Vaarangal Valartha Nila Kathaigal
()
About this ebook
"வாரங்கள் வார்த்த நிலாக்கதைகள்" - ஆரம்ப காலத்தில் என் சிந்தனை சிறுகதை பக்கமேயிருந்து. ஏராளமான சிறுகதைகள் பல் வேறு வார இதழ்களில் பிரசுரமானது. அதில் 40 சிறுகதைகளை உங்கள் பார்வைக்கு தருகிறேன். அன்றாட சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து, அவைகளை,தன் கற்பனை வளத்தால் ஒரு எழுத்தாளன் சிறுகதையாக, நாவலாக, நாடகமாக, திரைப்படங்களாக படைப்பது தான் சிறந்த பணி.
இந்த நாற்பது சிறுகதைகளும் படிக்கும் போது, இவை, எதிர் வீட்டில் அல்லது நம் வீட்டில் நடப்பது போல உணர்ந்தால் அல்லது எங்காவது சந்திந்தால் என்னை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். வழக்கமான விமர்சனம் எதிர் பார்க்கிறேன்.
- காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com
Read more from Kanchi Balachandran
Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Ennidam Rating: 5 out of 5 stars5/5Nijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Poonthotiti... Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsManam Pona Pokkile Rating: 0 out of 5 stars0 ratingsKadavul Thantha Irumalargal Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsMaranthean, Mannithean Rating: 0 out of 5 stars0 ratingsVandhana Oru Kelvikuri! Rating: 0 out of 5 stars0 ratingsPanama? Pasama? Rating: 0 out of 5 stars0 ratingsKannile Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vaarangal Valartha Nila Kathaigal
Related ebooks
Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Kuyil Koovum Solai! Rating: 0 out of 5 stars0 ratingsSaathuryam Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Oru Thuli Kadal Rating: 2 out of 5 stars2/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Poovum Naanum Veru... Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsஇறைவன் கொடுத்த வரம்! Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்சிப் பேசக் கூடாதா Rating: 0 out of 5 stars0 ratingsKonchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naanavena? Rating: 4 out of 5 stars4/5Sagaram Rating: 0 out of 5 stars0 ratingsதராசு முள்! Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsKaaval Deivam Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vazhga! Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Gangai Rating: 5 out of 5 stars5/5Kangal Mayangiya Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratings47 Natkal Rating: 4 out of 5 stars4/5Mannikka Vendugirean Rating: 0 out of 5 stars0 ratingsNeruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Eppadiyum Jeikka Vendum Rating: 0 out of 5 stars0 ratingsArakkanai Vendra Kullan Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPattikkattu Krishnan Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vaarangal Valartha Nila Kathaigal
0 ratings0 reviews
Book preview
Vaarangal Valartha Nila Kathaigal - Kanchi Balachandran
http://www.pustaka.co.in
வாரங்கள் வார்த்த நிலாக் கதைகள்
Vaarangal Valartha Nila Kathaigal
Author:
காஞ்சி பாலச்சந்திரன்
Kanchi Balachandran
For more books
http://pustaka.co.in/home/author/kanchi-balachandran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பந்தி
2. பிறந்த நாள் பரிசு
3. ஊரை தெரிஞ்சிக்காதவன்
4. பாசத்தின் மறுபக்கம்
5. பொம்பள மனசு
6. இனி திலகா அலையமாட்டாள்
7. மனம் நிறைந்தது
8. இன்டர்வியூ
9. யார் டைரக்டர்
10. ஐந்நூறு ரூபாய் நோட்டு
11. முகம்
12. திருட்டுப் பூனைகள்
13. காலம் செய்த விளையாட்டு
14. கோகிலா
15. அம்மாவா சொன்னாள்
16 கரடி விஜயம்
17. நதி என்றால் நுரையுண்டு
18 வாழ்க்கை ஒரு கண்ணா மூச்சி
19. வர்றார் எம்.டி.
