Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mullil Roja...
Mullil Roja...
Mullil Roja...
Ebook136 pages53 minutes

Mullil Roja...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பூஜாவும் அரவிந்தும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் அரவிந்த் தவறான நண்பனிடம் பழகுகிறான். பூஜா அர்விந்ததை கண்டிக்கிறாள். பூஜாவிற்கு தெரியாமல் தீய நட்புடன் நட்பை தொடர்கிறான். அரவிந்த் தன் நண்பனுடன் சேர்ந்து ஒரு இளைஞனைக் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறான். இதை நேரில் பார்க்கும் பூஜா அர்விந்த்தை விட்டு பிரிகிறாளா அல்லது தொடர்ந்து காதலிக்கிறாளா என்பதை நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580135505763
Mullil Roja...

Read more from Anitha Kumar

Related to Mullil Roja...

Related ebooks

Reviews for Mullil Roja...

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mullil Roja... - Anitha Kumar

    http://www.pustaka.co.in

    முள்ளில் ரோஜா....

    Mullil Roja....

    Author:

    அனிதா குமார்

    Anitha Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anitha-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    நள்ளிரவு பன்னிரெண்டு மணி அளவில் செல்போனில் மெசேஜ்டோனின் சப்தம் கேட்டு பூஜாவின் தூக்கம் கலைந்து போனது.

    இந்நேரத்துக்கு யார் தனக்கு மெஸேஜ் பண்ணினது என்று செல்போனை எடுத்து பார்த்தாள்.

    அவள் செம்பட்டை தலைமுடி கொத்தாக முகத்தில் விழ, மொத்த கூந்தலையும் பின்னுக்கு தள்ளிவிட்டாள்.

    அவள் அணிந்திருந்த வெள்ளை நிற நைட் சூட்டில் சிகப்பு நிற சிறுசிறு பூக்கள்.

    ஹாய் டியர்! என்று அவளுக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து எம்.எம்.எஸ். வந்திருந்தது. பூஜா மெஸேஜை டெலிட் பண்ணிவிட்டு படுத்துக் கொண்டாள். அவள் நன்கு தூங்கியபிறகு அவள் செல்போன் சிணுசிணுத்தது. அவள் போனை எடுத்து யாரென்று பார்த்தாள்.

    அவளுக்கு மெஸெஜ் வந்த அதே நம்பரில் இருந்துதான் அழைப்பு. தூக்க கலக்கத்தில் அதை கவனிக்காமல் 'ஹலோ' என்றாள். மறுமுனையில் ஒரு ஆணின் குரல்.

    எஸ் என்றாள் பூஜா.

    ஆஜா இருக்காங்களா

    யாரு?

    ஆஜா ஆஜா

    'ராங் நம்பர் என்று பூஜா எரிச்சலுடன் போனை கட் பண்ணிவிட்டு மீண்டும் தூங்க தொடங்கினாள். காலையில் அவளால் எழுந்திரிக்க முடியவில்லை. கண்கள் எரிந்தன. தூக்கம் தூக்கமாய் வந்தது. மீண்டும் போய் படுத்துக் கொள்ளலாம் போல் இருந்தது. ஆபீஸுக்கு லேட்டாகி விடுமே. போன் பண்ணி தூக்கத்தை கெடுத்த அவன் மேல் கோபம் வந்தது. 'எந்த எருமமாடு எனக்கு போன் பண்ணுச்சு?' பூஜா செல்போனை எடுத்து அவன் நம்பரை எடுத்தாள். அந்த நம்பருக்கு போன் பண்ணினாள். ரிங் அடித்துக்கொண்டே இருந்தது. ரிங் பாதியிலேயே கட்டானது. பின் அந்த நம்பரில் இருந்து இவளுக்கு கால் வந்தது.

    பூஜா கடுப்புடன் 'ஹலோ' என்றாள். மறுமுனையில் அவன் 'எஸ் பூஜா, நீங்க எனக்கு கால் பண்ண வேண்டாம் சும்மா ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் நான் உடனே உங்களுக்கு கால் பண்ணிடுவேன்.'

    ஏய் யார்டா நீ?

    மறுமுனையில் அவன் சிரித்தான். அவன் குரலை கேட்டு அது அரவிந்த் என்பது தெரிந்தது.

    நீயா? நீ திருத்தவே மாட்டியாடா

    சான்ஸே இல்லை! என்றான் அவன்.

    நடுராத்திரி எனக்கு போன் பண்ணி என் தூக்கத்தை கெடுத்துட்டே

    நீ ஏன் அப்படி நினைக்கிறே பூஜா நான் அத்தனை மணிக்கு போன் பண்ணினால் நான் உன் நினைவாக இருக்கேன் அர்ததம்!

    ஸ்டுப்பிட்! வைடா போனை! பூஜை இணைப்பை துண்டித்தாள்.

    அறை தோழி ரீட்டா கேட்டாள்.

    என்னடி காலையிலேயே இவ்வளவு சூடா இருக்க!

    எல்லாம் அவனால தான்!

    எவன்?

    அவன் தான்டி! உனக்கு ஒவ்வொன்றையும் பத்து தடவை சொல்லணும் அப்பதான் உன் மண்டையில ஏறும்!

    பூஜா நம்மபின்னாடி நாலைஞ்சு பேர் பாலோ பண்ணிகிட்டு இருப்பாங்க இதுல நீ யாரை சொல்றேன்னு தான் கேட்கிறேன்!

    அதான்.... அவன்தான்.... அந்த அரவிந்த்! பழைய ஆபீஸில் அவன் தொல்லை தாங்க முடியாம தான் வேற ஆபீஸில் போய் சேர்ந்தேன்...."

    இப்ப இந்த ஆபீஸிக்கும் வந்துட்டானா?

