Usha Subramanian Kadhaigal Part - 1
()
About this ebook
Read more from Usha Subramanian
Kaalamellam Kaathirupen Rating: 0 out of 5 stars0 ratingsMogam Enbathu Ithuthano? Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Nimidam Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Oru Seethaidhan Rating: 4 out of 5 stars4/5Vazhkkai Thodarum... Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsAngey Sila Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 2 Rating: 5 out of 5 stars5/5Usha Subramanian Kadhaigal Part - 4 Rating: 5 out of 5 stars5/5
Related to Usha Subramanian Kadhaigal Part - 1
Related ebooks
Parvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsThoonga Vithaigal... Rating: 4 out of 5 stars4/5Kanavu En Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsArputha Aani Muthey! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Kana Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsNeethane En Vasantham...! Rating: 4 out of 5 stars4/5Meendum Naalai Varum Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsVilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Ottrai Paravai Rating: 5 out of 5 stars5/5Ninaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Pesuma? Rating: 2 out of 5 stars2/5Arumugam Rating: 0 out of 5 stars0 ratingsVaasalile Vazhai Maram Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5குங்குமக் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Rosavey Rating: 0 out of 5 stars0 ratingsPallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Aasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsThulasithalam Rating: 5 out of 5 stars5/5Vimala Ramaniyin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsFranceil Prasanna Rating: 0 out of 5 stars0 ratingsNee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsSonnapadi Kelungal Rating: 0 out of 5 stars0 ratingsKalyana valaiyosai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Usha Subramanian Kadhaigal Part - 1
0 ratings0 reviews
Book preview
Usha Subramanian Kadhaigal Part - 1 - Usha Subramanian
http://www.pustaka.co.in
உஷா சுப்பிரமணியன் கதைகள்
பாகம் - 1
Usha Subramanian Kadhaigal
Part - 1
Author:
உஷா சுப்பிரமணியன்
Usha Subramanian
For other books
http://www.pustaka.co.in/home/author/usha-subramanian
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. புகை
2. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
3. பொதி கழுதைகள்
4. எனக்கும் ஒரு கதை உண்டு
5. பாதை
6. தலைவன்
7. பாட்டியின் பயணம்
8. போருக்குப் புறப்பட்டவள்
9. ஒரு முடிவு ஒரு ஆரம்பம்
10. கிழியும் முகமூடிகள்
11. அது என் பெயரில்லை
12. உலக அழகியிடம் ஒரு ரகசியம்
13. மாறுபாடுகள்
14. மிதியடிகள்
15. உப்பும் நீரும்
புகை
சுசீலா ஆர்.எம்.ஓ - விடமிருந்து கேஸ் ஹிஸ்டரி ஷீட்டுக்களைப் பெற்றுக் கொண்டாள். டாக்டர் சேகர் இருக்கார். ஹி வில் ஹெல்ப் யூ...
- ஆர்.எம்.ஒ. பயபக்தியுடன் சொன்னார்.
அவள் படியிறங்கும் போது பின்னால் கிசுகிசு குரலில் இருவர் பேசுவது கேட்டது. நம்ம வீட்டுப் பொம்பளைங்கள்ளாம் வீட்டு வேலைக்கே நேரம் பத்தாம திண்டாடுதுங்க. இந்தப் பெரிய மனுசங்க வீட்டுப் பொம்பளைங்க பொழுது போகாம பயித்தியக்கார ஆஸ்பத்திரியைத் தேடிக்கிட்டு வந்துடறாங்க.
சுசீலாவுக்குக் கோபம் வரவில்லை. உண்மைதானே? அவளுக்கும் அரைடஜன் குழந்தைகள், வீட்டில் பற்றாக்குறை, எதை வைத்து எதை மீட்கலாம் என்ற கவலை எல்லாம் இருந்தால் சமூகத் தொண்டு செய்ய என்று - இந்த மனநோய் மருத்துவமனையையா தேடி வரப் போகிறாள்?
சேகர் சைகியாட்ரி என்னும் மனோதத்துவ மருத்துவத்தில் எம்.டி. செய்கிறான். துடிப்பான இளைஞன். இவனுடன் ஒவ்வொரு பேஷண்டின் சரித்திரத்தையும் அலசும்போது, அவன் ‘டயக்னோஸ்’களைப் பகிர்ந்து கொள்ளும்போது, சுசீலாவுக்கு தான் ஒரு கோட்டீசுவரரின் மனைவி என்பது மறந்து விடும். பத்தாண்டுகளுக்கு முன் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து ஆசிரியரின் பேச்சை ஆவலுடன் கேட்ட உணர்ச்சிதான் ஏற்படும்.