20. நாடி சோதிடம்
21. நிழலில் ஒரு நிஜம்
22. சந்தோஷ ஊற்று
23. தோஷம்
24 சக்கரங்கள் நிற்பதில்லை
25. வரிக்குதிரை
26. அப்பாவின் முகவரி
27. சுவற்றில் எறிந்த பந்து
28. ராஜ தந்திரம்
29. பொங்கல் வாத்தியார்
30. பெரிய சொத்து
31. முடிவு அவர் கையில்
32. இன்னொரு வீடு
33. பூமிக்குள் ஆகாயம்
34. சொல்லாத காதல்
35. தலைப்பிரசவம்
36. ஆண் எழுத்தாளர்
37. குருதி
38 பட்டுச் சேலை
39. வேலை-பெண்
40. கல்யாணச் சந்தையிலே
1. பந்தி
கல்யாண வீட்டில் சாப்பாட்டிற்கு இடம் பிடிப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது எனக்கு...
முகூர்த்த நேரம் முடிந்ததும் பந்திக்கு முந்து என்ற வேகத்தில் டேபிள் சேரில் ஒரு இடத்தைப் பிடித்தேன்.
பாதாம் அல்வா, மக்கன் பேடா, கட்லெட், கத்திரிக்காய் சாப்ஸ், வடை, தேங்காய் சாதம், சாம்பார் சாதம், கல்கண்டு பாத் என்று இலை முழுவதும் நிரப்பி வைத்திருந்தார்கள்.
இலையில் கையை வைத்த நான் தற்செயலாய்ப் பக்கத்து இலையில் சாப்பிட உட்கார்ந்திருந்த அந்தப் பெரியவரின் செய்கையைப் பார்த்துத் திடுக்கிட்டேன்.
வைத்திருந்த வகையறாக்களில் ஒவ்வொன்றிலும் பாதி பாதி எடுத்து இலையின் ஓரமாக வைத்துவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தார்.
எனக்கு அந்த செய்கை மிகுந்த எரிசலை உண்டு பண்ணியது. என்ன மனுஷன்! விலைவாசி உயர்விலே எப்படியோ கடன்பட்டு கல்யாணத்தை நடத்தறாங்க. இப்படி பொருளை வேஸ்ட் பண்றாரே?
என்றேன்.
முணுமுணுப்பைக் கேட்ட அந்தப் பெரியவர் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சாப்பிட்டு முடித்து இலையை மடித்து எழுந்துவிட்டார். என் பங்குக்கு ஒன்று விடாமல் சாப்பிட்டு இலையை மடித்தேன்.
கல்யாணக்காரரிடம் விடைபெற்று தாம்பூலம் வாங்கிக்கொண்டு, வெளியே வந்தேன். அப்போது அந்த பெரியவர் என்னைக் கடந்து சென்றார்.
சாப்பிட்ட பின் இலைகளை ஒரு கூடையில் கொண்டு வந்து வெளியே கொட்டினார்கள். நரிக்குறவன், அந்தக் கூடையிலிருந்த இலையைப் பெற்றுக் கொண்டு கூடையைத் திருப்பித் தந்தான்.
ஒவ்வொரு இலையாகப் பார்த்துத் தூர வீசியெறிந்து விட்டு, நிறைய அயிட்டங்கள் இருந்த இலையை எடுத்தான். ஏ புள்ளே! எந்த புண்ணியவானோ நம்ம பசிக்கு போட்டிருக்காரு. நல்லா இருக்கணும்! நீ புள்ளத்தாச்சி. வாய்க்கு ருசியா சாப்பிடு புள்ளே.
நரிக்குறவன் தன் கையாலே அந்த நரிக்குறத்திக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.
பைக்கை எடுக்க வந்த நான் என் செய்கையை எண்ணி அவமானத்தால் தலைகுனிந்தேன்.
ஓரமாக நின்றிருந்த அந்த பெரியவர் மீண்டும் என்னை அமைதியாகப் பார்த்துப் புன்னகை செய்தார்.
