Meendum Naalai Varum
By Vaasanthi
()
About this ebook
அழகான சுதந்திரமான இளம்பெண் அவள். தாயின் அதீத கண்டிப்பினால் அவள் காதல் வயப்பட்டு பின் அந்தக் காதலையும் கைகழுவுகிறாள். பின் திருமணமாகிறது. அவனோ தனக்காக வாழாமல் சமுதாயத்திற்காக வாழ்பவன். தன் மனைவியின் அழகை கண்டு ஆனந்தப்படாமல் சந்தேகப்பட்டு அவளின் முந்தைய காதலை சொல்லி அவளை அடித்து துன்புறுத்துகிறான்.
இதனால் அவள் அவனை பிரிந்து தன் குழந்தையுடன் வாழத் துவங்குகிறாள். அதன்பின் ஏற்படு, நிகழ்வுகள் என்ன அவள் தன் குழந்தையை எவ்வாறு வளர்த்தாள் அவள் வாழ்வில் ஏதேனும் திருப்பங்கள் ஏற்பட்டதா என்பதை நாம் மீண்டும் நாளை வரும் நாவலின் வாயிலாக அறியலாம்.
Read more from Vaasanthi
Moongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Aasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Theekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Naan Budhanillai Rating: 0 out of 5 stars0 ratingsPuriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Thurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Plum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsVittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsSariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsAakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsOru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Kizhakkey Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Thunaivi Rating: 2 out of 5 stars2/5America Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsVer Pidikkum Mann Rating: 0 out of 5 stars0 ratingsKarai Seratha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsIndre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsPathaiyorathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsNirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Meendum Naalai Varum
Related ebooks
Agni Kunju Rating: 0 out of 5 stars0 ratingsKaaranamilla Kaariyangal Rating: 0 out of 5 stars0 ratingsJananam Rating: 4 out of 5 stars4/5Nazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaan Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsNeerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Karaiyaangal Rating: 5 out of 5 stars5/5Veli Rating: 0 out of 5 stars0 ratingsUravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsSamsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsValliname Melliname Rating: 4 out of 5 stars4/5Idaiveligal Thodarkindrana Rating: 5 out of 5 stars5/5Nirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsAval Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Tharum Tharuve Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsKarai Thodatha Alai Rating: 0 out of 5 stars0 ratingsPennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsPutru Rating: 0 out of 5 stars0 ratingsEzhilmigu Indonesia Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravaiyin Saranalayam Rating: 0 out of 5 stars0 ratingsThailand Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5
Reviews for Meendum Naalai Varum
0 ratings0 reviews
Book preview
Meendum Naalai Varum - Vaasanthi
https://www.pustaka.co.in
மீண்டும் நாளை வரும்
Meendum Naalai Varum
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
உஷாவுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. எத்தனை தடவை அதைப் பற்றிப் பேச்செடுத்தாலும் புதுசாகச் சிரிப்பு வெடித்தது.
போறும்பா. இனிமே தாங்காது!
என்று சிரித்தபடி விலாவைப் பிடித்துக் கொண்டு படிக்கட்டில் மாலா உட்கார்ந்தாள்.
கண்ணில் தளும்பியிருந்த நீரைத் துடைத்துக் கொண்டு திவ்யாவும் ஆஷாவும் புன்னகைத்தார்கள்.
அப்புறம்?
என்றார்கள் உஷாவைப் பார்த்து.
உஷாவின் ரோஜா நிறக் கன்னங்களில் சிவப்பும் பளபளப்பும் கூடியிருந்தன. பேசிய களைப்பில் மேல் உதட்டிலும் மூக்கு நுனியிலும் வியர்த்திருந்தது. சிவந்த உதடுகள் வெற்றிக் களிப்புடன் மலர்ந்திருந்தன.
உம், சொல்லு சொல்லுங்கற மாதிரி நா நிக்கறேன். உஷா உஷாங்கறானே தவிர ஒரு வார்த்தை வரக் காணும். என் மூஞ்சியைப் பார்க்கறான். உடம்பைப் பார்க்கறான். நா பார்த்துக்கோன்னு நிக்கறேன், கடைசியிலே மென்னு முழுங்கிக்கிட்டுச் சொல்றான். என் பாட்டிக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியிலே அட்மிட் செய்யணும். கிளாஸுக்கு வர முடியாதுன்னு லெக்சரர்கிட்ட சொல்லிடுங்களேன்!
