Maranthean, Mannithean
()
About this ebook
பரணி மனதில் எழும் கேள்வி என்னை ஏன் இந்த கோலத்தில் பிறக்க வைத்தாய், அழகற்ற உருவம் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாக்கியது. "சோபனா" தேவதையான அவள் தான் இவனுக்கு ஆறுதல். அவளின் இரக்ககுணத்தை அவன் தன்னை காதலிப்பாதாக நினைத்து கற்பனையில் மிதக்கிறான்.ஒரு காலக்கட்டத்தில் இந்த விஷயம் அவளுக்கு தெரிய வர, கடுஞ்சொற்களால் அவனை தாக்கி அவனிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறாள். வைராக்கியமாக அவன் வாழ்க்கை உயருகிறது. அழகற்ற அவன் உருவத்தையும் ஒருத்தி ஏற்றுக் கொள்கிறாள். ஒரு காலக்கட்டத்தில் ஷோபானாவை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவள் நிலைமை என்ன,தன்னை வெறுத்தவளுக்கு அவன் காட்டிய பரிவு என்ன என்பதையும்,கதை முடிவில் ஒரு கருத்தையும் இந்த நாவல் விளக்கும். நன்றி!!
நட்புடன்
காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com
Read more from Kanchi Balachandran
Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Ennidam Rating: 5 out of 5 stars5/5Un Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsNijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsManam Pona Pokkile Rating: 0 out of 5 stars0 ratingsKadavul Thantha Irumalargal Rating: 0 out of 5 stars0 ratingsVaarangal Valartha Nila Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPanama? Pasama? Rating: 0 out of 5 stars0 ratingsKannile Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Neram Rating: 0 out of 5 stars0 ratingsVandhana Oru Kelvikuri! Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Poonthotiti... Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maranthean, Mannithean
Related ebooks
Nandha Rating: 0 out of 5 stars0 ratingsUraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5அதிகாரப் பிச்சை..! Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsAlamu Paattiyum Koushikum Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikku Vantha Malarey Vaa...! Rating: 0 out of 5 stars0 ratingsIlam Cholai Poothadha Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Pootha Malar Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Kaadhal Raasi Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsஉள்ளத்தால் துடிக்கிறேன்! Rating: 0 out of 5 stars0 ratingsBindi Sabji Rating: 0 out of 5 stars0 ratingsThavamirunthean! Varam Tharuvai… Rating: 0 out of 5 stars0 ratingsசிரிக்காமல் விடமாட்டோம்! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seithanai Rating: 0 out of 5 stars0 ratingsPoonthenraley! Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Kadal Rating: 5 out of 5 stars5/5Ange Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsஒரு வானம் இரு நிலவு..! Rating: 0 out of 5 stars0 ratingsVinakkalum Kanakkalum Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar! Rating: 3 out of 5 stars3/5Mana Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsKaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Maranthean, Mannithean
0 ratings0 reviews
Book preview
Maranthean, Mannithean - Kanchi Balachandran
http://www.pustaka.co.in
மறந்தேன், மன்னித்தேன்
Maranthean, Mannithean
Author:
காஞ்சி பாலச்சந்திரன்
Kanchi Balachandran
For more books
http://pustaka.co.in/home/author/kanchi-balachandran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
உதட்டை மூடினாலும், முன் பக்கம் பற்கள் எட்டிப் பார்க்கும் ஒட்டிய தாடை! அவன் முகம் பார்க்கும் எவரையும் திரும்ப வைத்துவிடும். கண்ணாடி முன் நின்று, அடிக்கடி கேட்கும் கேள்வி என்னை ஏன் இந்த கோலத்தில் பிறக்க வைத்தாய்
பதில்
மௌனம் தான்!
பரணி
அம்மா உண்டு! ஐந்தாவதாக பிறந்தவன் தரணி ஆளப் போகிறான் என்றுச் சொன்னார்கள்.
பாவம்
தரணி ஆளவில்லை. மற்றவர்கள் இவனைப் பேச்சால் வசைமாறி ஆண்டுக் கொண்டார்கள்.
ஆண்டவன், ஒவ்வொருத்தரை ஒவ்வொரு கோணத்தில் படைத்து விடுகிறான்.
படைப்பில் அவர்கள் வாழ்ந்து அதை அனுபவித்துத்தானே ஆகணும்.
இவன் வயிற்றில் இருக்கும் போதே அம்மாவை மஞ்சள் காமாலை தாக்கியது. இருவரையும் பிழைக்க வெச்சதே பெரும்பாடு.
இவனோடு பிறந்த மற்ற நான்கு பேரும் லட்சணமாக இருக்கும் போது, இவன் மட்டும் இந்த அவலட்சணம்.
டிப்ளமோ மட்டுமே அவனால் படிக்க முடிந்தது. சகமாணவர்களின் கேலிப்பேச்சு அவனை காயப்படுத்தியது. வேலைக்கு செல்லவும் ஆர்வம் காட்டவில்லை.
தாழ்வு மனப்பான்மை, அவனிடம் தாண்டவமாடியது.
நண்பர்களின் எண்ணிக்கை கைவிரலுக்குள் அடங்கும் வெளியே அதிகமாக செல்ல மாட்டான். அப்பா நடத்திய மளிகைக் கடையை சகோதரர்கள் பார்த்துக் கொண்டார்கள். அம்மாவின் செல்லப் பிள்ளை யாரும் இவனை எதுவும் கேட்கக் கூடாது.
அவன் அறையில் பல்புகள், மின்சார விசிறிகள் எல்லாம் சோலார் சிஸ்டம் மூலம் இயக்கி, வியப்பில் ஆழ்த்துவான். இதன் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் ஆர்வம் அதிகம்.
அறை முழுக்க, மின்சார சாதனங்கள் ஒயர்கள் சிதறிக் கிடக்கும்.