2. பிறந்த நாள் பரிசு
எழுந்திரும்மா ஷாலினி! நல்ல பொண்ணுல்ல?
போர்வையை விலக்கினாள்.
போம்மா, எனக்கு தூக்கமா வருது
என்னம்மா புரியாமல் பேசறே! இன்னிக்கு உனக்கு பர்த்டேயாச்சே மறந்துட்டிய்யா? சீக்கிரம் எழுந்து குளிச்சு, சாமிகும்பிட்டு புது டிரஸ் போட்டுப்பே?
தன் ஐந்து வயது மகள் கன்னத்தில் முத்தம் கொடுத்து எழுப்ப முயற்சித்தாள் கற்பகம்.
ம்ம்... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேம்மா! ப்ளீஸ்!
ஷாலினி கெஞ்சினாள்.
இதோ பாரு ஷாலி! நல்ல நாளும் அதுவுமா என்கிட்டே அடி வாங்காதே! சமத்தா இப்போ எழுந்திரும்மா!
எத்தனை கெஞ்சியும் ஷாலினியின் தூக்கம் கலைந்ததாக இல்லை.
என்னங்க! இன்னிக்கு பார்த்து குழந்தை இப்படி முரண்டு பிடிக்கிறாளே? நீங்களாச்சும் அவளை கொஞ்சம் எழுப்பக் கூடாதா?
குக்கர் விசில் கொடுக்கவே சமையலறைக்கு ஓடினாள் கற்பகம்.
என்ன ஷாலினி! என்ன ஆச்சு உனக்கு! இதோ பாரு, டாடி உனக்காக டிரஸ் வாங்கியாந்து இருக்கேன். அப்புறம் ஸ்கூலிலே உன் பிரண்ட்ஸ்களுக்கு கொடுக்க சாக்லெட் வாங்கியாந்து இருக்கேன். எழுந்திரும்மா! டாடி பேச்சைக் கேட்பேயில்லே!
ஷாலினி அவன் பேச்சையும் கேட்காமல் சுருண்டுகொண்டாள்.
சுகுமார் அவளை விடாமல் அப்படியே தூக்கிக்கொண்டு குளியலறையில் அணைத்து நிற்க வைத்து முகத்தை நனைத்தான்.
இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு! அங்கங்கே கிடைக்கலையேன்னு அலையுதுங்க! நம்ம ரெண்டு பேரும் லோலோன்னு அலைஞ்சு இதுக்கு வாங்கியாந்து கொட்டிக்குவிச்சா கூட இப்படி அடம்பிடிக்குதே! எல்லாம் உங்க செல்லம் தான் காரணம்!
கணவனை சீண்டினாள்.
என்ன நீ... அவளுக்கு என்னவோ மூடு சரியில்லை. குழந்தை தானே! எல்லாம் சரியாகும்.
ஷாலினி கண்ணு! உன் பொறந்த நாளுக்கு நாங்க ரெண்டு பேரும் ஆசையா என்னென்ன டாய்ஸ் எல்லாம் வாங்கியாந்து இருக்கோம் பார்த்தியா! நீ என்ன டான்னா சொன்ன பேச்சை கேக்க மாட்டேங்கிறே! அம்மு குட்டியில்லே! குளிச்சிட்டு வந்துடும்மா!
ஒரு வழியாக ஷாலினி குளித்து முடித்தாள்.
டேய் ஷாலினி! உன் பிறந்த நாள் டிரஸ்லயே நீ ஸ்கூல் போகலாம்மா!
நான் யூனிஃபார்மிலேயே போறேன் டாடி!
முளைச்சி மூணு இலை விடலே இப்பவே நீ முடிவு எடுக்க ஆரம்பிச்சிட்டியா! நாங்க சொல்றதைத்தான் கேட்கணும்!
என்ன கற்பகம்! குழந்தையை இப்படி மிரட்டறே!