எல்லோரும் 'ஓ'வென்று சிரித்தார்கள். உங்கிட்ட சொல்றானா! உன்னைக் கிளாசிலே என்னிக்காவது பார்த்திருக்கானோ?
பாட்டி கிட்டிங்கறதெல்லாம் புருடை! உங்கிட்ட ஏதாவது பேசணும்ன்னு பேசியிருக்கான்!
பெரிதாக மணி ஓசைக் கேட்டது. திட்டுத்திட்டாக அங்காங்கே நின்றிருந்த மாணவக் கும்பல்கள் பரபரவென்று வகுப்பை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கையில் இந்தக் கும்பல் அதை லட்சியம் செய்யாமல் நின்றிருந்தது.
அவர்களைத் தாண்டிப் போனவர்கள், புன்னகைத்து ஹாய்!
என்றார்களே தவிர, கிளாசுக்குச் செல்லவில்லையா என்று கேட்கவில்லை. யாரும் தன்னைத் தட்டிக் கேட்கத் துணிச்சல் வராது என்று நினைக்கும்போது உஷாவுக்கு மெதப்பாக இருந்தது.
அவர்களைத் தவிரக் கிட்டத்தட்ட எல்லாரும் வகுப்புக்களுக்குள் நுழைந்துவிட்டார்கள்.
இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?
என்றாள் மாலா
கெம்பே கௌடாவிலே ஒரு மணி ஆட்டம் இருக்கு. டஸ்டின் ஹாஃப்மென்னுடைய படம்!
எப்படிப் போகப் போறோம்?
என்றாள் ஆஷா.
இந்த உஷா இருக்கும்போது உனக்கென்ன கவலை?
ஆஷா அவநம்பிக்கையுடன் உஷாவைப் பார்த்தாள்.
போன தடவையே பிரின்ஸிபால் வார்னிங் கொடுக்கல்லே? பர்மிஷன் இல்லாம வெளியே போனோம்னா...
அடச்சீ! நீ ஒரு துடை நடுங்கி. பர்மிஷன் நீ கேட்ட உடனேயே சரின்னுடுமா அந்தக் கிழம்? நாம வெளியே போறது யாருக்கும் தெரிஞ்சாதானே?
தெரியாம எப்படி இவளே போக முடியும்? சிங்கரன் மாதிரி ஒரு புது சௌக்கீதாரைப் போட்டிருக்காங்க. பழைய சௌக்கீதார் நமக்கு சினேகிதம். அஞ்சு பத்துன்னு கொடுத்து சரி பண்ணிட்டிருந்தோம்.
இவங்கண்ணுலேயும் மண்ணைத் தூவிட்டுப் போகலாம். நோ ப்ராப்ளம்
எப்படி?
கிளம்பற சமயத்திலே சொல்றேன்!
என்று உஷா நடந்தாள். இப்ப என்ன கிளாசுன்னு யாருக்காவது தெரியுமா?
எல்லாரும் உதட்டைப் பிதுக்கினார்கள். 'எதுக்கு?'
உஷா புன்னகைத்தாள்.
கிளாசுக்குப் போக வேண்டிய கடமை எனக்கிருக்கு இன்னிக்கு. கிருஷ்ணனுடைய பாட்டி ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகியிருக்கிற விஷயத்தை நா லெக்சரர்கிட்டே சொல்லியே ஆகணும்.
ரைட்டோ!
என்று மற்றவர்களும் அவளைத் தொடர்ந்தார்கள்.
அவர்கள் வகுப்பில் நுழைந்தபோது வகுப்பு சர்வ நிசப்தமாக இருந்தது. ஆசிரியை ஏதோ கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்தார்.
உஷாவும் மற்றவர்களும் ஓசைப்படுத்தாமல் நுழைந்தார்கள்.
