Mannikka Vendugirean
By Maheshwaran
()
About this ebook
எப்போதுமே நினைப்பது நடக்காது. நினைக்காதது நடந்துவிடும். யதார்த்தமான வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்து விடுவது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. வாழ்க்கைப் பயணத்தை திசை மாற்றுகிற சக்தி சூழ்நிலைகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் மட்டுமே உண்டு. அதைத் தான் இந்நாவலில் சொல்லியிருக்கிறேன்.
இக்கதையின் நாயகன் 'வசந்தனை’ப் போன்ற இளைஞர்கள் இருக்கும்வரை 'கனிஷ்கா' போன்ற அபலைப் பெண்கள் அழ வேண்டிய அவசியமே இருக்காது என நினைக்கிறேன். உங்களுடைய விமர்சன மழையில் நனைந்து மகிழ காத்திருக்கிறேன்.
Read more from Maheshwaran
Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Tick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Pachaikili Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai...! Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsIravum Nilavum Valarattumey...! Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Oviyam Kaiyil Serumo! Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyirai Azhaikkirean... Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsMaranthu Poguma Kaadhal Mugam? Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mannikka Vendugirean
Related ebooks
Anal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsPriyasagaa Rating: 5 out of 5 stars5/5Manam Maaratha Poo Rating: 0 out of 5 stars0 ratingsSanthosa Samrajyam Rating: 0 out of 5 stars0 ratingsVanna Poochchudava Vennila Rating: 0 out of 5 stars0 ratingsEnakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Bhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsKaaval Deivam Rating: 0 out of 5 stars0 ratingsVaarangal Valartha Nila Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThunai Thedum Vergal - 2 Rating: 4 out of 5 stars4/5Naan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Vizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsPattikkattu Krishnan Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Neelam Pirintha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsKan Ketta Pin Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Aagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsUnnaik Kan(Gun) Theduthey Rating: 5 out of 5 stars5/5Aasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Parama(n) Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Pachai Kiliyai Maarava? Rating: 0 out of 5 stars0 ratingsMudindhuvitta Aasai Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsPen Nila Siragadikka...!! Rating: 5 out of 5 stars5/5Thean Sindhum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Hello... Mister Yethirkatchi! Rating: 5 out of 5 stars5/5Perum Mazhai Naatkal Rating: 2 out of 5 stars2/5
Reviews for Mannikka Vendugirean
0 ratings0 reviews
Book preview
Mannikka Vendugirean - Maheshwaran
http://www.pustaka.co.in
மன்னிக்க வேண்டுகிறேன்
Mannikka Vendugirean
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
என்னைப் பற்றி
இனிய வாசகர்களே! நலம்தானே?
எப்போதுமே நினைப்பது நடக்காது. நினைக்காதது நடந்துவிடும். யதார்த்தமான வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்து விடுவது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. வாழ்க்கைப் பயணத்தை திசை மாற்றுகிற சக்தி சூழ்நிலைகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் மட்டுமே உண்டு. அதைத் தான் இந்நாவலில் சொல்லியிருக்கிறேன்.
இக்கதையின் நாயகன் 'வசந்தனை’ப் போன்ற இளைஞர்கள் இருக்கும்வரை 'கனிஷ்கா' போன்ற அபலைப் பெண்கள் அழ வேண்டிய அவசியமே இருக்காது என நினைக்கிறேன். உங்களுடைய விமர்சன மழையில் நனைந்து மகிழ காத்திருக்கிறேன்.
1
அண்ணே..
வசந்தனின் அருகில் வந்து நின்றான் வருண்.
சொல்லுடா
சொன்னா கோபப்பட மாட்டியே
கோபப்படறது மாதிரியான பேச்சை பேசினா கொஞ்சவா முடியும்?
சுள்ளென்று நிமிர்ந்தான் வசந்தன்.
உள்ளங்கை அளவு கண்ணாடியில் முகத்தைப் பார்த்து சிறிய கத்தரி கோலினால் மீசையை சீராய் நறுக்கிக் கொண்டிருந்தான்.
அப்ப நான் உன்கிட்டே எதுவுமே பேசலை
அங்கிருந்து நகர முயன்றான் வருண்.
இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம். வசந்தன் எம்.பி.ஏ., முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்க்கிறான்.
வருண் டிகிரி முடித்த கையோடு போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற்று வங்கிப் பணியில் அமர்ந்துவிட்டான்.
அண்ணன் தம்பி இருவருமே கைநிறைய சம்பாதிக்கிறார்கள்.
'இந்தக்காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா?’ என மற்றவர்கள் ஆச்சர்யப்படுகிற அளவிற்கு இருவருமே எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவர்கள்.