சில நோயாளிகளுக்குக் கடிதம் எழுதித் தந்தாள். இங்கே என்னை அடிக்கிறாங்க. ஒதைக்கிறாங்க. சாப்பாடே போடறதில்லை. நான் சாப்பிட்டு நாலு வருஷமாகிறது... ம். ஆத்தா விலாசம் எழுதிட்டீங்களா?
- ஒரு நோயாளி மிரட்டினான். சுசீலாவுக்குத் தெரியும், இந்தக் கடிதம் அவன் ஆத்தாவை அடையாது என்று. டாக்டர் சேகரிடம் சென்று, அதன் பிறகு மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சிக்குட்பட்டு இங்கேயே தங்கி விடும். ஆனாலும் நோயாளியை மன வருத்தப்படச் செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. அம்மா தன்னை இங்கிருந்து அழைத்து செல்ல மாட்டாளா என்ற ஏக்கம் அவனுக்கு. அவன் வாழ்வின் சாரமே எதிர்பார்ப்புத் தானே?
செக்கச் செவேலென்று ஒரு நோயாளி ‘ராஜா மாதிரி’ என்பார்களே அப்படியிருந்தான். கண்களில் தான் எப்படிப்பட்ட சோகம். அவன் இங்கு வந்த இந்த நான்கு வருடத்தில் யாருடனுமே பேசியதில்லை. அவனைப் போல் ‘மானிக்டிப்ரெஷன்’ உள்ள நோயாளிகள் சில சமயம் நன்கு பேசுவார்கள், ஆடுவார்கள், பாடுவார்கள், திடீரென மாறி நாட்கணக்கில் சோகத்துடன் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இவனுக்கோ சதா துக்கம்தான். இவன் தெருவில் பசி மயக்கத்தால் மயங்கி விழுந்து கிடந்தவன். காவல்காரர் ஒருவர் இவனை ஆஸ்பத்திரியில் சேர்த்த பின் நாலு நாள் ஸ்லைனும், க்ளுகோஸூம் ஏத்திய பிறகு இங்கே அனுப்பி விட்டார்கள். இங்கு வந்த புதிதில் அவன் எதையுமே சாப்பிட மாட்டான். நாட் கணக்கில் பட்டினி கிடப்பான். எங்கேயோ வெறித்து பார்த்த படியே உட்கார்ந்திருப்பான். சில சமயம் இரவு முழுவதும் கூட அப்படி அமர்ந்திருப்பான் என்று நர்ஸ் சொல்லியிருக்கிறாள். பல முறை ஷாக் கொடுத்தாகி விட்டது. இன்ஸூலின் ஏற்றியாய் விட்டது. எத்தனையோ ட்ரான்குலைஸ்ர்கள், பெப்-அப் மாத்திரைகள். ஊஹூம்... அவன் அசையவில்லை. ஒரே மாற்றம் - இப்போதெல்லாம் சாப்பாடு வைத்தவுடன் சாப்பிட்டு விடுகிறான், தானே சிரித்துக் கொள்கிறான். எப்போதாவது யாருக்கும் புரியாத பாஷையில் ஏதோ முணுமுணுக்கிறான்.
அவன் பேசாததால் அவன் யார் எந்த ஊர் போன்ற விவரங்கள் யாருக்கும் தெரியாது. ‘யார் பெத்த பிள்ளையோ’ என்று பிள்ளை பாக்கியம் இல்லாத சுசீலாவின் வயிறு அந்த இருபத்தைந்து வயது இளைஞனைப் பார்த்து குமுறும். அவனை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று வலிகூட ‘இன்ட்யூஸ்’ செய்து பார்த்தோம். ‘ஐயோ’ என்று கத்தினான். அன்று முழுதும் அழுதுகொண்டே இருந்தானே தவிரப் பேசவில்லை.
- சேகர் சொன்னான். சுசீலாவின் வயிற்றை என்னமோ செய்தது.
ஏழுமலை நன்றாக இருக்கிறாயா?
ஏழுமலை என்பது ஆஸ்பத்திரியில் செய்த நாமகரணம்.
ஏழுமலை ஆகாயத்திலிருந்து பார்வையை அகற்றவில்லை. பெஞ்ச் ஒன்றில், முழங்காலை குத்திட்டு கைகளால் அணைத்த வாறு உட்கார்ந்திருந்தான்.
சாப்பிட்டயா... சாப்பாடு நல்லா இருந்திச்சா?
பதிலில்லை. பார்வையும் திரும்பவில்லை.
ஏழுமலை. உனக்கு ஏதாவது வேணுமா?
