Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nalla Neram
Nalla Neram
Nalla Neram
Ebook127 pages1 hour

Nalla Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580100606202
Nalla Neram

Read more from Devibala

Related to Nalla Neram

Related ebooks

Reviews for Nalla Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nalla Neram - Devibala

    http://www.pustaka.co.in

    நல்ல நேரம்

    Nalla Neram

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    *****

    அத்தியாயம் 1

    இந்த ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கும்மா! ஒன்பது பொருத்தம் அட்டகாசம்!"

    மற்ற தகவல்களைச் சொல்லுங்க! சுலோச்சனா கேட்க, பையனுக்கு வயசு 27, எம்.டெக்., எம்.பி.ஏ., படிப்பு! சம்பளம் கிட்டதட்ட ஒன்னறை லட்சம்! அடிக்கடி வெளிநாட்டுப் பயணம்! ஆறடி உயரம்! அம்சமா இருப்பான்!"

    சரி குடும்பம் பற்றி சொல்லுங்க!

    'சுலோ கேட்க', அவளது கணவர் பரசு அருகில் வந்து உட்கார்ந்தார். சுலோ ஒரு பள்ளிக் கூடத்தில் டீச்சர் - பரசுவுக்கு ரெயில்வே உத்யோகம்! அடுத்த வருஷம் ரிடையர்மென்ட்!

    பையன் சுனிலுக்கு அப்பா இல்லை. விதவைத் தாயார் மட்டும் தான்! இவன் ஒரே பையன், மூன்று பொண்ணுங்க!

    சுலோவின் மூத்தமகன் பாஸ்கர் ஓரமாக வந்து நின்றான்! அவனது மனைவி கவிதா சமையல் கட்டில் இரவு உணவை தயாரித்துக் கொண்டிருந்தாள்.

    மூணு பொண்ணுங்களா?

    மூத்தவ கிருஷ்ணவேணி புருஷன் கூட வாழலை... விவாகரத்தும் ஆயாச்சு! நாலு வயசுல பெண் குழந்தை! பள்ளிக் கூட படிப்பு தான்! உத்யோகம்ன்னு எதுவும் இல்லை. ஊறுகாய், சிப்ஸ்னு ஏஜென்ஸி எடுத்து சுயமா சம்பாதிக்கிறா?

    ஏன் விவாகரத்து?

    சுலோ! அதெல்லாம் நமக்கு வேணுமா?

    கண்டிப்பா வேணுங்க! புருஷன் கூட வாழாம, விவாகரத்து செஞ்சிட்டு பிறந்த வீட்ல வந்து இருக்கானா, நம்ம பொண்ணுக்கு நாளைக்கு நிரந்தர கால்கட்டா ஆயிடக் கூடாது பாருங்க!

    கவிதா - மருமகள் சமையல் கட்டிலிருந்து கடுப்புடன் எட்டிப் பார்த்தாள்

    ரெண்டாவது மகள் நாகவேணி உள்ளூர்லதான் இருக்கா! புருஷன் ஒரு பேக்டரில போர்மேன். மூத்த குழந்தைக்கு ரெண்டு வயது - பொண்ணு! அடுத்தது வயித்துல! பிரசவத்துக்கு வந்திருக்கா!

    அப்புறம்?

    மூணாவது பொண்ணு அம்சவேணி பிகாம் படிச்சிட்டு தனியார் கம்பெனில வேலை! கல்யாண வயசு! அண்ணன் சுனிலுக்கு முடிச்சிட்டு இவ கல்யாணம்!

    சரி வீடு சொந்த வீடா?

    இல்லை வாடகை மாசம் இருபதாயிரம் குடுக்கறாங்க!

    கார் இருக்கா?

    இல்லீங்க! சுனில் ஒரு பைக் வச்சிருக்காரு!

    ஒன்னரை லட்சம் சம்பளம் - பெரிய படிப்பு, உத்யோகம் - ஒரு வீடு, கார் கூடவா இல்லை?

    சுலோ! அது அவங்க குடும்ப சூழ்நிலையால் இருக்கலாம்! நமக்கென்ன?

    என்ன பேசறிங்க? நம்ம பொண்ணு அர்ச்சனா அங்கே வாழப் போறதா இருந்தா, நாம் எல்லாம் தான் பார்க்கணும்! அப்படியே தள்ளி விட்ற முடியுமா? சொத்து பத்தும் இல்லை பாரமா மூணு சகோதரிங்க! இவ எப்படீங்க அங்கே வாழ முடியும்?

    என்னங்க! இப்படி வர்றீங்களா? ஷெல்புலேர்ந்து சக்கரையை எடுத்துக் குடுங்க! எட்டளை

    பாஸ்கர் உள்ளே வந்தான்! எடுத்துக் கொடுத்தான்!

