Kannile Anbirunthal
()
About this ebook
பார்வையற்ற கணேஷ் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசிப்பவன். அவன் மனைவி தேவகி பள்ளிக்கூடத்தில் ஆசிரியை. அவர்களுக்கு ஒரே மகன் ஷியாம். இவர்கள் வாழ்க்கை அமைதியாகவும்,நிம்மதியாகவும் செல்கிறது. இவர்கள் முன்னால் கணவன் வினோத் குறுகிடுகிறான். தேவகி எதற்காக முதல் கணவனை பிரிந்தாள், கணேஷை எப்படி ஏற்றுக் கொண்டாள், தேவகியின் உணர்ச்சிப் போராட்டங்களையும் அவள் எடுத்த முடிவு சரிதானா என்பதையும், இந்நாவல் ஒரு திரைப்படத்தைப் பார்த்ததைப்போல் உங்களுக்கு உணர்த்தும். விமர்சனங்களை எதிர் நோக்கி.....
நட்புடன்
காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com
Read more from Kanchi Balachandran
Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Ennidam Rating: 5 out of 5 stars5/5Kadavul Thantha Irumalargal Rating: 0 out of 5 stars0 ratingsNijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsManam Pona Pokkile Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Neram Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Poonthotiti... Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsVaarangal Valartha Nila Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsPanama? Pasama? Rating: 0 out of 5 stars0 ratingsMaranthean, Mannithean Rating: 0 out of 5 stars0 ratingsVandhana Oru Kelvikuri! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kannile Anbirunthal
Related ebooks
Inikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Kattil Pazhakkam Rating: 0 out of 5 stars0 ratingsமுள்ளும் மலராகும்! Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Kalyana Valaiyosai Rating: 0 out of 5 stars0 ratingsNee Eppa Varuvey? Rating: 0 out of 5 stars0 ratingsAasaikkanavugal and PonVilakku Rating: 0 out of 5 stars0 ratingsRaajinama! Rating: 0 out of 5 stars0 ratingsKadai Thenkai Rating: 3 out of 5 stars3/5Appalakacheri Rating: 2 out of 5 stars2/5Poojaikku Vantha Malarey Vaa...! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5மலரே என்னை நெருங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsகால் முளைத்த சிற்பம்! Rating: 0 out of 5 stars0 ratingsKaal Muzhaitha Sirppam Rating: 0 out of 5 stars0 ratingsIlam Solai Pooththathaa Rating: 0 out of 5 stars0 ratingsPokkisam Rating: 4 out of 5 stars4/5Mathil Mel Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsPhoenix Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsஏன் Rating: 0 out of 5 stars0 ratingsYen Rating: 5 out of 5 stars5/5அதிகாரப் பிச்சை..! Rating: 0 out of 5 stars0 ratingsVarathachanai Rating: 0 out of 5 stars0 ratingsSnehavin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPeriyavanga Rating: 0 out of 5 stars0 ratingsபெரியவங்க Rating: 0 out of 5 stars0 ratingsபுலி வால் Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vaal Rating: 0 out of 5 stars0 ratingsKadhali Ilavasam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kannile Anbirunthal
0 ratings0 reviews
Book preview
Kannile Anbirunthal - Kanchi Balachandran
http://www.pustaka.co.in
கண்ணிலே அன்பிருந்தால்
Kannile Anbirunthal
Author:
காஞ்சி பாலச்சந்திரன்
Kanchi Balachandran
For more books
http://pustaka.co.in/home/author/kanchi-balachandran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
அன்று சனிக்கிழமை தேவகி சோம்பலை முறித்து எழுந்தாள். அலாரம் ஐந்து மணிக்கு வைத்துவிட்டு படுத்தவள் அலாரம் அடிக்கும் முன்பே எழுந்து விளக்கைப் போட்டாள். மணி நான்கு முப்பது என்று கடிகாரம் தன் வேலையைச் செய்துக் கொண்டிருந்தது.
அருகில் திரும்பிப் பார்த்தாள் கணவர் கணேஷும் செல்லக்குட்டி ஷியாமும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
விளக்கு வெளிச்சத்தில், அவர்கள் விழித்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்தவள் விளக்கை அணைத்து ஹாலுக்கு வந்தாள். இனிமேல் தூக்கம் வராது.
சனிக்கிழமை பள்ளிக் கூடம் விடுமுறையாததால் லேட்டாக எழுந்திருக்கலாம் அவளை கேட்பதற்கு யாருமில்லை. வழக்கமாக இயந்திரத்தனமாக மற்ற நாட்களில் வேலைப் பார்க்கும்போது, விடுமுறை நாட்களும் அந்த இயந்திரதனமான நாட்களைப் போலவே ஆகிவிட்டது.
நிலைக் கண்ணாடி முன்னால் தன் முகத்தைப் பார்த்தாள். தன் உடம்பில் சிவப்பு நிறம் படர்ந்திருப்பதும், முகம் எந்தவித முக அலங்காரமின்றி, இயற்கையாகவே அழகாயிருந்தாள்.
