Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pirivu Ini Illai
Pirivu Ini Illai
Pirivu Ini Illai
Ebook96 pages44 minutes

Pirivu Ini Illai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

என்னைப் பற்றி...

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.

திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.

தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்

பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வாசிப்பை நேசிப்போம்.

அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129504709
Pirivu Ini Illai

Read more from Daisy Maran

Related to Pirivu Ini Illai

Related ebooks

Reviews for Pirivu Ini Illai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pirivu Ini Illai - Daisy Maran

    http://www.pustaka.co.in

    பிரிவு இனி இல்லை

    Pirivu Ini Illai

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    சூரியன் மயங்கி மறைகின்ற மாலை நேரம் மாமரம் ஒன்று காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்து அசைந்து கொண்டிருக்க, அதன் கிளைகளின் சலசலப்பில் குயில்கள் இரண்டு கொஞ்சிக் கொண்டிருந்தன. தென்னை ஓலையிலே காக்கைகள் அமர்ந்து உறவுகளை அழைத்துக் கொண்டிருந்தன.

    சற்று தள்ளி அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளம் தாமரை மலர்களால் நிரம்பி அந்த தோட்டத்துக்கு தனி அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.

    இந்த அழகுகள் எதுவும் மனதைத் தொடாமல் வெறுமையாக எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் காவியா. அவள் மனதில் ஒரு அழுத்தமும் இருந்தது. பார்வையில் விரக்தியும் இருப்பது தெரிந்தது. அவள் சுகத்திரமாக இருக்கப் போவது இன்று ஒரு நாள் தான். நாளையில் இருந்து அவள் வாழ்க்கை தலைகீழாக மாறபோகிறது. அதை நினைக்கும்போது அவள் உடலில் ஒரு நடுக்கம் தோன்றியது.

    இந்த அப்பாவும், அம்மாவும் சேர்ந்து ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள்? அதற்குள் அவள் திருமணத்திற்கு என்ன அவசரம்? இன்னும் படிப்பே முடியவில்லையே? அதுவும் அந்த ராஜராஜனை நினைத்தாலே கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. இவளிடம் வேண்டுமென்றே வந்திருக்கிறான். இரண்டு மூன்று முறை.

    'திமிர்ப்பிடித்தவன் பணக்காரன் என்ற திமிர் போயும், போயும் அவனைப் போய் இவள் மணப்பதா? பணம் மட்டும் இருந்தால் போதுமா? அது மட்டும் தான் வாழ்க்கையா?'

    அவளின் மனம் போர்க்களமாக இருந்து கொண்டிருந்தது.

    விடிந்தால் திருமணம்.

    இந்நிலையில் அவளால் என்ன செய்ய முடியும்? இன்னும் சற்று நேரத்தில் பாட்டு கச்சேரியோடு வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பித்து விடுவார்கள்.

    அதற்காகத்தானே அவளை தீட்டோதீட்டென்று தீட்டி, தங்கத்தையும் வைரத்தையும் பூட்டி, தலையை கூட திரும்ப முடியாத அளவுக்கு அவளுடைய அடர்ந்த கூந்தலில் அலங்காரம் செய்துவிட்டிருந்தனர்.

    புடவை வேறு விலையுயர்ந்த ஸ்டோன், ஜமிக்கி வேலைப்பாடுகளுடன் கதைத்துக் கொண்டிருந்தது. ஏசி அறையில் கூட வேர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது அவளுக்கு.

    அந்த இறுக்கத்தை தளர்த்தவே அறையின் கதவை திறந்து கொண்டு, பால்கனியில் வந்து நின்று கொண்டிருந்தாள் காவியா.

    என்ன கல்யாணப் பொண்ணு ரெடியாயிட்டியா உன் பேரு என்ன? காவியாவா, ஓவியாவா என்று கேட்டுக்கொண்டே தடித்த உருவத்தோடு, நடுதர வயது பெண்மணி ஒருத்தி இடுப்பில் கை வைத்தவாறு மூச்சு வாங்கி அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

    என்ன நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நீ வாயே திறக்க மாட்டேன் என்கிறாய்.

    அவள் குரலில் தெரிந்த கடுமை, காவியாவை பட்டென்று பதில் சொல்ல வைத்தது.

    இதசொல்றதுக்கு இவ்வளவு யோசிக்கறே? உன்னை சொல்லி எந்த தப்பும் இல்லை. இவ்வளவு நகையையும் போட்டு விட்டிருக்காங்களே என் அண்ணி அவங்களை சொல்லணும்.

    இவ்வளவு நகை நட்டை நீ கண்ணாலயே பார்த்து இருக்கமாட்டே. உனக்கு எல்லாத்தையும் அள்ளி போட்டவுடன், உனக்கு பேச்சே வரலை அவ்வளவு தான். கழுத்துல கெடக்குறது, காதுல கெடக்குறது எல்லாம் சுத்த வைரம். நீ பாட்டுக்கு சாதா நகை என்று, உன் அம்மா வீட்டில் கழற்றி கொடுத்துடப்போறே.

    அவர்கள் சொல்வதை காதில் வாங்கியவாறு பல்லை கடித்துக் கொண்டு பொறுமையாக நின்றிருந்தாள் காவியா.

    ஈரவிறகு பொரிவது போல அவள் தொடர்ந்து கொட்டினாள்.

    உன்னை ஆசைப்பட்டு யாரும் கட்டி வைக்கலை அவசரத்துக்கு, வேறு வழியில்லாமல் தான் கட்டி வைக்கிறாங்க! அதுவும் என் அண்ணனுக்கு குழந்தை மனசு. ஏழைகள் கஷ்டப்பட்டால் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. உன் அப்பா வேறு தனக்கு மூணுமே பொட்ட புள்ளைங்கன்னு சொல்லி அழுதிருக்கிறார். அதனால் மனசு இறங்கி என் அண்ணன், தன் மகனிடம் கூட கேட்காமலேயே உன்னை மருமகளாக முடிவு பண்ணி இருக்கிறார்.

    ராஜராஜனுக்கு இந்த கல்யாணத்திலே கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம் என்ன பண்றது அப்பா, அம்மா பேச்சை மீறாத பிள்ளை அவன் மூச்சு விடுவதற்காக பேச்சை நிறுத்தினாள் அந்தப்பெண்.

    காவியாவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 'அப்பா போய் கெஞ்சினாராமே. மூனு பொட்டை பிள்ளை அப்படி இப்படி என்று இந்த அம்மா சொல்வதை பார்த்தால் உண்மையாக இருக்குமோ? அப்படி கெஞ்சித்தான் மகள் அவள் வாழ்க்கையை அமைத்து தரவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லையே.'

    காவியாவின் அப்பாகூட பிறந்த அத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1