அழகிலும் சரி, குணத்திலும் சரி எந்தக் குறையும் சொல்ல முடியாது.
அப்பா வேதாச்சலம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்.
அம்மா செண்பகவள்ளி அமைதியான குடும்பத் தலைவி.
அதிர்ந்து ஒரு வார்த்தைக்கூட பேசத் தெரியாத உத்தமி.
டேய் இருடா...
வருணின் சட்டையைப் பற்றி தன்பக்கமாய் இழுத்தான் வசந்தன்.
நான் போறேண்ணே
சொல்ல வந்ததை சொல்லிட்டுப் போடா
கோபப்படமாட்டேன்னு சொல்லு...
சரி கோபப்படலை
வருனை சாந்தமாய்ப் பார்த்தான் வசந்தன்.
உம்மனசுல என்னண்ணே நெனைச்சுகிட்டிருக்கே? வர்ற வரன்களையெல்லாம் வேணாம் வேணாம்னு தட்டிக்கழிசுடுறியே.. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட ஒரு நல்ல வரன் வந்திருக்கு. பெண்னோட அப்பா லாயர். அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர்... அந்தப் பொண்ணு ஸ்கூல் டீச்சரா வேலைப் பார்க்குது.. அம்பது சவரன் நகைப் போட்டு கார் வரைக்கும் வாங்கித் தர்றதா சொல்லியிருக்காங்க.... அழகுலயும் பொண்ணைக் குறை சொல்ல முடியாது.. ஜாதகமும் பிரமாதமாப் பொருந்தியிருக்கு.... அப்பாவும் அம்மாவும் இந்த எடத்தை எப்படியாவது முடிச்சுடணும்னு எவ்வளவு ஆசையா இருந்தாங்க தெரியுமா? வேணவே வேணாம்னு பிடிவாதமா மறுத்துட்டே இப்பவே வயசு முப்பதை நெருங்கிடுச்சு. கல்யாண வயசுல கல்யாணம் பண்ணிக்காம எப்பண்ணே பண்ணிக்கப் போறே?
வருண் படபடத்தான்.
நேரம் வர்றப்போ தானா நடக்கும்
தானா வராது. நாமதான் தேடி போகணும்
எனக்கு இப்ப கல்யாணத்துல விருப்பமில்லை
அதான் ஏன்னு கேட்கறேன்
காரணத்தை உன்கிட்ட சொல்லமுடியாது
யாரையாச்சும் காதலிக்கிறியா?
இந்தக் கேள்விக்கு என்கிட்டே பதில் இல்லை வருண்
இப்படி பேசினா என்னண்ணே அர்த்தம்? உன்னால என்னோட எதிர்காலம் வீணாகிடுமோன்னு பயமா இருக்கு
என்னடா சொல்ற?
குழப்பமாய் நிமிர்ந்தான் வசந்தன்.
எனக்கு இப்ப வயசு இருபத்தியெட்டு. நானும் கல்யாண வயசுலதான் நிக்கறேன், காலா காலத்துல கல்யாணம் பண்ணினாத்தானே நேரத்துல கொழந்தைங்க பொறக்கும். முப்பது வயசுக்கு மேல கல்யாணமாகி முப்பதிரண்டு வயசுல கொழந்தைப் பொறந்து, அதை வளர்த்து ஆளாக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நாம ரிடையர்மெண்ட் ஆகறதுக்குள்ளே நம்ம புள்ளைங்க நல்ல நெலமைக்கு வந்துடணும். அதனாலதான் சீக்கிரமா கல்யாணம் பண்ணணும்னு சொல்றது?
இதான் உன்னோட பிரச்சினையா?
ஆமா... உன் கல்யாணம் முடிஞ்சாதானே என்னைப் பத்தி யோசிப்பாங்க. எனக்கு முன்பக்க தலைமுடி ஏறிகிட்டே போகுது... கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கறப்போ நான் கெழவனாயிடுவேனோன்னு தோணுது…
வருண் தனது மனசுக்குள் இருந்ததை ஒளிவு மறைவின்றி அப்படியே கொட்டினான்.
பரவாயில்லையே.... நீ கூட நல்ல விதமாத்தான் யோசிச்சிருக்கே
வசந்தன் சிரித்தபடியே வருணைப் பார்த்தான்.
கிண்டலா இருக்காண்ணே...
அதெல்லாம் ஒண்ணுமில்லை... கல்யாணம் பண்ணறதுதானே உன்னோட பிரச்சினை? உடனே உன்னோட கல்யாணம் நடக்க நான் ஏற்பாடு பண்றேன். எனக்கு வந்த டீச்சர் பொண்ணையே வேணுமின்னாலும் பேசி முடிச்சிடுவோம்...