அவனை ஊக்கப்படுத்த உற்சாகம் அளிக்க யாரும் முன் வரவில்லை. அவன் திறமையை பாராட்ட எந்த ஜீவனுக்கும் மனசில்லை.
மற்ற மகன்களுக்கு திருமணம் முடிந்து பேரன் பேத்திகளைப் பார்த்து விட்டாள் அம்மா! இவன் வயது முப்பதை நெறுங்கியது. இவனுக்கும் ஒரு வழி ஏற்படாத என்ற கவலை அம்மாவுக்கு!
அம்மா ஆசை கனவாகவேயிருந்தது. உனக்கென்னடா குறைச்சல், ராஜாத்தி மாதிரி பொண்ணு வர்றப்போறா பாரேன் நீ அதிர்ஷ்டக்காரன் மற்றவர்களைவிட, நீ தான் நல்ல வருவே பாரேன்
அடிக்கடி சொல்ற வார்த்தை.
அவள் என்ன செய்வாள் தற்போது அவளால் முடிந்தது அது ஒன்று மட்டும்தான்.
ஒருத்தன், கடவுளிடம் வரம் கேட்டானாம்.
என்ன வரம் வேண்டும்
கேள் எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி, நான் இருக்கணும் கேட்டானாம்.
அதற்கு கடவுள் சிரிச்சாராம்
ஏன் சிரிக்கிறிங்க
எனக்கே அந்த வரம் இன்னும் கிடைக்களைப்பான்னு
இதே வாழ்க்கைத்தான் பரணிக்கா! போக போக, அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போடும், நிகழ்வுகளும் சம்பவங்களும் ஏராளம்.
இன்று இருப்பது நாளையில்லை நாளை நடப்பதை யார் அறிவார்
பரணி வாழ்க்கை வசந்தமா! சூறாவளியா!
2
சோபனா
அவள் ஒரு தேவதை!
எந்த உடையும் அவளுக்குப் பொருந்தும் நல்ல சிவப்பான ஒல்லியான தேகம்! முத்துப்பல் வரிசை! பார்த்தாலும், நடந்தாலும் அவளுக்கு நிகர் அவளே!
வர்ணனைக்கு அகப்படாத தங்கம் பல் மருத்துவம் இறுதியாண்டு!
அவளோடு ஒப்புக் கொண்ட குணம் இரக்கக்குணம்
யாராவது கவலைப்பட்டால் பரிதாபப்படுவது முடிந்த அளவு அவர்களுக்கு உதவிச் செய்வது.
அப்பா சுசிந்திரன் மின்வாரிய அதிகாரி அம்மா ருக்மணி! வீட்டுத் தலைவி ஒரே மகள், செல்ல மகள்!
அவள் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பும் வரை ருக்மணிக்கு இருப்புக் கொள்ளாது. காலதாமதமாக வருவாள்! கேட்டால் யாருக்காவது உதவிக்கு போயிட்டு வந்ததாகச் சொல்வாள். நமக்கெதற்கு வம்பு என்றால் கேட்க மாட்டாள்.
அன்றும் அப்படித்தான் கல்லூரி நேரம் முடிந்தும் வீடு திரும்பவில்லை. பதை, பதைத்து விட்டாள். அலைபேசியில் தொடர்புக் கொண்டும் அவள் அதை எடுக்கவில்லை. கணவருக்குப் அலைப்பேசியில் தகவல் சொன்னாள்.
அவள் என்ன சின்னப் பொண்ணா, பிரண்ட்ஸ் கூட, எங்காவது போயிட்டு வருவா, பயப்படாதே
அவர் ஆறுதல் சொன்னாலும் அவர் மனசும் சற்று கலக்கமடைந்தது.
நேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தாள்.
அம்மாவுக்கு கோபம் தலைக் கேறியது!
என்னடி நினைச்சிக்கிட்டு இருக்கே? காலேஜ் முடிஞ்சா நேரத்திற்கு வீடு வந்து சேருணும்னு தெரியாதா?
என்னம்மா கோவிச்சிக்கிறே! என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா, நீ என்னை பாராட்டுவே
எந்த பாராட்டும் வேணாம்! உனக்கு எப்படா படிப்பு முடியுமுன்னு நானே நாட்களை எண்ணிக்கிட்டு இருக்கேன்.
என் படிப்புக்கு நீ ஏம்மா நாளை எண்ணுறே! டெய்லி ஒரு தாள் கிழிச்சா சரியா போகுது.
என்னடி கிண்டலா! ஏன் லேட்டு அதை மெதல்லே சொல்லு.
ருக்மணி! இப்போதான் அவ வந்தா எதுக்கு கோபப்படறே.
ஆமாம் அவ மேலே எனக்கு மட்டும் தான் அக்கறை! உங்களுக்கு அக்கறையில்லை.
ஏம்மா சோபனா! உங்கம்மா குணம் தான் உனக்குத் தெரியுமே? இனிமேல் நேரத்திற்கு வாம்மா!
சரிப்பா
இன்னகிக்கு ஏன் லேட்டா வந்தாள், அதைக் கேளுங்க?
சொல்லிடும்மா! இல்லே நம்ம ரெண்டு பேரையும் போட்டு வதைச்சிடுவா!
சொல்றேப்பா
காலேஜ் முடிஞ்சு, வர்றப்போ, ரோடு ஓரத்திலே ஒரு பொண்ணு என் வயசுத்தானிருக்கும். மனநிலை சரியில்லாத மாதிரி தெரிஞ்சது. ஆடை களையறதுக் கூட தெரியாமலிருந்தாள். உதவி செய்யலான்னாக் கூட பரவாயில்லே! அரைகுறை ஆடை களைந்த