    இல்லையில்லை இன்னும் என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான் பைத்தியக்காரன் மாதிரி!

    அவனுக்கு என்ன? ஆள் பார்க்க நல்லாதானே பூஜா இருக்கான்!

    நீ பேசாம உன் வேலையை பார்க்கிறீயா? சும்மா கடுப்பேத்திக்கிட்டு!

    கூல் பேபி கூல் என்றாள் ரீட்டா.

    பூஜா பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்து அங்கேயே படித்தாள். சென்னையில் முன்னணி ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்தால் சென்னையில் வசிக்கிறாள். அவளுடன் படித்த மூன்று தோழிகளுக்கும் சென்னையில் வேலை கிடைத்ததால் மூன்று பேரும் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார்கள். மூன்று பேரும் வேறுவேறு கம்பெனியில் பணிபுரிகிறார்கள்.

    பூஜாவிற்கு லேட்டாகியிருந்தது. மூன்று பேரும் சேர்ந்து சமைத்த இட்லியை வேகவேகமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினாள்.

    பூஜா கிளம்பின போது வெயில் பெரிதாக இல்லை. எந்த நேரமும் மழை பெய்ய தொடங்கும் என்கிற மாதிரி இருட்டிக் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. பூஜா ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு வெளியே வரவும். தூரல் போட ஆரம்பித்தது. தூரல் தானே ஸ்டேஷனுக்கு போய் விடலாம். நினைத்தாள். ஆனால் மழை சடசடவென்று பெரிதாக பெய்யத் தொடங்கியது. மழையில் கொஞ்சங்கொஞ்சமாக நனைந்து கொண்டு வேகமாக நடந்தாள். முழுவதுமாக நனைவதற்கு முன் எங்கேயாவது ஒதுங்க வேண்டும் என நினைத்தாள். மழை பெரிதாக பெய்யத் தொடங்கினாலும் மழைத்துளிகள் அவள் மீது விழவில்லை. நனையவில்லை. அவளுக்கு நெருக்கமாக யாரோ அவள் நனையாதபடி தலை மேல் நீல நிற பூக்கள் போட்ட குடையை பிடித்திருந்தார்கள்.

    அரவிந்த்தான் அவள் பின்னால் நின்றான்.

    பூஜா மழையில் நனையக்கூடாது என்று அவளுக்காக குடைபிடித்துக் கொண்டு வந்தான்.

    அரவிந்த் ப்ளூ கலர் ஜீன்ஸ் கருப்பு நிற டீஷர்ட் அணிந்திருந்தான். மீசை குறுந்தாடி வைத்திருந்தான். வாலிப வயதில் இருந்தான்.

    பூஜா இந்தா இந்த குடையை வச்சிக்கோ......

    நான் மழையில் நனைஞ்சாலும் பரவாயில்லை.

    நீ மழையில் நனையக் கூடாது...."

    அடச்சீ....

    பூஜா வேகமாக அங்கிருந்த மரத்திற்கு கீழே போய் நின்றாள். பூஜா மழை பலமாக பெய்யும்போது மரத்திற்கு கீழே நிற்காதே.... மின்னல் இல்லை இடி தாக்கும்....

    தாக்கட்டும் நான் அப்படியே செத்து போயிடறேன்!

    அது மாதிரி சொல்லாதே பூஜா என்னால் தாங்கிக்க முடியாது...... நானும் உன்கூடவே வந்துடுவேன்!

    பூஜா அவனை ஏறெடுத்து பார்த்தாள்.

    சொன்னா கேளு பூஜா.... அங்கே நிற்காதே.... குடைக்குள்ள வா.... வா....

    பூஜா மரத்தின் கீழ் இருந்து நகன்றாள். ரோட்டில் மழை தண்ணீர் ஓடியது. பூஜாவின் ஹீல்ஸ் செருப்பு சுடிதார் பாண்ட் எல்லாம் நனைந்து போனது. ரோடெல்லாம் பளிச்சென்று சுத்தமாக ஆகியிருந்தது. பூஜாவிற்கு மழை தண்ணீரில் நடப்பது பிடித்தது. தண்ணீர் சில்லென்று இருந்தது. மழை அவள் மீது கொட்டியது. பூஜா நனையவே இல்லை.

    அவளுக்காக குடை பிடித்துக் கொண்டு வந்தான் அரவிந்த்.

    நான் கடைகிட்ட ஒதுங்கிக்கறேன் நீபோ என்றாள் பூஜா.

    வேண்டாம் பூஜா அங்கே ஆளுங்களா இருக்காங்க.... நான் உன்னை ஸ்டேஷனில் விட்டுடறேன்.... உனக்கு ஆபீஸுக்கு டைம் ஆச்சுல்ல உனக்கு என் கூட வர்ற பிடிக்கலைன்னா நீ இந்த குடையை எடுத்துக்க நான் கிளம்பறேன்!

    பூஜா குடையை வாங்காமல் அவனையே பார்த்தாள். அவன் நன்றாக நனைந்து போய் இருந்தான். பூஜாவை நனையாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியில் தன்னையே நனைத்துக் கொண்டிருந்தான்.

    குடையை வாங்கிக்க பூஜாவை.... நான் திரும்ப கேட்கமாட்டேன்.... என் ஞாபகமா நீயே வெச்சுக்க! என்றான் அரவிந்த்.

    பூஜா அவனைப் பார்த்து முறைத்தாள்.

    சரி சரி குடையை நான் நாளைக்கு வாங்கிக்கறேன். இந்த குடையை முதல்ல பிடி! அரவிந்த் அவளிடம் குடையை கொடுத்து விட்டு மழையில் நனைந்தபடி வேறு திசையில் சென்றான். பூஜா குடையை மென்மையாக பிடித்துக்கொண்டு நடந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1