Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhudhan Oru Kolai Seithan
Bhudhan Oru Kolai Seithan
Bhudhan Oru Kolai Seithan
Ebook42 pages21 minutes

Bhudhan Oru Kolai Seithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒன்றில் மனைவியைக் கொடுமைப் படுத்தும் கணவன்

இன்னொன்றில் மனைவியை நேசிக்கும் கணவன்

இருவருமே ஊருக்கு நல்லவர்கள்.

இருவரும் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள் என்பதே கதை

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580142807681
Bhudhan Oru Kolai Seithan

Read more from Mala Madhavan

Related to Bhudhan Oru Kolai Seithan

Related ebooks

Reviews for Bhudhan Oru Kolai Seithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhudhan Oru Kolai Seithan - Mala Madhavan

    https://www.pustaka.co.in

    புத்தன் ஒரு கொலை செய்தான்

    Bhudhan Oru Kolai Seithan

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 1

    சென்னை

    கதைக்குப் பிள்ளையார்சுழி போட்டு விட்டு அந்த முதல் வார்த்தைக்காக யோசனையில் ஆழ்ந்திருந்தாள் புவனா. ஒரு கதையின் வெற்றி அதன் ஆரம்பத்தில் இருக்கிறது என நம்பிக்கை கொண்டவள் அவள். சும்மாவா சினிமாவில் எல்லாம் முதல் சீன் மணி அடிப்பது மாதிரியோ இல்லை வெற்றி! வெற்றி! எனக் கத்திக் கொண்டு வருவது மாதிரியோ வைக்கிறார்கள். நல்ல வார்த்தைகள் நல்ல சகுனம் மாதிரி. அட! என பார்ப்பவர்கள் நிமிர்ந்து உட்காருவார்கள்.

    நகத்தைக் கடித்தாள். மோட்டுவளையைப் பார்த்தாள். சன்னல் கதவைத் திறந்து வானத்தையே பார்த்து நின்றாள். வார்த்தை.. அந்த முதல் வார்த்தை வசப்படுவேனா என்றது.

    வெற்றிக் கனியைப் பறித்து விட்ட சந்தோஷத்தில் சட்டென்று பேனாவின் நுனியைப் பேப்பரில் வைத்த விநாடி …

    எங்கிருந்தோ வந்த ரவி அந்த மேசையைக் காலால் எத்திவிட, பேப்பரும் , பேனாவும் ஆளுக்கொரு மூலைக்குப் பயந்து ஓடின. இனி அவன் இல்லாத பொழுது அவற்றைத் தேடிப் பிடித்து எடுக்க வேண்டும். பெருமூச்சு எழுந்தது புவனாவிடம்.

    வழமை போல அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைக்க அடுப்படிக்குச் சென்றாள் அவள்.

    மேசைய இடிச்சுக் காலப் புடிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன். என்னன்னாவது கேட்கிறியா சனியனே!

    'உன் காலு! நீ இடிச்ச! நான் என்ன நடுவுல பஞ்சாயத்து!' அவள் மனம் பேசியது.

    கல்யாணம் ஆகி சென்னையில் தனிக்குடித்தனம் வைத்த நாளிலிருந்து இதே தான்

    Enjoying the preview?
    Page 1 of 1