Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalamellam Kaathirupen
Kaalamellam Kaathirupen
Kaalamellam Kaathirupen
Ebook55 pages25 minutes

Kaalamellam Kaathirupen

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

She has written many Tamil novels and short stories.
Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580109404883
Kaalamellam Kaathirupen

Read more from Usha Subramanian

Related to Kaalamellam Kaathirupen

Related ebooks

Reviews for Kaalamellam Kaathirupen

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalamellam Kaathirupen - Usha Subramanian

    http://www.pustaka.co.in

    காலமெல்லாம் காத்திருப்பேன்

    Kaalamellam Kaathirupen

    Author:

    உஷா சுப்பிரமணியன்

    Usha Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/usha-subramanian-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    1

    சாயாவை இரண்டு டம்ளருக்குமாக நுரைவர ஆற்றி, அரை க்ளாஸை லாவகமாக ஒரு க்ளாஸாக்கி கஸ்டமர் முன் வைத்த மணி சமையலறை மூலையில் சென்று சோர்வுடன் அமர்ந்து கொண்டான்.

    மனதில் வலி, எதையோ எதிர்பார்க்கும் ஏக்கம், உலகில் தனக்கு எதுவுமே இல்லாமல் போனது போன்ற துக்கம். கடந்த ஒரு மாதமாக இப்படித்தான் அவன் சோர்ந்து போகிறான்.

    அவனும் பம்பாய்க்கு வந்து முழுவதாக ஆறு வருடமாகிறது. சொந்த பந்தம், உறவுகள் அத்தனையும் ‘இன்றோடு தொலைந்தது’ என்று அவன் உதறிவிட்டு வந்து நிறையக் காலமாகிவிட்டது. நாட்கணக்கில் பட்டினி கிடந்து நடைபாதைகளில் படுத்து தூங்கி, கந்தல் துணியுடன் பிச்சை எடுத்துக் கழித்த நாட்களில் தோன்றாத தனிமை உணர்ச்சி இப்போது ஏனோ வாட்டுகிறது.

    யோவ்... மணி... என்னா ஆச்சு உனக்கு. மாசாந்தரம் படற பொம்பளை மாதிரி மூலையிலே குந்திக்கிட்டு இருக்கே. எழுந்திருடா... குஞ்சங் குட்டி நாயர் உரத்த குரலில் கத்தினார். வர, வரப் பசங்களுக்கு வேலைசெய்யச் சுறுசுறுப்பே கிடையாது. சினிமாப் பார்க்கறதுக்கும், சீட்டாடறதுக்கும், தூங்கறதுக்கும் தான் உடம்பிலே மஸ்த் இருக்கும்.

    மணி மூலையிலிருந்து எழுந்திருந்து வேண்டா வெறுப்பாக வாடிக்கையாளர்களைக் கவனிக்கச் சென்றான். 

    அவனுக்கு இந்த ஏக்கம் தோன்றக் காரணமாக இருந்தவள் மின்னி. இடுப்புவரை மட்டும் ஸ்கர்ட் அணிந்து, டீக்கடை வாசலில் படுத்துறங்கும் பத்து வயதுப் பெண் மின்னி. இந்த பம்பாய் நகரின் ஆயிரக்கணக்கான சாக்கடைச் சேரிகளில் ஒன்றில் பிறந்து, அப்பன் பெயர் தெரியாமல் வளர்ந்தவள். ஆத்தாக்காரியும் திடீரெனச் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாளாம். இந்த மாதிரிக் குழந்தைகளுக்கு தானாக இருக்கும் தாக்குப்பிடிக்கும் திறனுடன் வேலை தேடி கடை, கடையாய் இறங்கினான்.

    குஞ்சங்குட்டி நாயருக்கு. ஏனோ சின்னப்பசங்கள் என்றால் இரக்கம் அதிகம். மின்னிக்கும் இரண்டு வேளையும் பன்னும், டீயும் தருவான். அவளும் பதிலுக்கு கடைக்கு வெளியே கூட்டித் தண்ணீர் தெளித்தாள். பாய்லரையும், டீ பாத்திரங்களையும் துலக்கி தந்தாள். சின்னபொண்ணு தான் என்றாலும் இந்தப் பட்டணத்துலே தனியா அலைஞ்சா, கெட்ட காரியத்துக்குத்தான் கூப்பிடுவான். நீ நேரத்தோட எங்கே வேணுமானா போயி வேலை செய். ஆனா பொழுது சாய்ந்ததும் கடைக்கு வந்துடு என்று கட்டளையிட்டிருந்தார்.

    அதோடு நில்லாமல் பாதுகாப்பாக மணியை அழைத்து, "டேய், இந்தக்குட்டி ஒன் தங்கச்சி மாதிரி. வேலை வாங்கிட்டு சோறு போடு. தப்பில்லை. முறைச்சா அடி, ஒதை... பரவாயில்லை. ஆனா, ஒரு பிராணி கை இவமேல

    Enjoying the preview?
    Page 1 of 1