Uravadum Neram!
By Devibala
()
About this ebook
இக்கதையில் உள்ள குப்தா, சேகர், ராகினி மூவரும் இத்தகைய நிலைமையில் சமூகத்தின் அவதூறுகளை ஏற்றுக்கொள்ளாமல் நட்புடன் பழகுகிறார்கள். அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதை அவர்கள் சமாளிக்கும் விதமும் புதியவை.
Read more from Devibala
Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Inikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Iruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uravadum Neram!
Related ebooks
Poruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsKettathu Kidaikkum! Rating: 0 out of 5 stars0 ratingsPonal Varathu! Rating: 0 out of 5 stars0 ratingsThapicha Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsAaniver Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாரப் பிச்சை..! Rating: 0 out of 5 stars0 ratingsKaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsMana Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsஇப்போது இல்லை! Rating: 0 out of 5 stars0 ratingsNalla Neram Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsபின்னர் அறிவிக்கப்படும்! Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Vedham Rating: 5 out of 5 stars5/5Oru Vidhaiyin kathai! Rating: 0 out of 5 stars0 ratingsAdukkalai Arasiyal Rating: 0 out of 5 stars0 ratingsஒரு வானம் இரு நிலவு..! Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsAvathum Pennaley...! Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar! Rating: 3 out of 5 stars3/5கேடயம் Rating: 0 out of 5 stars0 ratingsKedayam Rating: 1 out of 5 stars1/5Paatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsAlaikal Ointhuvidum! Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsPazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsKollaiadichavan Yengurukkan - Part- 1 Rating: 0 out of 5 stars0 ratingsAmma! Rating: 0 out of 5 stars0 ratingsபோகட்டும், விடு..! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uravadum Neram!
0 ratings0 reviews
Book preview
Uravadum Neram! - Devibala
https://www.pustaka.co.in
உறவாடும் நேரம்!
Uravadum Neram!
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
1
புதிதாக டெல்லியிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும் குப்தா, சேகருடன் நன்றாக பழக தொடங்கி விட்டார்.
சேகரின் அதே முப்பத்தி ரெண்டு வயதுதான்!
இன்னும் குப்தாவுக்குக் கல்யாணம் ஆகவில்லை!
சேகருடன் குப்தா ஒட்டிக் கொள்ள என்ன காரணம்?
அந்த ஆபீசில் இந்தி சரளமாய் பேசத் தெரிந்த ஒரே ஆள் சேகர் மட்டும்தான்! கொஞ்ச வருஷங்கள் மும்பையில் இருந்த காரணமாக சேகருக்கு இந்தி, மராட்டி அத்துபடி!
குப்தாவுக்கு தமிழும் நன்றாக வரும்!
ஒரே மாதத்தில் இருவரும் நெருங்கி விட்டார்கள்!
தனியார் நிறுவனம். உலக அளவில் கிளைகள் உள்ள பெரிய நிறுவனம். சேகர் ஓரளவுக்கு பெரிய பதவிதான். குப்தா சேகருக்கும் மேலதிகாரி! குப்தா வந்த முதல் ஒரு ஓட்டலில்தான் வாசம். வீடு தேடிக் கொண்டிருக்கிறார்!
சேகரும் குப்தாவுக்காக முயற்சி செய்வது நடக்கிறது!
சேகரின் மனைவி ராகினியும் படித்தவள் - வேலைக்குப் போய்க் கொண்டுதான் இருந்தாள்!
குழந்தை பிறக்கும் வரை அது தொடர்ந்தது!
பெண் குழந்தை - அட்சயா பிறந்தாள்! அவளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை! ராகினியின் பிறந்த வீட்டார் இந்த ஊரில் இல்லை! ராகினிக்கு அம்மாவே இல்லை! மற்றவர்களை எதிர்பார்க்க முடியாது! - புகுந்த வீட்டார் என்றால், மாமியாரை மட்டும்தான் நம்ப முடியும். மாமியார் கூடவேதான் இருந்தார்.
ஆனால், என்னால பாத்துக்க முடியாது! எனக்கு ஒடம்புல தெம்பில்லை! நீ வேலையை விடு!
என்று கூறிவிட்டார்.
முப்பதாயிரம் சம்பாதிக்கும் நல்ல வேலையை விட மனமில்லாமல் - சம்பளமில்லாத லீவு அது இது என்று ராகினி படாத பாடுபட்டாள்.
குழந்தை அட்சயாவுக்கு ஒரு வருஷம் ஆகும் வரை இந்தப் போராட்டம் நீடித்தது!
உத்யோகத்தில் மெமோ தந்து விட்டார்கள்.
இனி லீவு இல்லை! நீடிக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது.
சேகர் - ராகினி கூடி யோசித்தார்கள்.
ஒரு வாரம் தூக்கத்தை தொலைத்து விவாதித்தார்கள்.
குழந்தைகள் காப்பகத்தில் விட முடிவு செய்தார்கள்.