அதே வெறித்த நோக்கு வெட்ட வெளியில்.
இப்ப போயிட்டு வரேன். ஏதாவது வேணும்னா சொல்லு...
- சுசீலா நகர்ந்தாள்.
அவள் நகர்ந்த பின் ஏழுமலை மெல்ல எழுந்தான். அவனுடைய ஒவ்வோர் அசைவும் நகர்வதற்கே காலங்காலமாக, யுகயுகமாக ஆகும் போல் அவ்வளவு ப்ரயாசீனத்துடன் இருந்தது.
சுசீலாவும், சேகரும் நர்ஸூடைன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஏழுமலை அவர்கள் பின்புறம் வந்து நின்று கொண்டிருந்தான். ‘சடக்’கெனத் திரும்பிய சுசீலாவுக்கு அவன் தன்னைப் பார்ப்பது போல் தோன்றியது. குரலைக் கனிவாக்கிக் கொண்டாள். ஏதாவது ஹெல்ப் வேணுமா ஏழுமலை?
எங்கேயோ பார்த்தபடி திருதிருவென்று விழித்தான் அவன். பீடி.. பீடி.. பத்து பைசாவுக்குப் பீடி...
ஏதோ பெரிய காரியத்தைச் செய்துவிட்ட திருப்தியில் திரும்பிச் சென்று பெஞ்சில் பழையபடி அமர்ந்தான். டாக்டர் சேகர் அவனை பின் தொடர்ந்து ஓடினான்: நர்ஸ் வாங்க, இந்த ஆள் பேச ஆரம்பிச்சுட்டான்...
சேகர் ஏழுமலையை எத்தனையோ கேள்வி கேட்டான். பீடி கேட்டதுடன், ஏழுமலை பழைய மோன நிலைக்கு சமாதி போய்விட்டான். சேகர் வெறுப்புடன் திரும்பி வந்தான்.
சே.. சே..! என்ன பிழைப்பாய் போச்சு. பயித்தியத்தைக் கட்டி மாரடிக்கிறதுன்னு சொல்லுவாங்களே, எவ்வளவு உண்மையா இருக்கு பார்த்தீங்களா?
என்ன சேகர், அலுத்துக்கறிங்க... வெளியிலே இருக்கிறவங்களை விட உள்ளே இருக்கிறவங்க ஒண்னும் அவ்வளவு மோசமாயிடல்லை. பாவம்! அவனுக்கு அல்ப ஆசை, எத்தனை வருஷமாய் அடக்கிக் கொண்டிருந்தானோ, ஒரு பீடி குடிக்கிற ஆசையை?
- சேகருடைய உப்பிய சட்டை பாக்கெட்டைப் பார்த்தவாறே சுசீலா பதிலளித்தாள்.
வீடு திரும்பும் வழியெல்லாம் அவள் எண்ணங்கள் அந்த பயித்தியக்காரனையே சுற்றி வந்தன. நான்காண்டுகளாக வாய் திறந்து பேசாதவன் முதல் முறையாகப் பேசியிருக்கிறான்! நிபுணர்களின் அன்புக்கும், கண்டிப்புக்கும், மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பேசாதவன், அவளைப் பார்த்து தானாகவே பேசியிருக்கிறான். அவனுக்கு பீடி வேண்டும். ஒரே ஒரு பீடி - வாழ்வில் புகைக்கும் அவளுக்கும் ஏன் இத்தனை நெருங்கிய தொடர்பு?
இந்தத் தொடர்பு தொடங்கிப் பத்து வருஷம் ஆகிறது.
அவள் எம்.ஏ., படிக்கிறாள். விரும்பி எடுத்துக் கொண்ட பாடம் மனோதத்துவம். ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதரின் மூத்த புதல்வி. அடுத்து மூன்று பிள்ளைகளும், இரண்டு பெண்களும் இருக்கும்போது கல்லூரிக்குப் போவது சுலபமான காரியமில்லைதான். ஆனால் அப்பா சுந்தரம்பிள்ளை இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததுமே அம்மா முட்டுக்கட்டை போட்டாள்: பிள்ளைப் பசங்களைப் படிக்க வச்சாலும் உண்டு. பொட்டைப் பெண்ணைப் போயி...
அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது: அட மூடமே. உன் பெண் எஸ்.எஸ்.எல். ஸி-யிலே நானுத்து எண்பது மார்க் வாங்கியிருக்காடி. பிள்ளைக படிக்கலைன்னாலும் அவ என் பேர் எடுப்பாடி. என் தலையை அடகு வச்சானும் அவளைப் படிக்க வைப்பேன்
என்று எப்படியோ கல்லூரியில் சேர்த்து விட்டார்.