நீ இருக்கறப்போ.. எனக்கு எப்படிண்ணே கல்யாணம் பண்ணுவாங்க
அந்த கவலை உனக்கெதுக்கு? அப்பாகிட்டயும், அம்மாகிட்டயும் நான் பேசிக்கறேன்...
நா சொல்லிதான் நீ பேசறேன்னு அவங்களுக்கு தெரியக் கூடாது
தெரியாதுடா
கையிலிருந்த கண்ணாடியையும், கத்திரிக்கோலையும் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பிளாஸ்ட்டிக் ஷெல்ப்பில் வைத்தான். தேங்காய்ப்பூ துண்டை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கி நடந்தான்.
செல்போன் மணியடித்தது.
அண்னே உன்னோட போன் அடிக்குது
என்றான் வருண்.
அதற்குள் வசந்தனின் செல்போனோடு அங்கே வந்துவிட்டாள் செண்பகவள்ளி.
"வசந்தன்... இந்தா உன்னோட போன் ரொம்ப நேரமா மணி அடிச்சுகிட்டே இருக்கு.. யாருன்னு பேசுடா... எதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போகுது.
செல்போனை வசந்தனிடம் நீட்டினாள்.
ஒருவேளை தரகரா இருக்குமோ?
வசந்தனுக்கு பக்கமாய் வந்து நின்று ஆர்வமாய் பார்த்தான் வருண். செல்போனின் திரையில் ஒளிர்ந்த எண்களைப் பார்த்ததும் வசந்தனுக்கு தூக்கிவாரிப் போட்டது.
கனிஷ்காதான் அழைக்கிறாள்.
'வீட்டில் இருக்கும்போது போன் பண்ணாதே என்று எத்தனையோ தடவை சொல்லியாயிற்று..?’
கனிஷ்கா அதையெல்லாம் காதிலேயே வாங்குவதில்லை.... வருணும் செண்பகவள்ளியும் வசந்தனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
'இருவரும் என்னையே பார்க்கிறார்களே.. கனிஷ்காவிடம் எப்படி பேசுவது?'
'கனிஷ்கா என்னைக் காட்டிக் கொடுக்காமல் ஓயமாட்டாள் போலிருக்கிறதே'
யாருடா போன்ல? பார்த்துகிட்டே இருக்கே பேசேன்டா...
என்றாள் செண்பகவள்ளி. வேறுவழியின்றி பச்சைப் பொத்தானை அழுத்தி காதில் வைத்தான் வசந்தன்.
அலோ...
என்றான் மெதுவாய்
என்னங்க நான் கனிஷ்கா பேசறேன்
மறுமுனையிலிருந்து கனிஷ்காவின் இனிப்பான குரல் ஒலித்தது.
குட்மானிங் சார்.. இப்பத்தான் சார் நான் குளிக்கவே போறேன்....... குளிச்சதும் டிரெஸ் பண்ணிகிட்டு இன்னும் இருபதே நிமிஷத்துல வீட்டைவிட்டு கிளம்பிடுவேன் சார்... தேங்க்யூ சார்... வெச்சுடுறேன் சார்....
படபடவென்று பேசிவிட்டு கனிஷ்காவின் தொடர்பை சட்டென்று துண்டித்து செல்போனின் சிவப்பு பொத்தானை அழுத்தி இயக்கத்தை அடியோடு அணைத்தான்.
ஆபீஸ்ல ஆடிட்டிங் டைம். அதான் ஜி.எம். என்னை சீக்கிரமா வரச் சொல்றார்....
என்றபடியே செல்போனை செண்பகவள்ளியிடம் திணித்தான்.
இதை என் ரூம்ல கொண்டு போய் வெய்மா
குளியலறையை நோக்கி ஓட்டமாய் ஓடினான்.
வீடு இல்லாட்டி ஆபீஸ்.. இதை தவிர இவனுக்கு வேற எதுவுமே தெரியாது.. இந்த ஜென்மத்துல இவனுக்கு கல்யாணமே ஆகப்போறதில்லை.... இவனால என் வாழ்க்கையும் இல்லே வீணாகுது.... கடவுளே.. இவன் மனசுல எப்படியாவது கல்யாண ஆசையை வரவழைப்பா...
வருண் முனகியபடியே அங்கிருந்து நகர்ந்தான்.
ஷவரிலிருந்து ஊசிஊசியாய் தண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது.
பெரிய சைஸ் சோப்புக்கட்டியை உடம்பு முழுக்க நுரைவழிய தேய்த்துக் குளித்தான் வசந்தன்.
'கனிஷ்காவை