முதுகில் கண் இருந்தது போல் ஆசிரியைத் திரும்பினாள்.
ஹலோ!
என்று சற்று எரிச்சலுடன், வகுப்பு ஆரம்பித்துப் பத்து நிமிஷம் ஆகிறது தெரியுமா?
ஸாரி மேடம்!
என்றாள் உஷா பதவிசாக. ஆஸ்பத்திரியிலேந்து ஆட்டோ பிடிச்சு வர்ற லேட்டாகி விட்டது.
ஆஸ்பத்திரியா?
ஆமாம். ஆஸ்பத்திரி. எமர்ஜென்ஸி கேஸ். கிருஷ்ணன் இல்லே! அவனுடைய எண்பது வயசுப் பாட்டி கிணத்தடிக்குப் போய்-
வகுப்பில் அலையலையாக விரிந்து கொல்லென்று சிரிப்பு வெடித்தது.
இதப்பார். உன்னுடைய பொய் பூனை சுருட்டுக்கெல்லாம் எங்கிட்ட நேரமில்லே
என்றார் ஆசிரியை அதிக எரிச்சலுடன்.
ஐய்யோ பொய்யில்லே மேடம்! சத்தியம்-அதனாலே தான் கிருஷ்ணன்கூட வரல்லே பாருங்க. அவன் என்னிக்காவது க்ளாஸ் மிஸ் பண்ணியிருக்கானா? பாவம் ரொம்ப ஆடிப் போயிட்டான். பாட்டிகிட்டே ரொம்ப அட்டாச்மெண்ட். நாங்க அவனை சமாதானப்படுத்திட்டு வர்றதுக்கு லேட்டாயிட்டது. பத்து நிமிஷம் லேட்டானாலும் கிளாஸைக் கட் பண்ணக் கூடாதுன்னு அதுவும் உங்க கிளாஸ்ஸை
வகுப்பு மீண்டும் அர்த்தமில்லாமல் சிரித்தது.
சரி சரி உட்காரு - நோ மோர் டிஸ்டர்பென்ஸ்
தாங்க்யூ மேடம்
வாயைப் பொத்திக் கொண்டு தோழிகள் சிரித்தார்கள்.
உஷா தனக்குள் பூத்த திருப்தியுடன் தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். ஆசிரியைப் பாடத்தைத் தொடர்ந்தாள். அநேகம் மாணவர்கள் மகாபக்தி சிரத்தையுடன் லெக்சரரைக் கவனித்தார்கள். உண்மையிலேயே இவர்கள் பாடத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார்களா அல்லது பாவனை பண்ணுகிறார்களா என்று உஷாவுக்கு வியப்பாக இருந்தது. ஆசிரியை சொல்வது தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. கொஞ்சமும் சுவாரஸ்யம் ஏற்படவில்லை. கடவுளே, இதில் என்ன இருக்கிறதென்று எல்லாரும் விழுந்தடித்துக் கொண்டு கல்லூரிக்கு வருகிறார்கள். கண்விழித்துப் படித்துப் பட்டம் பெறுகிறார்கள்.
ஆ. இவர்களுக்கெல்லாம் இது ஒரு தலையெழுத்து நிர்ப்பந்தம். உப்பு சப்பில்லாத இவற்றையெல்லாம் மென்று தாளில் உமிழ்ந்தால்தான் நாளை ஒரு கிளார்க் உத்தியோகமாவது கிடைக்கும். எத்தனைப் பரிதாபம் என்று அவர்களை நினைத்து அவளுக்கு வருத்தமேற்பட்டது. அவளுடைய அதிர்ஷ்டம் பட்டம் வாங்க வேண்டும் என்கிற கட்டாயம் அவளுக்கு இல்லை. கல்லூரிக்கு வருவது தமாஷிற்காக. இந்த வயதில் அனுபவிக்காமல் வேறு எப்போது தான் அனுபவிப்பது? அழகும் இளமையும் ஆரோக்கியமும் பணமும் இருக்கும் போது ஜாலியாக இல்லாமல் இருப்பது மடத்தனம்.
