதாவது ஊடலா?

    க்கும். கூடல் இருந்தால்தானே ஊடலெல்லாம் இருக்கும்

    அடப்பாவி… என்னாச்சு? இப்படி அலுத்துக்கறே? தினமும் நீ அஞ்சு மணியானதும் டாண்னு கிளம்பிடுவே? அருவியோடு பார்க், பீச்சு, ரெஸ்டாரெண்ட்டுன்னு தினமும் ஒரு இடத்துக்கு சுத்துவே. காதல் வானில் சுதந்திரமா சிறகடிச்சுப் பறந்துக்கிட்டிருந்த காதல் கிளி நீ. இப்ப என்ன ஆச்சு?

    சிறகடிச்சு பறந்ததெல்லாம் பத்து நாளுக்கு முன்னாடி வரை. இப்ப அவளை சந்திக்கிறதே என்னமோ ப்ரைம் மினிஸ்டரை சந்திக்கிற மாதிரி இருக்கு

    அரசியல்ல குதிச்சிட்டாள்ன்னு சொல்லு

    நீ வேற வெறுப்பேத்தாதே

    ஏன் மச்சான் இப்படி டென்ஷன் ஆகறே?

    பின்ன என்னடா… ஃபோன் பண்ணினா… அவ நம்பர் எப்பவும் பிஸி பிஸின்னு வருது. ஈவினிங் மெசேஜ் போட்டா நாளை சந்திக்கலாம் நாளை சந்திக்கலாம்னு பதில் போடறா. மறுநாளும் இதேதான்.

    ஏதாவது முக்கிய வேலையோ என்னமோ?

    என்னமோ இவதான் அதிசயமா வேலைப் பார்க்கற மாதிரி. இந்த பொண்ணுங்களே இப்படித்தான். ஏதோ இவர்கள்தான் உலகத்திலேயே அர்ப்பணிப்புடன் வேலை செய்வதாகக் காட்டிப்பாங்க. இல்லை மாட்டிக் கிட்டானே…அனுபவிக்கட்டும்னு என்னை தவிக்க விடுறாளோ என்னமோ?

    இப்ப சொன்னியே இது நூத்துக்கு நூறு நிஜம். நம்ம ஆஃபிஸ்ல பார்க்கலை? அவளுங்க பார்க்கற அதே வேலையைத்தான் நாமும் பார்க்கிறோம். ஆனா… இவளுங்க மட்டும் என்னா அலட்டு அலட்றாளுங்க. என்னோடதான் ஜாயின் பண்ணினா... சாந்தி. என்னமோ தான்தான் கம்பெனியையே தூக்கி நிறுத்தறதா எம்.டிக்கிட்ட நடிச்சு ப்ரமோஷன்ல எனக்கே ஹெட்டா ஆயிட்டா

    சந்தடி சாக்கில் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டினான்.

    அதுக்குத்தான் மச்சான் நம்மை ரொம்ப அலைய விடறவளுங்களை நாமளும் கண்டுக்கவேக் கூடாது. அவளுங்களைப் பார்க்க நமக்கும் நேரம் இல்லைன்னு நாமும் பிசியா காட்டிக்கனும். நம்ம வீக்னெஸை தெரிஞ்சுக்கிட்டாளுங்ன்னு வச்சுக்க காலம் பூரா நம்மை அடிமையாக்கிடுவாளுங்க

    "அனுபவம்

    Enjoying the preview?
    Page 1 of 1