Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pokkisam
Pokkisam
Pokkisam
Ebook137 pages33 minutes

Pokkisam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465445
Pokkisam

Read more from Devibala

Related to Pokkisam

Related ebooks

Reviews for Pokkisam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pokkisam - Devibala

    11

    1

    "நம்ம ரஞ்சனியை அவங்க பாத்துட்டுப் போய் நாலு நாளாச்சு இதுவரைக்கும் எந்த பதிலும் வரலியே?"

    கற்பகம் கேட்க,

    வரட்டும் கற்பகம்! நம்ம பொண்ணுக்கு என்ன குறை? நாம ஏன் போய் தொங்கணும்?

    அப்படியில்லீங்க! இது தொங்கறது இல்லை. விசாரிச்சுத் தெரிஞ்சுக்கலாமில்லையா?

    அது நம்மை பலவீனமாக்கும் கற்பகம்! அவங்களா வரட்டும். இல்லைனா, வேற வரன் பாத்துக்கலாம். விடேன்!

    கற்பகத்தின் முகம் மாறியது.

    விசுவநாதன் செருப்பை மாட்டிக் கொண்டு வாசலில் இறங்கி நடந்தார்.

    அம்மா... டிபன் குடு! எனக்கு நேரமாச்சு!

    ரஞ்சனி வெளியே வந்தாள்.

    மிகப் பெரிய தனியார் மருத்துவமனை ஒன்றில் ரஞ்சனி நர்ஸாக பணிபுரிகிறாள். பட்டப் படிப்பை முடித்து நர்ஸிங் பயிற்சி முடித்து சின்னச் சின்ன ஆஸ்பத்திரிகளில் வேலை பார்த்து, இங்கு வந்து விட்டாள். அதற்கு முக்கியக் காரணம் டாக்டர் பசுபதி! வேறொரு மருத்துவமனைக்கு அவள் விஜயம் செய்த போது ரஞ்சனியைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

    தன் திறமை ஒரு பக்கம் இருந்தாலும் கருணை, பாசம், கவனிப்பு மூன்றிலும் ரஞ்சனி உச்சியில் இருந்தாள். அங்குள்ள நோயாளிகள் அத்தனை பேரும் ரஞ்சனியின் மேல் உயிரையே வைத்திருந்தார்கள். மருந்துகள் சாதிக்காததை ரஞ்சனியின் கனிவு சாதித்துக் கொண்டிருந்தது. மருந்துகளை விட மனோதத்துவம் பெரிசு என்பதை ரஞ்சனி நிரூபித்துக் கொண்டிருந்தாள்.

    டாக்டர் பசுபதி தன் மருத்துவமனைக்கு அவளை அழைத்தார்.

    முதலில் ரஞ்சனி மறுத்து விட்டாள்!

    ஒருவருட காலத்தில் சின்ன மருத்துவமனை சரியாக இயங்க முடியாமல் போக, டாக்டர் பசுபதியின் அழைப்பை ஏற்று ரஞ்சனி இங்கே வந்து விட்டாள்!

    கடந்த மூன்று வருடங்களாக ரஞ்சனி இங்குதான் கொடிகட்டிப் பறக்கிறாள். பசுபதிதான் அங்கு தலைமை டாக்டர். வயது 50. திருமணமே செய்து கொள்ளாமல் மருத்துவத்துக்கே தன்னை அர்ப்பணித்துவிட்ட மகா மனிதர்! ரஞ்சனி அவருக்கு இப்போது வலது கை!

    அவள் இல்லாமல் எந்த ஒரு அறுவை சிகிச்சைக்கும் பசுபதி போக மாட்டார். அவரது கண் அசைவைப் புரிந்து கொண்டு செயல்படும் ஒரே பெண் ரஞ்சனிதான்.

    அந்த ஆஸ்பத்திரியில் ரஞ்சனி சிஸ்டர் இல்லாவிட்டால் ஒருநாள் தாக்குப் பிடிக்க முடியாது!

    பல நாள் ரஞ்சனி வீட்டுக்கே வரமாட்டாள். ஆஸ்பத்திரியில் தங்கி விடுவாள்!

    ரஞ்சனிக்கு இருபத்தியாறு வயது முடிந்து இப்போது இருபத்து ஏழு! கடந்த இரண்டு வருடங்களாக அம்மா கற்பகம் பார்க்காத வரன் இல்லை!

    ஜாதகப் பிரச்சனை அல்லது வேறு ஏதோ ஒரு வில்லங்கம் என - வரும் வரன்களெல்லாம் தட்டிப் போகிறது.