இது ஏன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிரின்ஸிபாலுக்கும் புரியமாட்டேன் என்கிறது என்று அவளுக்கு அலுப்பேற்பட்டது. அவர்கள் கண்டிக்க தண்டிக்க அதிகத் திரிசமன் செய்ய வேண்டும் போல் உற்சாகம் ஏற்பட்டது.
ஆசிரியை சொல்வது ஏதும் விளங்காமல் அவள் புத்தகத்தை விசிறியாக மேஜையில் விரித்து நிறுத்தி அதற்குள் முகத்தை மறைத்து ஒரு குட்டித் தூக்கம் போட்டாள்.
மணியோசை பலமாகக் கேட்டதும் விழித்து நிமிர்ந்து ஆசிரியை வெளியேறும்போது சாதுவாக நின்றாள்.
ஆசிரியை ஒரு விநாடி நின்று அவளைப் பார்த்தாள்.
உங்க அம்மா அப்பா உன்னை எதுக்குக் காலேஜுக்கு அனுப்பறாங்கன்னு தெரியல்லே
என்றாள். உன்னை சிவனேன்னு சினிமாவிலே சேர்த்திறலாம். அதுக்கு வேண்டிய முகவெட்டு இருக்கு. சுபாவத்திலேயே நடிக்க வருது!
வகுப்பு சிரித்தது. கொஞ்சங்கூட சுரணையில்லாமல் உஷா பவ்யத்துடன் தலையைச் சாய்த்துச் சொன்னாள்.
உங்க யோசனையை நா அவங்களுக்கு அவசியம் சொல்றேன் மேடம்.
ஆசிரியை தோளைக் குலுக்கி தலையை அசைத்து கேலிப் புன்னகையுடன் அகன்றாள்.
அவள் சற்று தூரம் சென்றதும், அவங்களுக்கு எவனாவது டைரக்டர் சினேகிதமான்னு கேளுடி மாலா!
என்றாள் உஷா.
ஏய், மெள்ளப் பேசு!
மற்ற மாணவ மாணவியர் உஷாவையும் அவள் பேச்சையும் ஆர்வத்துடன் புன்னகையுடன் கவனித்தாலும் நமக்கேன் வம்பு என்பது போல் அடுத்த வகுப்புக்கு நடந்தார்கள்.
பின்னே என்ன?
என்றாள். உஷா தொடர்ந்து பெரிய இவங்க! சினிமாவிலே சேர இவங்க என்ன சிபாரிசு?
போயிட்டுப் போறது. இப்ப வா அடுத்த கிளாசுக்குப் போகலாம்!
என்ன இருக்கு?
இகனாமிக்ஸ்!
ஐயோ, போர். வேண்டாம்பா.
பின்னே என்ன செய்யலாம்?
மணி என்ன இப்ப?
பதினொன்னரை
ரைட்டோ, அப்ப கெம்பே கௌடாவுக்குக் கிளம்பு
இப்பவேவா?
பஸ்ஸைப் பிடிச்சுப் போறதுக்குள்ளே பன்னண்ட்ரை ஆயிரும். டிக்கெட் வாங்கி ஹோட்டல்லே டிபன் சாப்பிட்டுப் போக நேரம் வேண்டாமா?
அதுவும் சரிதான், கிளம்பலாம். ஆனா சௌக்கிதாரை என்ன செய்யப் போறே?
மாலா நீ தனியா போய்-
நா தனியா எதுவும் செய்யமாட்டேன், எது செஞ்சாலும் சேர்ந்துதான் இருக்கணும்.
இவளொருத்தி பயந்தாங்கொள்ளி! சரி வாங்க எல்லோருமா போகலாம். நீங்க யாரும் வாயைத் திறக்க வேண்டாம். நா சமாளிக்கிறேன்
என்றாள் உஷா ரோசத்துடன்.
சௌக்கீதார் நேபாளக்காரன், ஹிந்தி தான் தெரியும். மணிப்பிரவாளமாக ஆங்கிலம் பேசுவான்.