அவர் தலையை அடகு வைக்கவேண்டிய அவசியமே வரவில்லை. பி. யு.ஸி. முடிப்பதற்குள் அவளுக்கு மெரிட் கம்மீன்ஸ் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதன் பிறகு ஒரே ஒட்டம்தான் - படிப்பு, படிப்பு என்று. எம்.ஏ., முடித்துவிட்டுக் கல்லூரியில் லெக்சரர் ஆகவேண்டும்... மற்ற தம்பி தங்கைகளையும் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும்... கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு பி.எச்.டி. செய்ய வேண்டும்... அவள் கனவு எல்லாம் கணவனைச் சுற்றி வராமல் கல்வியையே சுற்றி வந்தது.
அவளை எதிர்த்துச் சதி செய்துகொண்டிருந்தது அவள் அழகு. செல்வத்தை வாரித் தராத இறைவன் அழகை மட்டும் வஞ்சனையில்லாமல்தான் வைத்திருந்தான். ஜாடை என்னவோ அம்மா மாதிரிதான் என்றாலும், இந்தக் குடும்பத்தில் யாருக்கும் இல்லாத பொன் சம்பங்கி நிறம் அவளுக்கு மட்டும் இருந்தது. அரைகுறை சாப்பாட்டிலேயே உடம்பில் அப்படி ஒரு தளதளப்பும் வாளிப்பும். கோடு தீட்டினாற் போன்ற மெல்லிய புருவம். நீண்ட, மை தீட்டாமலே கருமையான விழிகள். அளந்து வைத்தாற்போல முக்கும், விழியும். இந்த அழகைக் கண்டுதானே அவர்...?
ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். அப்பா தரையில் அமர்ந்து, வெறும் உடம்புடன் கடைக்குட்டி கோமளாவுக்குத் திருக்குறள் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சுசீலாவும் அவள் தங்கையுமாகப் போட்டிப் போட்டுக் கொண்டு இட்லிக்கு மாவாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வாசலில் ஒரு பிரமாண்டமான கார் வந்து நிற்கிறது. முதலில் டிரைவர்தான் இறங்கி வருகிறான். டிரைவரே ராஜா மாதிரி, மிலிடரி சார்ஜண்ட் மாதிரி, இல்லை... இல்லை டிராபிக் போலீஸ்காரர் மாதிரி - வெள்ளை வெளேரென்று உடையும், தலையில் ஹேட்டுமாக. கோமளி படிப்பை மறந்துவிட்டுக் கதவருகில் வந்து எட்டிப் பார்க்கிறாள். அக்கா, இந்த மோட்டாரைப் பாரேன்
என்று உட்புறம் திரும்பிக் குரல் கொடுக்கிறாள். விஜியும் சுசீலாவும் கூடக் கையில் மர்வு வழிய தூக்கிக் கட்டிய தாவணியுடன் முற்றத்துக் கதவருகில் வேடிக்கை பார்க்க வருகிறார்கள்.
டிரைவர் வரிசையாக வெள்ளித் தட்டுகளை எடுத்து வருகிறான். அப்பா திடுக்கிட்டு, நீங்க... யாரை?
நீங்கள் தமிழ் வாத்தியார் சுந்தரம் பிள்ளைதானே?
- பதிலுக்குக் காத்திராதவன் போல் பழங்கள், கற்கண்டு, சர்க்கரை எனச் சுமந்துகொண்டு வருகிறான். ஒருமுறை அவன் வரும்போது அப்பா மறக்காமல், வாத்தியார்... கீத்யார் இல்லேப்பா. தமிழாசிரியர்
என்று திருத்தம் செய்கிறார். கோமளியும், வாண்டுகளும் ஆப்பிளையும், ஆரஞ்சுகளையும் ஆவலுடன் பார்க்கிறார்கள். அம்மா திறந்த வாயை மூடவில்லை. அப்பா மாத்திரம் நிதானமாகச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார். பை அசிங்கமாய் பாதி கிழிந்து தொங்கியது. கண்ணாடியை மூக்குக்குமேல் தள்ளிவிட்டுக் கொண்டார். இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் குறும்புக்கார விஜி மாத்திரம், "பாருடீ, நம்ம வீட்டுக்கு அலாவுதீனின் அற்புத விளக்கு வந்திருக்குடீ என்று சுசீலாவின் தோளில் இடித்தாள். சுசீலா முன் உச்சி முடியை தள்ளிக் கொண்டபோது முகத்திலும் கொஞ்சம் மாவு ஒட்டிக் கொண்டது.