    இதுவரை பெண் பார்க்க வந்தவர்கள் மூன்று பேர்!

    இதோ, மூன்றாவதுக்கும் பதில் இல்லை!

    இத்தனைக்கும் ரஞ்சனிக்கு அழகுக்கு குறைச்சல் இல்லை. அறிவு, அழகு, படிப்பு, திறமை எல்லாம் ஒன்று சேர்ந்தவள் ரஞ்சனி!

    அப்பா விசுவநாதன் நாலைந்து வருடங்களுக்கு முன்னால் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வந்தவர்! எந்த ஒரு இடத்திலும் உருப்படியாக உத்தியோகம் பார்க்காதவர். முன்கோபக்காரர். படக்கென உதறிவிட்டு வந்து விடுவார்!

    அம்மா கற்பகம் பள்ளிக் கூடத்தில் டீச்சர். இரண்டு பெண்கள். மூத்தவள் ரஞ்சனி. அவளைவிட ஏழு வயது சின்னவள் ராகினி! கடைசி வருஷம் கல்லூரியில் படிப்பு!

    அப்பாவின் உதவாக்கரை புத்திக்கு - அம்மா கற்பகம் இல்லையென்றால், அந்தக் குடும்பம் நாறியிருக்கும்!

    கற்பகம்தான் குடும்பத்தைத் தாங்கி, குழந்தைகளை ஆளாக்கியவள்!

    ரஞ்சனி தலையெடுத்து நன்றாக சம்பாதிக்கத் தொடங்கியதும், படிப்படியாக குடும்பக் கஷ்டம் விலகத் தொடங்கி விட்டது.

    கற்பகம் பட்ட கடன்களை எல்லாம் அடைத்து, வீட்டை ஒரு கண்யமான நிலைக்கு ரஞ்சனி கொண்டு வந்தாகி விட்டது. கற்பகம் இப்போதும் வேலை பார்க்கிறாள்.

    விசுவநாதன் நாட்டாமை செய்து கொண்டு ஓசிச் சோற்றை சாப்பிட்டபடி, ஜபர்தஸ்து குறையாமல் வாழும் மனிதர்!

    ரஞ்சனிக்கு வரன் பார்க்க கற்பகம் தொடங்கிய போதே ‘இப்ப என்ன அவசரம்’ எனக் கேட்டு, அதற்கு ஆயிரம் நியாய வாதங்களைக் கற்பித்து, பிரச்சனைகளை உருவாக்கியவர்! கல்யாண பேச்சை எடுக்கும் போதெல்லாம் தகராறு!

    கற்பகத்துக்கு உள்நோக்கம் புரிந்து விட்டது!

    சேமிப்பு என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை.

    கடனை வாங்கிக் கல்யாணம் நடத்த வேண்டும்! ரஞ்சனியின் வருமானம் கைவிட்டுப் போய் விடும். கற்பகத்தின் வருமானத்தில் குடும்பமும் நடத்தி கடனையும் அடைக்க வேண்டும்.

    அப்படியானால் இப்போது அனுபவிக்கும் சுகமெல்லாம் போய்விடும்!

    அதை இழக்க விரும்பாமல் ஆயிரம் தடைகளைச் சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்ட,

    அதற்கு ஏற்றபடி வரன்களும் அமையாமல் போக, ஜாதகத்திலும் கொஞ்சம் தோஷம் இருக்க, எல்லாமாகச் சேர்ந்து கொண்டு கற்பகத்துக்கு டென்ஷனை உண்டாக்கி விட்டது!

    வயதும் இருபத்தியேழைத் தொட்டுவிட, அடுத்தவள் வளர்ந்துவர, கற்பகத்துக்கு பயம் பிடித்துக் கொண்டது.

    ஜோசியரை விடாமல் துரத்த,

    கவலைப்படாதீங்கம்மா! இப்பத்தான் இந்த ஜாதகத்துக்கு குருபலன் வந்திருக்கு. கண்டிப்பா ஒரு வருஷத்துக்குள்ளே கல்யாணம் நடந்துடும். விடாம முயற்சி செய்யுங்க. பலன் கிடைக்கும். நல்ல இடமா அமையும்!

    அதற்கு ஏற்றபடி ஒரு நல்ல இடம் அமைந்து, ஜாதகமும் பொருந்தி, பெண் பார்க்கவும் வந்து விட்டார்கள்.

    இவளை பையனுக்குப் பிடித்து விட்டது.

    தனியாகப் போய் பேசினார்கள்.

    அந்தப் பையன் சந்திரன் பேங்க் ஒன்றில் அதிகாரி! சின்னக் குடும்பம். அப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1