Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanathaipola Kaadhal!
Vaanathaipola Kaadhal!
Vaanathaipola Kaadhal!
Ebook116 pages41 minutes

Vaanathaipola Kaadhal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விஹா சிறுவயதில் இருக்கும் போதே பெற்றோரான ரவியும் ஜோதியும் பிரிந்துவிடுகிறார்கள். இளம்வயது விஹானிகாவை தாயுடன் சேரவிடாமல் தன்னுடன் வைத்துக் கொள்கிறான் ரவி. வளர்ந்த பின் அம்மா எனும் ஜீவனை உதாசீனப்படுத்தியதை எண்ணி வருந்துகிறாள் விஹா. தாய் ஜோதியை தேடி செல்கிறாள். ஜோதி அவளை ஏற்றுக்கொள்கிறாள். காலம் கடந்த பின்பாவது ரவியும் ஜோதியும் இணைகிறார்களா என்பதை நாவலை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
அன்புள்ள
அனிதா குமார்
Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580135505764
Vaanathaipola Kaadhal!

Read more from Anitha Kumar

Related to Vaanathaipola Kaadhal!

Related ebooks

Reviews for Vaanathaipola Kaadhal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanathaipola Kaadhal! - Anitha Kumar

    http://www.pustaka.co.in

    வானத்தைப்போல காதல்!

    Vaanathaipola Kaadhal!

    Author:

    அனிதா குமார்

    Anitha Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anitha-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    இரண்டாயிரம் சதுரடியில் கட்டப்பட்ட அந்த வீடு பெரிதாக இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இறுக்கமான சூழ்நிலை நிலவியது. ஜோதி அனைவருக்கும் முன்பு நடுக்கத்துடன் நின்றிருந்தாள்.

    உங்கம்மா கூட ஒத்து போகலைங்கிறதுக்காக என் பொண்ணை வீட்டை விட்டு அனுப்புறது சரியில்லை மாப்பிள்ளை. உங்களை நம்பி அவள் இந்த வீட்டுக்குள்ள வந்தாள். இப்ப அவ எங்க போவா? என்றாள் பார்வதி.

    அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அவள் எங்கம்மாவுக்கு ஏற்ற மருமகளாக இல்லை. அவள் எனக்கு தேவை இல்லை. அவள் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்றான் ரவி கண்டிப்பாக.

    ஜோதி கலங்கிப் போய் நின்றிருந்தாள். கணவனின் ஒவ்வொரு சொல்லும் அவ்வளவு கடுமையாக இருந்தது. மனது திக்திக்கென்று அடித்துக் கொண்டது. கை கால்கள் சில்லிட்டு போய் நடுங்கிக் கொண்டிருந்தன.

    ஜோதி இங்கே இருக்கட்டும் என்று யாராவது சொன்னால் போதும் அவள் அவ்வளவு சந்தோஷப்படுவாள். ஜோதிக்கு ரவியை விட்டு பிரிந்திருக்கும் எண்ணம் இல்லை. காலம் பூரா அவனுடன் சேர்ந்து வாழத்தான் அவளுக்கு ஆசை. மணவாழ்க்கையில் ரவியின் அருகில் செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது. அவனுடன் நன்றாக சேர்ந்து வாழ எத்தனை போராட்டங்கள்... எவ்வளவு அழுகைகள்...

    இன்னொன்றும் ஜோதிக்குப் புரிந்தது. தான் தான் அவனுடன் சேர்ந்து வாழணும்னு நினைக்கிறோம். ரவிக்கு அந்த எண்ணமே இல்லை. இதற்கு காரணம் ஆண்டாளம்மாள்.

    தினமும் ஜோதியை பற்றி தப்பு தப்பாக ரவியிடம் சொல்லிச் சொல்லி அவளை வெறுக்க செய்திருந்தாள்.

    ஆண்டாளம்மா திமிராக உட்கார்ந்திருந்தாள். தான் சொல்வதைத் தான் தன் பிள்ளை கேட்பான் என்கிற தைரியம் அவளிடம் நிறைய இருந்தது. ரவிக்கு தான் ஆண்மகன் என்கிற திமிர் நிறையவே இருந்தது. நம்மளை விட்டா ஜோதிக்கு நாதி இல்லை. நம்மகிட்ட வந்து நிக்கணும் என்கிற திமிரில் ஜோதியை போட்டு படாதபாடு படுத்திக் கொண்டிருந்தான்.

    பார்வதியும் ஜோதியும் ரவியை பார்த்து கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஜோதியின் கண்ணீரும் பரிதாப நிலையும் ரவியின் கல்நெஞ்சை தொடவில்லை. அவளை வீட்டை விட்டு அனுப்புவதில் தீர்மானமாய் இருந்தான்.

    சரி என் பொண்ணை நான் கூட்டிட்டு போறேன் என்றாள் பார்வதி முடிவாக. அவளுக்கு அதைவிட்டால் வேறு வழியில்லை.