உங்களைக் கான்டீனில் கூப்பிடுகிறார்கள்
என்றாள் உஷா தனக்குத் தெரிந்த ஹிந்தியில்.
கான்டீனா, எனக்கு அங்கே என்ன வேலை?
என்று அவன் விழித்தான்.
கான்டீனில் உங்களுக்கு வேலை என்ன இருக்கும்? சூடாகப் பகோடா போடுகிறார்கள். அதற்காக இருக்கும்!
சௌக்கீதாரின் கண்களில் சபலம் நிழலாடிற்று.
இங்கே காவல் காக்க வேண்டாமா?
பத்து நிமிஷத்தில் என்ன ஆகிவிடும்? நீங்கள் போங்கள். யாராவது கேட்டால் பாத்ரூமுக்குப் போனேன் என்று சொல்லுங்களேன்.
அதுவும் சரிதான். உண்மையும் கூட
என்று அவன் சிரித்தான். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? கம்பி நீட்டிவிட மாட்டீர்களே?
ராம் ராம்! நாங்கள் கிளாசுக்குப் போகணும்!
சௌக்கீதார் அவர்களைச் சினேகிதத்துடன் பார்த்துச் சிரித்துவிட்டுக் கிளம்பினான்.
அவன் உருவம் பார்வையிலிருந்து மறைந்ததும் அவர்கள் அக்கம் பக்கம் பார்த்துத் துரிதமாக வெளியேறினார்கள். தெருவுக்கு வந்த பிறகும் உடம்பைக் குறுக்கி மறைவாக நடந்து அடுத்த சந்துக்குத் திரும்பிய பிறகு நிமிர்ந்து பகபகவென்று சிரித்தார்கள்.
அரட்டை அடித்தபடி பஸ் ஸ்டாப்புக்குச் சென்று பஸ்ஸைப் பிடித்து கெம்பே கௌடாவில் இறங்கிய போது ரொம்பப் பெரிதாக ஏதோ சாதித்து விட்டதைப் போல் இருந்தது.
நாளைக்கு நமக்கு நல்ல பூசை இருக்கப் போகுது பாரு!
என்றாள் மாலா. சௌக்கீதார் பிரின்ஸிபால்கிட்டே நம்மைப்பத்திப் புகார் பண்ணப் போறான்.
பண்ண மாட்டான்!
என்று உஷா சிரித்தாள். என்ன புகார் சொல்ல முடியும்? பக்கோடா கிடைக்கும்னு சொன்னாங்க. பக்கோடாவே அங்கே இல்லேம்பானா?
அதை நினைத்து எல்லோரும் மீண்டும் சிரித்தார்கள்.
சொன்னா அவனுக்குத்தான் ஆபத்து. பக்கோடா ஆசைப் பெரிசா போச்சான்னு சீட்டுக் கிழியும்!
அடுத்த தடவை ஏமாத்த முடியாதே அவனை!
நாளைப்பாடு நாராயணன் செயல்
ஹோட்டலில் மொசுக்கிவிட்டு, சினிமா பார்த்து, டஸ்டின் ஹாஃப்மனின் புகழ் பாடி மாலையில் வீடு திரும்பியபோது, பத்ரகாளியாய் அம்மா அவளுக்காகக் காத்திருந்தாள்.
2
ஒரு விநாடி அம்மாவின் வெளிப்படையான கோபத்தைப் பார்த்து 'திக்'கென்றது.
மறுவிநாடி தன்னைச் சமாளித்துக்கொண்டு உஷா வசீகரமாகச் சிரித்தாள்.
ஹலோ அம்மா! என்ன ரொம்ப டென்ஷனாட்டம் தெரியுது? சமையல்காரியோடத் தகராறா?
அம்மாவின் கோபம் ரௌத்திரமாயிற்று. பேசியபடியே வேகமாகத் தன் அறையை நோக்கி முன்னேறிய உஷாவை,
இங்கே வாடி!
என்று தடுத்து நிறுத்திற்று.
அதிகப்பிரசங்கித்தனமா பேசினியானா எனக்குக் கெட்ட கோபம் வரும்.
