Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mana Kathavu
Mana Kathavu
Mana Kathavu
Ebook99 pages35 minutes

Mana Kathavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் நலனில் அக்கறை கொள்ளாமல் தன்னை சார்ந்தவர்களையும் குடும்ப நலனிற்காகவும் தன் பெண்களின் சந்தோஷத்திற்காகவும் வாழும் ஒரு தம்பதிகள் இறுதியில் தன் பெண்களின் சுயரூபத்தை கண்டு அவர்கள் எடுக்கும் ஒரு துணிச்சலான முடிவே மனக்கதவு கதையாகும்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606558
Mana Kathavu

Read more from Devibala

Related to Mana Kathavu

Related ebooks

Reviews for Mana Kathavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mana Kathavu - Devibala

    https://www.pustaka.co.in

    மனக்கதவு

    Manakadhavu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    ஜானகிக்கு மூச்சு முட்டியது. ஒரு வாரமாக சரியாகத் தூக்கம் இல்லை சாப்பாடு இறங்கவில்லை! அளவுக்கு மீறின படபடப்பு - உடம்பிலும், மனசிலும்.

    தலைசுற்றல் அதிகமாக இருந்தது. நிச்சயமாக ரத்த அழுத்தம் ஏறியிருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உபாதை! தளர்ச்சி! மனச்சோர்வு!

    என்ன பாக்கி?

    ஜானகிக்கு வயது ஐம்பத்தி நாலு! கொஞ்சம் சதைப்பிடிப்பான உடம்புதான் நல்ல நிறம். பெரிய கண்கள். தலைமுடியில் ஒன்றுகூட நரைக்கவில்லை கண்ணாடி போடவில்லை!

    பார்த்தால் பளிச்சென நாப்பதுகளின் ஆரம்பம்தான் காட்டும்!

    ஜானு உன்னைப் பார்த்தா, ரெண்டு புள்ளைங்கள பெத்தவனு சத்யமா சொல்ல முடியாது. இப்பக் கூட இளமை பொங்குது!

    பலபேர் சொல்லி விட்டார்கள்.

    பெருமை பொங்கும்! லேசாக கர்வம் எட்டிப்பார்க்கும்.

    உடனே கண்ணாடி முன் போய் நிற்பாள். தன்னை ஏற இறங்க கவனிப்பாள்!

    நாப்பது கூட தெரியலியோ?

    ‘இன்னும் கொஞ்சம் கவனமா ட்ரஸ் பண்ணிட்டா இளமையா தெரிவேனோ?'

    இந்தக் கேள்விகளும், பூரிப்பும் போன வருடம் வரை இருந்தது!

    மாதங்கள் தேயத் தேய கலக்கம் பற்றிக் கொண்டது!

    இதோ பயம் முழுமையாக ஆக்ரமித்து விட்டது.

    ஏன்? அப்படி என்ன பிரச்னை ஜானகிக்கு?

    அவள் கணவன் கணபதிக்கு தனியார் நிறுவனத்தில் ஓரளவு நல்ல வேலை! அதிகாரி பதவிதான்! அவரும் நல்ல நிறத்துடன் லேசான தொப்பை சகிதம், சுமார் உயரத்தில் வசீகரமாக இருப்பார்!

    நல்ல ஜோடி!

    ஜானகிக்கு இருபத்தி நாலு வயதில் கல்யாணம் கூடி விட்டது!

    நடுத்தரக் குடும்பம்தான். அப்பா இல்லை. அண்ணன்மார் கடனை உடனை வாங்கித்தான் கல்யாணம் செய்தார்கள்.

    கணபதிக்கு விதவைத் தாயார். மூன்று தங்கைகள். ஒருத்திக்கு மட்டும் கல்யாணம் ஆகியிருந்தது!

    பாக்கி இரண்டு பேர் வீட்டில் இருந்தார்கள்!

    ஜானகிக்கு முதலில் தயக்கமாக இருந்தது!

    நிறைய பொறுப்புகள் இருக்குமேம்மா!

    இருக்கட்டும்! இங்கே மட்டும் என்ன வாழுதாம்! அப்பா இல்லாத குடும்பம்! அண்ணன்மார் மனசு வச்சு நடத்தும் போது பயன்படுத்திக்கோ! நாளைக்கு கை விரிச்சா, நீயும் நானும் தெருவுலதான் நிக்கணும்! மாப்ளை அழகா இருக்கார். நல்ல உத்யோகம். அது போதும்!