    ஒரு நிமிஷம் இருங்க! உங்கம்மா தரகரை இந்தக் கேள்வி கேக்கறாங்க! உங்க வீட்ல சொத்துக்கள் எத்தனை லட்சம் இருக்கு? வந்த மருமகனுக்கு என்ன வச்சிருக்கீங்க? நியாயம் எடத்துக்கு எடம் மாறுபடுமா? நாம சொந்த வீட்ல இருக்கமா? இல்லை கார் வச்சிருக்கோமா?

    பாஸ்கர்! என்ன செய்யறே? சுலோ குரல் கொடுக்க,

    வந்துட்டேன்மா!

    கூடத்துக்கு பாஸ் வர, அர்ச்சனா ஆபீஸ் முடிஞ்சு உள்ளே வந்தாள்.

    தரகரே! இந்த சம்பந்தம் வேண்டாம்! என் மனதுக்கு திருப்தியில்லை. என் மகளுக்கு எந்த பாரமும் இருக்கக் கூடாது! புரியுதா?

    அப்படி சொல்லாதீங்கம்மா! குடும்பம்னா எல்லாம்தான் இருக்கும்! அதைப் பார்த்தா முடியுமா? நல்ல பையன் கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. தெய்வ நம்பிக்கை, குடும்ப பாசம் எல்லாம் உள்ள ஆம்பிளைப் பசங்க கிடைக்கிறது இந்தக் காலத்துல கஷ்டம்மா! விட்ராதீங்க! போட்டோ பாருங்க!

    அப்பா வாங்கிப் பார்த்தார்.

    சினிமா ஹீரோ போல சுனில் பளிச்சென கண்களை கட்டி இழுக்கும் விதமாக இருந்தான்!

    பாஸ்கர் வாங்கிப் பார்த்தான்!

    தரகரே! நீங்க புறப்படுங்க! தேவைப்பட்டா பேசிட்டு நாங்க சொல்றோம்!

    அவர் புறப்பட்டுப் போனார்!

    அர்ச்சனா முகம் கழுவி, உடைமாற்றிக் கொண்டு உள்ளே வந்தாள்!

    அண்ணி! காபி குடுங்க!

    கவிதா காபி கலந்து எடுத்து வந்தாள்!

    அர்ச்சனாவின் தம்பி குளியல் முடித்து, உடைமாற்றி வெளியே புறப்பட தயாரானான்!

    அவனும் தனியார் நிறுவனத்தில் வேலையாக இருக்கிறான்!

    சுலோ! இந்த வரனுக்கு எல்லா தகுதியும் இருக்கே!

    அது மட்டும் போதாதுங்க! ஒரு பையனோட தகுதிகளை விட பின்னணியில் உள்ள குடும்பத் தகுதிகள் முக்கியம். நம்ம பொண்ணு நாளைக்கு கண்ணைக் கசக்கிட்டு வந்து நின்னா, நமக்கு நிம்மதி நிலைக்குமா?

    அருண் விசிலடித்தான்!

    அக்காவை ஒருத்தரால கண் கலங்க வைக்க முடியுமா என்ன?

    வாயை மூடுடா!

    விவரங்களை அப்பா பரசு சொல்லி முடிக்க,

    அக்கா! கல்யாணம் முடிஞ்ச மறுநாளே, நீ தனிக்குடித்தனம் போயிடு! எப்படி என் ஐடியா?

    அப்படி நம்ம அண்ணி நினைச்சிருந்தா, அம்மா சம்மதிப்பாங்களா?

    கவிதா உதட்டோரம் புன்னகை!

    போயிருந்தாக்கூட இந்தக் குடும்பம் தெருவுல நிக்காது! இப்பவும் உங்கப்பாவும், நானும் சம்பாதிக்கறோம். நீ ஒரே பொண்ணு. நீயும் பி.டெக் படிச்சிட்டு கை நிறைய சம்பாதிக்கறே! பாஸ்கர் தயவு இல்லாமலே உன் கல்யாணம் நடக்கும்!

    பாஸ்கர் முகம் சுருங்கிப் போனது!

    அர்ச்சனா எழுந்து வந்தாள்!

    தப்பும்மா! இந்த மாதிரி முகத்துல அடிச்ச மாதிரி நீ பேசாதே! மத்தவங்க உணர்வுகளையும் புரிஞ்சு நட!

    நான் என்னடீ தப்பாப் பேசிட்டேன்! பொண்ணுங்களைப் பெத்துட்டா மட்டும் போதாது! பெத்தவங்களே அதுங்களை ஆளாக்கி, கரை சேர்க்கணும். அண்ணன் - தம்பி தயவுல விடறவங்க பெத்தவங்க இல்லை! செத்தவங்க!

    பாஸ்கர் நிற்கப் பிடிக்காமல் உள்ளே போய்விட்டான்!

    பரசு, சுலோவிடம் வந்தார்!

    "உத்யோகம்,

    Enjoying the preview?
    Page 1 of 1