பார்க்கும்போது தனக்கே பொறாமையாகயிருந்தது. ஆனால் அதே சமயம் இந்த அழகுத்தானே தன்னை எப்படியெல்லாம் பாடாய் படுத்தியது?
வாழ்க்கையிலே எத்தனைப் போராட்டங்கள் எதிர் நீச்சல்கள்.
பெண் என்பவள் அழகாகப் பிறக்கக்கூடாது. அதிலும் அவள் வறுமையில் பிறக்கக்கூடாது.
பணக்கார வீட்டில் பிறந்து, அழகாகத் தோன்றினாள். சமுதாயம் மேலும் அந்தஸ்தை உண்டாக்கும். இருக்கிற வசதிகளோடு மேலும் வசதிகள் வந்து அதனோடு தன்னை இணைத்துக் கொண்டு காலையிலே இந்த சங்கட எண்ணங்கள் தேவகிக்கு தோன்றியதால் அதனை மறக்க முற்பட்டாள்.
வீட்டின் முன் வாசல் பெருக்கி கோலம் போட்டு, உள்ளே நுழைந்தவள் குளித்து சமையல் அறையில் கேஸ் அடுப்பை பற்றவைத்தாள் சூடாக காப்பித் தயாரித்தாள். அருகிலிருந்த சோபாவிலே அமர்ந்து குடித்தாள்.
கணேஷ் தூங்கி எழுந்தால் பெட்காப்பி குடிக்க மாட்டான். பாத்ரூம் சென்று வந்தப் பிறகே தரவேண்டும். அதனாலே அவன் எழுந்ததும் அவனுக்கு தனியாக, இன்னொரு முறை காப்பி கலக்க வேண்டும்.
ஏழரை மணி ஆகியும் கணேஷ் எழுந்திருக்கவில்லை.
என்னங்க மணி ஏழரை எழுந்திருக்க மனசு இல்லையா?
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கவிடேன்!
இதுவே ரொம்ப லேட் சீக்கிரம் எழுந்திருங்க? இன்னிக்கு பிராக்டீஸ்யிருக்குன்னு சொன்னீங்களே மறந்துட்டீங்களா?
அட ஆமாம் தேவகி ஞாபகப்படுத்தினே!
எத்தனை மணிக்கு!
ஒன்பது மணிக்கு! பிரகாஷ் வந்துக் கூப்பிட்டுப் போவான்.
அப்போ அதுக்குள்ளே டிபன் பண்ணிடறேன்!
என்ன டிபன் பண்ண?
டெய்லி இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சிச்சு. பொங்கலும், தேங்காய் சட்னியும் பண்ணிடு. பிரகாஷும் வர்றான். அவனுக்கு பொங்கல்ன்னா ரொம்ப பிடிக்கும்.
ஷியாம் இன்னும் ஏன் எழுந்திருக்கவில்லே, டியூஷன் இல்லையா?
கணேஷ் கேட்டான்.
இன்னிக்கு சனிக்கிழமை டியூஷன் கட்! எழுந்தவுடனே டி.வி போடச் சொல்லி அடம்பிடிப்பான். வேலைக்கெடும் அதான் தூங்கட்டும்முன்னு விட்டுட்டேன்.
கட்டில் விட்டு எழுந்து பாத்ரூமுக்குச் சென்று ஹாலுக்கு வந்த கணேஷ் குறுக்கேயிருந்த நாற்காலியிலே கால் இடிக்க தடுமாறி கீழே விழப் போனான். நல்ல வேளையாகத் தேவகி அவனைத் தாங்கிப் பிடித்தாள்.
ஏன் தேவகி இந்த நாற்காலி இங்கேயிருக்காதே! எப்படி வந்தது?
சாரிங்க ராத்திரி நாற்காலி இழுத்துப் போட்டு படம் மாட்டினேன். மறதியிலே அப்படியே விட்டுட்டுடேன். இனிமே ஜாக்கிரதையா...
விடு தேவகி. நீ இருக்கும்போது எனக்கு என்ன கவலை. எனக்கு கண்ணிலே மட்டும் தான் பார்வையில்லே. ஆனா நாலு ரெண்டு ஜோடி கண்களிலே என்னைப் பார்த்துக்கீறிங்களே?
என்ன புரியல்லையா?
நீயும் ஷியாமும் தான் என்னை அன்பாலே கட்டிப் போட்டுறீங்களே?
தேவகி கண்களில் புரண்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சமையலறைக்குள் புகுந்தாள்.
2
கணேஷ், பிறவியிலே கண் பார்வையற்றவன் சதுரங்கப்பட்டிணத்திலே இயங்கும் இசைக்குழுவிலே புல்லாங் குழல் வாசிப்பது அவன் தான். சில சமயம் கீ போர்டும் வாசிப்பான். தொடர்ந்து பாடுபவர்கள் சற்று ஓய்வு எடுக்கும் போது அந்த இடைப்பட்ட நேரத்தை வீணாக்காமல் தாமே ஒன்றிரண்டுப் பாடல்களையும் பாடுவான்.
இசைக்குழுவிலே, மத்தவங்களெல்லாம் நோட்ஸைப் பார்த்து பாட இசையமைக்கும் போது எவ்வித