Karai Thodatha Alai
()
About this ebook
‘அத்தை’ என்று தந்தையின் சகோதரியைக் குறிப்பிடுவது உண்டு. அதேபோல் ‘மாமா’ என்று தாயின் சகோதரனை உறவு முறை சொல்லி அழைப்பது உண்டு.
ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் மாமியாரை ‘அத்தை’ என்றும், மாமனாரை ‘மாமா’ என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த வழக்கம் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பொதுவாகக் காணப்படுகிறது.
பல தலைமுறைகளாக, உறவுகளில் திருமணம் நடந்து வருகிறதால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்கும். இப்பொழுது சுற்றத்தில் திருமணங்கள் நடக்காது போனாலும், பழைய வழக்கத்தையே தொடர்ந்து, உறவு முறைகளைச் சொல்லி அழைக்கிறார்கள்.
தற்சமயம் மருத்துவ உலகில் டாக்டர்கள் இம்மாதிரி உறவில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அத்தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
Read more from Kamala Sadagopan
Kuyil Thottam Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiranean! Rating: 0 out of 5 stars0 ratingsKanavum Kalyanamum Rating: 0 out of 5 stars0 ratingsPadigal Rating: 0 out of 5 stars0 ratingsKodu Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Kaithi Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsMegalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravaiyin Saranalayam Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Manthira Koley Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Karai Thodatha Alai
Related ebooks
Vergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisham Please Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsVanajavin Annan Rating: 5 out of 5 stars5/5Malathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malarae Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Megalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsNazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Anuradha Ramananin Sirukathaigal - Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsChinnamma Rating: 5 out of 5 stars5/5Moondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Uravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5Puthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Kudil Rating: 0 out of 5 stars0 ratingsPenn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsAmmavukku Oru Veedu Rating: 5 out of 5 stars5/5Aan Manam Rating: 0 out of 5 stars0 ratingsKannan Varum Neramithu Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Tharum Tharuve Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Karai Thodatha Alai
0 ratings0 reviews
Book preview
Karai Thodatha Alai - Kamala Sadagopan
https://www.pustaka.co.in
கரை தொடாத அலை
Karai Thodatha Alai
Author:
கமலா சடகோபன்
Kamala Sadagopan
For more books
https://www.pustaka.co.in/home/author/kamala-sadagopan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
முன்னுரை
‘அத்தை’ என்று தந்தையின் சகோதரியைக் குறிப்பிடுவது உண்டு. அதேபோல் ‘மாமா’ என்று தாயின் சகோதரனை உறவு முறை சொல்லி அழைப்பது உண்டு.
ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் மாமியாரை ‘அத்தை’ என்றும், மாமனாரை ‘மாமா’ என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த வழக்கம் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பொதுவாகக் காணப்படுகிறது.
பல தலைமுறைகளாக, உறவுகளில் திருமணம் நடந்து வருகிறதால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்கும். இப்பொழுது சுற்றத்தில் திருமணங்கள் நடக்காது போனாலும், பழைய வழக்கத்தையே தொடர்ந்து, உறவு முறைகளைச் சொல்லி அழைக்கிறார்கள்.
தற்சமயம் மருத்துவ உலகில் டாக்டர்கள் இம்மாதிரி உறவில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அத்தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
இந்த நாவலில் வரும் சந்திரசேகர் என்னும் பாத்திரம் தனக்கு மூன்று பெண்கள் பிறந்ததையே நினைத்து ஆரம்பத்திலிருந்து புலம்புகிறவர். அதனால் தனக்குச் சாதகமான வழியைத் தேடுவதையே இலட்சியமாக எண்ணினார்.
அந்தப் பாத்திரத்தைப் படைத்ததனால் என்னைத் தப்பாக எண்ணிவிடாதீர்கள். இந்த விஷயத்தில் நான் டாக்டர்கள் கருத்தை ஆமோதிப்பவள். வாழ்க்கையிலும் நான் அதை கடைப்பிடித்திருக்கிறேன்.
இந்த நாவலில் மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரங்களாக வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம்.
தற்சமயம் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. வீதிகளிலும் இல்லை. வீடுகளிலும் இல்லை. நகர்களிலும் இல்லை. நாட்டுப்புறங்களிலும் இல்லை. கல்லூரிகளிலும் இல்லை. காரியாலயங்களிலும் இல்லை.