சமாதானப்படுத்த முயன்றான் சுகுமார்.
என்னங்க நானும் காலையிலிருந்து பார்க்கிறேன் ரொம்ப பெரிய மனுஷி மாதிரி நடந்துக்கறா! ரெண்டு போடுப் போட்டாதான் வழிக்கு வருவா?
ஷாலினி கண்ணு! அம்மா உன் மேலே ரொம்ப கோபமா இருக்கா! எதுக்கு இப்படி அடம்பிடிக்கிறே!
நான் ஒண்ணு சொல்லுவேன். செய்வீங்களா டாடி?
சொல்லுடா கண்ணு உன் விருப்பம் என்னென்னு சொல்லு, கண்டிப்பா செய்றோம்
நீங்க ரெண்டு பேரும் இன்னிக்கு லீவு போடுவீங்களா டாடி?
உனக்குத்தானேம்மா பொறந்த நாள்! நாங்க ஏதுக்கு லீவு போடணும்.
ஏன் தெரியுமா டாடி? இன்னிக்கு நான் ஸ்கூல் ரிக்ஷாவிலே போக மாட்டேன். உங்க பைக்கிலே என்னை ஸ்கூல்ல கொண்டு போய் விடணும். அப்புறம் லஞ்சுக்கு அம்மா ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு வந்து எனக்கு அங்கேயே ஊட்டணும் சரியா?
ஏண்டா கண்ணு திடீர்னு இப்படி ஒரு ஆசை உனக்கு?
என் பிரண்ட்ஸங்க நிறைய பேருக்கு அவங்கவங்க மம்மிதான் லன்ஞ் கொண்டு வந்து ஊட்டறாங்க! நான் மட்டும் காலையிலே அம்மா கட்டித்தர்ற சாப்பாட்டைத் தனியே உட்கார்ந்து சாப்பிடறப்போ கஷ்டமா இருக்கு டாடி! இன்னிக்கு ஒரு நாளாவது லீவு போடறீங்களா டாடி?
சுகுமார் - கற்பகம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பணத்தால் மட்டுமே பாசத்தை காட்ட நினைத்த அவர்கள் ஷாலினி சொன்னதையும் சிந்திக்க தொடங்கினார்கள்.
3. ஊரை தெரிஞ்சிக்காதவன்
பையன் இந்தப் பெண்ணாவது பிடிச்சிருக்குன்னு சொல்வானா?
என்ற கவலையில் இருந்தாள் லட்சுமி அம்மாள்.
ஏண்டா! பார்த்தப் பொண்ணுங்கள்ளே ஒரு பொண்ணு கூடப் பிடிக்கலன்னு சொல்றியே... இவங்களுக்கு அழகு இல்லையா? பணம் இல்லையா? இல்லே உன் மனசுல வேற எந்தப் பெண்ணையாவது நெனைச்சிருக்கியா, அதையாவது சொல்லு, கட்டிவைக்கிறோம்!
அப்பா சுந்தரேசன் தெளிவாகவே கேட்டார்.
அப்பா! காதல் கீதல்னு எதுவும் இல்லே! நான் எதிர்பார்க்கிறதே வேறப்பா! இந்த காலத்திலே எந்த பெண்ணாவது அழகா தலைவாரி, ஜடை பின்னி, புடவை கட்டி வெளியே வர்றாங்களா? சின்னவங்க முதல் பெரியவங்க வரை எல்லாமே சுடிதாரிலும் கவுனிலேயும் தான் நிக்கறாங்க! இந்த நாகரீகம் எனக்கு பிடிக்கலப்பா.
டேய்...! இந்த மாதிரி அது சொத்தை, இது சொத்தைன்னு பார்த்தே நீ வாழ்க்கை பூரா பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டியதுதான்
திட்டவட்டமாக சுந்தரேசன் தெளிவுபடுத்தினார்.
