Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathoodu Oru Naal...
Manathoodu Oru Naal...
Manathoodu Oru Naal...
Ebook141 pages1 hour

Manathoodu Oru Naal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு நிறைந்த மனம் அழகை வெளிப்படுத்தும். அன்பால் மட்டுமே எதையும் ஜெயிக்க முடியும் என்பது உலகத்தின் நியைதி. அன்புள்ள மனதால் தான் அகிலத்தையும் ஆள முடியும். அந்த மனம் ஒருவர்மேல் உண்மையான அன்பையும் நம்பிக்கையும் கொண்டிருந்தால் அதற்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. இந்த நாவல் அப்படிப்பட்ட மனதோடு நடக்கும் நிகழ்வுகளை பற்றிய நாவல்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580129505128
Manathoodu Oru Naal...

Read more from Daisy Maran

Related to Manathoodu Oru Naal...

Related ebooks

Reviews for Manathoodu Oru Naal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathoodu Oru Naal... - Daisy Maran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனதோடு ஒரு நாள்...

    Manathoodu Oru Naal...

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அதிகாலை நேரம், தங்கத்தை வார்த்து ஊற்றியது போல தகதகத்துக் கொண்டிருந்தது கடல் நீர். அப்பொழுதுதான் சூரியன் மெல்ல எழத் தொடங்கியிருந்தது. கடல் காற்று கதகதப்பாய் மாறிக் கொண்டிருந்தது.

    கைகளால் மணலை அளந்தவாறு மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் பூங்குழலி, புன்னகை அவள் முகத்தில் பரவிக் கிடந்தது. இந்த சந்தோஷங்கூட எவ்வளவு நேரத்திற்கு என்று தெரியவில்லை. வாக்கிங் போன அண்ணி திரும்பி வந்துவிட்டால் அவ்வளவுதான். காச்… மூச்சென்று கத்த தொடங்கிவிடுவாள்.

    மண்ணுலே அப்படி என்ன விளையாட்டு…? நீ… என்ன? இன்னமும் சின்ன குழந்தையா…? அப்படி? இப்படி என்று ஒரேடியாக கத்தத் தொடங்கி விடுவாள்.

    பூங்குழலியை கண்டாளே அண்ணிக்காரிக்கு ஆகவே ஆகாது. ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி திட்ட ஆரம்பித்து விடுவாள். செல்வி அந்த வீட்டுக்கு மருமகளாக வந்த புதிதில், பூங்குழலியிடம் அன்பாகத்தான் பழகினாள். போகப் போகத்தான் அண்ணியின் குணத்திலே மாற்றத்தைக் கண்டாள் பூங்குழலி. அதற்கு காரணம் பூங்குழலி அவளுடைய சாந்தமான முகம்.

    பூங்குழலியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இருபது வயது நிரம்பிய இளம்பெண். அப்பா விக்ரமபாண்டியன். அம்மா சுந்தரவள்ளி, தம்பதியருக்கு முதலில் பிறந்தது தமிழரசன், தமிழரசனுக்குப் பிறகு வெகுநாட்கள் குழந்தை இல்லாமல் இந்த தம்பதியருக்கு பத்து வருடங்கள் கழித்து பிறந்தவள் தான் பூங்குழலி.

    விக்ரமபாண்டியன் பிறந்து வளர்ந்தது எல்லாம் தூத்துக்குடிதான். தூத்துக்குடியிலே அவரை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. நிறைய நிலபுலன்களோடு பெரிய மச்சி வீட்டிலே வாழ்ந்துக் கொண்டிருப்பவர்.

    மகனை டாக்டருக்கு படிக்க வைத்து பெரிய டாக்டராக வேண்டும் என்பதுதான் விக்ரமபாண்டியனின் ஆசை. ஆனால் தமிழரசனுக்கு அதில் விருப்பமில்லை. டிகிரி முடித்துவிட்டு போலீஸ் ஆபிசராக வேண்டும் என்று ஆசைப்பட்டான். அந்த ஆசையும் பாதியிலேயே மாறி விட்டது. நண்பன் ஒருவனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இராணுவத்திலே சேர்ந்து விட்டான். கிட்டத்தட்ட ஐந்து வருடம் கடந்த பிறகு அவனுக்கு பிரமோஷன் கிடைத்தது. அந்தமானுக்கு மாற்றி விட்டார்கள்.

    இப்படியே போனால் மகன் வீட்டையே மறந்துவிடப் போகிறான் என்ற பயத்தில் உறவுக்கார பெண்ணை தன் மகனுக்கு பேசி முடித்துவிட்டனர்.

    அப்பா… எனக்கு இப்போ திருமணம் வேண்டாம். முதலில் பூங்குழலிக்கு பண்ணிவிட்டு பிறகு நான் பண்ணிக் கொள்கிறேன் என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தான். ஆனால் பெற்றவர்கள் கேட்பதாக இல்லை. உன்னை பிடி, என்னை பிடி, என்று உடனே கல்யாணத்தை முடித்து விட்டனர்.

    திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவி செல்வியை விட்டுவிட்டு அந்தமானுக்கு கிளம்பிவிட்டான் தமிழரசன். அதன் பிறகு மாமியார் வீட்டிலேயே இருந்தவளுக்கு, கணவனை பிரிந்த சோகம் ஒரு புறம் இருக்க, சதா பூங்குழலியை தூக்கி வச்சி பேசின மாமியாரையும், மாமனாரையும் பிடிக்காமலே போய்விட்டது.