தட்டுக்களின் வரிசை ஒய்ந்ததும், டிரைவர் டிக்கியைத் திறந்து மடக்கும் அலுமினிய நாற்காலி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து உள்ளே போட்டான். திரும்பிப் போய் பின் கதவைத் திறந்தவுடன், ஏர்கண்டிஷன் குளுமையை விட்டு இறங்க மனமில்லாதவன் போல நிதானமாக அந்த இளைஞன் இறங்கி வந்தான்.
ஏனோ அவனைப் பார்த்ததும் சுசீலாவுக்குப் பிஞ்சிலே பழுத்தவன் என்று தோன்றியது. மாநிறம்தான் என்றாலும் நல்ல ஆஜானுபாகுவான தோற்றம். தலை நிறைய முடி. ஷூவிலேயே முகம் பார்க்கலாம் போல் இருந்தது. டிப்டாப்பாக உடை. இம்ப்ரெஸிவ் பர்ஸனாலிடி என்று யாரும் பார்த்தவுடனேயே சொல்லி விடுவார்கள். வயது கட்டாயம் இருபத்தைந்து, அதிகம் போனால் முப்பதுக்குள்தான் இருக்கும். கறுப்புக் கண்ணாடியைக் கழட்டாமலே உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்தான். சினிமா நடிகைகள் ஸெட்டுக்கு நாற்காலி தூக்கிக் கொண்டு போவார்கள் என்று சுசீலா கேள்விப்பட்டிருந்தாள். ‘இவர் என்ன புது தினுசு நடிகர்?’ சுசீலாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
வந்து அமர்ந்தவன் பாக்கெட்டில் இருந்து லைட்டரை எடுத்து ‘க்ளிக் க்ளிக்’ என்று இரண்டு முறை அழுத்தினான். சிகரெட்டை நிதானமாகப் பற்ற வைத்துக்கொண்டான். அந்த தோரணை, அலட்சிய பாவம் சுசீலாவின் கணிப்பிலே அவன் ஒரே நிமிடத்தில் விழுந்து விட்டான். சுந்தரம் பிள்ளையின் கண்டிப்பிலும், ஆசாரசீலத்திலும் ஒழுக்கத்திலும் வளர்ந்தவள் அவள். வெள்ளித்தட்டுக்களை எடுத்து வந்ததுக்காக மாத்திரம் அறுபதைக் காணப் போகிறவர் எதிரில் சாவதானமாகப் புகை விடுவது அவ்வளவு கண்ணியமாகப் படவில்லை. குறைந்தபட்சம் அனுமதி கேட்டுக் கொண்டாவது புகைக்கக் கூடாதா என்று தோன்றியது.
வந்தவன் சுற்றும் முற்றும் யாரையும் பார்க்கவில்லை. எல்லோரும் என்னையே பாருங்கள் என்ற தோரணையுடன் நேர்ப் பார்வையுடன் ஆரம்பித்தான். அப்பா ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். விஜி ஒரு ஸ்டுலைக் கொண்டு போட்ட பிறகுதான் அதில் அமர்ந்தார்.
என் பேர் குமார். வயசு இருபத்தாறு ஆகிறது. என்னைப் பற்றி யாரைக் கேட்டீங்கன்னாலும் சொல்லுவாங்க. சேம்பர் ஆப் காமர்ஸ் பிரஸிடெண்ட். பத்து, பன்னிரண்டு கம்பெனிங்கள்ளே டைரக்டரா இருக்கேன். அம்மா பத்து வயசிலே போயிட்டாங்க. அப்பா தவறிப் போய் ரெண்டு வருஷம்தான் ஆகிறது. தனியாத்தான் இருக்கேன்.
இன்னும் நிமிர்ந்து உட்கார்ந்தான். சிகரெட்டை ஒர் இழுஇழுத்தான்.
இப்ப இங்க வந்தது என்னாத்துக்குன்னா, ஒங்க பொண் சுசீலாவைப் பெண் கேட்கத்தான்.
- பேச்சை நிறுத்தி அழகாக ஒரு ‘போஸ்’ கொடுத்தான். சுசீலா பிரமை பிடித்தாற்போல அவனைப் பார்த்தாள். கையில் மாவு ஏற்கெனவே காய்ந்து வறவறன்னு இழுத்தது. விஜி கிக்கிக்கிக்கீ
என்று டீன்-ஏஜ் சிரிப்பு சிரித்தாள். அம்மா கதவைத் தாண்டி உள்ளே சென்று அவன் எதிரிலேயே நின்றுகொண்டாள். அப்பா முகத்தில் கூட ஒரே வியப்பு!
அவன்