கோபப்பட்டியானா உனக்குத்தான் கெடுதல். ப்ளட் ப்ரெஷர் ஏறும்.
அம்மாவின் முகத்தில் கோபம் தணிந்து ஆற்றாமை படர்ந்தது.
அது தெரியுது இல்லே? பின்ன ஏண்டி தினமும் என் வயிற்றெரிச்சலைக் கொட்டறே?
அம்மா பலவீனப்பட்டு நின்றது வேடிக்கையாக இருந்தது. கடைசியில் அம்மாவின் கண்ணீரில்தான் இந்த 'டயலாக்' முடியும் என்கிற அலுப்புடன் உஷா சொன்னாள்.
இதப்பார், நான் பாட்டுக்கு தேமேன்று உள்ளே நுழையறேன். நீதான் நுழையும்போதே புலுபுலுன்னு புடிச்சுக்கறே! மத்தவங்க மேல இருக்கிற கோபத்தை என் மேலக் காட்டறதே உனக்கு வேலையாப் போயிட்டது!
ஒண்ணும் அறியாத பச்சைப் புள்ளையாட்டம் பேசாதே?
என்றாள் அம்மா கோபத்துடன். எங்களுக்குத் தலைவலி கொடுக்கணும்னே நீ கங்கணம் கட்டிக்கிட்டிருக்கியா? காலேஜுக்குப் போறேன்னு சொல்லிட்டு எங்கடி ஊர் சுத்தறே?
அம்மாவிற்கு அதற்குள் யார் வத்தி வைத்தது என்கிற ஆத்திரத்துடன் உஷா படபடத்தாள்.
நா காலேஜூக்குப் போகலேன்னு யார் சொன்னா உனக்கு? நாளைக்கு நீயே வந்து கேளு! நா கிளாஸுக்குப் போனதுக்குச் சாட்சி சொல்ல லெக்சரர் வரலேன்னா நா பேரை மாத்திக்கறேன்
அதுக்கப்புறம் எங்கே போனே?
சரிதான். முதல்லே காலேஜூக்குப் போகல்லேன்னே! இப்ப அப்புறம் எங்கே போனங்கறே! காலேஜிலே க்ளாஸ் இல்லேன்னா என்ன பண்ண முடியும்?
வீட்டுக்கு வர்றது! அதுக்காக சொல்லாம கொள்ளாம நழுவறதா?
அம்மாவின் சுருதி இறங்க ஆரம்பித்து விட்டது தெரிந்தது.
அந்தப் பிரின்ஸி சரியான கடுவன் பூனை. கிளாஸ் இல்லேன்னாலும் வெளியிலே போகப் பர்மிஷன் கொடுக்காது!
அப்போ மத்த பசங்க இருக்கிற மாதிரி அடங்கித்தான் இருக்கணும். காலேஜு சட்டத்திட்டங்களை மீறி நடக்க யார் அனுமதிப்பாங்கன்னு நினைக்கிறே?
ஆ. என்ன செய்துடுவாங்க
என்றாள் உஷா அலட்சியமாக. ஆண்டிப்பண்டாரக் காலேஜ் அது. டொனேஷன் யார் கொடுப்பாங்கன்னு ஆலாப் பறக்கறாங்க. எந்த ஸ்டுடண்டுடைய அப்பா கொடுக்கக் கூடியவர்னு தெரியும் அவங்களுக்கு!
அதனாலே உன் இஷ்டத்துக்கு இருப்பியா? காலேஜூக்குப் போறது எதுக்குன்னு நினைக்கிறே?
சும்மா போரடிக்காதேம்மா! நா தமாஷூக்குத் தான் போறேன்! நா பெரிய படிப்பு படிக்கணும்னு எனக்கு ஆசையில்லே. உத்தியோகம் பார்க்கனுங்கிற கட்டாயமுமில்லே.
அப்பக் கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடறேன்! தினம் தினம் உங்க பிரின்ஸிபால் பண்ற புகாரைக் கேட்டுக்கிட்டு என்னாலே கவலைப்படாம இருக்க முடியாது!
அவளுக்குச் சிரிப்பு வந்தது. "அவங்க ஒரு