    ஜோதியை அதிகாரம் பண்ணி கொத்தடிமை போல் நடத்தியதால் சண்டை முற்றிப் போய் வீட்டை விட்டு வெளியேறுமாறு சொல்லி விட்டார்கள்.

    'அழகான பொண்டாட்டியை வெச்சு ஒழுங்காக குடும்பம் நடத்துடா' என்று பெற்ற தாய் மகனை கண்டித்து இருந்தால் இந்தப் பிரிவு வந்திருக்காது. ஒழுங்காக இருந்த ரவியின் மனதை கெடுத்து ரவியை ஒரு மிருகத்தனமான மனுஷனாக மாற்றி வைத்திருந்தாள் ஆண்டாளம்மா. அது இனி திருந்தாது. மனைவியை எந்நேரமும் கொட்டும் விஷ தேளாக மாறியிருந்தான் ரவி.

    விஹானிகா ஆண்டாளம்மா மடியில் உட்கார்ந்திருந்தாள்.

    ஜோதிக்கு அவளை விட்டுச்செல்ல மனம் இல்லை. அவளையும் தன்னுடன் கூட்டிச்சென்று விடலாம் என நினைத்தாள். விஹானிகா தன் அருகில் இருந்தால் மன ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தாள்.

    விஹா அம்மாகிட்ட வாடா

    மாட்டேன் போங்க

    அம்மாவுக்கு யாருமே இல்லை. நீ இல்லாம என்னால இருக்க முடியாது. அம்மாகிட்ட வாம்மா

    எனக்கு அப்பாவையும் பாட்டியையும் தான் பிடிக்கும். நான் அப்பா கூடத்தான் இருப்பேன்

    ஜோதியின் கண்களில் இருந்து கண்ணீர் கடகடவென்று வழிந்தது. விஹானிகா வெடுக்கென்று பேசியது ஜோதியின் மனதை புண்படுத்தியது.

    அம்மாகிட்ட வாடா... அம்மா கூட கொஞ்ச நாள் அப்பா கூட கொஞ்ச நாள் இருந்துக்கோடா அழுதவாறு கைநீட்டி அவளை அழைத்தாள்.

    அவள்தான் வரமாட்டேன்னு சொல்றாள்ல அப்புறம் ஏன் இங்கே நின்னுகிட்டு இருக்கீங்க? சின்னப் பொண்ணுக்கே தெரிஞ்சிருக்கு அவள் அம்மா சரியில்லைன்னு. அதான் ஒட்ட மாட்டேங்குறா என்றாள் ஆண்டாளம்மா.

    விஹா என் பொண்ணு! இனி அவள் என்கூடத்தான் இருப்பாள். உனக்கும் விஹானிகாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றான் ரவி கோபமாக.

    கையில் பெரிய பேக்குடன் ஜோதியும், தாய் பார்வதியும் கவலையுடன் வெளியே வந்தார்கள். அனைவரும் அவர்களை வேடிக்கை பார்க்கிறார்கள் என்கிற உணர்வு கூட அவளுக்கு இல்லை.

    கிண்டிக்கு மின்சார ரெயிலில் ஏறினார்கள். சுற்றி இருப்பவர்களை மறந்து இதிலிருந்து எப்படி மீள்வது என்று இரண்டு பேரும் பேசிக் கொண்டு வந்தார்கள். வீட்டிற்கு சென்றதும் பார்வதி சொன்னாள்.

    ஆண்டாளம்மா இருக்கும் வரை ரவி அப்படித்தான் இருப்பான். நான் இருக்கும் வரை நீ கவலைப்படாதே ஜோதி என்று தாய் பார்வதி ஆறுதல் கூறினாள்.

    அவர் கூட சேர்ந்து வாழ்ந்து என்ன சுகத்தை கண்ட நீ? உன் புருஷன் கூட இருந்து ஒவ்வொரு நாளும் கொடுமையை அனுபவிக்கிறதை விட என் கூடயே இருந்துடு. அம்மா நான் உன்னை நல்லா வெச்சிக்கிறேன் ஜோதி பார்வதியையே பார்த்தாள்.

    விஹாவை என்கூட கூட்டிட்டு வந்திடலாம்னு நினைச்சேன். அவளை அங்கே தனியா விட்டுட்டு வந்தது மனசுக்கு கஷ்டமா இருக்கும்மா

    அவள் உன் கூட வரலைன்னா அவள் உன்பொண்ணு இல்லைன்னு ஆயிடுமா என்ன? அவளை நம்ம கூட வச்சு வளர்க்கிற அளவுக்கு வசதி இருக்கா? இல்லையே! அவள் அப்பா கூட பத்திரமா இருக்கட்டும்

    இத்துநூண்டு பொண்ணு என்னை என்னமா எதிர்த்து பேசறா? முகத்தில் அடிச்ச மாதிரி பேசறா. கஷ்டமாயிருக்கும்மா.

    "எல்லாம் உன் மாமியாரும், உன்

    Enjoying the preview?
    Page 1 of 1