அதற்கு மாமியாரின் கடும் எதிர்ப்பு! தானும் பார்த்துக் கொள்ள மாட்டார். காப்பகத்திலும் விட முடியாது!
மீறி காப்பகத்தில் சேர்த்தார்கள்.
குழந்தைக்கு ஜுரம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை வந்து விட்டது!
காப்பகத்தில் நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் குழந்தை ஒட்டவில்லை!
ஆஸ்பத்திரியில் சேர்த்து ஆச்சு போச்சு என்றாகி விவகாரம் பெரியதாகி, குழந்தை பிழைத்தால் போதுமென்றாகி விட்டது!
'யாருக்காக இந்த உழைப்பு?’
‘அந்தக் குழந்தையே இல்லாவிட்டால் எதற்கு பணமும், பொருளும்!’
ராகினி ராஜினாமா செய்து விட்டாள்!
இதோ... அட்சயாவுக்கு ஐந்து வயது! பள்ளிக் கூடத்தில் சேர்த்தாகி விட்டது!
முதலில் ராகினி சம்பளம் இல்லாமல் சேகர் திணறினான்.
மூச்சு முட்டியது!
வசதிகளைக் குறைத்துக் கொள்ள முடியவில்லை!
ஆனால் போகப் போக பழகிவிட்டது!
இங்கே பத்தாயிரம் வந்தாலும், பத்து லட்சம் வந்தாலும் அதற்குத் தக்க செலவு இருக்கத்தான் செய்யும்!
பட்ஜெட் போட்டு வாழ்வது அவரவர் சாதுர்யம்!
ராகினிக்கு எப்போதுமே பேராசை இல்லை! புடவை, நகை என தாவும் பெண் அல்ல! அதிக ஒப்பனை கூட இல்லை! எளிமையாக இருப்பாள்!
சகிப்புத்தன்மையும் அதிகம்!
வேலையை விட்டுட்டு எப்படித்தான் உனக்கு பொழுது போகுதோ?
கேட்டார்கள்.
இங்கே பல வீடுகளில் உத்யோகம் பார்க்கும் பெண்களை விட போகாதவர்களுக்கு குடும்பச் சுமை அதிகம்!
ஓய்வு என்பதே இல்லை!
ராகினிக்கு அந்த நிலை வந்து விட்டது!
இப்பவும் வாடகை வீட்ல இருக்கோம் ராகினி! நீ வேலைக்குப் போயிருந்தா கைல நாப்பது வாங்குவே! சுலபமா தவணை கட்டி ஆயிரம் சதுர அடிக்கு ஃப்ளாட் வாங்கியிருக்கலாம்!
பரவால்லீங்க! எதுவுமே, கிடைக்கும் போது கிடைக்கும். கடன் இல்லாம வாழறோம். சந்தோஷப்படுங்க! வேலைக்குப் போகும் போது சந்தோஷப்பட்டேன். இல்லைனு ஆனப்ப, நான் வருத்தப்படலை! எதையும் ஏத்துக்கற மனப்பக்குவத்தை வளர்த்துகிட்டாத்தான் நிம்மதியா வாழ முடியும்!
சேகருக்கு பிரமிப்பாக இருக்கும்!
குறை காணும் மனசு பெண்களுக்கு அதிகம்! அடுத்தவர் பிரச்னைகளை அலசி, அதில் குளிர்காயும் குணம் மிகமிக அதிகம்!
ராகினிக்கு இரண்டுமே இல்லை!
அதுவும் மாமியார் பங்கு கொஞ்சமில்லை!
மண்புழுவை குச்சியால் குத்திக்குத்தி நோக வைப்பதைப் போல, எதற்கெடுத்தாலும் குறை!
ராகினி மௌனமாக இருந்து விடுவாள்!
சேகருக்கு பல சமயம் பொறுக்காது!
ஏம்மா! எல்லாத்துக்கும் தலையாட்டற அவளை எதுக்காக நீ சீண்டிக்கிட்டே இருக்கே!
என்னடா? அவ பேசாம, உன்னைப் பேச வைக்கறாளா?
இந்தப் பேச்சை விடும்மா! மகன் பேசினா, மனைவி பேச வைக்கறாளானு கேக்கறது ஒரு ஆபாச சிந்தனை! இங்கே எல்லாருக்கும் புத்தி உண்டு! யாரும், யாரையும் பேச வைக்கறதில்லை! பெத்து வளர்த்திருக்கே என்னை! என் மேல உள்ள நம்பிக்கை எப்படி உனக்குப் போச்சு?
பெரிய சண்டை ஆகி விட்டது!
ராகினி உள்ளே இருந்து வந்தாள்.
நீங்கதான் சும்மா இருங்களேன். வார்த்தைக்கு வார்த்தை பேசணுமா?
பேசாம எப்படி ராகினி இருக்கறது? நியாயம் தவறினா அம்மானு விட்ர முடியுமா?
வயசுல மூத்தவங்க!
"புத்தி வேண்டாம்?