    கல்யாணம் சுமாராகத்தான் நடந்தது!

    எட்டு சவரன் நகை போட்டு, சுமாராக துணிமணிகள் எடுத்து வெகு சுமாரான ஒரு மண்டபத்தில் நடத்தினார்கள்.

    காற்றே இல்லாத மண்டபம்.

    ஜானகி புகுந்த வீட்டுக்கு வந்து விட்டாள்!

    கணபதி அம்மாவுக்கு பெரும் மனக்குறை!

    எம்புள்ளை ராஜாவாட்டம் இருக்கான். நல்ல உத்யோகம். சீரும், சிறப்புமா வர வேண்டிய வரன். இந்த மாதிரி தொத்தலா அமைஞ்சு போச்சே!

    குத்திக் காட்டத் தொடங்கி விட்டாள்.

    ஜானகி நல்ல பெண்தான். ஆனால் யாராவது குத்தினால், பதிலுக்குப் பேசி விடுவாள்.

    பேசி விட்டாள் - வாழ வந்த மூன்றாவது நாளே!

    மாமியார் போட்டுக் கொடுத்து, கணபதி உக்கிரமாகி, ஜானகியை - தாறுமாறாக வசைபாட, பெரிய ரகளை ஆகி விட்டது!

    ஜானகி நொந்து போனாள்.

    தன் வாழ்க்கையே பாழாகி விட்டது என அழுதாள்.

    சொல்லாமல் - கொள்ளாமல் பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள்.

    பிறந்த வீடு பதறிப் போனது! காரணம் கேட்க, முதலில் மௌனம் சாதித்து பிறகு ஜானகி நடந்ததைச் சொல்ல...

    நீ இப்பிடி செய்யலாமா? அம்மா பதற...

    எப்பப் பார்த்தாலும் குத்தலாப் பேசினா... ஜாடைமாடையா தாக்கினா... தாங்கிக்க முடியுமா? என் மாமியாருக்கு நாக்குல முள் நெஞ்சுல விஷம். பொறுத்துக்க முடியலை. பேசிட்டேன்!

    தப்புடி! இங்கே பேசற மாதிரி அங்கே பேசக் கூடாதுடி!

    ஏன் கூடாது!

    வாழணும்னு ஆசை உன் நெஞ்சுல இருந்தா, நீ அடங்கித்தான் போகணும்! வாழாவெட்டியா இங்கே வந்து நின்னா, உனக்கு மதிப்பு இருக்குமா! கழுத்துல தாலி ஏறிட்டா, பெண்ணோட வாழ்க்கையே வேற!

    அடிமையா இருக்கணுமா?

    அப்படி சொல்லலைடி! முதல்ல அனுசரிச்சுப் போ! உன் புருஷன் உன்னை முழுமையா புரிஞ்சுக்கற வரைக்கும் பணிஞ்சு போ! பொம்பளைக்கு புருஷன் ஆதரவு கிடைக்கறவரைக்கும் பொறுமை வேணும். அடிகளைத் தாங்கித்தான் ஆகணும் அது கிடைச்சிட்டா. அப்புறம் நீ நிமிர்ந்துடலாம்!

    அது எப்ப கிடைக்கும்?

    ஏண்டீ? கடைல காசு குடுத்து பலசரக்கு வாங்கற மாதிரி கேக்கற! காத்திருக்கணும்டி!

    நான் அவருக்கு பொண்டாட்டி! நானும் முக்கியம்!

    இல்லைனு சொல்லலை. ஆனா நீ இப்ப வந்தவ! அவங்க எல்லாரும் பல வருஷங்களா அவரோட இருக்காங்க! புது உறவுக்காக, பழைய பந்தங்களை உதற முடியாது ஜானு புரிஞ்சுகோ!

    எங்கிட்ட கிடைக்கறது மத்தவங்ககிட்ட அடைய முடியாது!

    அடி செருப்பால! அம்மா நான்! அசிங்கமா பேசாதே!

    இது அசிங்கம் இல்லை! இது அசிங்கம்னா, நீ நாலு பெத்திருக்க முடியாது. ‘அது'க்கு மட்டும் நான் வேணுமா?

    அம்மா காதுகளை மூடிக் கொண்டாள்.

    "இப்படிப்

    Enjoying the preview?
    Page 1 of 1