அவனை ஏன் கரிச்சி கொட்டறீங்க? அவனுக்கு பிடிக்கலைன்னா விடுங்க! எந்தப் பொண்ணு அவனுக்கு பிடிக்குதோ கட்டிக்கட்டும்! ஏன் கட்டாயப்படுத்தணும்?
அம்மா பையனுக்கு வக்காலத்து வாங்கினாள்
இன்று கிருஷ்ணாவுக்கு எட்டாவது முறையாக பெண் பார்க்கும் படலம்...
பெண் மெல்ல நடந்து வந்தாள். காபி டம்ளரை, கிருஷ்ணா முன் நீட்டினாள், உள்ளே சென்ற அவளை கண்கொட்டாமல் பார்த்தான்.
கிருஷ்ணா அலுவலகத்தில் பணிபுரிபவன், கை நிறைய சம்பாதிப்பவன், அவன் அலுவலகத்தில், தன்னோடு பணி புரியும் நாகரீகமாக நறுவிசாக உடையணிந்து மேக் - அப் தரித்த பெண்களை அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது.
தலைமுடியை அப்படியே பறக்கவிட்டு ஒரு ரப்பர் பாண்டால் கட்டி அலுவலகத்திற்கு வரும் பெண்களை பார்க்கும் போது எரிச்சலின் உச்சிக்கே செல்வான். தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் தன் விருப்பு வெறுப்பை கொட்டி தீர்ப்பான்.
தனக்கு வரும் மனைவி அப்படியெல்லாம் இல்லாமல், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தான். சென்ற ஏழு முறை பெண் பார்த்த இடத்திலே, அவன் கற்பனைக்கு ஏதாவது ஒரு குறை தெரிந்ததால் திருமணம் தடைபட்டது.
இந்தப் பெண்ணை பிடிச்சிருக்குப்பா! பெண்ணுக்கும் என்னை பிடிச்சிருந்தா சம்மதம் சொல்லிடுங்க!
அப்பாவின் காதோடு சொன்னான்.
சுந்தரேசனுக்கு ஒரே மகிழ்ச்சி. இந்தப் பெண்ணுக்கு மட்டும் தன் மகன் எப்படி சம்மதம் தெரிவிச்சான்? அவனிடம் கேட்டுவிட வேண்டும் என்ற ஆவலாய் இருந்தார். பெண் வீட்டில் சம்பிரதாயமாக பேச வேண்டியதைத் பேசி முடித்து விட்டு, தெரு முனையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை நெருங்கியதும், இந்தப் பெண் மட்டும் எப்படிடா பிடிச்சது?
என்றார்.
நான் பார்த்த பெண்ணில் இந்தப் பெண் மட்டுமே அழகாக பட்டுச் சேலை உடுத்தி முழங்கால் வரை கூந்தலை அழகாக ஜடை பின்னி அடக்கமாக வந்தாளே, அதுவே ஒரு அழகா இருந்திச்சு
என்றான் கிருஷ்ணா.
பெண் வீட்டில் அம்மாவிடம் சிணுங்கினாள் பெண்.
அம்மா! உன் பேச்சைக் கேட்டுத்தான், இந்த சவுரி முடியை வைத்து தலை பின்னிக்கிட்டேன். உங்கம்மா காலத்திலிருந்து இந்த சவுரி நம்ம வீட்ல இருக்கு! ராசியான து அப்படி இப்படின்னு சொன்னீங்க... உங்க ஆசைக்காக வெச்சுக்கிட்டேன். இந்தா உன் சவுரி!
அம்மா கையிலே கொடுத்து, குதிரை வாலுக்கு மாறினாள். நிமிடத்தில் சுடிதாருக்கு மாறி டைப்ரைட்டிங், கிளாசுக்கு புறப்பட்டாள்!
ஏண்டி கட்டியிருக்கிற பட்டுப் புடவையிலேயே போயிட்டு வாயேன்!
"போம்மா!