ஒவ்வொரு நாளும் செய்திப் பத்திரிகையில் பக்கத்துக்கு பக்கம் வெளிவரும் இம்மாதிரி செய்திகளைப் படிக்கும் போது மனம் துடிக்கிறது. இதைப்பற்றி எழுத எனக்குள் ஆவேசக் கொதிப்பு வந்தது. ஆனால் கற்பனையில்கூட ஒரு பெண்ணை இழிவு செய்யும் விதத்தில் எழுத வேண்டாம் என்று கருதினேன். என் மென்மையான மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எழுத ஆரம்பித்ததை நல்லவிதமாக முடித்துவிட்டேன்.
இந்தக் கதை, படிப்பவர்களின் நெஞ்சத்தைத் தொட்டால், அதுவே எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும்.
புத்தகக் கடலில் ஒரு சிறிய அலையாக என் படைப்பு இடம் பெற்றிருப்பதை நினைக்கும்போது என் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் அலை மோதுகிறது.
புதினங்கள் உருவில், இனிமையான தமிழ், அருவியெனப் பொழியும் போது. அதில் ஒரு துளியாக என் படைப்புக்கு இடம் கிடைக்கும் போது அருவியில் குளித்தது போன்ற குளிர்ச்சியினை நான் உணர்கின்றேன்.
என் மதிப்பிற்குகந்தவருமான திரு. இராமநாதன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி, வணக்கம்.
கமலா சடகோபன்
1
அடுக்களையிலிருந்து சாருமதி முகத்தை வியர்வை போகத் துண்டினால் துடைத்துக்கொண்டே வந்தாள்.
ஹாலில் அவளுடைய மூன்று பெண்களையும் காணவில்லை... எங்கே போனார்கள்?
ஒரு மணியிலிருந்து இவள் ஒருத்தி தனியாகப் பூரிகளை இட்டுக்கொண்டே உருளைக்கிழங்கு குருமாவும் தக்காளி தொக்கும் செய்திருக்கிறாள். ஒருத்திகூட திரும்பிப் பார்க்கவில்லை... மாடியில் என்ன செய்கிறார்கள்.
ஸ்விட்ச் போர்டிலுள்ள அழைப்பு மணியை ஆத்திரத்துடன் அழுத்தினாள். மாடியை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பெரிய பெண் உஷாதான் முதலில் வந்தாள்.
மாடியிலே என்னடி செய்யறீங்க?
இல்லேம்மா, எதிர் பக்கத்திலே இருக்கிற ப்ளாக்லே, நேரே இருக்கிற ஃபர்ஸ்ட் ஃப்ளோர் ஃப்ளாட்டிலே, ஒரு குழந்தை ப்ளாட்டுக்குள்ளே சிக்கிண்டிருக்கு.
அம்மாக்காரி இல்லையோ?.
இருக்காம்மா. அவ வெளியிலே வந்து அவளுக்கு எதிர் ஃப்ளாட் அம்மாவோடே பேசிண்டிருக்கா. இந்த குழந்தை உள்ளே இருந்துண்டு கதவை மூடி இருக்கு. ஆட்டோமேடிக் லாக். ஃப்ளாட்டே மூடியாச்சு. குழந்தை உள்ளே கதறுது. அம்மாக்காரி வெளியிலே புலம்பறா...
சாவிக் கொத்து ஒரிஜினல் டூப்ளிகேட் ரெண்டும் இருக்குமே
சாருமதி கேட்டாள்.
அச்சமயம் படிகளில் இறங்கிய வர்ஷா கூறினாள், ரெண்டும் பத்திரமா பூட்டின ஃப்ளாட்டுக்குள் இருக்கு.
இப்போ என்ன செய்யப் போறா?
சாருமதி கவலையுடன் கேட்டாள்.
அது தெரியறதுக்கு முன்னே ஒரு சின்ன ப்ரேக் இங்கே... டிபன் சாப்பிடலாமா?
வர்ஷா அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்டாள்.
என்ன டிபன்?