    பெரியவங்க இடத்தில் தன் கோபத்தைக் காட்ட முடியாததால், செல்வியின் மொத்த கோபமும் பூங்குழலியின் மேல் திரும்பி விட்டது. அந்த நேரம் பார்த்து தான் செல்வி மாசமாக இருப்பது தெரிய வந்தது. சில மாதத்திற்குப் பிறகு அண்ணன், தங்கையிடம் போனில் பேசினான்.

    பூங்குழலி, அண்ணியை நீ தான் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மாவால் முன்பு போல் ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. அதனால் செல்விக்கு தேவையானதையெல்லாம் நீதான் கூடவேயிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.

    சரியண்ணா… அண்ணியை பத்தி கவலைப்படாதே அவங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    சரிம்மா…

    அண்ணா… ஊருக்கு எப்போண்ணா வருவே…?

    அனேகமா குழந்தை பிறந்த பிறகு தான் வரமுடியும்ணு நினைக்கிறேன்

    சரிண்ணா… பாய்ண்ணா…

    போனை வச்சுடுறேண்ணா

    யாரு போன்லே…?

    அண்ணந்தான் அண்ணி…

    இவ்வளவு நேரமா பேசுனியே! அண்ணிக்கிட்டே குடுக்கணுன்னு அறிவில்லையா…?

    சாரி அண்ணி… நீங்க உள்ளே இருந்தீங்க அதனால்தான் கூப்பிட முடியலை…

    சரி… சரி நான் அவருகிட்ட பேசிக்கிறேன் நீ கிளம்பு…

    அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவளை, செல்வி மீண்டும் கூப்பிட்டாள்.

    பூங்குழலி நாளைக்கு காலையிலே வாக்கிங் போகணும். நீ பாட்டுக்கு தூங்கிடாதே…

    சரிங்க அண்ணி… அலாரத்தை தலைமாட்டுலே வச்சிக்கிட்டு படுத்துக்குறேன் அண்ணி…

    நீ… எழுந்தவுடன் என்னை வந்து எழுப்பு… தலையசைத்தபடி தன் அறைக்குள் வந்து படுத்தாள்.

    கதவு தட்டும் சத்தம் கேட்டது.

    யார் என்று கதவை திறந்து பார்த்தாள், அங்கு அம்மா சுந்தரவள்ளி பால் கிளாசோடு நின்றிருந்தாள்.

    குழலி… ஒரு கிளாஸ் பாலை குடிச்சிட்டுப் போய் படுத்துக்கோ…

    அம்மா கொடுத்த பாலை வாங்கிப் பருகியவள் காலி கிளாசை அம்மாவிடம் திருப்பிக் கொடுத்தாள்.

    குட்நைட்ம்மா…

    ம்ம்… போய் படுத்துக்கோ…

    அடுத்தநாள் காலையில் அலாரம் அடித்ததோ இல்லையோ ஐந்து மணிக்கே வந்து அண்ணி எழுப்பி விட்டாள்.

    போதும் தூங்கினது. எழுந்திரி இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும். அரை தூக்கத்திலே எழுந்து முகம் தூக்க கழுவி, உடைமாற்றிக் கொண்டு இருவரும் கிளம்ப ஆறு மணியாகிவிட்டது.

    இவர்கள் வீட்டிலிருந்து தூத்துக்குடி கடலுக்கு செல்ல கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவாவது இருக்கும். வேர்க்க விறுவிறுக்க இருவரும் நடக்கும்போது பூங்குழலி மெல்ல சரிய கேட்டாள்.

    அண்ணி… போறதுக்கு ஒரு கிலோ மீட்டர் வர்றதுக்கு ஒரு கிலோமீட்டர் இதுவே வாக்கிங் தானே அண்ணி…?

    அது எனக்குத் தெரியாதா…? பீச்சிக் காற்று உடம்புக்கு நல்லதுண்ணுதானே இவ்வளவு தூரம் வர்றோம். உனக்கு வர்ற முடியலேண்ணா சொல்லு உன் அண்ணகிட்ட சொல்லிடுறேன்…

    அண்ணி… நான் அப்படி சொல்லலியே அண்ணி. எனக்கு தினமும் இப்படி நடக்குறது ரொம்பப் பிடிச்சிருக்கண்ணி.

    இப்படித்தான் அன்று காலையில் வரும்போது பேசிக்கொண்டு வந்தார்கள் இருவரும்.

    இந்த முனையிலிருந்து அந்த கடைசிவரை சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தாள் அண்ணி.

    பூங்குழலி… என்ன பண்ணிட்டு இருக்கே…? வா… போகலாம்.

    இதோ வந்துட்டேண்ணி… கைகளில் ஒட்டியிருந்த மணலை தட்டியபடி எழுந்தாள் பூங்குழலி. இருவரும் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினர். பாதி தூரம் செல்லும்போதே தோட்டத்திலே அம்மாவின் தலை தெரிந்தது.

    தோட்டத்தில் விளைந்த காய்களை ஒரு கூடையில் பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரவள்ளி.

    இவர்கள் வருவதை பார்த்துவிட்டு, கை அசைத்து அருகில் அழைத்தாள்.

    என்னம்மா…?

    செல்வி… ஓ! போனு அடிச்சிட்டே இருந்திச்சி… அதை எனக்கு ஆன் பண்ண தெரியலை. யாரு பண்ணியிருக்காண்ணு போயி பாரு…

    இதோ… போய் பாக்குறேன்…

    "குழலி… பிஞ்சி கத்தரிக்காய் பறிச்சி வச்சிருக்கேன். புளி தூக்கலா ஊத்தி கத்தரிக்கா குழம்பு வப்பியே அதை இன்னைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1