என்று கேட்டுக்கொண்டு மூன்றாவது பெண்ணான நிஷா வேகமாக இறங்கி வந்தாள்.
ஒரு மணி நேரமாக சமையலறையிலே தனியாக தவித்துக்கொண்டிருக்கேன். ஒருத்திக்கு மூணு பேரா இருந்துண்டு ஒருத்திகூட கீழே இறங்கி வந்து எனக்கு உதவி செய்யல்லே...
அம்மா, நான்தான் பேங்க்...லே வேலை மாடு மாதிரி செய்துட்டு வரேன்... இன்னிக்கு சண்டே.. எனக்கு ரெஸ்ட் வேண்டும். இவர்கள் ரெண்டு பேரும் செய்யலாம் இல்லியா?
நிஷா கூறினாள். நாங்கள் மட்டும் காலேஜுக்குப் போகல்லியா? எங்களுக்கும் கஷ்டம் இல்லியா? எங்க கஷ்டம் உனக்குத் தெரியலியா? இரக்கம் தோணல்லியா?
ஏய் வில்லி, நீ ஒரு கள்ளி,
வர்ஷா ஆரம்பித்தாள்.
உஷா தன் இரு செவிகளையும் பொத்தி மூடிக்கொண்டு கத்தினாள். அம்மா, இது என்ன போர்? தாங்கலியே... எனக்கு டிபனே வேண்டாம்... ஆளை விடு.
வர்ஷா சிரித்துக்கொண்டே மூன்று தட்டுகளில் டிபன் கொண்டு வந்தாள்.
அம்மா, உனக்கும் கொண்டு வரட்டுமா?
வர்ஷா கேட்டாள்.
வேண்டாம், வேண்டாம், நான் ஒரே தடவையாக நைட் எடுத்துக்கறேன்.
அப்பா ஊரிலிருந்து எப்போ வரார்?
உஷா அம்மாவைக் கேட்டாள்.
நாளைக்குக் காலையிலே வந்துவிடுவார்.
சாருமதி பதிலளித்தாள்.
பத்து நிமிடங்களில் அந்த எதிர்க் கட்டிடத்தில் பலத்த கரகோஷம், இந்த ஹாலில் தெளிவாகக் கேட்டது.
மூவரும் பாதியில் எழுந்து வாசற்பக்கம் ஓடினார்கள். சாருமதி இந்த உலகத்திலேயே இல்லை. ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு
சாருமதிக்கு மூன்று வயது. தாயை இழந்த புதிது.
சாருமதியின் தாய் கண்மணி ஐந்து அண்ணன் தங்கச்சி. நான்கு அண்ணன்களும், ஒரு தம்பியும் அவளுடன் பிறந்தவர்கள்.
கண்மணி அனைவருக்கும் செல்லம், தங்கத் தாம்பாளத்தில் ஏந்தி வளர்ப்பவர்கள் போல் பாசத்தைக் கொட்டி வளர்த்தனர்.
ஒரு ஏழைப் பையனை வீட்டோடு மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்து ஒரு ராஜகுமாரிக்குக் கல்யாணம் நடத்துவது போல விமரிசையாக நடத்தினர்.
மாப்பிள்ளைக்கும் எந்தக் குறைவும் ஏற்படவில்லை, கண்மணி உயிருடன் இருக்கும்வரைதான்.
அவரது துரதிர்ஷ்டம் கண்மணி ஒரு பெண் குழந்தையைப் பெற்று, அந்தக் குழந்தையின் மூன்றாவது வயதில் திடீரென்று இறந்துவிட்டாள்.
மனைவி போனதும் அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் கண்மணியின் புருஷன் வீட்டை விட்டு வெளியேறினார்.
மைத்துனர்கள் தங்களது நிறுவனத்தில் கௌரவமான பதவியில் அமர்த்தி இருந்தனர். அவர் அதை துச்சமாகக் கருதி ராஜினாமா செய்துவிட்டார்.
அவர் குழந்தை சாருமதியைத் தன்னுடன் எடுத்துப் போவதற்கு மைத்துனர்கள் மறுத்துவிட்டனர். ராணி போல குழந்தையைத் தாங்களே வளர்த்துக் கொள்ளப் போவதாக கர்வத்துடன் பேசி, அவருடைய வறுமையில் குழந்தையை வாடவிடப் போவதில்லை என்று கேலி செய்தார்கள். அவர் கோர்ட் மூலம் வாங்குவதாக சவால் விட்டார்.
அந்த மூன்று வயதிலே, ஒருநாள் பிற்பகல் அந்த வீட்டில் இருந்த ஓர்ப்படிகள் நான்கு பேரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். அதே இடத்தில் குழந்தை சாருமதியும் உட்கார்ந்து இருந்தது.
அந்த சமயத்திலும் இவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள், நம் அம்மா மட்டும் காணவில்லையே என்று சுற்றுமுற்றும் பார்த்து விழித்துக்கொண்டிருந்தது.
அவர்கள் போனவளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பெத்தவனுடன் இவளை அனுப்பி இருக்கலாம். மாதம் ஏதோ கொடுத்தனுப்பினால் போகிறது
இது ஒருத்தி.
அந்த ரோஷக்கார மாப்பிள்ளை அப்படி எல்லாம் சுலபமா சம்மதிப்பாரா?
போனவ இத்தனை நாள் நம்மை ஆட்டி வைச்சது போதாது? இது வேறே வாரிசு... ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி...
இப்படியே இவளை எல்லாரும் அடிக்கடி பார்த்துக் கொண்டும் கையை ஆட்டிக்கொண்டும் பேசவே, அந்தக் குழந்தைக்கு தன்னைப்பற்றிதான் பேசுகிறார்கள் என்பதும் புரிந்தது. தன் கண்மணி அம்மா இனிமே இங்கே வர மாட்டாள் என்பதும் தெரிந்தது.
அம்மா, அம்மா
என்று முணுமுணுத்த அவளுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. சமையலறையை ஒட்டி இருந்த ஸ்டோர் ரூமுக்குக் குழந்தை சென்றது.
அந்த அறையில் ஒரு பெரிய மர பீரோ இருந்தது. அதன் கீழ் தட்டில் ஏறிக்கொண்டது.
யார் கண்களிலும் படாமல் மறைந்து இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அந்தக் குழந்தையின் மனதில் இருந்தது.
பீரோவின் இரு கதவுகளையும் மூடியது. அந்த வேகத்திலேயே தாழ்ப்பாளும் விழுந்து கதவு இறுக மூடியது.
தனக்கு நேர்ந்த ஆபத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே அம்மாவை நினைத்து அழுதது. நீ வந்திடும்மா, நீ வந்திடும்மா
என்று சொல்லும் போதே அதற்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது.
சாருமதிக்கு நீண்ட நாட்கள் இந்த ஹிம்சையை மறக்க முடியாமல் இருந்தது.
பீரோவில் குழந்தை மாட்டிக் கொண்டது தெரியாமல், குடும்பத்தினர் அனைவரும் காரிலும், டூவீலரிலும் வெளியில் சென்று தேட ஆரம்பித்தனர்.
கண்மணியின் தம்பியும், சகோதரர்களில் கடைசித் தம்பியான பன்னிரண்டு வயதுச் சிறுவனான ஆனந்த், சின்னக் குழந்தை வெளியில் அவ்வளவு தூரம் போக முடியாது என்று வீட்டைச் சுற்றி நன்றாகத் தேடலாம் என்ற முடிவுடன் ஸ்டோர் ரூமுக்கு முதலில் வந்தான்.
பீரோவின் உள்ளே சப்தம் ஒருவிதமாக வந்ததும், அவன் அவசரமாக பீரோவின் தாழ்ப்பாளை விடுவித்தான்.
உள்ளே துவண்டு நினைவற்றுக் கிடந்த குழந்தை அப்படியே அவன் கைகளில் உருண்டது.
வீடே அதிரும் வகையில் ஆனந்த் உரத்த குரலில் அலறினான்.
தாங்கள் அக்குழந்தையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே பேசினது எவ்வளவு பயங்கரத் தவறு என்பதை பெண்கள் உணர்ந்து நடுநடுங்கி விட்டனர்.
அப்புறம் என்ன? டாக்டர் வீட்டுக்குக் காரில் குழந்தையை